search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நம்பிக்கையில்லா தீர்மானம்"

    • பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார்
    • 125 பேர் ஆதரவும், 112 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது

    பீகார் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்து இருந்த நிதிஷ் குமார், அக்கூட்டணியிலிருந்து திடீரென விலகி, சில தினங்களுக்கு முன் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அவர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.

    இன்று நிதிஷ் குமாரின் ஆட்சி மீதான நம்பிக்கை குறித்து முடிவாக உள்ள நிலையில், முன்னதாக சபாநாயகர் அவத் பீகாரி சவுத்ரி (Awadh Bihari Choudhary) மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிர்த்து 112 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

    இதனையடுத்து தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த சவுத்ரி பதவி விலகினார்.

    • தற்போது 80 சதவீதம் கவுன்சிலர்கள் அதாவது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
    • ஒரு மாதத்திற்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் தச்சை கணேசராஜா இன்று மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருமாறு மனு அளித்துள்ளனர்.

    தற்போது 80 சதவீதம் கவுன்சிலர்கள் அதாவது 38 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு கொண்டு வரும்போது மாநகராட்சி கமிஷனர் அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து கவுன்சிலர்களுக்கும் நோட்டீஸ் வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.

    தற்போது உள்ள கமிஷனர் மிகவும் நேர்மையான நபராக இருப்பதால் கண்டிப்பாக இதை செய்வார் என்று நம்புகிறோம்.

    தற்போது கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மக்கள் நலனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க கவுன்சிலர்கள் நிச்சயமாக ஆதரவு அளிப்பார்கள்.

    மாநகராட்சி கமிஷனர் உடனடியாக இந்த மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியை முடக்கி வைத்து உடனடி தீர்வு காண வேண்டும்.

    சுமார் 6 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த மாநகராட்சியில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தற்போதுள்ள தி.மு.க அரசின் மாநகராட்சியை கலைக்க வேண்டும். தற்போது அளிக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான மனுவில் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் கையெழுத்தும் இருக்கலாம்.

    சந்திப்பு பஸ் நிலையம் எப்போது திறக்கும் என்று தெரியவில்லை. பேட்டை பகுதியில் அமைக்கப்பட்ட சரக்கு முனையத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை அது பயன்பாட்டுக்கு வரவில்லை. ரூ.2.85 கோடி மதிப்பில் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் சீரமைக்கப்பட்டது என்று கூறினர். ஆனால் வெறுமனே பெயிண்டிங் மட்டும் அடித்து முடித்து விட்டனர். தற்போது அதில் தூண் பகுதி இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின்போது பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, பகுதி செயலாளர் காந்தி வெங்கடாசலம், பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன்,தச்சை மாதவன், மாவட்ட இளைஞர் பாசறை முத்துப்பாண்டி, சம்சு சுல்தான் உள்பட பலர் இருந்தனர். 

    • தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னையில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து புகார் தெரிவித்தனர்.
    • கடந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வந்த நிலையில் மேயர் வரவில்லை என கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்ளனர்.

    மேயர் சரவணனுக்கும், பெரும்பான்மையான தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் சென்னையில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து புகார் தெரிவித்தனர். அவர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தார்.

    மேலும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசுவும் இரு தரப்பினரிடமும் பேசி மாநகராட்சி கூட்டத்தை சுமூகமாக நடத்த வலியுறுத்தினார்.

    கடந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வந்த நிலையில் மேயர் வரவில்லை என கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தி.மு.க.வை சேர்ந்த 38 கவுன்சிலர்கள் நேற்று மாநகராட்சி கமிஷனர் சுபம் ஞானதேவ் ராவை சந்தித்து மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் கடிதத்தை வழங்கினர். ஆனால் அதனை வாங்க கமிஷனர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் கடிதத்தை வாங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக தி.மு.க. கவுன்சிலர்கள் கூறியதால் அந்த கடிதத்தை பெற்றுக் கொண்டு கமிஷனர் ஒப்புகை சீட்டு வழங்கினார்.

    இத்தகவல் பரவியதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கமிஷனர் சுபம் ஞானதேவ் ராவ் கூறும்போது, தி.மு.க. கவுன்சிலர்கள், மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக விரைவில் மாமன்ற கூட்டத்தை கூட்டி விவாதம் நடத்தி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • மக்களவையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி
    • முன்னதாகவே அவைக்கு வந்திருந்தால் ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெற்றிருக்கும்- கார்கே

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அதன்மீதான விவாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பதில் உரை அளித்தார்.

    அப்போது எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் எதிர்க்கட்சிகள் குறித்தே பேசினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்த நிலையில், அவையில் நாங்கள் இருந்த 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி, மணிப்பூர் விவகாரம் குறித்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. மக்களவையை தேர்தல் பேரணியாக பயன்படுத்தியுள்ளார் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் ''கடைசியாக பிரதமர் மோடி மக்களவை வந்து பேசியதற்கு நன்றி. முன்னதாகவே, தனது ஆணவத்தை விட்டுவிட்டு பாராளுமன்றம் வர சம்மதம் தெரிவித்திருந்தால், பராளுமன்றத்தின் மதிப்புமிக்க நேரம் சேமிக்கப்பட்டு, சிறந்த விவாதத்திற்குப் பிறகு, முக்கியமான மசோதாக்கல் நிறைவேற்றப்பட்டிருக்கும்'' என்றார்.

    ''எதிர்பாராத விதமாக மணிப்பூர் விசயம் தொடர்பாக, பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஆனால், நீங்கள் மக்களவையை தேர்தல் பேரணி போன்று பயன்படுத்தியுள்ளீர்கள்'' என மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் விமர்சனம் செய்துள்ளார்.

    மேலும், ஒட்டுமொத்த பேச்சியின்போது பிரதமர் மோடி காங்கிரசை தாக்கு பேசினார். மணிப்பூரை பற்றி சிறிதளவே பேசியுள்ளார். காங்கிரசை விமர்சனம் செய்தபோது, அவரிடம் காங்கிரஸ் மீதான பயனத்தை நாங்கள் பார்க்க முடிந்தது.'' என்றார்.

    • பெண்கள் பாதிக்கப்படுவதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் அரசியல் செய்யக்கூடாது என்றார்.
    • சிலப்பதிகாரத்தின் உணர்வை பிரதமர் செயல்படுத்தி வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இன்று 3-வது நாளாக விவாதம் நடந்தது.

    எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசும்போது, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசினார்.

    இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக உறுப்பினர் கனிமொழி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், "மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி என எங்கும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் அதை வைத்து அரசியல் செய்யக்கூடாது" என்றார்.

    1989 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்த சம்பவத்தை நிர்மலா சீதாராமன் நினைவு கூர்ந்தார். "அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். தி.மு.க. உறுப்பினர்கள் அவரைப் பார்த்து சிரித்தனர். முதல்வராக பதவியேற்ற பிறகுதான் சட்டசபைக்கு வருவேன் என்று ஜெயலலிதா சபதம் எடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல்வரானார்" என குறிப்பிட்டார்.

    போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களைப் பார்த்து பேசிய அவர், "கௌரவர்களின் சபை பற்றி பேசுகிறீர்கள், திரவுபதியை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா?" என கேள்வி எழுப்பினார்.

    மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக திமுக எம்.பி. கனிமொழியின் மற்றொரு குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நிதி மந்திரி, சிலப்பதிகாரத்தின் உணர்வை பிரதமர் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

    • மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
    • மணிப்பூர் வன்முறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முழுமையாக பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் பிரதமர் மோடி அதை கண்டு கொள்ளவில்லை.

    இந்தநிலையில் மணிப்பூர் விவகாரம் பற்றி பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை பேச வைக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

    அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று முன்தினம் பாராளுமன்ற மக்களவையில் விவாதம் தொடங்கியது. முதல் நாள் காங்கிரஸ், பா.ஜ.க. தரப்பில் எம்.பி.க்கள் பேசினார்கள். இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று நடந்த விவாதம் பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் வகையில் இருந்தது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விவாதத்தை தொடங்கி வைத்து பேசுகையில் மத்திய அரசு மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாதது ஏன்? மணிப்பூர் கலவரத்தை ராணுவத்தை அனுப்பி கட்டுப்படுத்தாதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    ராகுல் காந்தி மேலும் பேசுகையில், "பா.ஜனதா செய்து வரும் அரசியல் மணிப்பூர் மாநிலத்தை மட்டும் கொல்லவில்லை. இந்தியாவையே கொன்று விட்டது. இந்தியாவை கொல்வதன் மூலம் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள்" என்று பகிரங்கமாக பேசினார்.

    அதற்கு மத்திய மந்திரிகள் அமித் ஷா, ஸ்மிருதி இரானி பதிலளித்து பேசினார்கள். அமித்ஷா பேசுகையில், "மணிப்பூர் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அமித் ஷா விளக்கி கூறினார்.

    அமித் ஷா தனது பேச்சை முடிக்கும் போது மணிப்பூரில் அமைதி ஏற்பட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கோரிக்கை விடுத்தார். அந்த தீர்மான நகல்கள் எம்.பி.க்களுக்கு கொடுக்கப்பட்டது.

    அந்த தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா வாசித்தார். இதையடுத்து பாராளுமன்றத்தில் அந்த தீர்மானம் உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

    இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைப்பட்டது. பின்னர் அவை தொடங்கிய போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். கடந்த 2 நாட்களில் பெரும்பாலான கட்சிகளுக்கு இந்த தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே இன்று இவர்களுக்கு குறைந்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்கள் தொடர்ந்து வாதம் செய்தனர். மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இதனால் பாராளுமன்றத்தில் இடைஇடையே அமளி ஏற்பட்டது.

    எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு மக்களவையில் பிரதமர் மோடி பேச உள்ளார். இதனால் பிரதமர் மோடியின் பதில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் எத்தகைய சூழ்நிலையில் வன்முறை தொடங்கியது? அதை மத்திய, மாநில அரசுகள் எத்தகைய நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தன? என்பது பற்றி மோடி விளக்குவார் என்று தெரிகிறது. மேலும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் முழுமையாக பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மக்களவையில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் குற்றச்சாட்டு
    • ஸ்மிரிதி இரானி, அமித்ஷா பதிலடி கொடுத்த நிலையில், பிரதமர் இன்று பதில்

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன. மேலும், பாராளுமன்ற விதி 267-ன்படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

    மேற்கண்ட கோரிக்கைகளுக்கு பாராளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

    இதன் மீதான விவாதம் நேற்றுமுன்தினம் தொடங்கிய நிலையில், நேற்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ராகுல்காந்தி பா.ஜ.க. அரசை விமர்சித்து காட்டமாகப் பேசியிருந்தார். அதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி. உரையாற்றினார்.

    இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் பதிலளித்தார். மேலும், மணிப்பூரில் அனைத்துப் பிரிவினரும் இணைந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

    இதையடுத்து இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி இன்று பதில் உரை வழங்குகிறார்.

    தன் மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிப்பார். குறிப்பாக ராகுல் காந்தியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி நிச்சயம் பதிலடி கொடுப்பார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

    • மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விக்கு உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் பதிலளித்தார்.
    • நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை மக்களவையில் பதில் உரை வழங்குவார்.

    புதுடெல்லி:

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன. மேலும் , பாராளுமன்ற விதி 267இன் படி விரிவான விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

    மேற்கண்ட கோரிக்கைகளுக்கு பாராளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்படாததால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

    இதன் மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ராகுல்காந்தி பா.ஜ.க. அரசை விமர்சித்து காட்டமாகப் பேசியிருந்தார். அதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி உரையாற்றினார்.

    இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மக்களவையில் பதிலளித்தார்.

    மேலும், மணிப்பூரில் அனைத்துப் பிரிவினரும் இணைந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார். இதையடுத்து இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை பதில் உரை வழங்குவார் என மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மீதும் மத்திய அரசின் மீதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் நாளை பதில் அளிப்பார். குறிப்பாக ராகுல் காந்தியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி நிச்சயம் பதிலடி கொடுப்பார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

    • பாரத தாய் கொலை செய்யப்பட்டதாக கூறிய ராகுலின் பேச்சை நாடு மன்னிக்காது.
    • காஷ்மீரில் சிறப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதால் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.

    எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி தற்போது நடந்து வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் ஒருங்கிணைந்து இயங்க தொடங்கி உள்ளன. பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக "இந்தியா" கூட்டணி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று முதல் நாள் விவாதம் நடைபெற்றது. மணிப்பூர் கலவரத்துக்கு பொறுப்பேற்று அந்த மாநில முதல்-மந்திரி பைரேன்சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைத்து விட்டு மணிப்பூர் விவகாரம் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினார்கள்.

    இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 2-வது நாள் விவாதம் நடந்தது. 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவை கூடியதும் வழக்கம் போல கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது கடும் கூச்சல் நிலவியதால் சபை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு 12 மணிக்கு சபை மீண்டும் கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.

    நேற்றே பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று ராகுல் பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை பூர்த்தி செய்யும் வகையில் ராகுல்காந்தி எதிர்க்கட்சிகள் சார்பில் எழுந்து பேசினார். தொடக்கத்திலேயே அவரது பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    என்றாலும் கடும் கூச்சல்-குழப்பங்களுக்கு மத்தியில் ராகுல் பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    என்னை மீண்டும் எம்.பி.யாக அமர்த்தியதற்கு முதலில் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடைசியாக நான் பேசிய போது அதானி பற்றி குறிப்பிட்டேன். இது உங்களை காயப்படுத்தி இருக்கலாம் உங்கள் மூத்த தலைவர் வேதனைப்பட்டு இருக்கலாம். அந்த வலி உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

    அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் நான் உண்மையைத்தான் பேசினேன். தற்போது நான் அதானி பற்றி பேசமாட்டேன். இதனால் பா.ஜனதா உறுப்பினர்கள் அச்சப்பட வேண்டாம். மணிப்பூரை பற்றி தான் நான் பேசுவேன்.

    (அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் பா.ஜனதா எம்.பி.க்களை பார்த்து பயப்பட வேண்டாம் என்று முழக்கங்களை எழுப்பினார்கள்.)

    நான் இன்று யாரையும் அதிகம் தாக்கி பேசப்போவதில்லை. நீங்கள் நிம்மதியாக இருங்கள். நான் எனது மனதில் இருந்துதான் பேசுகிறேன். நான் பேசத் தொடங்கியவுடன் சிலர் வெறுப்புடன் கோஷமிட்டனர்.

    நான் 130 நாட்கள் ஒற்றுமை இந்தியா என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டேன். ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு மக்களுடன் யாத்திரை செய்தேன். இந்த யாத்திரையில் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன். யாத்திரையின் போதும், அதன் பிறகும் நிறைய பேர் என்னிடம் ஏன் யாத்திரை செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நாட்டை புரிந்து கொள்வதற்காகவே யாத்திரையை தொடங்கினேன்.

    யாத்திரையின்போது விவசாயி ஒருவரிடம் பேசியபோது, அவரது இதயத்தில் இருந்த வலி என் இதயத்துக்கு இடம் மாறியது. அன்பை செலுத்தவே நடைபயணம் மேற்கொண்டிருப்பதை பிறகு புரிந்து கொண்டேன். என் யாத்திரை இன்னும் முடியவில்லை.

    நான் நம்பும் விஷயத்துக்காக உயிரை விடவும், பிரதமர் விரும்பினால் நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன். இதயத்தில் இருந்து பேசும் பேச்சு இதயங்களை சென்றடையும் என்பதால் இதயத்தில் இருந்து பேச போகிறேன்.

    மணிப்பூருக்கு இதுவரை பிரதமர் ஏன் செல்லவில்லை? ஆனால் நான் சென்றிருந்தேன். அங்கு முகாம்களில் தங்கியிருந்தவர்களை சந்தித்து பேசினேன். ஆனால் மணிப்பூர் நாட்டின் ஒரு பகுதியாக கருதாததால் பிரதமர் அங்கு செல்லவில்லை. நிவாரண முகாமில் இருந்த பெண்ணிடம் பேசியபோது, தன் கண் முன்னே ஒரே மகன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

    மற்றொரு முகாமில் பெண்ணிடம் உங்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது அவர் பேச முடியாமல் மூர்ச்சை அடைந்தார். நினைத்து பார்க்கவே முடியாத பயங்கரமான சம்பவங்கள் பெண்களுக்கு நடந்துள்ளது.

    மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம். ஆனால் அதை செய்யவில்லை.

    இந்தியா என்ற சித்தாந்தத்தையே அரசு கொன்றிருப்பது மணிப்பூர் சம்பவம் மூலம் நிரூபணமாகி உள்ளது.

    பாரத தாய் மணிப்பூரில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். என் ஒரு தாய் இங்கே அமர்ந்திருக்கிறார். மற்றொரு தாயை நீங்கள் மணிப்பூரில் கொன்றிருக்கிறீர்கள். நீங்கள் தேச பக்தர்கள் அல்ல. நீங்கள் தேச துரோகிகள்.

    ராவணனின் அகங்காரத்தால் இலங்கை எரிந்தது. அரசின் அகங்காரத்தால் மணிப்பூர், அரியானா போன்ற மாநிலங்கள் எரிந்து கொண்டிருக்கிறது. மேகநாதன் மற்றும் கும்பகர்ணன் பேச்சை ராவணன் கேட்டுக்கொண்டு இருந்தார். தற்போது அமித்ஷா மற்றும் அதானி பேச்சை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டு இருக்கிறார். ராவணன்கூட மக்கள் பேச்சை கேட்டார். ஆனால் நீங்கள் கேட்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராகுல்காந்தி பேசிக் கொண்டிருந்தபோது பா.ஜனதா உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பிய படியே இருந்தனர். அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பதிலுக்கு கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பா.ஜனதா உறுப்பினர்கள் மோடி, மோடி என்று கோஷம் எழுப்பினார்கள். பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ராகுல், ராகுல் என்று கோஷம் எழுப்பினர். அவர்களை சபாநாயகர் சமாதானப்படுத்தினார்.

    அதை தொடர்ந்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசியதாவது:-

    ஊழல், வாரிசு அரசியலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். மிக மோசமான பேச்சை நாம் இங்கு கேட்டோம். அதை கண்டிக்கிறேன்.

    நீங்கள் இந்தியா கிடையாது. ஊழலை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது காங்கிரஸ்தான். எதிர்க்கட்சியினர் ஊழலை பிரதிபலிக்கின்றனர் என்பதால் அவர்கள் இந்தியா அல்ல. ஊழலை பற்றி பேசும் போது உங்கள் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வை பாருங்கள்.

    பாரத தாய் கொலை செய்யப்பட்டதாக கூறிய ராகுலின் பேச்சை நாடு மன்னிக்காது. பாரத தாயை அவர் இழிவுப்படுத்தி விட்டார். மணிப்பூர் துண்டாடப்படவில்லை. அது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.

    பாரத தாயை கொன்றதாக ராகுல் காந்தி பேசும் போது எதிர்க்கட்சியினர் மேஜையை தட்டி ஆமோதித்தனர். இதை ஏற்க முடியாது. மிகவும் கண்டனத்துக்குரியது.

    காஷ்மீர் பண்டிட்டுகளை காங்கிரஸ் புறக்கணித்தது. அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக காங்கிரஸ் என்ன செய்தது. காஷ்மீரின் உண்மையான நிலையை அறிந்து கொள்வதற்கு எதிர்க்கட்சியினர் விரும்பவில்லை.

    காஷ்மீரில் சிறப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதால் பெண்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது பெரும் கொடுமைகள் மக்களுக்கு இழைக்கப்பட்டன. ராஜஸ்தானில் அநீதி இழைக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி கேட்டு கண்ணீர் வடிக்கிறார்கள்.

    ராகுல் காந்தி தற்போது ராஜஸ்தான் செல்ல இருக்கிறார். அங்கு பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார். பெண்களை பாதுகாக்க காங்கிரஸ் தவறி விட்டது.

    மேற்கு வங்காளத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை. 370-வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். இந்த சட்டப்பிரிவு மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது என்று நான் சொல்ல விரும்புகிறேன்.

    தி.மு.க. எம்.பி.க்கள் வட இந்தியாவை மட்டுமே இந்தியா என்று கூறுகின்றனர். அவர்களின் இந்த கருத்துக்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பாராளுமன்றத்தில் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. பா.ஜ.க. எம்.பி.க்களும், காங்கிரஸ் எம்.பி.க்களும் ஒருவர் மீது ஒருவர் பயங்கர குற்றச்சாட்டுகளை தெரிவித்ததால் பாராளுமன்றத்தில் அனல் பறந்தது.

    குறிப்பாக ராகுல் பேசும் போது ஆளும் கட்சி தரப்பில் கடும் அமளி ஏற்பட்டது. அதுபோல மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசும்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆவேசத்துடன் கோஷமிட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட நினைவு தினம்
    • எம்.பி.க்கள் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி

    மகாத்மா காந்தியால் 1942-ல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.

    இதனையொட்டி பாராளுமன்ற இரு அவைகளிலும் எம்.பி.க்கள் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    அதேபோல் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்டு 78 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதில்  உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட பின் அவை நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று விவாதம் தொடங்கியது
    • இன்று ராகுல் காந்தி, அமித்ஷா பேசுகிறார்கள்

    மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேச்சை தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ராகுல் காந்தி நேற்று பேசவில்லை. காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் பேச்சை தொடங்கினார். தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு போன்றோரும் பேசினர்.

    இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி மக்களவையில் பேசுவார் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேசுகிறார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று வாக்கெடுப்பிற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

    • மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காதது குறித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.
    • உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

    மத்திய பாஜக அரசுக்கு எதிராக பாராளுமன்ற மக்களவையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பாஜக அரசு மீதும் பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காதது குறித்து கேள்வி எழுப்பினர்.

    எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:-

    உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது.

    எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரித்தால் உங்கள் கூட்டணிக்கு ஐ.என்.டி.ஐ.ஏ. என்று பெயர் வைப்பது கைகொடுக்காது.

    நாட்டை ஆளும் அதிகாரத்தை அரசாங்கம் இழக்கும்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது என்பதை எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். தவறான நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் வருத்தம் தெரிவிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×