என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கரன்கோவில் நகராட்சி"

    • சேர்மன் உமா மகேஸ்வரி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
    • ஒரு கவுன்சிலர் மட்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 30 வார்டுகளை உள்ளடக்கிய பகுதியாகும்.

    சங்கரன்கோவில் நகராட்சி நகர்மன்ற தேர்தலில் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் 156 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த 9 பேர், அ.தி.மு.க.வை சேர்ந்த 12 பேர், ம.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 1 நபர், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஒருவர், மற்றும் 5 சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளிட்ட 30 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதில் ம.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேட்சையாக வெற்றி பெற்றவர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவளித்தனர். இந்நிலையில் கடந்த 2022 மார்ச் 4-ந் தேதி நடந்த நகர்மன்ற சேர்மன் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தலா 15 வாக்குகளை பெற்று சமநிலை வகித்தது. தொடர்ந்து தேர்தல் அதிகாரி முன்னிலையில் குலுக்கல் முறையில் சேர்மன் ஆக தி.மு.க.வால் அறிவிக்கப்பட்ட உமா மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதேபோல துணைத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கண்ணன் என்ற ராஜு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நகராட்சியில் சேர்மன் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என கூறி சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 24 கவுன்சிலர்கள் கமிஷனர் (பொறுப்பு) நாகராஜனிடம் மனு அளித்தனர்.

    இந்நிலையில் இன்று சேர்மன் உமா மகேஸ்வரிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட 29 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சேர்மன் உமா மகேஸ்வரி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    இந்நிலையில் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 28 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒரு கவுன்சிலர் மட்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தார். 30 கவுன்சிலர்களில் 28 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் சேர்மன் உமா மகேஸ்வரி சேர்மன் பதவி பறிபோனது.

    தி.மு.க.வை சேர்ந்த சேர்மன் பதவி பறிபோன சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இது குறித்து நகராட்சி கமிஷனர் கூறுகையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஆதரவாக 28 கவுன்சிலர்கள் வாக்களித்து உள்ளதால் சேர்மன் உமா மகேஸ்வரி பதவி இழந்தார் . இதுகுறித்து நகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அதன் பின்னர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்தவுடன் புதிய சேர்மன் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு ஆய்வு செய்யப்பட்டு சுமார் 50 கிலோ பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சங்கரன்கோவில்:

    தமிழக அரசு வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் அனைத்து வகையான ஒரு தடவை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள்  பைகள் உள்ளிட்ட பொருட்களை நிரந்தரமாக தடைசெய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் நகராட்சிப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்காக நகர வர்த்தக நிறுவனங்கள், வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. 

    இதையடுத்து நகர்பகுதியில் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டதில் சுவாமி சன்னதி தெரு, ராஜபாளையம் சாலை, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு ஆய்வு செய்யப்பட்டு சுமார் 50 கிலோ பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து குற்றச்செயல் புரிந்தவர்களுக்கு ரூ. 2600 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பாரதியார் 8-ம் தெருவில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் 410 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது எனவும், மேலும் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்பாடு நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும், பொதுமக்களுக்கு எக்காரணம் கொண்டும் இலவசமாக பிளாஸ்டிக் கேரிபைகளை விநியோகம் செய்யக் கூடாது, மீறி இனி தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் விநியோகம் செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.

    பிளாஸ்டிக் கேரிபைகள் ஒழிப்பு பணியில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி உத்தரவின்படி  சுகாதார அலுவலர் பாலச்சந்தர் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், பிச்சையா பாஸ்கர், சக்திவேல், மாதவராஜ்குமார் மற்றும் துப்புரவுபணி மேற்பார்வையாளர்கள், நகராட்சிப்பணியாளர்கள் ஆய்வு செய்து பறிமுதல் செய்தனர்.
    ×