என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோதனை ஓட்டம் - மணிக்கு 180 கி.மீ. வேகத்தை தாண்டிய ரெயில்-18
Byமாலை மலர்3 Dec 2018 1:36 AM GMT
‘ரெயில்-18’ ரெயிலின் சோதனை ஓட்டம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் கோடா-சவாய் மாதோபூர் வழித்தடத்தில் நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கான மணிக்கு 180 கி.மீ. வேகத்தை தாண்டி ஓடியது. #EngineLessTrain #SpeedRecord #Train18
புதுடெல்லி:
ரூ.100 கோடி செலவில், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ரெயில்-18’, கடந்த அக்டோபர் 29-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. என்ஜின் இன்றி தானியங்கி முறையில் செயல்படும் இந்தியாவின் முதலாவது ரெயில் இதுவாகும். 16 பெட்டிகளை கொண்ட இதில், சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற வசதிகள் உள்ளன. இந்த ரெயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) தயாரிக்கப்பட்டவை ஆகும். முற்றிலும் ஏ.சி. வசதி கொண்டது. ரெயிலின் இரு முனைகளிலும் டிரைவர் கேபின் உள்ளது.
இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் கோடா-சவாய் மாதோபூர் வழித்தடத்தில் நடைபெற்றது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான மணிக்கு 180 கி.மீ. வேகத்தை தாண்டி ஓடியது. இது, பெரிய அளவிலான சோதனை ஓட்டம் ஆகும். இதில், எவ்வித தொழில்நுட்ப கோளாறுகளும் கண்டறியப்படவில்லை என்று ரெயிலை உருவாக்கிய ஐ.சி.எப். பொது மேலாளர் மணி தெரிவித்தார்.
இந்த ரெயில், ஜனவரி மாதம் வர்த்தக போக்குவரத்தை தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். அப்போது, நாட்டின் அதிவேக ரெயிலாக இது திகழும். நடப்பு நிதி ஆண்டில் இதேபோன்ற மேலும் ஒரு ரெயிலையும், அடுத்த நிதி ஆண்டில் 4 ரெயில்களையும் அறிமுகப்படுத்த ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. #EngineLessTrain #SpeedRecord #Train18
ரூ.100 கோடி செலவில், முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ரெயில்-18’, கடந்த அக்டோபர் 29-ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. என்ஜின் இன்றி தானியங்கி முறையில் செயல்படும் இந்தியாவின் முதலாவது ரெயில் இதுவாகும். 16 பெட்டிகளை கொண்ட இதில், சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற வசதிகள் உள்ளன. இந்த ரெயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) தயாரிக்கப்பட்டவை ஆகும். முற்றிலும் ஏ.சி. வசதி கொண்டது. ரெயிலின் இரு முனைகளிலும் டிரைவர் கேபின் உள்ளது.
இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நேற்று ராஜஸ்தான் மாநிலம் கோடா-சவாய் மாதோபூர் வழித்தடத்தில் நடைபெற்றது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான மணிக்கு 180 கி.மீ. வேகத்தை தாண்டி ஓடியது. இது, பெரிய அளவிலான சோதனை ஓட்டம் ஆகும். இதில், எவ்வித தொழில்நுட்ப கோளாறுகளும் கண்டறியப்படவில்லை என்று ரெயிலை உருவாக்கிய ஐ.சி.எப். பொது மேலாளர் மணி தெரிவித்தார்.
இந்த ரெயில், ஜனவரி மாதம் வர்த்தக போக்குவரத்தை தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். அப்போது, நாட்டின் அதிவேக ரெயிலாக இது திகழும். நடப்பு நிதி ஆண்டில் இதேபோன்ற மேலும் ஒரு ரெயிலையும், அடுத்த நிதி ஆண்டில் 4 ரெயில்களையும் அறிமுகப்படுத்த ஐ.சி.எப். திட்டமிட்டுள்ளது. #EngineLessTrain #SpeedRecord #Train18
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X