search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்: ராகுல் காந்தி, அமித்ஷா இன்று பேசுகிறார்கள்
    X

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்: ராகுல் காந்தி, அமித்ஷா இன்று பேசுகிறார்கள்

    • நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நேற்று விவாதம் தொடங்கியது
    • இன்று ராகுல் காந்தி, அமித்ஷா பேசுகிறார்கள்

    மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேச்சை தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ராகுல் காந்தி நேற்று பேசவில்லை. காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் பேச்சை தொடங்கினார். தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு போன்றோரும் பேசினர்.

    இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி மக்களவையில் பேசுவார் என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பேசுகிறார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று வாக்கெடுப்பிற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

    Next Story
    ×