என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jacto-Geo System"
- தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- கோரிக்கையை வலியுறுத்தி வரும், 11-ந் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.
ஈரோடு:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 7- வது ஊதியக்குழு, 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். தமிழக அரசின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ மாநில கூட்டமைப்பு சார்பில், 3 கட்ட போராட்டங்கள் நடத்த அறிவித்துள்ளனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி வரும், 11-ந் தேதி சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். அதே நேரம், தங்களது கோரிக்கை யை மனுவாக தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.,க்களிடமும் வழங்க திட்டமிட்டனர்.
இதன்படி ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சரவணன், விஜயமனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் அந்தியூர் தி.மு.க., எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், பவானி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கருப்பணன், பவானி சாகர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பண்ணாரி ஆகியோரிடம் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மனு வழங்கினர்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
நாகப்பட்டினம்:
திருமருகல் பஸ் நிலையம் அருகில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், சித்ரா ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்க தலைவர் சொக்கலிங்கம், சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்