search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தப்பி ஓட்டம்"

    • சிறை காவலர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில் தப்பி சென்ற ஜெயந்தியை போலீசார் தேடி வந்தனர்.
    • புழல் சிறை அதிகாரி லிங்கசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கிருந்த ஜெயந்தியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    சென்னை:

    புழல் சிறையில் இருந்து ஜெயந்தி என்ற பெண் 2 நாட்களுக்கு முன்பு தப்பிச் சென்றார். கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சிறை வாசல் வழியாகவே வெளியேறியது தெரியவந்தது.

    இது தொடர்பாக சிறை காவலர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட நிலையில் தப்பி சென்ற ஜெயந்தியை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெங்களூரு விமான நிலையம் அருகே கங்கேரி பகுதியில் தப்பியோடிய கைதி ஜெயந்தி பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புழல் சிறை அதிகாரி லிங்கசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கிருந்த ஜெயந்தியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பெண் கைதி ஜெயந்தி தப்பிய விவகாரத்தில் சிறை வார்டர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார்.
    • இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது.

    செங்குன்றம்:

    பெங்களூரை சேர்ந்தவர் ஜெயந்தி (32). இவர் செம்மஞ்சேரியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம் பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் ஜெயந்தி சிறையில் இருந்த போது பார்வையாளர்கள் நுழைவு பகுதி வழியாக சென்று புழல் ஜெயிலில் இருந்து தப்பி வெளியே சென்றுவிட்டார்.

    அவர் தப்பி சென்றது உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது. கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது பார்வையாளர்கள் நுழைவு வாயில் வழியாக ஜெயந்தி வெளியே செல்வது பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக் காவலர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டு உள்ளார். புழல் ஜெயிலில் இருந்து தப்பிய ஜெயந்தியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு அதிகம் உள்ள புழல் ஜெயிலில் இருந்து பெண்கைதி தப்பி சென்ற சம்பவம் அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.
    • குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    திருச்சி:

    திருச்சி சத்திரம் வி.என்.நகர் பகுதியில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு உரிமம் பெற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு குழந்தை திருமணங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர் சிறுமிகள், பல்வேறு காரணங்களால் வீடுகளில் இருந்து வெளியேறி காவல் துறையினரால் மீட்கப்படும் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு காப்பக வார்டனின் கையில் இருந்த சாவியை பறித்துக் கொண்டு 16 வயதுள்ள ஒடிசா மற்றும் ராமநாதபுரம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 4 சிறுவர்கள் தப்பி ஓடினர்.

    அதைத்தொடர்ந்து மறுநாள் அந்த காப்பகத்தின் பொறுப்பாளர் ராஜேஷ் கோட்டை போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.

    ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.

    அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் அந்தக் காப்பக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி சிறுவர்கள் தப்பி ஓடியது குறித்து விளக்கம் கேட்டார். பின்னர் அந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 குழந்தைகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றுவதற்கு உத்தரவிட்டார். அதன்படி குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    மறு உத்தரவு வரும் வரை அந்த சிறுவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ள காப்பகங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 42 ஆண்டுகளாக நடந்து வரும் மதம் பிரச்சினை சார்ந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.
    • தான் விரும்பி செய்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார்.

    முல்லைத்தீவு:

    இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக பதவி வகித்தவர் சரவணராஜா. இலங்கை தமிழரான இவர் மிகவும் சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை, விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர் தீலிபன் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்தார்.

    சமீபத்தில் 42 ஆண்டுகளாக நடந்து வரும் மதம் பிரச்சினை சார்ந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தீர்ப்புக்கு பிறகு அவருக்கு பல வகைகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. மேலும் மிரட்டல்களும் வந்தது.

    இதையடுத்து நீதிபதி சரவணராஜா தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், மன அழுத்தம் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதி பொறுப்புகள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தார். தான் விரும்பி செய்த நீதிபதி பதவியை விட்டு விலகுவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் நிதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து நீதிபதி சரவணராஜா இலங்கையை விட்டு வெளியேறி தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இலங்கை வரலாற்றில் முதல் முறையாக உயிருக்கு பயந்து நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கைதான 4 பேர் ஜெயிலில் அடைப்பு
    • 10 வினாடிகள் மட்டுமே வீடியோ பதிவாகி இருந்தது.

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்ட பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணின் படுக்கையறை காட்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பெண்ணின் வீட்டில் செல்போனில் வீடியோ எடுத்து பரப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (37), சுமேஷ் (20), நிகேஷ் (20), பபின் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாலிபர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

    இந்த விவகாரம் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அந்த வாலிபரையும், பெண்ணையும் கண்டித்தனர். பலமுறை கண்டித்தும் அவர்கள் இதை அலட்சியமாக எடுத்துக்கொண்டனர். சம்பவத்தன்று வாலிபரும், இளம்பெண்ணும் வீட்டிற்குள் இருந்தனர். அப்போது வாலிபர்கள் வீட்டின் வெண்டிலேட்டர் வழியாக செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். படுக்கை அறையில் இருவரும் இருப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. 10 வினாடிகள் மட்டுமே வீடியோ பதிவாகி இருந்தது.

    இந்த வீடியோவை வாலிபர்கள் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ வேகமாக சமூக வலைதளங்களில் பரவியது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதில் சுமேஷ், நிகேஷ், பபின் ஆகிய 3 பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப் பது தெரியவந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்பட போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    • இளையராஜாவுக்கும், செல்லச்சாமிக்கும் இடம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.
    • செல்லச்சாமி அருகில் இருந்த மண்வெட்டியால் இளையராஜாவை தலையில் தாக்கியுள்ளார்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் இளையராஜா(வயது 19). இவர் அதே பகுதியில் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார்.

    இடப்பிரச்சினை

    இளையராஜாவுக்கும் அவரது சித்தப்பாவான செல்லச்சாமிக்கும்(35) இடம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் இளையராஜா வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தார்.

    அப்போது செல்லச்சாமிக்கும், இளைய ராஜாவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செல்லச்சாமி அருகில் இருந்த மண்வெட்டியால் இளையராஜாவை தலையில் தாக்கியுள்ளார். இதில் இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே செல்லச்சாமி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    போலீசார் விசாரணை

    இளையராஜா கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் இளையராஜா உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்த தகவலின் பேரில் புளியங்குடி போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள், இளையராஜா உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய அவரது சித்தப்பா செல்லச் சாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது.
    • திருப்போரூரில் வாலிபர் துப்பாக்கியுடன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்போருர்:

    திருப்போரூர் குளக்கரை அருகே பேக்கரி கடை உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் டி.குன்னத்துரை சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவர் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு பெங்களூரில் இருந்து தனிப்படை போலீசார் பேக்கரிக்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ஊழியர் விக்னேஷ் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தங்க வளையல்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து விக்னேசை போலீசார் கைது செய்து துப்பாக்கி மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    விக்னேஷ் கைது செய்யப்பட்டது எதற்கு என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட விக்னேசை பெங்களூர் போலீசார் காரில் அழைத்து சென்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக தகவல் தெரிவித்து திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    அப்போது திடீரென விக்னேஷ் போலீசாரை தாக்கி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இரவு நேரம் என்பதால் அவரை போலீசாரால் விரட்டி பிடிக்க முடியவில்லை. இதனால் கையில் சிக்கிய விக்னேசை தவற விட்டுவிட்டோமே என்ற ஏமாற்றத்துடன் பெங்களூர் போலீசார் திரும்பி சென்றனர்.

    துப்பாக்கியுடன் சுற்றிய விக்னேஷ் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் பிடித்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரித்த போது 'கொள்ளைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் நகைகளை திருப்போரூரில் பேக்கரி கடையில் வேலைபார்த்து வரும் விக்னேசிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    இதன் அடிப்படையில் தான் பெங்களூர் போலீசார் விக்னேசை துப்பாக்கி உடன் பிடித்து இருந்தனர். ஆனால் அவர் பின்னர் தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூரில் வாலிபர் துப்பாக்கியுடன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவிலில் திருட்டு முயற்சி நடந்தபோது அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் தப்பி ஓடினர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கடைவீதி அருகே பூசாரி தெரு சாலையில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை மர்மநபர்கள் அந்த கோவில் கதவின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட முயன்றுள்ளனர். அப்போது கோவிலில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் கோவிலில் திருடாமல் அங்கிருந்து தப்பி சென்றனர். தொடர்ந்து அலாரம் ஒலித்ததால், சத்தம் கேட்டு கோவிலை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் எழுந்து கோவிலுக்கு வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த தெருவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே கோவிலில் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
    • அப்போது சுரேஷ் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே அய்யம்பேட்டை கிரா மத்தில் பச்சைவாழியம்மன் மற்றும் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த பெரிய மணியை வீரசோழபுரம் வடக்கு தெருவை சேர்ந்த துரைசாமி மகன் ஏழுமலை (வயது 50). நடுத்தெருவை சேர்ந்த அய்யனார் மகன் சுரேஷ் (20) ஆகியோர் ஆஷா பிளேடால் அறுத்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கோவிலில் வந்து பார்த்தபோது 2 பேரும் கோவில் மணியை திருட முயன்றது தெரிய வந்தது.

    இதையடுத்து பொது மக்கள் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது சுரேஷ் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஏழுமலை என்பவர் பிடிபட்டார். இதையடுத்து திருவெண்ணைநல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெ க்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். தப்பி ஓடிய சுரேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • 17 வயது இளம் சிறாரை மதுரையில் இருந்து செங்கல்பட்டிற்க்கு அழைத்து சென்றனர்.
    • இளம் சிறார் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓட முயற்சித்தார்.

    விழுப்புரம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதுடைய இளம் சிறார். இவர் மீது பழனி கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் திருட்டு உள்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அவரை ேபாலீசார் கைது செய்தனர்.பின்னர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி 18 வயது பூர்த்தியாகும் வரை செங்கல்பட்டு இளம் சிறார் மையத்தில் வைத்து பாதுகாக்குமாறு உத்தரவிட்டார். இதனால் மதுரை இளம் சிறார் மையத்திலிருந்து செங்கல்பட்டு இளம் சிறார் மையத்திற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் போலீசார் கார்த்திக் ஆகியோர் நேற்று இரவு அரசு பஸ்சில் 17 வயது இளம் சிறாரை மதுரையில் இருந்து செங்கல்பட்டிற்க்கு அழைத்து சென்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தனியார் ஓட்டலில் அரசு பஸ் நின்றது. அப்போது பஸ்சில் இருந்து இருந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீஸ்காரர் கார்த்திக் 17 வயதுடைய இளம் சிறாருடன் சாப்பிட சென்றனர். பின்னர் சாப்பிட்டுவிட்டு ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது 17 வயதுடைய இளம் சிறார் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிஓட முயற்சித்தார். இதில் சுதாரித்துக் கொண்ட போலீசார் இளம் சிறாரை பிடிக்க முற்பட்டனர். ஆனால் இளம் சிறார் அவர்களிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். இரவு நேரம் என்பதால் இளம் சிறார் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இது குறித்து சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விக்கிரவாண்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று தனியார் ஓட்டல் இருந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தப்பி ஓடிய இளம் சிறாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • திருடர்கள் பயங்கர ஆயுதத்துடன் உண்டியல் பூட்டை அதிகாலை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.
    • பொதுமக்கள் துரத்தி பிடிக்க முயற்சி செய்யும் போது மர்ம கும்பல் தப்பி சென்றது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இந்து சமய அறநிலைத்துறை சொந்தமான உலக புகழ்பெற்ற அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகலேஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலின் 20 அடி உயரம் உள்ள சுற்றுப்புற மதில் சுவர் ஏறி உள்ளே புகுந்த திருடர்கள் பயங்கர ஆயுதத்துடன் உண்டியல் பூட்டை அதிகாலை உடைத்து திருட முயற்சி செய்யும்போது குடமுழுக்குக்காக திருப்பணி செய்யும் பணியாளர்கள் பார்த்து கூச்சலிட்டதால் அருகில் குடியிருந்த பொதுமக்கள் துரத்தி பிடிக்க முயற்சி செய்யும் போது மர்ம கும்பல் தப்பி சென்றது. தப்பிச்சென்ற மர்ம கும்பல் பற்றி பெண்ணாடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பெண்ணாடம் பகுதி பொதுமக்கள் இரவு கோவிலில் ஒன்று திரண்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த 6 சிறுவர்களில் 3 பேரை போலீசார் மீட்டனர்.
    • தப்பியோடிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 23 சிறுவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் சிறுவர்கள் அடைக்கப்பட்டி ருந்த கதவு உடைப்பது போன்ற சத்தம் காவலாளிக்கு கேட்டதால், உடனடியாக சென்று பார்த்தார். அப்போது கதவு உடைக்கப்பட்டு சிலர் தப்பி சென்றது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி இது குறித்து உடனடியாக தலைமைச் செயலக காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீஸ் விசாரணையில் மணலி காவல் நிலையத்தில் குற்றவழக்கு ஒன்றில் கைதான சிறுவன் அறையின் இரும்பு கதவுகளை கடப்பா கல் மூலமாக உடைத்து தப்புவது தெரிய வந்தது. மீதமுள்ள அனைத்து அறை களையும் உடைத்து மற்ற சிறுவர்களையும் தப்பிக்க வைக்க முயற்சி செய்திருப்ப தும் தெரிய வந்தது. இதனையடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து கதவை உடைத்து தப்பி ஓடிய 6 சிறுவர்களை போலீசார் அருகில் உள்ள முட்புதரில் தீவிரமாக தேடினர்.

    இந்நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த 6 சிறுவர்களில் 3 பேரை போலீசார் மீட்டனர். தப்பியோடிய 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். 

    ×