search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனித சங்கிலி போராட்டம்"

    • தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
    • போதைப்பொருள் விற்பனை மையமாக தமிழகம் மாறி உள்ளது.

    சென்னை:

    போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கத் தவறியதாக தி.மு.க. அரசைக் கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும்அனைத்து மாவட்ட, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.

    சென்னை ஆர்.ஏ. புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் சி.வி.சண்மும் பங்கேற்றார். போராட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து திரளானோர் பங்கேற்றனர்.

     

    போராட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

    * போதைப்பொருள் விற்பனை மையமாக தமிழகம் மாறி உள்ளது.

    * போதைப்பொருளால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது.

    * ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.

    * தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • தமிழக அரசு உடனடியாக டி.என்.டி. என்ற ஒற்றைச் சாதி சான்றுகளை வழங்கக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    • 68 சாதிகளுக்கு உடனடியாக தற்போது வழங்கப்பட்டு வரும் இரட்டைச் சாதி சான்றிதழை ஒழித்து டி.என்.டி. என்ற சான்றிதழ் மட்டும் வழங்க வேண்டும்

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள எம்.குரும்பபட்டி, மல்லனம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீர் மரபினர் நல சங்கம் சார்பாக தமிழக அரசு உடனடியாக டி.என்.டி. என்ற ஒற்றைச் சாதி சான்றுகளை வழங்கக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இந்தப் போராட்டத்தில் தமிழக அரசு பல ஆண்டுகளாக போராடி வரும் கள்ளர், முத்தரையர், வலையர், உள்ளிட்ட 68 சாதிகளுக்கு உடனடியாக தற்போது வழங்கப்பட்டு வரும் இரட்டைச் சாதி சான்றிதழை ஒழித்து டி.என்.டி. என்ற சான்றிதழ் மட்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    • சுங்க சாவடி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 63 சுங்க சாவடிகளில் சுங்க சாவடி கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி வாலாஜா அடுத்த சென்ன சமுத்திரத்தில் உள்ள டோல்கேட்டில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இதில் காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட செயலாளர் ஏகாம்பரம்,மாவட்ட அவை தலைவர் காசிநாதன், மாவட்ட துணை செயலாளர் பிரபாகரன், வாலாஜா ஒன்றிய செயலாளர் தியாகராஜன், பூபாலன், நகர செயலாளர்கள் செந்தில், குட்டி (எ) ஜஸ்டின் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் அங்கு அமைதி திரும்ப வேண்டும்.
    • மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    ஓசூர்,

    ஓசூரில், தமிழக மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில், மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லகுமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், மாநகராட்சி பொது சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், பல்வேறு தொழிற்சங்கத்தினர், கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் பஸ் நிலையம் அருகில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், சித்ரா ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

    போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஜாக்டோ ஜியோ சார்பில் நடந்தது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் தாலுக்கா அலுவலகம் அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

    பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண் டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை தொகுப்பு ஊதி யம், மதிப்பு ஊதியம் ஆகிய வற்றை மாற்றி அனைவருக் கும் வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கவேண்டும், மத்திய அரசில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்,

    • ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    பவானி:

    பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள தாசில்தார் அலுவலக வளாகத்தின் நுழைவாயில் பகுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நிதி நிலை அறிக்கையில் எந்த ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை வகித்தார். பவானி தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். புதிய முரண்பாட்டைகளைதல், காலி பணியிடங்களை நிரப்புதல், கால முறை ஊதியம் வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இதனைத்தொடர்ந்து பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் நுழைவாயில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஜாக்டோ ஜியோவுக்கு உட்பட்ட அரசு ஊழியர் சங்கம், வருவாய்த்துறை, ஆசிரியர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ் சாலை துறை, சத்துணவு ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அந்தியூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலி–யுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயேந்திரன் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். அக விலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் அந்தியூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து போலீஸ் நிலையம் வரை அரசு ஊழியர்கள் மனித சங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பாலு, சிவகுமார், ஆனந்தகுமார், ரமேஷ்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
    • சேகர், பூப்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

    ராமநாதபுரம்

    ஆசிரியர், அரசு ஊழியர்களின் கூட்ட மைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் இருந்து ரோமன் சர்ச் வரையும், பரமக்குடியில் பஸ் நிலையத்தில் இருந்து ஓட்டப்பாலம் வரையும் மனிதச்சங்கிலி நடந்தது.

    மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் முரு கேசன், சிவபாலன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர். சேகர், பூப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பா ளரும், ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவருமான முருகேசன் பேசியதாவது:-

    எங்களது கோரிக்கைகளை இதுநாள் வரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்ற மன சங்கடத்தில் பணி செய்து வருகிறோம். இந்த நிலையில் கல்வித்துறையில் கற்றல்-கற்பித்தல் பணியை செய்து வரும் ஆசிரியர்களை மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் எமிஸ் போன்ற கற்றல்-கற்பித்தல் பணிக்கு சம்மந்தமில்லாத அலுவலகப்பணியை ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் திணித்து வருகிறார்கள். கல்வி அமைச்சர் இதில் தலையிட்டு ஆசிரியர்கள் சுதந்திரமாக கற்றல்-கற்பித்தல் பணியை செய்ய அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் காளிராஜ், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டச்செயலாளர் கிருஷ்ணன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முனியசாமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் லாரன்ஸ், கால்நடைத்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துச்சாமி மற்றும் ஜாக்டோ-ஜியோ உறுப்பு சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாள குமார் நன்றி கூறினார்.

    • 12 மணி அளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாகவும், இதற்காக வெளிநாட்டு போலி நிறுவனங்களை பயன்படுத்தியதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றம் சாட்டின.

    இதன் எதிரொலியாக அதானி குழும பங்குகள் பெரும் அளவில் சரிவடைந்தன.

    அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளை அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

    பொது மக்களின் பணம் தொடர்புடைய இந்த குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    கடந்த ஜனவரி 31-ல் தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்ட அமர்வில் அதானி விவகாரம் வலுவாக எதிரொலித்தது. கடந்த திங்கட்கிழமை தொடங்கிய 2-வது கட்ட அமர்விலும் இந்த விவகாரத்தால் இரு அவைகளும் முடங்கி வருகிறது.

    அதானி குழுமம் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த விரிவான விசாரணை நடத்த கோரி அமலாக்கத் துறை அலுவலகத்தில் புகார் கொடுக்க எதிர்கட்சியினர் நேற்று முடிவு செய்தனர்.

    பாராளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக புறப்பட்டனர். 144 தடை உத்தரவு அமலில் உள்ளதை சுட்டிக்காட்டி விஜய் சவுக் பகுதியில் எதிர்கட்சி எம்.பி.க்களான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இந்நிலையில் எதிர்கட்சி எம்.பி.க்கள் இன்றும் ஆலோசனை நடத்தினர். பாராளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மேல்சபை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் காங்கிரஸ், தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா கட்சி, பாரத் ராஷ்டீரிய சமிதி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ம.தி.மு.க., ஆம். ஆத்மி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 15 எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சுற்றி எதிர்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் என்ற செய்தியை முன் வைத்து இந்த மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எதிர்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதைத்தொடர்ந்து 12 மணி அளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறும் போது 'அதானி விவகாரத்தை தடுக்கவே மத்திய அரசு பாராளுமன்றத்தை நடத்த விடவில்லை. நாங்கள் அமைதியாக நேற்று போராட்டம் நடத்தினோம் எங்களை தடுத்துவிட்டனர் என்றார்.

    • காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆலோசனை.
    • விஜய் வசந்த் எம்.பி. அலுவலகத்தில் நடந்தது.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் வருகிற 11-ந்தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடக்கிறது . குமரி மாவட்டத்திலும் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று நாகர்கோவிலில் உள்ள விஜய்வசந்த் எம்.பி. அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு முன்னாள் எம்.பி.பெல்லார்மின் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் பினுலால் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, விடுதலை சிறுத்தை கட்சி பகலவன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மனித சங்கிலி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தவும், வடசேரியில் இருந்து கோட்டார் வரையிலும், தக்கலை பஸ்நிலையத்தில் அழகிய மண்டபம் வரையிலும், குழித்துறையில் இருந்து களியக்காவிளை வரையிலும் வருகிற 11-ந்தேதி மாலை 4 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • நல்லாற்றின் குறுக்கே நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது.
    • குளத்தின் நிலத்தை, நீர்நிலையாக வகை மாற்றம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகாவில் 440 ஏக்கர் பரப்பளவில், நல்லாற்றின் குறுக்கே நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. குளத்தின் அருகே உள்ள 9 ஏக்கர் நிலத்தை தனியார் அறக்கட்டளைக்கு அரசு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அரசு நிலம் விற்பனை செய்ததை ரத்து செய்து குளத்தின் நிலத்தை, நீர்நிலையாக வகை மாற்றம் செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பில் குளத்தை பாதுகாக்க கோரி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.

    ×