search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வர்த்தக போர்"

    அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரியை அதிகரித்து டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள முடிவால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து உள்ளது.
    வாஷிங்டன்:

    உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் மூலம் வேலைவாய்ப்புகளை திருடி வருவதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சீனாவின் வர்த்தக நடைமுறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் அவர், இதற்கு பதிலடியாக அந்த நாட்டு பொருட்கள் மீது அதிக அளவிலான வரி விதித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்த அதிரடியை அவர் மேற்கொண்டார். அதன்படி சீன இறக்குமதி பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) அளவுக்கு கடந்த ஆண்டு வரி விதித்தார்.

    டிரம்பின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த சீனாவும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனாவும் வரியை அதிகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக வர்த்தகப்போர் நடந்து வருகிறது.

    எனினும் இந்த வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. தற்போதுகூட சீன துணை பிரதமர் லியு ஹி, வாஷிங்டனில் டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகிறார்.

    இதில் அதிக முன்னேற்றம் எதுவும் ஏற்படாத நிலையில் சீன பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவுக்கு மேலும் வரி விதிப்பை அதிகரித்து நேற்று டிரம்ப் நிர்வாகம் நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதாவது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரி அதிகரித்து இருப்பதாகவும், இந்த நடைமுறை உடனடியாக அமலில் வருவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் டிரம்ப் நிர்வாகம் இந்த அதிரடியை மேற்கொண்டிருப்பது சீனாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஆழ்ந்த வருத்தத்தை சீனா வெளியிட்டு உள்ளது.

    அதேநேரம் டிரம்ப் நிர்வாகத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதில் நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக சீனாவும் அறிவித்து உள்ளது. இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தகப்போர் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறுக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தினார்.

    அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் மூண்டது. இதற்கிடையில், கடந்த ஆண்டு இறுதியில் அர்ஜென்டினாவில் நடந்த ஜி 20 மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர்.

    இதில் இரு நாடுகள் இடையிலான வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அந்த இடைப்பட்ட காலத்தில் வர்த்தகப்போருக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

    ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்புடைய சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத வரி வெள்ளிக்கிழமை (இன்று) முதல் 25 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். அத்துடன் பேச்சுவார்த்தையின்போது சீனா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் எனவே கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

    இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் சீன பொருட்கள் மீதான வரியை உயர்த்தினால், அதற்குரிய பதில் நடவடிக்கையை எடுக்க தயங்கமாட்டோம் என சீனா எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளிடையே மீண்டும் வர்த்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில், சீனா துணை பிரதமர் லியு ஹி உள்பட உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இறுதிகட்ட வர்த்தக பேச்சுவார்த்தை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை உரிய பலனை அளிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    சீன பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க சீனா தயாராகி வருகிறது. #USTarriffs #ChinaGoods #ChinaUSTrade
    பீஜிங்:

    உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் தொடர்வதால் வர்த்தக உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று மேலும் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு அமெரிக்கா 10 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி முதல் இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. ஜனவரியில் இருந்து வரிவிதிப்பு 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.



    இந்த வரிவிதிப்புக்கு பதிலடி கொடுப்பதற்கு சீனாவும் தயாராகி வருகிறது. இது தொடர்பாக துணை பிரதமர் லியு ஹி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியானது அமெரிக்காவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், சீனாவிடம் போதிய நிதி மற்றும் நிதிக்கொள்கை திட்டங்கள் இருப்பதால் சீனாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் சீனா செக்யூரிட்டீஸ் ரெகுலேட்டரி கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் இந்த வர்த்தக மோதலை தீர்க்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் யோசனை கூறியுள்ளார்.

    வரி விதிப்புக்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதிக்குமேயானால், மூன்றாவது கட்டமாக சீன பொருட்களுக்கு வரியை கூட்டுவோம் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #USTarriffs #ChinaGoods #ChinaUSTrade
    ×