search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடத்திட்டம்"

    • சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
    • அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது.

    தகவல் தொழில் நுட்பத்தில் நாளுக்குநாள் வளர்ச்சி கண்டுவரும் காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் நாம், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கிடைக்கப் பெறுகிறோம். இதன் காரணமாக எந்த ஒரு விஷயத்தையும் நாம் எளிதாக செய்து முடிக்க முடிகிறது.

    இதுபோன்ற வளர்ச்சிகளை கண்டு வியக்கும் நாம், சில விஷயங்களை கண்டு அதிர்ச்சியடைய வேண்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள். சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

    அதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த போதிலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. ஆகவே அதனை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டம்.

    சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளின் பாதுகாப்பு மசோதா (POCSO)-2011 நம் நாட்டு நாடாளுமன்றத்தில் 2012-ம் ஆண்டு மே 22-ந்தேதி நிறைவேற்றப்பட்டது.

    2019-ம் ஆண்டில், போக்சோ சட்டம் திருத்தப்பட்டு மேலும் கடுமையாக்கப்பட்டது. இந்த திருத்தம் குறைந்தபட்ச தண்டனையை 7 முதல் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் வரை உயர்த்தியது. பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், குற்றத்தில் ஈடுபட்டவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தீவிர தாக்குதலுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.

    போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்து அனைத்து மாநிலங்களிலும் அது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் கிடைத்துள்ளது. ஆனால் போக்சோ வழக்குகள் அதிகரித்ததே தவிர, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்ததாக தெரியவில்லை.

    அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது. குட் டச், பேடு டச் என அனைத்து தொடுகைகளின் விவரத்தையும் சிறு குழந்தைகள் இன்று எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றி அறிந்து கொண்டுள்ளனர் என்றால் அதை மறுக்கமுடியாது. இருந்தபோதிலும் போக்சோ சட்டம் பற்றி பள்ளி குழந்தைகள் எளிதில் தெரிந்துகொள்வதற்காக கேரள மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் சேர்க்கப்படுகிறது.

    வருகிற கல்வியாண்டில் 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் பற்றிய பாடம் இடம்பெற உள்ளது. இந்த தகவலை கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் கூறியதாவது:-

    போக்சோ சட்டம் பற்றிய பாடம் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் கற்பிக்கப்படும். இது அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலும் சேர்க்கப்படும்.

    மேலும் 5 முதல் 10-ம் வகுப்பு வரை தொழிற்கல்வி சேர்க்கும் வகையில் பாடத்திட்டம் முழுமையாக திருத்தப்படும். 1,3,5,7,9 ஆகிய வகுப்பு பாடப் புத்தகங்களும் அடுத்த கல்வியாண்டில் மாற்றப் படும். 4,6,8,10 வகுப்புகளிலும் பாடத்திடம் அடுத்த ஆண்டு மாற்றப்படுகிறது.

    1-ம் வகுப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் செயல்பாட்டு புத்தகங்கள் உள்ளன. ஆசிரியர்களுக்கான புத்தகங்களும் தயாராகி வருகின்றன. மேலும் நாட்டிலேயே முதன்முறையாக பெற்றோருக்கான புத்தகங்களும் தயாராகிறது.

    புதிய பாடத்திட்டத்தில் விளையாட்டு, கழிவு பிரச்சினை, தூய்மை, குடிமை உணர்வு, சமநீதியுடன் கூடிய பாலின விழிப்புணர்வு, அறிவியல் உணர்வு, விவசாயம், மதச்சார்பின்மை உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. பாட சாலைகள் திறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநிலத்தில் இதற்கு முன்பு விரிவான பாடத்திட்ட திருத்தம் 2007-ம் ஆண்டு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்கள் கிருஷ்ணரின் நிர்வாக மந்திரங்கள் அடங்கிய பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.
    • அஷ்டாங்க யோகா வகுப்பும் மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது.

    அலகாபாத் பல்கலைக்கழத்தில் புதிய பட்டப்படிப்பு துவங்கப்பட்டு இருக்கிறது. ஐந்து ஆண்டுகள் கொண்ட புதிய பாடத்திட்டத்தில் BBA-MBA படிப்பை மாணவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு படிக்க முடியும். இந்த பட்டப்படிப்பை வர்த்தக பிரிவு ஆசிரியர்கள் துவங்கி உள்ளனர்.

    புதிய ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் மாணவர்கள் பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்ட புராணங்களில் இருந்து கிருஷ்ணரின் நிர்வாக மந்திரங்கள் அடங்கிய பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். கிருஷ்ணர் மட்டுமின்றி ஜெ.ஆர்.டி. டாடா, அசிம் பிரேம்ஜி, திருபாய் அம்பானி, நாராயண மூர்த்தி, சுனில் மிட்டல் மற்றும் பிர்லா போன்ற முன்னணி தொழிலதிபர்கள் பற்றியும் நிர்வாக ரீதியிலான பாடங்களை கற்கவுள்ளனர்.

    இதோடு அஷ்டாங்க யோகா வகுப்பும் மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது. தற்போது இந்த ஆண்டிற்கான பாடத்திட்டத்தில் மொத்தம் 26 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த படிப்பில் மொத்தம் 10 செமஸ்டர்கள் உள்ளன. புதிய படிப்பில் பல்வேறு வழிமுறைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

    அந்த வகையில் ஐந்து ஆண்டுகள் பாடத்திட்டம் கொண்ட இந்த பாடத்திட்டத்தில் மாணவர்கள் முதலாம் ஆண்டிலேயே படிப்பை நிறுத்திக் கொண்டால் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாவது ஆண்டில் படிப்பை நிறுத்திக் கொண்டால் டிப்ளோமா படிப்புக்கான சான்றும், மூன்றாவது ஆண்டில் நிறுத்திக் கொண்டால், BBA பட்டமும், ஐந்து ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்தால் MBA பட்டமும் பெற முடியும்.

    • தமிழின துரோகியாக தமிழிசை இருக்க முடியாது.
    • தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. என் பெயரிலும் இருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் தேசிய கல்விக் கொள்கை 3-வது ஆண்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், அங்கு சில குறை இருந்தால் சொல்வேன். தமிழ்நாடு பாட திட்டத்துக்கு பதிலாக சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தை அமல்படுத்திய தமிழிசை தமிழின துரோகி என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் கூறியுள்ளார்.

    தமிழின துரோகியாக தமிழிசை இருக்க முடியாது.

    தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. என் பெயரிலும் இருக்கிறது.

    ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து புதுச்சேரி பாடத்திட்டத்தை தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் விமர்சித்துள்ளார்.

    22 மொழிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று தெரியாமல் பேசியுள்ளார். தமிழகத்தில் 47 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழிலும், பிளஸ்-2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுதவில்லை.

    ஆனால், நாங்கள் தமிழை வளர்த்துதான், வருகிறோம். எனவே, தமிழை வைத்து எங்களுக்கு மதிப்பெண் போட தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருக்கு உரிமை இல்லை.

    புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதில் அரசியல் கிடையாது. இதில் அரசியல் இருப்பதாக முன்னாள் முதல்வர் கூறுகிறார்.

    அவருக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. 22 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.

    மக்கள் பணத்தை எடுத்து என்னுடைய வசதிக்காக செலவு செய்யமாட்டேன் என்றார்.

    • ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் கடும் எதிர்ப்பு எழுந்தது.

    திருப்பூர் :

    கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பி.காம்., முதலாமாண்டு மாணவர்களுக்கு எம்.எஸ்., ஆபிஸ் பாடம் இருந்தது. இப்பாடம் மாற்றப்பட்டு அதற்கு பதில் ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தேர்வுக்கு 20 நாட்களே இருந்த நிலையில், பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை பல்கலைக்கழக நிர்வாகம் கைவிட்டுள்ளது. முதல் செமஸ்டரில் புதிய பாடங்கள் பின்பற்றப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்த தகவல் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முருகவேல் கூறுகையில், பி.காம்., மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றுவது நிறுத்தப்பட்டது. முதல் செமஸ்டர் தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும். இரண்டாவது செமஸ்டருக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்துவது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்படும். ஒப்புதல் கிடைத்தால் அமல்படுத்தப்படும் என்றார்.

    • பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 35 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டன.
    • நடப்பு கல்வி ஆண்டில்கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றிவழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    கடந்த2020ம் ஆண்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியதில் ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டன. ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சில மாதங்கள் நேரடியாகவும், பல மாதங்கள் ஆன்லைன்வழியிலும் பாடங்கள் நடத்தப்பட்டன. பள்ளிகளுக்கு அதிகளவில் விடுமுறை விடப்பட்டதால், பாடத்திட்டத்தின் அளவு குறைக்கப்பட்டது.

    அதன்படி வழக்கமான பாடத்திட்டத்தில் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 50 சதவீதம்,9ம் வகுப்புக்கு 38, 10ம் வகுப்புக்கு, 39, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 35 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டன.இதன் அடிப்படையில் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டன.

    நடப்பு கல்வி ஆண்டில்கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் முழு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையில் இருந்தபடியே பாடத் திட்டமும் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.1 முதல் பிளஸ் 2 வரைஅனைத்து வகுப்பு மாணவர்களுக்கும்2019-20ம் கல்வி ஆண்டில் அமலான முழு பாடத்திட்டம் மற்றும் பாடங்கள், நடப்பு கல்வி ஆண்டிலும் நடத்தப்படும் என்றும், தற்போதைய நிலையில் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மத்திய பிரதேச மாநில 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தில் கோத்ரா கலவரம் குறித்த பாடத்தை நீக்க வேண்டும் என அம்மாநில மந்திரி மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். #BJP
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசியல் அறிவியல் புத்தகத்தில், சுதந்திரத்துக்கு பின்னர் இந்தியா என்ற பாடத்தில் பாஜக இந்துத்துவ சித்தாந்தத்தை ஊக்குவித்து வந்ததாகவும், குறிப்பாக 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரம் குறித்தான பாடங்கள் இடம்பெற்றுள்ளன. கலவரம் நடந்த நேரத்தில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடிக்கு பிரதமர் வாஜ்பாய், ராஜ தர்மத்தை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியதாக பாடத்தில் கூறப்பட்டுள்ளது.

    தேசிய கல்வி ஆராய்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் தயாரிக்கப்பட்ட இந்த புத்தகங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

    இந்நிலையில், மேற்கண்ட பாடத்தை புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய பிரதேச கல்வி மந்திரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். முந்தைய காங்கிரஸ் அரசில் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் பாடங்களில் முறையற்ற முறையில் நுழைக்கப்பட்டதாக அம்மாநில பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

    பாஜக உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. 
    ×