search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் கண்காணிப்பு"

    • அனைத்து வாகனங்களும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.
    • சரக்கு லாரிகளை நிறுத்தி போலீசார் மேலே ஏறி பார்வையிடுகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அய்யங்குன்னு இடிப்பகுற்றி வனப்பகுதியில் கடந்த 13-ம் தேதி போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது போலீசாரின் துப்பாக்கி சூட்டை சமாளிக்க முடியாமல் மாவோயிஸ்டுகள் 3 துப்பாக்கிகளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ், வசந்த் என்கிற ரமேஷ், கேரளாவை சேர்ந்த சேர்மன் மற்றும் மனோஜ் என்கிற ஆஷிக், கர்நாடகாவை சேர்ந்த ஜிஷா மற்றும் விக்ரம் கவுடா ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க கேரளா போலீசார், கர்நாடகா நக்சல் தடுப்பு பிரிவு, தமிழக கியூ பிரிவு போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். தமிழக-கர்நாடகா மாநில எல்லையான ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு தப்பி செல்லலாம் என்பதால் அங்குள்ள சோதனை சாவடிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் முதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ் முருகன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 3-வது நாளாக சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் இருந்து பர்கூர், அந்தியூர் வழியாக ஈரோடு செல்லக்கூடிய அனைத்து பஸ்கள் கார் மற்றும் சரக்கு வாகனங்களையும், தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஈரோடு, அந்தியூர், பர்கூர் வழியாக மைசூரு செல்லக்கூடிய அனைத்து கார் பஸ் மற்றும் சரக்கு வாகனங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

    மேலும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது. பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் போட்டோவை காண்பித்து இவர்களை பார்த்தால் போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    இதேபோல் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான கார பள்ளம் சோதனை சாவடி, பாரதி புரம், எல்ல கட்டை சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் வரும் வாகனங்களை நிறுத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சரக்கு லாரிகளை நிறுத்தி போலீசார் மேலே ஏறி பார்வையிடுகின்றனர். பண்ணாரி சோதனை சாவடி வழியாக ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான கர்நாடகா சரக்கு வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. எனவே இந்த வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது
    • குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம், விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள், பலகைகளால் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    தாராபுரம்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் பெரும்பாலும் தீபாவளிக்கு புத்தாடைகள், தங்க நகைகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பெரிய கடைவீதி, ஜவுளி கடை வீதி, பொள்ளாச்சி ரோடு, சின்னக்கடை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், நகை கடைகள் மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டத்தை தவிர்க்கவும், சீரான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் நகரின் மையப்பகுதியான பூக்கடைக்கார்னரில் தாராபுரம் கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் (சட்டம்-ஒழுங்கு), சஜினி (போக்குவரத்து), குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம், விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள், பலகைகளால் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாத வண்ணம் 24 மணி நேரமும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தையும், பொதுமக்கள் நடமாட்டத்தையும தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது. போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில் "பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க பொதுமக்கள் தங்களது பணம் மற்றும் நகைகள்,செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினர். 

    • 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட குழுவினர் இந்த தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
    • ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இனிமேல் வன்முறை நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்கிருந்த குடியிருப்பிற்கு கடந்த 13-ந் தேதி மர்மநபர்கள் தீ வைத்தனர்.

    இந்த சம்பவத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 2 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் கரூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜேடர்பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 14 வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக 14 தற்காலிக போலீஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இரவு நேரங்களில் சோதனை சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விசாரணை நடத்தி அவர்களுடைய முகவரிகளை கேட்டு எழுதப்பட்ட பின்னரே அவர்களை அனுப்பி வைக்கின்றனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம், முதற்கட்டமாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே நேற்று மேலும் 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கொண்ட குழுவினர் இந்த தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரியில் இருந்து 600 போலீசார் வரவழைக்கபட்டு, மொத்தம் 750 போலீசார் ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் கரும்பு ஆலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், நாமக்கல் எஸ்.பி கலைச்செல்வன், ஈரோடு எஸ்.பி சக்திகணேசன் உள்ளிட்டோர் வெல்ல ஆலைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இது குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் கூறியதாவது:- ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் 20 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிக சோதனை சாவடிகள் மற்றும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மேற்கு மண்டலத்தில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும், மேற்கு மண்டலத்தில் கள்ளசாராயம் விற்பனை ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்.

    மேலும் ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இனிமேல் வன்முறை நடக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×