search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Allahabad university"

    • மாணவர்கள் கிருஷ்ணரின் நிர்வாக மந்திரங்கள் அடங்கிய பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.
    • அஷ்டாங்க யோகா வகுப்பும் மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது.

    அலகாபாத் பல்கலைக்கழத்தில் புதிய பட்டப்படிப்பு துவங்கப்பட்டு இருக்கிறது. ஐந்து ஆண்டுகள் கொண்ட புதிய பாடத்திட்டத்தில் BBA-MBA படிப்பை மாணவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு படிக்க முடியும். இந்த பட்டப்படிப்பை வர்த்தக பிரிவு ஆசிரியர்கள் துவங்கி உள்ளனர்.

    புதிய ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் மாணவர்கள் பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்ட புராணங்களில் இருந்து கிருஷ்ணரின் நிர்வாக மந்திரங்கள் அடங்கிய பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். கிருஷ்ணர் மட்டுமின்றி ஜெ.ஆர்.டி. டாடா, அசிம் பிரேம்ஜி, திருபாய் அம்பானி, நாராயண மூர்த்தி, சுனில் மிட்டல் மற்றும் பிர்லா போன்ற முன்னணி தொழிலதிபர்கள் பற்றியும் நிர்வாக ரீதியிலான பாடங்களை கற்கவுள்ளனர்.

    இதோடு அஷ்டாங்க யோகா வகுப்பும் மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது. தற்போது இந்த ஆண்டிற்கான பாடத்திட்டத்தில் மொத்தம் 26 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த படிப்பில் மொத்தம் 10 செமஸ்டர்கள் உள்ளன. புதிய படிப்பில் பல்வேறு வழிமுறைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

    அந்த வகையில் ஐந்து ஆண்டுகள் பாடத்திட்டம் கொண்ட இந்த பாடத்திட்டத்தில் மாணவர்கள் முதலாம் ஆண்டிலேயே படிப்பை நிறுத்திக் கொண்டால் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கப்படும். இரண்டாவது ஆண்டில் படிப்பை நிறுத்திக் கொண்டால் டிப்ளோமா படிப்புக்கான சான்றும், மூன்றாவது ஆண்டில் நிறுத்திக் கொண்டால், BBA பட்டமும், ஐந்து ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்தால் MBA பட்டமும் பெற முடியும்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றம் செய்யும் முடிவுக்கு அம்மாநில மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்தது. #UPcabinet #Allahabadrename #Prayagraj
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒருசேர சங்கமிக்கும் பகுதியில் பழம்பெருமை வாய்ந்த அலகாபாத் நகரம் உள்ளது. அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத் ஐகோர்ட் ஆகியவற்றால் இந்நகரின் பெயரை அடிக்கடி செய்திகளில் காண முடியும்.

    அலகாபாத் நகரில் வரும் ஜனவரி மாதத்தில் கும்பமேளா நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் அங்குள்ள சாதுக்கள், ஜீயர்கள் மற்றும் பூசாரிகளுடன் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்துக்களின் ரிக் வேதம் மற்றும் ராமாயணம், மகாபாரதம் ஆகிய காப்பியங்களில் இந்த இடம் பிரயாக்ராஜ் என குறிப்பிடப்பட்டுள்ளதால் அலகபாத் நகரத்தின் பெயரை  பிரயாக்ராஜ்  என மாற்றம் செய்ய விரும்புவதாக அவர்களிடம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார். இந்த முடிவுக்கு அவர்களும் இசைவு அளித்தனர்.


    இதைதொடர்ந்து, இன்று முதல்-மந்திரி தலைமையில் கூடிய மந்திரிசபை கூட்டத்தில் அலகாபாத் நகரத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்று மாற்றம் செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்த நகரம் இன்று முதல் பிரயாக்ராஜ் என்று அழைக்கப்படும். இந்த முடிவின்மூலம், இந்திய கலாசாரம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என அம்மாநில மந்திரி சித்தார்த்தநாத் சிங் தெரிவித்துள்ளார். #UPcabinet  #Allahabadrename #Prayagraj
    ×