search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார்? - காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய்
    X

    பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார்? - காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய்

    • மணிப்பூர் பற்றி எரிகிறது என்றால் ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிதாகவே அர்த்தம்.
    • மணிப்பூர் மாநில பெண்கள், இளைஞர்கள், குழந்தைகளுக்கு நீதி வேண்டும்.

    பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்கியது. காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கினார்.

    அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் பிரதமர் பெயரை குறிப்பிட்டு பேசுவதற்கு அமித்ஷா கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய கௌரவ் கோகாய்,

    * பிரதமரும், அவை தலைவரும் தங்களது அலுவலகத்தில் என்ன பேசுகின்றனர் என்பதை கூற தயார்.

    * பிரதமர் ஏன் மௌனம் காக்கிறார்? ஏன் பிரதமர் மணிப்பூருக்கு செல்லவில்லை.

    * மணிப்பூர் விவகாரத்திற்காக இந்தியா கூட்டணி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

    * மணிப்பூர் பற்றி எரிகிறது என்றால் ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிதாகவே அர்த்தம்.

    * மணிப்பூர் மாநில பெண்கள், இளைஞர்கள், குழந்தைகளுக்கு நீதி வேண்டும்.

    * பிரதமர் மோடி அவைக்கு வந்து தன்னுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும்.

    * ஒட்டுமொத்த அவையும் மணிப்பூர் பக்கம் உள்ளது என்பதை காட்ட வேண்டும்.

    இவ்வாறு காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் தொடர்ந்து பேசி வருகிறார்.

    Next Story
    ×