என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வர்த்தக போர்"

    • கனடாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது 25% வரிகளை விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்திய நேரம் அது.
    • இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்குத் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ கடந்த ஆண்டு பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

    கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    2013 முதல் லிபரல் கட்சியின் தலைவராகவும் 2015 முதல் கனடாவின் 23வது பிரதமராகவும் இருந்த ட்ரூடோவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    உணவுப் பொருட்களின் விலையேற்றம், வீட்டுவசதி நெருக்கடி உள்ளிட்ட காரணிகளும் ட்ரூடோவின் செல்வாக்கு சரிய வழிவகுத்தது.

    எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விட லிபரல் கட்சி வெகு பின்தங்கியிருப்பதை கருத்துக்கணிப்புகள் காட்டின.

    அடுத்த தேர்தலில் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் ட்ரூடோவால் பாதிக்கப்படுவதாக லிபரல் கட்சி எம்பிக்கள் கருதினர். இதனால் பலர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்தினர்.

    மேலும் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைக்கப் போகிறேன் என அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து கனடாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது 25% வரிகளை விதிப்பதாக அச்சுறுத்திய நேரம் அது.

    டிரம்ப் அச்சறுத்தலுக்கு ட்ரூடோ போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கனடா துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிரீலேண்ட் திடீரெனப் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதற்கு சில வாரங்களுக்கு பின் நாலாபுறமும் அழுத்தம் காரணமாக ஜனவரி 7 ட்ரூடோ தனது கட்சித் தலைவர் பதவியையும் அதன்மூலம் பிரதமர் பதவியையும் விட்டு விலகுவதாக அறிவித்தார்.

    மார்க் கார்னி வருகை 

    இதைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வான மார்க் கார்னி கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மார்க் கார்னி 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை கனடா வங்கியின் 8-வது ஆளுநராகவும். 2011 முதல் 2018-ம் ஆண்டு வரை நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் பணியாற்றியவர். எனவே டிரம்ப்பின் வர்த்தக போரை சமாளிக்க அவரால் முடியும் என லிபரல் எம்.பிக்கள் நம்பினர்.

    அதன்படி ஏகோபித்த ஆதரவுடன் கனடாவின் 24-வது பிரதமராக மார்க் கார்னி மார்ச் 14 அன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற சில நாட்களிலேயே கார்னி தேர்தலை அறிவித்தார்.

    அதன்படி ஏப்ரல் மாதம் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி, பியரே பொய்லிவ்ரே தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியைத் தோற்கடித்து நான்காவது முறையாக வெற்றி பெற்றது.

    மே மாதம் மார்க் கார்னி தனது புதிய அமைச்சரவையுடன் பதவியேற்றார். அதுமுதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடைய மிரட்டல்களுக்கு வரிவிதிப்புகளுக்கும் தீர்க்காமான பதிலடியை கார்னி கொடுத்து வருகிறார்.

    மேலும் ட்ருடோ ஆட்சியில் நெருக்கடியை சந்தித்த வீட்டு வசதியை மேம்படுத்த புதிய கட்டுமானங்களுக்கு தடையாக இருந்த சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் பிற விதிமுறைகளை எளிதாக்கும் 'பில் சி-5' போன்ற சட்டங்களை மார்க் கார்னி இயற்றினார்.

    இந்தியாவுடனான உறவில் மாற்றம்:

    முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டிருந்தார்.

    பஞ்சாபை தனி நாடாக பிரிக்கப் கோரும் காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்குத் தொடர்பு இருப்பதாக ட்ரூடோ கடந்த ஆண்டு பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அதல பாதாளத்திற்குக் கொண்டு சென்றது.

    ட்ரூடோவின் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்தது. தொடர்ந்து மோதல் முற்றவே, இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்பபெற்றன. இந்த விவகாரம் அங்கு அதிகம் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், அரசியல் ஆதாயத்திற்காக ட்ரூடோ காலிஸ்தான் ஆதரவாளர்களை திருப்திபடுத்துவதாக இந்தியா குற்றம் சாட்டியது.

    இந்தத் தொடர் சர்ச்சைகள் ட்ரூடோவின் அரசியல் சரிவுக்கு மேலும் ஒரு காரணமாக அமைந்தது. இதன்பின் பிரதமரான மார்க் கார்னி, தேர்தல் பிரசாரத்தின்போதே இந்தியா உடனான உறவுகள் மீட்டெடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

    மேலும் தேர்தலில் வென்று பிரதமர் ஆன பின் அவரது புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 4 எம்.பிக்கள் இடம்பெற்றனர். 

    ட்ரூடோ தனிப்பட்ட வாழ்க்கை:

    டிசம்பர் 25, 1971 பிறந்தவர் ட்ரூடோ. இவரது தந்தை பியர் ட்ரூடோவும் கனடாவின் பிரதமராக இருந்தவர். ஜஸ்டின் ட்ரூடோ 2008-ல் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013-ல் லிபரல் கட்சியின் தலைவரானார்.

    அமெரிக்க அதிபர் நிக்சன், ட்ரூடோ பிறந்து சில மாதங்களிலேயே கனடாவின் எதிர்காலப் பிரதமராவார் என்று என்று கணித்ததாகக் கூறப்படுகிறது.

    2005 இல் சோபி கிரேகோர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ட்ரூடோ. இந்த தம்பதிக்கு 3 [பிள்ளைகள் உள்ளனர். 2023 இல் சோபியை ட்ரூடோ பிரிந்தார்.

    இதன் பின் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ட்ரூடோ, ஆண்டின் பிற்பகுதியில் தற்போது பிரபல அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி உடன் டேட்டிங் செய்து வருகிறார். பொது இடங்களில் அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    • இது சரிபட்டு வராது என வெள்ளை மாளிகையில் தனது ஓவல் அலுவலக இருக்கையை விட்டு குதித்தெழுந்தார் டிரம்ப்.
    • தனக்கு பிடிக்காத இடதுசாரி மதுரோ ஆட்சியில் இருப்பதால், அவரை எதிர்க்கும் தன்னைப் போன்ற தீவிர வலதுசாரி மரியாவுக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது டிரம்புக்கு ஆறுதலாக அமைந்தது.

    2017-21 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக செயல்பட்ட டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரான இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸை வீழ்த்தி மீண்டும் அதிபாராக தேர்வானார்.

    பிரசார கூட்டதில் கொலை முயற்சி உள்ளிட்டவற்றில் இருந்து உயிர்தப்பி, உலக பணக்காரர் எலான் மஸ்க் ஏகோபித்த ஆதரவுடன் அமெரிக்கா அமெரிக்கார்களுக்கே என்று முழங்கிய குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப், தூங்கி வழிந்த ஜோ பைடன் நிர்வாகத்துக்கு மாற்றாக ஒரு உறுதியான தலைமையாக இருக்கும் என்று கருதிய அமெரிக்கர்கள் அவரை வெற்றி அடைய செய்தனர்.

    அதன்படி இந்த ஆண்டு, 2025 தொடக்கத்தில் ஜனவரி 20 அன்று அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார்.

    அதன் பின் நிகழ்ந்தவை இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும் வரலாறாக மாறின. அது ஒரு தரப்புக்கு உறுதியான முடிவுகளாகவும், மற்றொரு தரப்பிற்கு கிறுக்குத் தனமான முடிவுகளாகவும் படலாம்.

    ஆனால் உலகின் மிகப்பெரிய வல்லரசின் தலைவராக டிரம்ப் செய்த காரியங்கள் மொத்த உலகத்திற்கும் எதிரொலித்தன. வெள்ளை மாளிகையின் ஒவ்வொரு அறிவிப்பும் உலகை ஒரு புயல் போலச் சுழற்றியடித்தது.

    அப்படி அவர் செய்த விஷயங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

    முதலாவதாக வர்த்தகம். உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரி விதிப்பதாக தொடர்ந்து புலம்பிய டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை தான் பதில் "வரிவிதிப்பு". அதுவரை உயிர் பயத்தை காட்டும் உலகப் போரை மட்டுமே கேள்விப்பட்டிருந்த பலருக்கு 'வர்த்தக போர்' எப்படி இருக்கும் என்பதை காட்டியவர் டிரம்ப்.

    உலகளாவிய வர்த்தக முறையை தலைகீழாக மாற்றி, பங்குச்சந்தைகளை பல்லிளிக்க வைத்த டிரம்ப்பின் வரிவிதிப்புகள் பிரசித்தி பெற்றவை.

    ஏப்ரல் 2 ஆம் தேதி டிரம்ப் எடுத்த அஸ்திரம் தான் வரிவிதிப்பு. ஏப்ரல் 2-ஐ அமெரிக்காவின் 'விடுதலை தினம்' என வர்ணித்த டிரம்ப் உலக நாடுகள் மீது உயர்த்தப்பட்ட இறக்குமதி வரிகளை நிர்ணயம் செய்து அறிவித்தார். பெரும்பாலான நாடுகளின் பொருட்களுக்கு 10% அடிப்படை வரி அமலுக்கு வந்தது.

    இதுவே வர்த்தக போரின் தொடக்கமாக அமைந்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்வதறியாது திகைத்தாலும் சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் பதில் வரிகளை விதித்தன. இப்படி தொடர்ந்து மாறி மாறி வரி விதித்துக் கொண்டே பாதி வருடம் கழிந்தது. இதனால் உலக பங்குச்சந்தைகளும் பல முறை ஆட்டம் கண்டன. உலகளாவிய வர்த்தகத்தில் நிச்சயமின்மை ஏற்பட்டது.

    நிலைமை இப்படி இருக்க இந்தியாவை குறிவைத்து டிரம்ப் அம்பு எய்ய தொடங்கினார். ஏற்கனவே இந்தியா அமெரிக்கா மீது அதிக வரி விதிப்பதாக புலம்பி வந்த டிரம்ப், ரஷியா மீதான மேற்கு நாடுகளின் தடைகளை பயன்படுத்தி உக்ரைன் போருக்கு நிதியளிக்கும் வகையில் இந்தியா ரஷியாவிடம் இருந்து அதிகளவில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டி இந்தியாவுக்கு அபராதமாக இந்திய பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார் டிரம்ப்.

    இது ஏற்கனவே இருந்த 25 வரியுடன் சேர்த்து இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரிச்சுமையாக மாறியது. ஒரு புறம் பிரதமர் மோடியை தனது நண்பர் என்று புகழ்ந்தபடி மறுபுறம் இந்த பாரபட்சமான வரிகளை டிரம்ப் இந்தியா மீது விதித்தது கவனிக்கத்தக்கது. இதனால் தமிழ்நாட்டிலும் பல இறக்குமதி சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டன.

    வரியை நிறுத்தி வைக்க எந்தவித கால நீட்டிப்பும் கிடையாது என்று அறிவித்த டிரம்ப், 90 நாட்கள் என்ற குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை எட்டும்படி சுமார் 200 நாடுகளை வலியுறுத்தியது அவரது வர்த்தக அடாவடி அணுகுமுறையை வெளிப்படுத்தியது.

    அடுத்ததாக குடியேற்றம். ஜனவரியில் பதவியேற்ற முதல் நாளிலேயே அமெரிக்க மண்ணில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கும் விதியை தூக்கி எறிய "பிறப்பால் குடியுரிமை" பெறுவதற்கு கட்டுப்பாடு விதித்து நிர்வாக உத்தரவு பிறப்பித்தார். இது பின்னர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டு கீழ் நீதிமன்றங்கள் கடந்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்த ஷாக் ட்ரீட்மென்ட்க்கு பிறகு அமெரிக்காவின் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்துவதாக ஆரம்பித்த டிரம்ப் அரசின் நடவடிக்கை மனிதாபிமற்ற முறையில் மாறியது. டிரம்ப் அரசின் குடிவரவு துறை அதிகாரிகள் பாரிய சோதனைகளை நிகழ்த்தி பல குடும்பங்களை ராணுவ விமானத்தில் கை கால்களை சங்கிலியால் பிணைத்து அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தியது. இந்த ஆண்டு 3,258 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் மக்களவையில் தெரிவித்திருந்தார்.

    அடுத்ததாக போர் நிறுத்தம். நீண்டகாலமாக நடைபெற்று வந்த உலகின் முக்கிய மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக கங்கணம் கட்டிய டிரம்ப் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். காசா போரை தவிர்த்து இதற்கும் அவர் பயன்படுத்திய அஸ்திரம் வர்த்தகம் தான்.

    காசா மீது இஸ்ரேல் இரக்கமற்ற முறையில் நடத்திக்கொண்டிருந்த தாக்குதல்களில் இதுவரை 70,000 மக்கள் கொல்லப்பட்டனர். கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்தம் அமலில் இருந்தது. ஆனால் அதன் பின் இஸ்ரேல் ரத்த வெறி அடங்காமல் மீண்டும் போரை தொடங்கியது.

    காசா முற்றிலுமாக சிதைக்கபட்டது. மக்களுக்கு செல்ல வேண்டிய அத்தியாவசிய பொருட்களை தடுத்து நிறுத்தி மனிதனால் உருவாக்கப்பட்ட பெரும் பஞ்சத்தை இஸ்ரேல் உருவாக்கியது. பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் குறிப்பாக குழந்தைகள் எலும்பும் தோலுமாக மாண்டனர்.

    சர்வதேச அழுத்தங்களுக்கு செவிமடுக்காத இஸ்ரேல், எஜமானர் ஸ்தானத்தில் உள்ள அமெரிக்காவுக்கு மட்டும் அஞ்சியது. அதே நேரம் இஸ்ரேலை செல்லப் பிள்ளையாக நடத்திய அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி அரவணைத்தது. அதேநேரம் இது சரிபட்டு வராது என வெள்ளை மாளிகையில் தனது ஓவல் அலுவலக இருக்கையை விட்டு குதித்தெழுந்த டிரம்ப் தனது 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார்.

    அதன்படி அக்டோபர் 9 முதல் போர் நிறுத்தம் பெயரளவில் அமலுக்கு உள்ளது. ஒப்பந்தப்படி ஹமாஸ், எஞ்சிய இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைத்தது. ஆனால் போர் நிறுத்தத்தை மீறி அக்டோபர் 9 க்கு பிறகும் இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே டிரம்ப் காசா மக்களை வேறு நாடுகளுக்கு அனுப்பி விட்டு அந்நகரை பணக்காரர்களுக்கான ரிசார்ட் நகரமாக மாற்றும் தனது தொலைநோக்கு திட்டத்தையும் முன்வைத்து விமர்சனத்துக்கு உள்ளார். காசாவை சர்வதேச படைகள் கட்டுப்பாட்டில் எடுப்பது என ஏறக்குறைய டிரம்ப் உடைய 20 அம்ச அமைதி திட்டமும் அதற்கான கூறுகளையே அதிகம் கொண்டுள்ளது.

    இதற்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக மே 7 இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது.இதைத்த்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் வெடித்த மோதல் 3 நாட்களில் அதாவது மே 9 ஆம் தேதி மாலை அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.

    மோதலை தொடர்ந்தால் வர்த்தகம் செய்யமாட்டேன் என பிரதமர் மோடியையும், பாக் பிரதமர் ஷெரீபையும் மிரட்டி தானே இந்த போரை நிறுத்தியதாக டிரம்ப் இதுவரை 60 முறைக்கும் மேல் கூறிவிட்டார். அதேநேரம் இந்தியா பாகிஸ்தானுடன், தாய்லாந்து - கம்போடீயா, தாய்லாந்து ருவாண்டா உள்ளிட்ட 8 போர்களை 6 மாதத்தில் தான் நிறுத்தியதாக தம்பட்டம் தட்டிய டிரம்ப் தனது அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என அடம் பிடித்தார். ஆனால் அது வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு கொடுக்கப்பட்டது.

    வெனிசுலாவில் தனக்கு பிடிக்காத இடதுசாரி மதுரோ ஆட்சியில் இருப்பதால், அவரை எதிர்க்கும் தன்னைப் போன்ற தீவிர வலதுசாரி மரியாவுக்கு அந்த பரிசு வழங்கப்பட்டது டிரம்ப்புக்கு ஆறுதலாக அமைந்தது. அதேநேரம் அண்மையில் உலக கால்பந்து சம்மேளனம் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி அவரின் வட்டத்தை போக்கியது. சொல் பேச்சு கேட்டும் மற்ற நாடுகளின் போரை நிறுத்தியது போல் உக்ரைன் மீதான ரஷியா போரை நிறுத்த டிரம்ப் அவ்வளவு சுலபமாக நிறுத்த முடியவில்லை.  

    ரஷிய அதிபர் புதினை, ரஷியாவை ஒட்டிய அமெரிக்க பிரதேசமாக அலாஸ்காவில் நேரில் சந்தித்து டிரம்ப் பேசிப் பார்த்தார். பேரம் படியவில்லை.தொடர்ந்து அமைதியை நிலைநாட்டியே தீருவேன் என டிரம்ப் உறுதியுடன் இருக்கிறார்.

    ஆனால் கடந்த ஜூன் 22 ஆம் தேதி ஈரானுக்கு அமேரிக்காவில் இருந்து போர் விமானங்களை அனுப்பி தாக்குதல் நடத்தச் செய்த டிரம்ப், அந்நாட்டின் அணு ஆயுத கிடங்குகளை அழித்ததாக அறிவித்தார். ஆனால் ஈரான் இதை மறுத்து வருகிறது. அந்த சமயத்தில் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே

    இதுதவிர பிந்தங்கிய நாடுகளுக்கு வல்லரசு என்ற முறையில் UNAID திட்டம் மூலம் அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவிகளை மானாவாரியாக நிறுத்திய டிரம்ப், அமெரிக்கர்களையும் விட்டுவைக்கவில்லை. சிக்கனம் பிடிக்கிறேன் பேர்வலி என்ற பெயரில் அரசுத்துறைகளில் ஆயிரக்கணக்கில் பணி நீக்கங்கங்களை மேற்கொண்டார்.

    இருப்பினும் காண்டில் இருந்த அமெரிக்கர்களை பிக் பியுட்டிபுல் பில் என்ற வரிக்குறைப்பு மசோதா மூலம் சற்று தாஜா செய்தார் டிரம்ப். இருப்பினும் ஜனநாயக விழுமியங்களை நசுக்கும் விதமாக தனது பேச்சை கேட்காத பல்கலைக்கழகங்களுக்கு நிதியை நிறுத்தியது, ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு என ஒரு சர்வாதிகார தலைவருக்கு ஏற்ற சர்வ லட்சணங்களோடு டிரம்ப் செயல்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே வெவ்வேறு துறைகளுக்கு நிதி வழங்குவதில் எதிர்கட்சியுடன் ஏற்பட்ட முரண்பட்டால் அமெரிக்காவில் பொதுமுடக்கம் ஏற்பட்டது. இதனால் பல அரசு துறைகள் ஊதியமின்மை, ஊழியர்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்தது.

    இந்த முடக்கம் 43 நாட்கள் தொடர்ந்து கடந்த நவம்பரில் எதிர்கட்சிகளுடன் தற்காலிக உடன்பாடு ஏற்பட்டு முடிவுக்கு வந்தது. இதற்கிடையே தற்போது போதைப்பொருட்களை தடுக்கிறேன் என கூறி களமிறங்கி உள்ள டிரம்ப் தனது பரம எதிரி வெனிசுலா அதிபர் மதுரோ மீது தனது முழு கவனத்தையும் திரும்பியுள்ளார். வெனிசுலா அமைந்துள்ள கரீபியன் கடற்பரப்பில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்துவது, மதுரோ தலைக்கு விலை வைப்பது என படு பிஸியாக டிரம்ப் இயங்கி வருகிறார்.

    வயதானதால் டிரம்ப் என்ன செய்கிறார், என்ன பேசுகிறார் என அவருக்கே தெரியவில்லை என்று சிலர் கருதினாலும், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற அவரின் கொள்கையில் அவர் உறுதியாக இருப்பது கண்கூடு.

    வெளிநாட்டு பணியாளர்களுக்கான H1B விசா கட்டுப்பாடுகள், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகள், மூன்றாம் உலக நாட்டவர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை உள்ளிட்ட அவரது முடிவுகள் இதற்கு வலு சேர்கின்றன.

    மொத்தத்தில் தனது முதல் பதவிக்காலத்தை விட மிக தீவிரமாக செயல்பட்டு வரும் டிரம்ப் ஒவ்வொரு நாளும் உலகை ஆச்சர்யத்திலோ அல்லது அதிர்ச்சியிலோ ஆழ்த்தி வருவது தொடர்கிறது. இனியும் தொடரும்.                                                                     

    • ஒண்டாரியோ மாகாண அரசு அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
    • கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்தார்.

    கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உள்பட பல்வேறு பொருட்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 முதல் 50 சதவீதம் வரை வரிகளை உயர்த்தினார். இதை சரி செய்ய இரு நாடுகள் இடையேயும் வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

    இதற்கிடையே கனடா வெளியிட்ட விளம்பர வீடியோ இன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

    1987 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஒரு உரையில், வரிகள் ஒவ்வொரு அமெரிக்க தொழிலாளி மற்றும் நுகர்வோரையும் பாதிக்கும் என்றும், கடுமையான வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்றும் பேசியிருந்தார்.

    இந்த வீடியோவை இணைத்து கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசு அண்மையில் அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.

    ரொனால்ட் ரீகனின் உரை தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், வீடியோவை பயன்படுத்த தங்களிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை கூறியது.

    இதற்கிடையே பொய்களை பரப்புவதாக கூறி டிரம்ப், கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

    இந்நிலையில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது டிரம்ப் கூடுதலாக 10 சதவீதம் வரி விதித்தார்.

    இந்நிலையில், கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய டிரம்ப், "கனடா அதிபர் மார்க் கார்னி என் நல்ல நண்பர்தான். கனடா எனக்கு மிகவும் பிடிக்கும். கனடா வெளியிட்ட போலியான விளம்பரம் எனக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டது. அதனால் கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை" என்று தெரிவித்தார். 

    • ஒண்டாரியோ மாகாண அரசு அண்மையில் அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
    • கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

    கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய், அலுமினியம், இரும்பு உள்பட பல்வேறு பொருட்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 முதல் 50 சதவீதம் வரை வரிகளை உயர்த்தினார். இதை சரி செய்ய இரு நாடுகள் இடையேயும் வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

    இதற்கிடையே கனடா வெளியிட்ட விளம்பர வீடியோ இன்று சர்ச்சையை ஏற்படுத்தியது.

    1987 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஒரு உரையில், வரிகள் ஒவ்வொரு அமெரிக்க தொழிலாளி மற்றும் நுகர்வோரையும் பாதிக்கும் என்றும், கடுமையான வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்றும் பேசியிருந்தார்.

    இந்த வீடியோவை இணைத்து கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசு அண்மையில் அமெரிக்க வரிகளை விமர்சித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.

    ரொனால்ட் ரீகனின் உரை தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், வீடியோவை பயன்படுத்த தங்களிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை கூறியது.

    இதற்கிடையே பொய்களை பரப்புவதாக கூறி டிரம்ப், கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

    இந்நிலையில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தற்போது அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி உடனடியாக அமலுக்கு வரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

    • சீனா மீது 200 சதவீதம் வரை வரிகளை விதிக்கத் தயங்கமாட்டேன்.
    • இந்த ஆண்டு இறுதியில் அல்லது அதற்குப் பிறகு விரைவில் நான் சீனாவுக்குச் செல்வேன்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகள் மீது வரிகளை உயர்த்தி வருகிறார்.

    குறிப்பாக அமெரிக்காவின் பிரதான போட்டியாளராக கருதப்படும் சீனா இந்த வரி உயர்வுகளுக்கு கடுமையான எதிர்வினை ஆற்றி வருகிறது.

    இந்நிலையில் சீனாவுக்கு சீட்டாட்டத்தின் பாணியில் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகளையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் "அவர்களிடம் சில கார்டுகள் உள்ளன. ஆனால் எங்களிடம் மிகச் சிறந்த கார்டுகள் உள்ளன.

    நான் அவற்றை கொண்டு விளையாட விரும்பவில்லை. நான் அந்த கார்டுகளை வைத்து விளையாடினால், சீனா அழிந்துபோதும். அதனால்தான் நான் இப்போது அதைச் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.

    அமெரிக்காவுக்கு அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை சீனா எடுத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.

    அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் சீனா மீது 200 சதவீதம் வரை வரிகளை விதிக்கத் தயங்கமாட்டேன் என்று அவர் கூறினார்.

    அதேநேரம், "இந்த ஆண்டு இறுதியில் அல்லது அதற்குப் பிறகு விரைவில் நான் சீனாவுக்குச் செல்வேன். இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த உறவுகள் இருக்கும்" என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.   

    • ஆகஸ்ட் 1 முதல் 14 நாடுகளுக்கு 25% முதல் 40% வரை வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
    • கூறுதல் வரிவிதிப்பது இன்று முதல் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.

    ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 25% முதல் 40% வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 கூடுதல் நாடுகளுக்கு டிரம்ப் அதிக வரிகளை விதித்தார்.

    அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் வரும் 9-ம் தேதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.

    இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் அதிக வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வரும் என்றும் அதில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதாவது எந்த நீட்டிப்புகளும் வழங்கப்படாது" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

    • அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
    • 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

    ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 கூடுதல் நாடுகளுக்கு டிரம்ப் அதிக வரிகளை விதித்தார்.

    குறிப்பாக ஜப்பான், தென்கொரியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அந்நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

    புதிய வரிவிதிப்பு குறித்து 14 நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் நகல்களை டிரம்ப் வெளியிட்டார். அதில், நாங்கள் உயர்த்திய வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் தங்கள் சொந்த இறக்குமதி வரிகளை உயர்த்தினால், அமெரிக்க அரசு இன்னும் வரிகளை உயர்த்தும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

    அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் வரும் 9-ம் தேதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சில நாடுகளுக்கு இது 70 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
    • ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    சுமார் 12 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

    ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "கட்டணங்கள் தொடர்பான சில கடிதங்களில் நான் கையெழுத்திட்டுள்ளேன்.

    அவை திங்கட்கிழமை 12 நாடுகளுக்கு அனுப்பப்படும். கடிதத்தைப் பெறும் ஒவ்வொரு நாடும் அதன் ஏற்றுமதிக்கு வெவ்வேறு வரிகளைப் பெறும். கடிதங்களைப் பெறும் நாடுகளின் பெயர்கள் திங்கட்கிழமை மட்டுமே வெளியிடப்படும்" என்று கூறினார்.

    இந்த புதிய வரிகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரக்கூடும் என்றும், சில நாடுகளுக்கு இது 70 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார். இந்த 12 நாடுகளில் இந்தியாவும் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    மறுபுறம், அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சென்ற உயர்மட்ட இந்தியக் குழு பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு திரும்பியுள்ளது.

    அமெரிக்கா கோரும் விவசாயம் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தை அணுகல் குறித்து ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் வரும் 9-ம் தேதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்திருந்தார்.

    எனவே ஜூலை 9 ஆம் தேதிக்குள் வரி விலக்கு பெற இரு நாடுகளுக்கும் இடையே கடைசி நிமிட அரசியல் ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஆனால் எந்த காலக்கெடுவின் கீழும் எந்த வர்த்தக ஒப்பந்தங்களும் இருக்காது என்று இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தியுள்ளார்.   

    • ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
    • ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும்.

    வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாய் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரிப் போரை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி உயர்வை டிரம்ப் அறிவித்தார். இதை எதிர்த்த சீனாவுக்கு வரி 145 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. மற்ற நாடுகளுக்கான வரி உயர்வு தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சீனா - அமெரிக்கா பேச்சுவார்த்தை நிலைமையை சற்று சுமூகமாகியது.

    இந்நிலையில் ஜூன் 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.

    தனது சமூக ஊடக பதவில், அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

    டிரம்பின் 50 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலளிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிற்கு 500 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய ஏற்றுமதி நாடுகள் ஆகும்.

    முன்னதாக "இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்"  என ஆப்பிள் நிறுவனத்தை டிரம்ப் மிரட்டியது குறிப்பிடத்தக்கது. 

    • உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
    • அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருக்கிறது.

    கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா மட்டுமே எதிர்வரி விதித்து எதிர்வினை ஆற்றியது. பின்னர் சர்வதேச அழுத்தம் காரணமாக பின் அந்த வரிவிதிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளார்.

    இதனிடையே மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது, "அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருக்கிறது. வரி இல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா விருப்பம் தெரிவித்தது" என்று டிரம்ப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அமெரிக்க பொருட்கள் மீது 100% வரி குறைப்புக்குக் கூட இந்தியா தயாராக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த டிரம்ப், "உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக தாங்கள் இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அமெரிக்க பொருட்கள் மீது 100% வரி குறைப்புக்குக் கூட இந்தியா தயாராக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், அது விரைவில் வரும்" என்று தெரிவித்தார்.

    • இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை.
    • இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்.

    இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, டிம் குக்கிடம் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் நேற்று கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது, "இந்தியா எங்கள் (அமெரிக்க) பொருள்களுக்கு எந்த வரியையும் விதிக்கப்போவதில்லை என்று ஒப்புதல் வழங்கியள்ளது.நான் டிம்மிடம் கூறினேன், நாங்கள் உங்களை நன்முறையில் நடத்துகிறோம்.

    சீனாவில் நீங்கள் கட்டிய ஆலைகளுக்கு நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக உடன் இருந்தோம். ஆனால், இந்தியாவில் நீங்கள் ஆலைகளை எழுப்புவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியா அதனை அதுவே கவனித்துக்கொள்ளும்'' என்று பேசினார்.

    ஐபோன்களின் தயாரிப்பு மையமாக இந்தியா உள்ள நிலையில், டிரம்ப்பின் பேச்சு இந்தியாவில் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் (ஏப்ரல் - ஜூன் வரையில்) தயாரிக்கப்பட்டவையே என ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் மே 2ஆம் தேதி அறிக்கை மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிக்கை வந்த சில வாரங்களிலேயே இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துமாறு ஆப்பிள் நிறுத்தனதிடம் டிரம்ப் கோரியுள்ளார். 

    • வரி இல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா விருப்பம் தெரிவித்தது
    • ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐ-போன்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை

    அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் நேற்று கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது, "அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருக்கிறது. வரி இல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா விருப்பம் தெரிவித்தது" என்று பேசினார்.

    மேலும் இனிமேல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐ-போன்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

    முன்னதாக கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார்.

    சர்வதேச அழுத்தம் காரணமாக பின் அந்த வரிவிதிப்பை தாற்காலிகமாக இடைநிறுத்தி வைத்துள்ளார்.

    இந்நிலையில் இந்தியா வரியை மொத்தமாக நீக்க சம்மதித்துள்ளது என்று டிரம்ப் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா மட்டுமே எதிர்வரி விதித்து எதிர்வினை ஆற்றியது குறிப்பிடத்தக்கது. 

    ×