search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே கோவிலில் திருட முயன்றவர் கைது
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே கோவிலில் திருட முயன்றவர் கைது

    • திருவெண்ணைநல்லூர் அருகே கோவிலில் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
    • அப்போது சுரேஷ் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே அய்யம்பேட்டை கிரா மத்தில் பச்சைவாழியம்மன் மற்றும் முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த பெரிய மணியை வீரசோழபுரம் வடக்கு தெருவை சேர்ந்த துரைசாமி மகன் ஏழுமலை (வயது 50). நடுத்தெருவை சேர்ந்த அய்யனார் மகன் சுரேஷ் (20) ஆகியோர் ஆஷா பிளேடால் அறுத்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கோவிலில் வந்து பார்த்தபோது 2 பேரும் கோவில் மணியை திருட முயன்றது தெரிய வந்தது.

    இதையடுத்து பொது மக்கள் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது சுரேஷ் என்பவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஏழுமலை என்பவர் பிடிபட்டார். இதையடுத்து திருவெண்ணைநல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெ க்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். தப்பி ஓடிய சுரேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×