search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனவரி 18"

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் ஜனவரி 18ம் தேதி நடைபெற உள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #Congress #LegislaturePartyMeet #Siddaramaiah
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் 3 பேர் மும்பையிலும், மேலும் சிலர் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

    இதற்கிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு செல்வதை தடுக்கவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் மந்திரிகளுக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சிக்கு துணை முதல் மந்திரி பரமேஸ்வர் ஏற்பாடு செய்திருந்தார். இதில் முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அதன்பின்னர் நிருபர்களிடம் பேசிய சித்தராமையா, கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று கூறினார்.



    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் ஜனவரி 18ம் தேதி நடைபெற உள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, சித்த ராமையா அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 18-ம் தேதி விதான் சவுதாவில் உள்ள கூட்ட அரங்கத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு சித்தராமையா முன்னிலை வகிக்கிறார் என தெரிவித்துள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்து வந்த இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை நேற்று வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. #Congress #LegislaturePartyMeet #Siddaramaiah
    டெல்லி மற்றும் ஆக்ரா இடையே இன்று நடைபெற்ற சோதனை ஓட்டத்தின்போது அதிவேக ரெயில் மீது கல்விசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். #Train18 #Peltedstonesintrialrun
    புதுடெல்லி:

    ரெயில்வே துறையால் நாட்டின் அதிவேக ரெயிலான டிரெயின் 18 டிசம்பர் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.  இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரெயில் டெல்லி மற்றும் ஆக்ரா நகரங்களை இணைக்கும்.

    சென்னை ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் ரூ.100 கோடி செலவில் உருவான டிரெயின் 18 அதிவேக ரெயில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சதாப்தி ரெயில்களுக்கு பதிலாக இயக்கப்படும் இந்த அதிவேக ரெயிலானது என்ஜின் இல்லாமல் இயங்கும் முதல் ரெயில் என்பது குறிப்பிடத்தக்கது. 



    இந்த அதிவேக ரெயிலின் சோதனை ஓட்டம் டெல்லி மற்றும் ஆக்ரா இடையே இன்று நடைபெற்றது.  அப்போது இந்த  ரெயில் பெட்டி ஒன்றில் கல் வீசப்பட்டது.

    இதுதொடர்பாஜ ஐசிஎப் பொது மேலாளர் சுதான்ஷு மனு டுவிட்டரில் கூறுகையில், ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலை தலைமை வடிவமைப்பு பொறியாளர் ஸ்ரீனிவாஸ் ரெயில் பெட்டியில் இருந்துள்ளார். அதிவேக ரெயில் மணிக்கு 181 கிலோமீட்டர் வேகத்தினை எட்டி சாதனை படைத்துள்ளது. சோதனை ஓட்டத்தில் ரெயில் மீது மர்ம நபர் ஒருவர் கல்லை தூக்கி வீசியதில் கண்ணாடி உடைந்துள்ளது. அவரை பிடித்து விடுவோம் என நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.

    அதிவேக ரெயில் மீது கல் வீசியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Train18 #Peltedstonesintrialrun
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி முதல் முறையாக ஜோடி இல்லாமல் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். #Karthi18 #Karthi
    கார்த்தி நடிக்கும் 18-வது புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பரமானது. பெயரிடப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘கார்த்தி 18’ என்று பெயரிடப்பட்டுள்ளனர். ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டி சிங்கம்’ என அடுத்தடுத்து மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் கார்த்தியுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கிறார்.

    சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் என ‘மாநகரம்’ படம் மூலம் அனைவராலும் பாராட்டுப்பெற்ற லோகேஷ் கனகராஜ் இயக்கும் இரண்டாவது படம் இது. கதாநாயகி இல்லாத இப்படத்தில் நரேன் (அஞ்சாதே), ரமணா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க, மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரில்லர் படமாக மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. சாம்.சி.எஸ். இப்படத்திற்கு இசையமைக்கிறார். சென்னை மற்றும் திருநெல்வேலியில் இப்படம் உருவாகிறது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.



    கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவ்’ படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    கஜா புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 18, 19, 20ஆம் தேதிகளில் நடைபெறும் என பதிவாளர் அறிவித்துள்ளார். #GajaCyclone #AnnaUniversity
    சென்னை:

    கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இதனால் திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இதற்கிடையே, கஜா புயல் பாதிப்பால் அந்த மாவட்டங்களில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த மாதம் ஒத்தி வைக்கப்பட்டன.

    இந்நிலையில், புயல் பாதிப்பு காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 18, 19, 20-ம் தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார். #GajaCyclone #AnnaUniversity
    ‘ரெயில்-18’ ரெயிலின் சோதனை ஓட்டம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் கோடா-சவாய் மாதோபூர் வழித்தடத்தில் நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கான மணிக்கு 180 கி.மீ. வேகத்தை தாண்டி ஓடியது. #EngineLessTrain #SpeedRecord #Train18
    புதுடெல்லி:

    ரூ.100 கோடி செலவில், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ரெயில்-18’, கடந்த அக்டோபர் 29-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. என்ஜின் இன்றி தானியங்கி முறையில் செயல்படும் இந்தியாவின் முதலாவது ரெயில் இதுவாகும். 16 பெட்டிகளை கொண்ட இதில், சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற வசதிகள் உள்ளன. இந்த ரெயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) தயாரிக்கப்பட்டவை ஆகும். முற்றிலும் ஏ.சி. வசதி கொண்டது. ரெயிலின் இரு முனைகளிலும் டிரைவர் கேபின் உள்ளது.

    இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் கோடா-சவாய் மாதோபூர் வழித்தடத்தில் நடைபெற்றது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான மணிக்கு 180 கி.மீ. வேகத்தை தாண்டி ஓடியது. இது, பெரிய அளவிலான சோதனை ஓட்டம் ஆகும். இதில், எவ்வித தொழில்நுட்ப கோளாறுகளும் கண்டறியப்படவில்லை என்று ரெயிலை உருவாக்கிய ஐ.சி.எப். பொது மேலாளர் மணி தெரிவித்தார்.

    இந்த ரெயில், ஜனவரி மாதம் வர்த்தக போக்குவரத்தை தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். அப்போது, நாட்டின் அதிவேக ரெயிலாக இது திகழும். நடப்பு நிதி ஆண்டில் இதேபோன்ற மேலும் ஒரு ரெயிலையும், அடுத்த நிதி ஆண்டில் 4 ரெயில்களையும் அறிமுகப்படுத்த ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. #EngineLessTrain #SpeedRecord #Train18
    மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Karthi #LokeshKanagaraj
    கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மாநகரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில், சந்தீப் கி‌ஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி ஆகியோர் நடித்தனர். ஆக்‌‌ஷன் திரில்லர் படமான இதற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    கடந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களில், முக்கியமான படமாகவும் அமைந்தது. ‘மாநகரம்’ படத்தைத் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கார்த்தி தற்போது தேவ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி கடைசி வாரத்தில் ரிலீசாக இருக்கிறது. #Karthi #LokeshKanagaraj

    சென்னையில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் அதிவேக ரெயிலான ‘ட்ரெயின் 18’ உடைய சோதனை ஓட்டம் நடைபெற்றது. #Train18 #Chennai
    சென்னை:

    இந்தியாவின் மிக அதிவேக ரெயிலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரெயின் 18 என்ஜின் இல்லாமல் இயங்கக்கூடியது. நாட்டின் அதிவேக ரெயிலான சதாப்தி விரைவு ரெயிலின் சாதையை முறியடித்து, அதனை விட 15 சதவிகிதம் பயண நேரம் குறைவாக்க கூடிய

    என்ஜின் இல்லாமல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில் இந்தியாவின் அதிவேக ரயிலாகும். சதாப்தி விரைவு ரயிலோடு ஒப்பிடும்போது பயண நேரம் 15% குறைவாக இருக்கும்.

    இந்த ‘ட்ரெய்ன் 18’ சென்னையில் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. 100 கோடி ரூபாய் செலவில் சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டது. இந்த அதிவேக ரயிலின் அறிமுக விழா பெரம்பூரில் நடைபெற்றது.

    இதுகுறித்து பொறியாளர் உதயகுமார், ‘சென்னையில் சோதனை ஓட்டங்கள் முடிந்தபிறகு இந்த ரயில் நவம்பர் 7-ம் தேதி டெல்லி சென்றடையும். பிறகு மொராதாபாத் - பரேலி இடையிலும், கோடா - சவாய் மதோபூர் இடையிலும் சோதனை ஓட்டங்கள் நடைபெறும்’ என கூறியுள்ளார். #Train18 #Chennai
    பொதுவாக ஆடி மாதத்தை ‘நிலையற்ற மாதம்’ என்பர். அட்சயத் திருதியை போலவே ஆடிப் பெருக்கும் நல்ல காரியங்கள் துவங்குவதற்கு உகந்த நாள்.
    அட்சயத் திருதியை போலவே ஆடிப் பெருக்கும் நல்ல காரியங்கள் துவங்குவதற்கு உகந்த நாள். பொதுவாக ஆடி மாதத்தை ‘நிலையற்ற மாதம்’ என்பர். அந்த மாதத்தில் எந்த ஒரு காரியம் செய்தாலும், அது ஆடிப் போய் விடும் என்று சொல்லப்படும். ஆனால், இந்த ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு தினம் விதிவிலக்கு.

    ஆடி 18-ஆம் தேதி அன்று எந்த நட்சத்திரம், திதி வந்தாலும் கவலை வேண்டாம். அன்றைய தினம் புதிய தொழில், புது முயற்சி, வியாபார முன்னேற்றம் போன்றவற்றை தாராளமாக மேற்கொள்ளலாம் என்கிறார்கள் அருளாளர்கள். இந்த தினத்தில் துவக்கப்படுகிற எந்த ஒரு நற்செயலும் பன்மடங்கு விருத்தி அடைந்து, கூடுதல் நன்மை அளிக்கும். இன்றைக்குத் துவங்குகிற வங்கிக்கணக்குகள், சேமிப்புகள் போன்றவை பன்மடங்கு பெருகும்.

    வீட்டுக்குத் தேவையான ஜவுளிகள், நகைகள், இதர பொருட்கள் வாங்க உகந்த தினம். என்றும் மங்களம் தரும் பொருட்கள் வாங்கலாம். உதாரணத்துக்கு மஞ்சள், குங்குமம், நாட்டுச் சர்க்கரை போன்றவை.

    வெண்மை நிறம் கொண்ட பொருட்களை வாங்கினால், வீட்டில் சுபிட்சம் வளரும். குறைந்த பட்சம் உப்பு, அரிசி. படிக்கின்ற குழந்தைகளுக்கு எழுது பொருட்கள், பாடம் தொடர்பான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கலாம்.

    எனவே, இன்றைய தினம் நதி தேவதைகளை - பெண் தெய்வங்களை வணங்கி நம் மனதில் இருக்கிற மாசுகள் அகல பிரார்த்தித்துக் கொள்வோம்.

    ஆடி 18-க்கு என்ன சிறப்பு?

    இந்து சமயம் தொடர்பான பண்டிகைகளும் பெருவிழாக்களும் பெரும்பாலும் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படுகின்றன. ஆனால், பல லட்சக்கணக்கானோர் கொண்டாடும் இந்த ஆடிப்பெருக்கு மட்டும் ஆடி மாதத்தின் 18-ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு என்ன நட்சத்திரம், என்ன திதி - இப்படி எதுவும் பார்ப்பது கிடையாது.
    ஆடிப்பெருக்கை நீர்நிலைகளில் தான் கொண்டாட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயும் வழிபாடு செய்யலாம். எப்படி வழிபாடு செய்வது என்று பார்க்கலாம்.
    நீராடி முடித்த பின் வீட்டை சுத்தமாக்குங்கள். பூஜையறையை நன்றாகத் துடைத்து, மாக்கோலம் போடுங்கள். ஒரு பித்தளைச் செம்பில் அரைத்த மஞ்சள் விழுதையோ, அல்லது மஞ்சள் பொடியையோ குறிப்பிட்ட அளவு போடவும். பிறகு, சுத்தமான நீரை செம்பில் விடவும். விரலால் கலக்கவும். இப்போது நீரானது மஞ்சள் நிறத்துக்கு மாறி இருக்கும். கொஞ்சம் உதிரிப்பூக்களையும் இந்த செம்பில் போட்டு விட்டு, பூஜையறையில் வைக்கவும்.

    ஒரு பித்தளைத் தட்டில் தாம்பூலம், மஞ்சள், குங்குமம், உடைத்த தேங்காய், பழங்கள் போன்றவற்றை வைக்கவும். என்னென்ன ஸ்லோகங்கள் சொல்லி கடவுளை வழிபடுவீர்களோ, அதுபோல் வணங்கவும். பிறகு, காவிரி உட்பட அனைத்து நதி தேவதைகளையும் மனதாரப் பிரார்த்திக்கவும்.

    சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து அதை நிவேதனம் செய்யவும். பிறகு, ஆரத்தி காண்பிக்கவும். பூஜையறையில் இருக்கிற அம்மன் படங்களுக்கு பூக்களைத் தூவி வணங்கவும். அருகில் இருக்கின்ற சுமங்கலிகளை வீட்டுக்கு அழைத்தோ, அல்லது நீங்கள் அவர்களது வீட்டுக்குச் சென்றோ, தாம்பூலமும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமும் தரவும்.

    மஞ்சள் கரைக்கப்பட்ட நீரை அனைவரும் வணங்கி விட்டு, வீட்டில் இருக்கிற துளசிச் செடிகளுக்கு விடவும். மரம், செடிகளுக்கும் விடலாம். கிணற்றிலும் சேர்க்கலாம். 
    தமிழர்களின் முக்கிய திருவிழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆடிபெருக்கு 'களை' கட்டியது. #aadi18, #aadiperukku
    தமிழர்களின் முக்கிய திருவிழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வளம் கொழிக்க வைக்கும் நதிகளில் ஒன்றான காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.

    ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆடிபெருக்குகளை கட்டியது.
    திருவையாறு புஷ்ய படித்துறையில் இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். படித்துறையில் அவர்கள் பூஜை செய்து காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

    திருவையாறு புஷ்ய மண்டபத்துறை காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள், திருமண மாகாத கன்னிப்பெண்கள் அனைவரும் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக் கொருவர் கழுத்தில் அணிவித்தனர். புதுமண தம்பதிகள் காவிரியில் பினித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர்.

    காவிரியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், போலீசார் தடுப்புகளை அமைத்து பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அனுமதித்தனர். மேலும் படித்துறைகளில் ஆழமான பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருந்தன.

    கும்பகோணம் பக்வத் படித்துறை, பாலக்கரை, டபீர் படித்துறை, திருக்காட்டுப் பள்ளியிலும் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை, துலா கட்டம், சீர்காழி, திருவாரூரில் ஆடிப்பெருக்கு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடுவதற்காக வந்த பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து, தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு பூஜை செய்தனர். பின்னர் அவற்றை ஒரு வாழை பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டனர்.

    புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொண்டனர். மேலும் திருமணத்தின் போது மணமக்கள் அணிந்த மாலைகளை ஆற்றில் கொண்டு வந்தும் விட்டனர். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனர். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொரு வர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டனர்.

    அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டிகையில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். இதேபோல் திருச்சி காவிரி கரையோரமான கருட மண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை, திருவளர்ச் சோலை, கம்பரசம்பேட்டை, பெட்டவாய்த்தலை, பனங்காவேரி, திருப்பராய்த்துறை, தொட்டியம், ஸ்ரீராமசமுத்தி ரம், முசிறி, முக்கொம்பு காவிரி ஆற்றிலும் ஆடிப்பெ ருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


    பவானி கூடுதுறையில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்தனர். 3 நதிகள் (காவிரி, பவானி, அமுதநதி) சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு அன்று பொங்கி வரும் காவிரி ஆற்றில் புனித நீராடி காவிரி தாயை வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கூடுதுறைக்கு இன்று புதுமணத் தம்பதிகள் ஜோடி ஜோடியாக வந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் நீராடி மணமாலையை ஆற்றில் விட்டு வழிபட்டனர்.
    தங்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டி வழிபட்டனர்.



    பல பெண்கள் ஆற்றில் முளைப்பாரியை விட்டு வழிபட்டனர். இதேபோல விவசாயிகள் பலரும் தங்களது குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி படித்துறையில் தேங்காய், பழம் வைத்து கற்பூரம் ஏற்றி இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக இருக்கட்டும் என வேண்டி வழிபட்டனர்.

    இப்படி பலதரப்பட்ட பக்தர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து இருந்ததால் பவானி நகர், மக்கள் வெள்ளத்தால் குலுங்கியது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தொடங்கி காவிரி கரை நெடுக புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேட்டூர் காவிரி ஆற்றிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் புனித நீராடினர்.

    புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது திருமண மாலைகளை வாழை இலைகளில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். புதுமண தம்பதிகள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பழைய மஞ்சள் கயிறுகளை மாற்றி புதிய மஞ்சள் கயிறுகளையும் அணிந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மேட்டூர் காவிரி ஆற்றில் காலை முதலே அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. #aadi18, #aadiperukku
    ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே மேட்டூர் காவிரி ஆற்றிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் புனித நீராடினர்.
    பஞ்ச பூதங்களில் நீர் வளத்தை எப்போதும் மனித இனத்துக்கு பஞ்சம் இல்லாமல் தர வேண்டும் என இயற்கையை வழிபடுவதே ஆடிப்பண்டிகையின் நோக்கம். குறிப்பாக காவிரி கரையில் வசிக்கும் மக்கள் இந்த விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

    அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தொடங்கி காவிரி கரை நெடுக புனித நீராடி மக்கள் ஆடிப்பெருக்கு விழவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    சேலம், நாமக்கல், ஈரோடு தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று அதிகாலை முதலே மேட்டூர் காவிரி ஆற்றிற்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் புனித நீராடினர்.

    பின்னர் அவர்கள் மேட்டூர் அணை முனியப்பன் கோவிலுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் அங்கு வைத்து உணவு சமைத்து அதனை அருகில் உள்ள அணை பூங்காவுக்கு எடுத்து சென்று உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கினர்.

    மேட்டூரை சுற்றியுள்ள கோவில்களில் உள்ள சாமி சிலைகள், ஈட்டிகள், அரிவாள்களை மேள தாளம் முழங்க எடுத்து வந்த பக்தர்கள் காவிரியில் சுத்தப்படுத்தி மீண்டும் அதனை கோவிலுக்கு எடுத்து சென்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் இன்று காலை 18 ஆயிரத்து 267 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மேட்டூர் அணை காவிரி பாலம் படித்துறை, மட்டம், பாம்பு புற்று படித்துறை, மேற்கு கால்வாய் ஆகிய 4 இடங்களில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பற்ற இடங்களில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதுடன், கரையில் நின்று போட்டோ எடுக்கவும், செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    புதுமண தம்பதிகள் சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது திருமண மாலைகளை வாழை இலைகளில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். புதுமண தம்பதிகள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பழைய மஞ்சள் கயிறுகளை மாற்றி புதிய மஞ்சள் கயிறுகளையும் அணிந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மேட்டூர் காவிரி ஆற்றில் காலை முதலே அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அந்த பகுதிகளில் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    மேட்டூர் அரசு பள்ளி வளாகம், பொன்நகர் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மேட்டூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஈரோடு மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் மாதையன் குட்டையில் இருந்து மேற்கு மெயின் ரோடு வழியாக பஸ் நிலையத்திற்கு வந்து சென்றன.

    சேலம் மார்க்கமாக வரும் பஸ்கள் துணை கலெக்டர் இல்ல சாலை வழியாக மாதா கோவில் அருகே மேற்கு பிரதான சாலை வழியாக பஸ் நிலையம் வந்து சென்றன. இதே போல மேலும் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தது.

    எடப்பாடி சுற்று வட்டார பகுதி மக்கள் இன்று காலை முதலே பூலாம்பட்டி காவிரி ஆற்றில் குவிந்தனர். காவிரியில் புனித நீராடிய சுமங்கலி பெண்கள் பழைய தாலி கயிற்றை மாற்றி புதிய தாலி கயிறை அணிந்து கொண்டனர். இதனால் கணவருக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

    புதுமண தம்பதிகள் காவிரி கரையில் சிறப்பு பூஜை செய்து தங்களின் திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர். அந்த பகுதியில் உள்ள உற்சவ மூர்த்தி சிலை மற்றும் கோவிலில் உள்ள பூஜை பொருட்களை மேள தாளங்கள் முழங்க எடுத்து வந்து காவிரி ஆற்றில் சுத்தப்படுத்தி மீண்டும் கோவில்களுக்கு எடுத்து சென்றனர்.

    சேலத்தில் இருந்து பூலாம்பட்டிக்கு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாகளை கட்ட தொடங்கியது.
    தமிழர்களின் முக்கிய திருவிழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.

    காவிரி கரையோரங்களில் ஆடி-18 விழா ஒவ்வொரு ஆண்டும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மேட்டூர், சேலம், கரூர், ஈரோடு, திருச்சி, மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உற்சாகப்படும்.

    தமிழகத்தில் வளம் கொழிக்க வைக்கும் நதிகளில் ஒன்றான காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.

    தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு களை இழந்து காணப்பட்டது. இந்தாண்டில் மேட்டூரில் இருந்து கடந்த மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் 22-ந் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை பகுதி வரை சென்றுள்ளதால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாகளை கட்ட தொடங்கியது.

    திருவையாறு புஷ்ய படித்துறையில் இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். படித்துறையில் அவர்கள் பூஜை செய்து காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

    திருவையாறு புஷ்ய மண்டபத்துறை காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், மற்றும் திருமணமான பெண்கள், திருமண மாகாத கன்னிப் பெண்கள், அங்குள்ள விநாயகருக்கு முன்பு தழை வாழையிட்டு அதில் எள், வெல்லம் கலந்த பச்சரிசி வாழைப் பழம், பேரிக்காய், விளாம்பழம் கொய்யாப் பழம், ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சம் பழம் ஆகியவை படையலிட்டு வழிபட்டனர்.

    மேலும் செந்நிறப் பனை ஓலையுடன் கருக மணி வளையல் சுற்றிய காதோலைக் கருகமணியுடன் மஞ்சள், குங்குமம், மஞ்சள் இழைக்கயிறுகள் ஆகியவற்றையும் வைத்து தீப, தூபங்கள் காட்டி வழிபாடு செய்தனர். பின்னர் வெல்லங் கலந்த பச்சரிசி மற்றும் பேரிக்காய் முதலிய பழ வகைகளை அனைவருக்கும் வழங்கினர்.

    பெண்களுக்கு மஞ்சள் கயிறு அணிவித்த காட்சி.

    கன்னிப்பெண்கள், திருமணமான பெண்கள் அனைவரும் வழிபாடு செய்யப்பட்ட மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர் கழுத்தில் அணிவித்தனர்.

    மேலும் புதுமண தம்பதிகள் காவிரியில் பினித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர். மேலும் திருமணமாத கன்னிபெண்கள், நல்ல கணவன் அமைய வேண்டியும், தங்களது வாழ்வில் மகிழ்ச் சியும், வளமும் நிலைத் திருக்க வேண்டும் என்றும் வேண்டினர்.

    இன்று அதிகாலை முதலே புஷ்ய படித்துறையில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போலீசார் பெண்கள் மற்றும் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க கோரி ‘மைக்’கில் எச்சரிக்கை செய்த வண்ணம் செய்தனர்.

    காவிரியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், போலீசார் தடுப்புகளை அமைத்து பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க அனுமதித்தனர். மேலும் படித்துறைகளில் ஆழமான பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டு இருந்தன.

    இதேபோல் கும்பகோணம் பக்வத் படித்துறை, பாலக்கரை, டபீர் படித்துறை, மற்றும் காவிரி கரையோரங்களில் இன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கரைகளில் பழங்கள், மலர்களை வைத்து பூஜை செய்து காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இதில் திருமணமாகாத கன்னிபெண்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி காவிரி கரையிலும் இன்று ஆடிப்பெருக்கு விழா ‘களை’ கட்டியது. காவிரி கரையில் பூஜை செய்து விநாயகரை பெண்கள் வழிபட்டனர். காவிரியின் கடைமடை பகுதியான நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலா கட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி துலா கட்டத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். பின்னர் படித்துறையில் படையிலிட்டு, ‘‘ பொங்கி வரும் காவிரியே... எங்களது வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பொங்க செய்வாயாக’’ என்று ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    துலா கட்டத்தில் போலீசாரும், மற்றும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விடாதவாறு பைபர் படகுகளில் சென்று தீயணைப்பு துறையினர் கண்காணித்தனர்.

    சீர்காழி பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி திருவாரூர் முள்ளியாறு, ஒடம்போக்கி, கோரையாறு, பாண்டவையாறு, பாமினி ஆற்றின் கரைகளிலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் புனித நீராடி காவிரி தாயை வழிபட்டனர்.
    ×