search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலகாரம்"

    • தீபாவளி பலகாரம் தொடர்பான புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • உணவு புகார்்கள் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் புகார்் எண்ணிற்கு பொதுமக்கள் புகார்்களை தெரிவிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமா னதாக விளங்கும் உணவு மற்றும் உணவுப்பொ ருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்காி உணவு பொருட்களை தயாரிப்பவா்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

    உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக செயற்கை நிறமிகளையோ உபயோகிக்கக கூடாது. இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் உணவு கையாள்பவா்கள் முழு உடல் நலத்துடன் தொற்று நோய்கள் இல்லாத வகையில் பணியில் அமா்த்தப்பட வேண்டும்.

    ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு விவரச் சீட்டு இடும் பொழுது அதில் தயாரிப்பாளரின் முழு முகவாி, உணவுப் பொருளின் பெயா், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்), சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் தட்டுகளில் இனிப்பு வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் ஆகியவை பொதுமக்கள் அறியும் வகையில் அச்சடித்து காட்சிப்படுத்த வேண்டும்.

    உணவுப் பொருட்களை விற்பனை செய்த பின்னா் வழங்கும் ரசீது, பில்களில் உணவு அங்காடியின் உரிமம் எண், பதிவு எண்ணை அச்சடித்து இருக்க வேண்டும். உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

    பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவா்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களும் உடனடியாக

    இது தொடா்பான உணவு புகார்்கள் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ்அப் புகார்் எண்ணிற்கு பொதுமக்கள் புகார்்களை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாஸ்டர் கவனிப்பதற்குள் கியாஸ் அழுத்தம் காரணமாக ரெகுலேட்டர் சிதறி தீப்பற்ற தொடங்கியது.
    • கடைக்குள் இருந்தவர்கள், டீ குடித்து கொண்டிருந்தவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் நான்குவழி சாலை சந்திப்பில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கண்ணையன் என்பவர் டீ ஸ்டால் வைத்துள்ளார்.

    கடை முன்பு சிலிண்டர் அடுப்பில் வைத்து பலகாரம் சுடும் போது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் இருந்து கியாஸ் வெளியாகி உள்ளது. இதனை பலகார மாஸ்டர் கவனிப்பதற்குள் கியாஸ் அழுத்தம் காரணமாக ரெகுலேட்டர் சிதறி தீப்பற்ற தொடங்கியது.

    இதனை அடுத்து டீ கடைக்குள் இருந்தவர்கள், டீ குடித்து கொண்டு இருந்தவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடினர்.

    இருந்த போதிலும் தீகொளுந்து விட்டு எரிந்ததில் கடை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த 2 இரு சக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது.கடை உரிமையாளர் பாலமுரு கனுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

    இந்த விபத்து குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×