search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவராத்திரி விழா"

    • இரவு 12 மணிக்கு கூட்டு தியானம் நடந்தது
    • 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    வேலூர்:

    வேலூரில் ஈஷா யோக மையம் சார்பில் சிவராத்திரி விழா நடந்தது.வேலூர் ராணி மகாலில் நேற்று மாலை நடந்த சிவராத்திரி விழாவை ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    ஆப்கா இயக்குனர் சந்திரசேகரன் அன்னதான நிகழ்ச்சி தொடங்கி வைத்தார்.

    விழாவிற்கு வந்த பொது மக்களுக்கு இலவசமாக ருத்ர தீட்சை வழங்கப்பட்டது.

    இரவு முழுவதும் கோவை ஈஷா மையத்தில் நடந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் சிவலிங்கத்திற்கும், லிங்கபைரவிக்கும் பொதுமக்கள் மலர்களை சமர்பித்து வணங்கினர். இரவு 12 மணிக்கு கூட்டு தியானம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை ஈஷா யோக மைய வேலூர் ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுப்பு, தன்னார்வலர்கள் மணிவண்ணன், சரவணன், சதீஷ், விஜயகுமார், குணசீலன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
    • 1,008 வெண்சங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்ய னடைப்பு சித்தர் நகரிலுள்ள பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில், சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வராக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.

    ஆன்மிக சிறப்புபெற்ற குருமகாலிங்கேஸ்வரருக்கு சனிப்பிரதோஷம் மற்றும் சிவராத்திரி விழா சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

    காலை 10 மணிக்கு கணபதி, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலெட்சுமி ஹோமத்துடன் சிவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு நவக்கிர பூஜை, லலிதா சகஸ்ர நாமம், மகாபூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து இரவு 9மணிக்கு முதல்கால யாக பூஜைகளுடன் சிவராத்திரி வழிபாடு பூஜைகள், சிவ பெருமானுக்கு 1,008 வெண்சங்கு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் தமிழ்மறையில் தேவாரம், திருவாசக பாராய ணத்துடனும், அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரா தனை நடைபெற்றது.

    இரவு 10மணிக்கு பேராசிரியர் செபாஸ்டின் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும் அபிஷேகம், தமிழ் மறையில் தேவார திருவாசக பாராயணம் நடந்தது.

    இன்று அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால யாக பூஜை சதுர்வேத பாராயணத்துடனும் நடை பெற்றது. காலை 4மணிக்கு 4-ம் கால யாக பூஜை, சிறப்பு அபிஷேம், அலங்கார தீபாராதனைகளுடன் கோலாகலமாக நடை பெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமி சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் விழாக்குழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • இந்த வருடத்தின் மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது.
    • சர்வ மங்களங்களையும் அருளும் அற்புதமான திருநாள்.

    தருமபுரி,

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக மகா சிவராத்திரி உள்ளது. இதையடுத்து இந்த வருடத்தின் மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது.

    வருடத்தில் எத்தனையோ ராத்திரிகள் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது.

    அதனால் இன்று முழுவதும் (இரவு 12:00 முதம் 6:00 வரை) ஒருவர் விழிப்புடன் இருந்தால் இயற்கையாகவே நம்மில் இருக்கும் உயிர்சக்தியும் மேல்நோக்கி நகர்ந்திடும் என்று ஆன்மீகவாதிகளும், சித்தர்களும் கூறி உள்ளனர்.

    இன்று சிவனுக்கு பிடித்த மந்திரமான "ஓம் நமசிவாய" மந்திரம் ஜபித்து முக்கண் முதல்வனை வணங்கினால் நாம் நினைத்ததை பெறலாம் என்பது ஐதீகம். சிவம் என்றால் மங்களம் என்று பொருள். சர்வ மங்களங்களையும் அருளும் அற்புதமான திருநாள், சிவராத்திரி என்று ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.

    சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம், பெறலாம் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது நம்பிக்கை.

    சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம். பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவதே இந்த நாளின் விஷேசம் ஆகும்.

    சிவராத்திரியை முன்னிட்டு தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில், புகழ்பெற்ற தருமபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சுவாமி கோவில், தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவா ணேஸ்வரர் கோவிில், குமார சாமிப் பேட்டை சிவகாம சுந்தரி உடனா கிய ஆனந்த நடராஜர் கோவிில், ஆத்துமேடு சர்வாங்க சுந்தரி அம்பாள் உடனாகிய ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவிில், சித்தி லிங்கேஸ்வரர் கோவில், பழைய தருமபுரி கருணை நாதர் கோவில், புட்டி ரெட்டிபட்டி சோமநாதர் கோவில், சவுலுப்பட்டியில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் கோவில்களில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஓசூர் அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில், ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில், ஆவல்நத்தம் காசீஸ்வரர் மற்றும் பசுவேஸ்வரர் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

    • செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழா தொடங்கியது.
    • விழா நாட்களில் மானாமதுரையில் இருந்து ஏனாதி செங்கோட்டைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்கப்படுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் ஏனாதி செங்கோட்டையில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளாக நடந்த கொடியேற்ற உற்சவத்தை முன்னிட்டு கோவில் முன் மண்டபத்தில் கலச நீர் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் காலை 6மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டு பின்னர் கொடி மரத்திற்கு தர்ப்பைபுல் மலர் மாலைகள் சாற்றி சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் மற்றும் கோவில் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனைகள் நடைபெற்றன. தலைமை பூசாரி சண்முகசுந்தரம் கொடியேற்ற நிகழ்ச்சிகளை நடத்தி வைத்து அம்மனுக்கான பூஜைகளை செய்தார்.

    கொடியேற்ற விழாவில் கோவில் குடிமக்கள் மற்றும் ஏனாதி செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான மக்கள் பங்கேற்றனர். 21-ந் தேதி வரை நடைபெறும் இந்த விழாவின்போது தினமும் மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்று உற்சவர் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடாகி பல்வேறு மண்டகப் பணிகளில் எழுந்தருளுல் வைபவம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவாக 20-ந் தேதி பாரிவேட்டை உற்சவம் நடக்கிறது. 21-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் படைப்பு வகைகள் சாற்றி சிவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைமை பூசாரி சண்முகசுந்தரம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர். விழா நாட்களில் மானாமதுரையில் இருந்து ஏனாதி செங்கோட்டைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இரவு பகலாக இயக்கப்படுகிறது.

    ×