search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடி"

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 35-வது வார்டுக்குட்பட்ட வள்ளளார் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம்

    நாகர்கோவில், நவ. 8-

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் ரூ. 1.20 கோடி மதிப்பிட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டுதல், 35-வது வார்டுக்குட்பட்ட வள்ளளார் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி போன்றவை இன்று நடைபெற்றன.

    இதேபோல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கேன்டீன் அமைக்கும் பணி யும் இன்று நடைபெற்றது. இந்த பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகர நல அலுவலர் ராம் குமார், மண்டல தலை வர் அகஸ்டினா கோகில வாணி, ஜவகர், செல்வ குமார், மாமன்ற உறுப்பி னர்கள் ராணி, அனந்த லெட்சுமி கலாராணி, பகுதி செயலாளர் சேக் மீரான், துரை, அணிகளின் நிர்வாகிகள் ராஜன், வட்டச் செயலாளர்கள் ராம கிருஷ்ணன், முத்து கிருஷ்ணன், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    போரூர்:

    விருகம்பாக்கம், பகுதியில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடப்பதாக தி.நகர் துணை கமிஷனர் அங்கித் ஜெயினுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி சப் - இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் நேற்று மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது சாலையோரம் சொகுசு கார் ஒன்று நின்று நீண்ட நேரம் சந்தேகத்திற்கிடமாக கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி சோதனையிட்டனர். இதில் காரில் இருந்த ஒரு பையில் ரூ.1 கோடி ரொக்கப் பணம் இருந்தது. மேலும் விசாரணையில் காரில் இருந்தவர்கள் இலங்கை தமிழர் கமலநாதன், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திகேயன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிந்தது.

    அவர்களிடம் பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து ரூ.1 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.1 கோடி ரொக்கப்பணம் எப்படி கிடைத்தது?அதனை எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்கிறார்கள்? இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்பது குறித்து வருவாய் ஆய்வாளர் சவிதா முன்னிலையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களும் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடல் உள்பகுதியிலிருந்து 90 மீட்டருக்கு ஸ்டார் கற்கள் போடும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது
    • 190 மீட்டர் நீளத்திற்கு பாறைகல் போட்டு நிரப்பப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    ராஜாக்கமங்கலம் ஒன்றியம், பொழிக்கரையில் கடல் அரிப்பை தடுப்பதற்காக கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தூண்டில் வளைவுகள் அமைப்பதற்காக அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ. 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதனைத்தொடர்ந்து இப்பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் பொருட்டு 190 மீட்டருக்கு தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 190 மீட்டர் நீளத்திற்கு பாறைகல் போட்டு நிரப்பப்பட்டுள்ளது.

    கடல் உள்பகுதியிலிருந்து 90 மீட்டருக்கு ஸ்டார் கற்கள் போடும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மீனவர்களின் நலன் காக்கின்ற வகையில் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்காக தூண்டில் வளைவுகள் அமைக்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 190 மீட்டர் நீளத்திற்கு பாறைகல் போட்டு நிரப்பப்பட்டுள்ளது.

    மேலும் தற்போது 90 மீட்டருக்கு ஸ்டார் கற்கள் போடும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக வந்துள்ளேன். மீனவர்கள் நலனில் அக்கறை கொண்ட அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மீனவர்களுக்கான திட்டங்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றப்பட்டது. இந்த தூண்டில் வளைவு இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாக அமையும். இத்திட்டத்தை இப்பகுதி மக்களுக்கு தந்த எடப்பாடி பழனிசாமிக்கு மீனவ மக்களின் சார்பிலும், நன்றியினை தெரிவித்து க்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

    இதில் மாநில மீன்வள கூட்டுறவு இணைய பெருந்தலைவர் சேவியர் மனோகரன், பொழிக்கரை பங்குத்தந்தை ரெ ஞ்சித்குமார், கேசவ ன்புத்தன்துறை ஊராட்சி மன்ற தலைவர் கெபின்ஷா ஆரோக், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குடும்பத்துடன் வசித்து வரும் லவ்லி மோள் அச்சம்மா, அபுதாபியில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம்.
    • பணத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்விக்கும் செலவளிப்பேன், என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்தவர் லவ்லி மோள் அச்சம்மா. இவர் வளைகுடா நாடான அபுதாபியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் வசித்து வரும் லவ்லி மோள் அச்சம்மா, அபுதாபியில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம்.

    இவர் சமீபத்தில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கி இருந்தார். இதன் குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.45 கோடி நர்சு லவ்லி மோள் அச்சம்மாவுக்கு கிடைத்தது. இதனை அறிந்த அவர் மகிழ்ச்சியில் திளைத்தார். பரிசு கிடைத்தது பற்றி அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு மாதமும் எனது கணவர் தான் லாட்டரி சீட்டு வாங்குவார். இம்முறை நான் லாட்டரி சீட்டை வாங்கி இருந்தேன். அதற்கு முதல் பரிசு விழுந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பணத்தில் எனது மைத்துனருக்கும் பங்கு கொடுப்பேன்.

    மேலும் அந்த பணத்தில் ஒரு பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குவேன். மீதி பணத்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்கும், அவர்களின் கல்விக்கும் செலவளிப்பேன், என்றார். 

    • அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
    • குமரி மாவட்டத்தில் குடிநீரை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குமரி மாவட்டத்தில் ரூ.212 கோடி மதிப்பிலான பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் தொடக்க விழா காட்டாத்துறை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடந்தது.

    விழாவுக்கு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். கலெக்டர் ஸ்ரீதர் வரவேற்றார். பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலை வகித்தார். விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

    அந்த வகையில் ரூ.174 கோடியில் இரணியல் பேரூராட்சி மற்றும் 319 கிராம குடியிருப்புகள், பயன்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் கூட்டு குடிநீர் திட்டம், காட்டாத்துறை கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு குடிநீர் அபிவிருத்தி செய்தல் மற்றும் பொதுவான சுத்திகரிகப்பு நிலையம் அமைக்கும் கூட்டுகுடிநீர் திட்டம், ரூ.30.94 கோடியில் குழித்துறை நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டம், ரூ.3.69 கோடியில் குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றியம் முட்டம் ஊராட்சியில் உள்ள 3 குடியிருப்பு களுக்கான குடிநீர் திட்டம், ரூ.3.52 கோடியில் தூத்தூர் ஊராட்சியில் 5 ஊராட்சிகளுக்கான குடிநீர் திட்டம் என மொத்தம் ரூ.212 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகள் உள்ளன. மாநிலத்திலேயே 6 சட்டசபை தொகுதிகளில் 51 பேரூராட்சிகள் இருப்பது இங்கு தான். இங்கு 24 மாதங்களில் ரூ.1351.14 கோடி செலவு செய்ய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி தந்துள்ளார். நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.131.38 கோடியும், 4 நகராட்சிகளுக்கு ரூ.57.50 கோடியும், 51 பேரூராட்சிகளுக்கு ரூ.524.9 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 638.17 கோடியும் செலவு செய்யப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தில் சாலையை அகலப் படுத்தும் போது குடிசைகளை அகற்ற கூடாது என்று எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கூறி யுள்ளார். எனவே சாலையை அகலப்படுத்தும் போது அகற்றப்படும் வீடுகளுக்கு மாற்று வீடு தருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ளோம். குமரி மாவட்டத்தில் குடிநீர் ஆதாரம் அதிகம் இருக்கிறது. ஆனால் அதை செயல் படுத்தும் போது பல்வேறு சிரமங்கள் உள்ளன. இங்கு மேடு, பள்ளங்கள் அதிகம் உள்ளன. சாலையை சீரமைக்கும்போது குடிநீர் குழாய்கள் சேதம் அடைகிறது.

    எனவே சிரமங்களை நீக்கி குமரி மாவட்டத்தில் குடிநீரை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்றபோது குடிநீர் வழங்கல் துறை 26-வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந்த துறை இந்தியாவில் முதல் இடம் பிடித்துள்ளது. அதற்கான விருதை வாங்கி வந்துள்ளோம்.

    குமரி மாவட்டத்தில் கையளவு இடம் கூட கொடுக்க மாட்டார்கள். ஆனால் தற்போது மலையில் அருமையாக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு இடம் கொடுக்கப்பட் டுள்ளது. குறைவான செல வில் நிறைவான திட்டமாக இந்த திட்டம் உருவாகி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறி னார். முன்னதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியபோது, குமரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் எதையும் போராடிதான் பெற வேண்டிய நிலை இருந்தது. போராடியதால் என் மீது 30 வழக்குகள் போடப் பட்டுள்ளன. ஆனால் தற்போது அப்படி இல்லை. குமரி மாவட்டத்துக்கு கேட்கின்ற நிதியை முதல்-அமைச்சர் அளித்து வரு கிறார். விரைவில் தன்னி றைவு பெற்ற மாவட்டமாக குமரி மாவட்டம் உருமாறும்" என்றார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, ராஜேஷ்குமார், பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, சென்னை பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குர்ராலா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், குழித் துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி உள்பட பலா் கலந்து கொண்டனர்.

    • கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே அமைகிறது
    • அமைச்சர் ஏ.வ.வேலு 22-ந்தேதி நேரில் ஆய்வு

     

    கன்னியாகுமரி, மே.9-

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று அவர்கள் பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகுதளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளன. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

    இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படு கிறது. பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளி நாடு களில் அமைக் கப்பட்டு உள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப் பட உள்ளது.

    இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய 2 பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பி பாறை களின் திரத்தன்மையை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இந்த ஆய்வுகளின் முடிவு களை பொறுத்து விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்திற்குள் பாலப் பணிகள் நிறைவடை யும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு வருகிற 22-ந்தேதி கன்னியா குமரி வருகிறார். அவர் 2 நாட்கள் கன்னியா குமரியில் தங்கி இருந்து கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பது குறித்த இடத்தை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்ய இருப்பதாக தெரி கிறது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளை யும் அவர் ஆய்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

    • 6592 மகளிர் சுயஉதவி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
    • 16 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.7.69 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி, டிச.30-

    திருச்சியில் நேற்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடரந்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, ஒன்றியக்குழு தலைவர்கள் செம்பனார்கோயில் நந்தினி ஸ்ரீதர், குத்தாலம் மகேந்திரன், சீர்காழி கமலஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வைத்தனர். மகளிர் திட்ட இயக்குனர் பழனி வரவேற்றார்.

    விழாவில் கலெக்டர் லவிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர் செல்வம் ஆகியோர் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்கினர்.

    விழாவில் கலெக்டர் லலிதா பேசியதாவது;-

    மாவடத்தில் ஐந்து வட்டாரங்களில் 5,857 மகளிர் சுயஉதவி குழுக்களும், மயிலாடுதுறை சீர்காழி ஆகிய நகராட்சிகள், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய நான்கு பேரூராட்சிகள் உள்ளிட்ட ஆறு நகர்புற அமைப்புகளில் 735 அளவிலான மகளிர் சுயஉதவி குழுக்கள் என மொத்தம் 6592 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களுக்கு நடப்பு நிதியாண்டில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கிட ரூ.500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    விழாவில் 652 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20.99 கோடியும், 16 ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பிற்கு ரூ.7.69 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் சுயதொழில் தொடங்கி மகளிர் சுய உதவி குழுவினர் தங்களது பொருளாதாரத்தை உய ர்த்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
    • நாகை எம்.எல்.ஏ ஜெ.முகம்மது ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது.

    இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்தனர். எனவே, அதை சீரமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மூலதன மானிய நிதியிலிருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாகை பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

    பேருந்து நிலையத்திலுள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் தட்டு ஓடு பதித்தல், நடைபாதையில் டைல்ஸ் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல், தார்ச்சாலை அமைத்தல், சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் கட்டுதல், புதிய மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருவதை நாகை எம்.எல்.ஏ ஜெ.முகம்மது ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலத்திற்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

    ஆய்வின் போது, நாகை நகராட்சி ஆணையர், செயற் பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ரூ.55 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட கொல்லஞ்சியிலுள்ள படிப்பகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்
    • ரூ.4.15 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள ஆய்வு செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய புதிய அலுவல கத்திற்கென ஒப்படைக்கப் பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூ .3.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பணியினை ஆய்வு செய்து அதனை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.55 ஆயிரம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட கொல்லஞ்சியிலுள்ள படிப்பகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர் நியமிக்க ஊராட்சித் தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது.

    வளர்ச்சி திட்டப்பணிகள்

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் சுந்தரவனம் திட்டங்கினாவிளையில் வடிகால் அமைப்பு பணியி னையும், ரூ.9 லட்சம் மதிப்பில் முள்ளூர்து றையில் உள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தினையும், ரூ.1 லட்சம் மதிப்பில் தேங்காப் பட்டினம் ஜும்மா பள்ளிவாசலில் முடிவ டைந்த பேவர் பிளாக் அமைக்கப்பட்டிருந்தையும், ரூ.7 லட்சம் மதிப்பில் தேங்காப்பட்டினம் கே.எஸ்.எம். முதல் ஜும்மா பள்ளிவாசல் வரை பேவர் பிளாக் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.4.15 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளையும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு மென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பயிர்க்கடன் ரூ 400 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
    • தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும் தேவையான யூரியா உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தற்போது சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விவசாயத்திற்கு தேவையான உரம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை பறக்கை, அழகப்பபுரம் பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது. தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும் தேவையான யூரியா உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பயிருக்கு குறிப்பிட்ட காலத்தில் உரம் இட்டால் மட்டுமே அதிக மகசூல் பெற முடியும். ஆனால் ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா தேவைப்படுகிறது.

    ஆனால் 15 ஏக்கருக்கு 100 கிலோ யூரியா உரத்தை தான் வழங்குகிறார்கள். மேலும் கூட்டுறவு சங்கங்களில் லோன் வாங்குபவர்களுக்கு அதிக அளவில்யூரியா வழங்கப்படுகிறது விவ சாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்படவில்லை. கூட்டுறவு சங்கங்களில் யூரியா ரூ. 270க்கு விற்கப்படு கிறது. ஆனால் வெளி மார்க்கெட்டில் ரூ 400 க்கு விற்கப்பட்டு வருகிறது என்றனர்.

    கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சந்திரசேகர் கூறுகையில்

    குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பயிர்க்கடன் ரூ 400 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    அதில் ரூ 395 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ 440 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள விவாசாயிகள் அனைவரும் கடனுதவி பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் நகைக்கடன் கறவை மாடுகள் உள்பட அனைத்து வகையான கடன்களுக்கும் ரூ.2200 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 300 டன் யூரியா உரம் இருப்பில் உள்ளது. வருகிற 20-ந் தேதி மேலும் 600 டன் யூரியா உரம் கொண்டுவரப்படவுள்ளது

    வடக்கு தாமரைகுளம் மயிலாடி குமாரபுரம் தோப்பூர் ஊட்டுவாழ்மடம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் யூரியா உரம் இருப்பு உள்ளது. தேவைப்படுபவர்களுக்கு யூரியா உரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதை தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக்கொண்டார்.

    • பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி பொறியாளருக்கு அறிவுறை
    • கலெக்டர் அரவிந்த் ஆய்வு

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க கன்னியா குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக ரூ.10.5 கோடியில் நாகர்கோவில் மாநகராட்சிக்கான புதிய அலுவலக கட்டிடத்தின் அனைத்து தளங்களையும் நேரில் பார்வையிடப்பட்டது.

    வடசேரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட தோடு இந்நிலையத்தில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய அறையினை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து வடசேரியில் அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் நீக்கும் பணி யினையும், வடசேரி கிருணன்கோவில் பகுதி களில் உள்ள குடிநீர் சுத்திரிகரிப்பு நிலை யத்தினையும் நேரில் பார்வையிட்டதோடு, பொது மக்களுக்கு தங்கு தடை யின்றி குடிநீர் வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நாகர் கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற் கொண்டார். ஆய்வில் மாநகர நகர்நல அலுவலர் விஜயசந்திரன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×