search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டண உயர்வு"

    • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாகவும், இறுதிக்கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகிறது.
    • தேர்தல் முடிந்த உடன் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்த உள்ளன.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் உள்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இறுதிக்கட்டமாக ஜூன் 1-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு டெலிகாம் நிறுவனங்களின் கட்டணம் 15 முதல் 17 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

    ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவது தவிர்க்கவே முடியாதது. இதன்மூலம் ஏர்டெல் நிறுவனம் அதிக பயன் பெறும் எனவும், அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே, கடந்த 2021 டிசம்பரில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம், விஜயவாடாவுக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.

    சென்னை:

    புனித வெள்ளியையொட்டி நாளை அரசு விடுமுறை ஆகும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைவரது கவனமும் தேர்தல் பிரசாரத்தை நோக்கி திரும்பியுள்ளதால், தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்பவர்களிடம், தனியார் ஆம்னி பஸ்கள் ஓசையில்லாமல் கட்டணத்தை உயர்த்திவிட்டன.

    சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று தனியார் ஆம்னி பஸ்களில் செல்வதற்கான கட்டணம் ரூ.5 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கோவைக்கு செல்வதற்கும் ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.700 முதல் ரூ.1000 வரை ஆகும்.

    இதேபோல் சென்னையில் இருந்து பெங்களூருக்கு ரூ.3 ஆயிரம், விஜயவாடாவுக்கு ரூ.2,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு முதல் 5 மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

    மற்ற பண்டிகை காலத்தில் வரும் வார இறுதி நாட்களை போலவே, தற்போதும் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் தட்கல் முறையிலும் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி பொதுமக்கள் ஆம்னி பஸ்களை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் பஸ் கட்டணம் கிட்டத்தட்ட விமானக் கட்டணத்துக்கு இணையாக உள்ளது. எனவே, குடும்பத்துடன் ஊருக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் கூடுதல் கட்டணத்தால் தவிக்கிறார்கள்.

    அதே நேரத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 505 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. இந்த வார இறுதியில் மேலும் 650 பஸ்கள் புதிய கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்திற்கு வரும் ஒவ்வொரு பஸ்சிலும் முன்பதிவு செய்த பயணிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. இதனால் முன்பதிவு செய்யாத பயணிளுக்கு இருக்கை கிடைப்பதில்லை. இதனால் முன்பதிவு செய்யாத பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

    ஒவ்வொரு வார இறுதியிலும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பிறகுதான் கூடுதல் பஸ்கள் இயக்கபடுவதாகவும் பயணிகள் தெரிவிக்கி ன்றனர். எனவே வார இறுதி நாட்களில் முன்பதிவு செய்யாத பஸ்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தான் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் இயங்குகின்றன.
    • பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.5 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    விரைவு பஸ்கள் பெரும்பாலும் 'அல்ட்ரா டீலக்ஸ்' வகையை சார்ந்தது. 2 இருக்கைகள் கொண்டதாக இவை உள்ளன. இதனால் கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

    தற்போது கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தான் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் இயங்குகின்றன.

    இதனால் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பஸ்களின் கட்டணத்தை விட சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். மாறாக கூடுதலாக வசூலிப்பதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.5 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    சென்னை-சேலம் இடையே ரூ.300-ல் இருந்து ரூ.310 ஆகவும், சேலம்-நெல்லை இடையே ரூ.425-ல் இருந்து ரூ.430, நெல்லை-ஓசூர் கட்டணம் ரூ.590-ல் இருந்து ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டம் ரூ.580, ரூ.590 ஆக இருந்த இடங்களுக்கு ரூ.600 ஆகவும் தூரத்தை பொறுத்து ரூ.30 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. சில்லறை பிரச்சினையை காரணம் காட்டி கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறுகையில், "ஏற்கனவே உள்ள பஸ் கட்டணத்தில் ஒரு சில இடங்களுக்கு சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதனை சரி செய்யும் வகையில் அந்த வழித்தடத்தில் மட்டும் சிறிய அளவில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அரசு பஸ்களுக்கு கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே உள்ளபடி தான் வசூலிக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து பஸ்கள் செயல்பட தொடங்கிய நிலையில் பஸ் கட்டண அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது. அதில் சில இடங்களில் தவறு நடந்துள்ளது" என்றார்.

    • ஒவ்வொரு முறையும் ஆம்னி பஸ்களில் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற புகார் எழும்.
    • ஆன்லைன் தளத்தில் இருப்பதை ஆதாரமாக வைத்து குறிப்பிட்ட பஸ்களை பறிமுதல் செய்ய முடியும்

    சென்னை:

    பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதை சாதகமாக்கி ஆம்னி பஸ்களில் அநியாய கட்டண வசூல் என்பது வாடிக்கையாக நடப்பதுதான்.

    மக்கள் 4 நாள் சத்தம் போடுவார்கள். அதன் பிறகு அவர்களுடைய கவனம் திரும்பிவிடும் என்ற எண்ணம் அரசியல்வாதிகளிடம் தான் அதிகமாகவே இருக்கும். இப்போது அதே நிலைக்கு அதிகாரிகளும் வந்து விட்டது துரதிஷ்டம். என்ன தான் அரசியல்வாதிகள் ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் நிர்வாகத்தை சீராகவும், முறையாகவும் நடத்தி செல்ல வேண்டிய பொறுப்பு அதிகாரிகளிடம் தான் இருக்கிறது. ஆனால் இவர்களும் இப்போது அரசியல்வாதிகளை போலவே மாறிவிட்டார்கள்.

    ஒவ்வொரு முறையும் ஆம்னி பஸ்களில் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்ற புகார் எழும். அது இரண்டு, 3 நாட்கள் பரபரப்பாக பேசப்படும். போக்குவரத்து துறை அதிகாரிகளும் அதிக கட்டணம் வசூலித்தால் பஸ் பறிமுதல் செய்யப்படும், லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் பரபரப்பாக அறிவிப்பார்கள்.

    இது ஒவ்வொரு பண்டிகைக்கும் நடக்கும். பண்டிகை முடிந்ததும் மறந்து போகும். இப்போதும் புத்தாண்டுக்காக ஊர் சென்றவர்கள் திரும்பி வருகிறார்கள். மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2500, நாகர்கோவிலில் இருந்து ரூ.3500 கட்டணம் வசூலிக்கிறார்கள். அதே நேரம் இதுபற்றி ஆம்னி பஸ் தரப்பில் கேட்டால் நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை. இவ்வளவு கட்டணம் போட்டு இருக்கிறோம். விருப்பம் இருந்தால் வாருங்கள், விருப்பம் இல்லை என்றால் போங்கள் என்று சர்வசாதாரணமாக சொல்லுகிறார்கள்.

    இந்த கட்டண உயர்வு என்பது ஏதோ ரகசியமாக அவர்கள் வசூலிக்கவில்லை. ஆன்லைன் தளத்திலேயே குறிப்பிட்டுள்ளார்கள். வெளிப்படையாகவே தெரிகிறது. இது தெரிந்த பிறகும் அதிகாரிகளால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை? இதற்காக பஸ்சில் சென்று சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை.

    ஆன்லைன் தளத்தில் இருப்பதை ஆதாரமாக வைத்து குறிப்பிட்ட பஸ்களை பறிமுதல் செய்ய முடியும். அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

    அதேபோல் இணைய தளத்திலும் அரசு நிர்ணயித்து இருக்கும் தொகை ஒவ்வொரு ஊருக்கும் இவ்வளவுதான். இதற்கு மேல் கட்டணங்களை வெளியிட்டால் அந்த இணைய தளமும் முடக்கப்படும் என்று அரசாங்கமும் எச்சரித்தால் இந்த முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை.

    திருவிழாக்களில் மட்டும் திறக்கப்படும் திடீர் கடைகளை போல பண்டிகை காலங்களில் மட்டும் ஓட்டுகின்ற பஸ்களும் இருக்கின்றன. நிரந்தரமாக தினசரி சர்வீஸ் பஸ்களும் இருக்கின்றன. அவ்வாறு தினசரி ஓடுகின்ற பஸ்களில் நிரந்தரமாக ஒரு கட்டணத்தை வைத்துள்ளார்கள். அதே நேரம் திருவிழாவுக்காக ஓட்டுபவர்கள் மனம்போல் கட்டணம் நிர்ணயிக்கிறார்கள். நேற்று புத்தாண்டு தினம்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் மிகமிக குறைவு. எனவே நேற்று ரூ.500 கட்டணத்தில் நாகர்கோவில் வரை இயக்கி இருக்கிறார்கள். இந்த பஸ்களில் இன்று அங்கிருந்து திரும்பி வர ரூ.3500 டிக்கெட் கட்டணம் வசூலித்து இருக்கிறார்கள். இந்த வாடிக்கையும் வேடிக்கையும் தொடர் கதைதான். ஆனால் மக்களை பற்றி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

    கடமைக்காக அவ்வப்போது சில பஸ்கள் மீது வழக்கு போடுகிறார்கள். எல்லா ஆவணங்களும் இருந்தாலும், ஏதாவது ஒரு குறையை சொல்லி அபராதம் விதிப்பதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அப்படியானால் தகுதி சான்றுகளையும் போக்குவரத்துறை அதிகாரிகள் தான் வழங்குகிறார்கள். அதே அதிகாரிகள் தான் பின்னர் குறையையும் சொல்கிறார்கள். தகுதி சான்றிதழ் வழங்கும்போது குறைகளை பார்க்காமல் விட்டது ஏன்? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் அதிகாரிகள் பாராமுகத்தால் இந்த வாடிக்கையும், வேடிக்கையும் நிரந்தரமாகிவிட்டது. இதனால் சிரமப்படுவது மக்கள்தான்.

    • எல்லா பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரி தேர்வு கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
    • சிண்டிகேட் குழுவினருக்கு பழைய கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு குறித்து துணைவேந்தர் வேல்ராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நேற்று சில கல்லூரிகளில் தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்வு என்று மாணவர்கள் கூறியுள்ளார்கள். 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. செலவுகள் அதிகம், தேர்வு தாள்களை திருத்த கட்டணம் அதிகம், இதர செலவுகள் உள்ளது.

    நாட்டின் வளர்ச்சிப்படி பார்த்தால் 10 ஆண்டுகளுக்கு பிறகு கட்டண உயர்வு என்பது 100 சதவீதமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் 9 ஆண்டுகளுக்கு பிறகு 50 சதவீதம் கூட்டியுள்ளோம். ஜனவரி மாதம் முடிவு எடுக்கப்பட்டு மே மாதம் கொடுக்கப்பட்டது. பல கல்லூரிகளில் கட்டணம் வசூலித்து விட்டார்கள்.

    இந்த கட்டண உயர்வு குறித்து அமைச்சருக்கு தெரியாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்வு என்று கேள்வி வந்ததால் ஏன் உயர்த்தினீர்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேட்டார்.

    மேலும் பழைய கட்டணத்தையே இம்முறை வசூலிக்க கூறியுள்ளார். அதனால் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த செமஸ்டரில் இருந்து புதிய தேர்வு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது மாணவர்கள் கல்லூரிகளில் செலுத்திய கூடுதல் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

    எல்லா பல்கலைக்கழகத்திலும் ஒரே மாதிரி தேர்வு கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும். இது தொடர்பான கூட்டம் விரைவில் நடத்தப்படும்.

    அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரி தேர்வு கட்டணம் உயர்வது சரியாக இருக்கும். சிண்டிகேட் குழுவினருக்கு பழைய கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆம்னி பஸ்களில் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • கடைசி நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு வெளியூர்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் படி திருத்தி அமைக்கப்பட்ட புதிய ஆம்னி பஸ் கட்டணம் வெளியிடப்பட்டது. அதன் படி தற்போது கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சென்னை, கோவை, ஐதராபாத், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் ஆம்னி பஸ்களில் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மற்றும் கோவையில் இருந்து பெங்களூர், மைசூர், ஐதராபாத், விஜயவாடா, கேரளா உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல வழக்கமான கட்டணத்தை விட ரூ.1000 முதல் ரூ.1500 வரை கூடுதால் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.

    மைசூர், எர்ணாகுளத்துக்கு ரூ.3500 வரை டிக்கெட் கட்டணம் உள்ளது. இதனால் கடைசி நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களில் ஏ.சி. இருக்கை மற்றும் படுக்கை உள்ளிட்ட வசதியை பொறுத்து பயணிகளிடம் ரூ.1250 முதல் ரூ.2,500 வரை மட்டுமே கட்டணம் வசூலித்து வருகிறோம். விதி முறைகளை மீறி பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்தால் உடனடியாக இது பற்றி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்து வருகின்றனர். அவர்கள் இந்த கட்டணத்தை கடைபிடிக்க மறுக்கின்றனர். இது தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
    • சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    சுங்க கட்டண உயர்வை கண்டித்தும், இதனை வாபஸ் வாங்க வலியுறுத்தியும் விக்கிரவாண்டி டோல்கேட்டை தே.மு.க.தி.க.வினர் இன்று காலை முற்றுகையிட்டனர். விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். விக்கிரவாண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசார், தே.மு.தி.க.வினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இருந்தபோதும் தே.மு.தி.க.வினர் டோல்கேட்டை முற்றுகையிட முயற்சித்தனர். இதையடுத்து தே.மு.தி.க.வினரை கைது செய்த போலீசார், சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 100-க்கும் மேற்பட்டவர்கள் கையில் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர்.
    • போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    கருமத்தம்பட்டி:

    சுங்க கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

    கோவை கருமத்தம்பட்டி அருகே கோவை-அவி்னாசி மெயின் ரோட்டில் கணியூர் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுங்கச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமல், கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அந்த அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கையில் கொடியுடன் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்க முடியாமல் தவித்தன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் போராட்டக்காரர்களை தடுத்தனர். ஆனால் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர்.

    கைதானவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த போராட்டம் காரணமாக கணியூர் சுங்கச்சாவடியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

    • கட்டட ஒப்பந்தம் பதிவு செய்வதற்கான கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்ப ட்டுள்ளது.
    • விடுதலைப்பத்திரம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பதிவுக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து, கட்டுமானத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக இந்திய கட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,

    தமிழக அரசு அறிவித்து ள்ள பதிவுக் கட்டண உயர்வு அபரிமிதமாக உள்ளது. கட்டட ஒப்பந்தம் பதிவு செய்வதற்கான கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்ப ட்டுள்ளது. இதனால் பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அரசுக்கு தெரிவிக்காமலேயே பல பணிகள் நிறைவேற வாய்ப்புள்ளது.குடும்பத்தினர் அல்லாதோர் பொது அதிகாரம் பெறும்போது சொத்தின் மதிப்பில் 1 சதவீத கட்டணம் என அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொழில்முனைவோரை முடக்கிவிடும்.

    விடுதலைப்பத்திரம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சொத்தை அடமானம் வைக்கும்போது அதற்கும் 50 சதவீத கட்டண உயர்வு என்பது ஏற்கத்தக்கதல்ல.தொழில் செய்வோரையும், மக்களையும் வெகுவாக பாதிக்கும் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சென்னையில் இருந்து நெல்லை செல்வதற்காக ரூ.3,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
    • குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல வந்தவர்கள் ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை பார்த்து செய்வதறியாது திகைத்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

    அவர்கள் கோடை விடுமுறையை சொந்த ஊரில் கழித்து விட்டு பள்ளிகள் ஆரம்பிக்கும் போது சென்னைக்கு வருவது வழக்கம். இதனால் மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. மே மாதம் முழுவதுமே ரெயில்கள் நிரம்பிவிட்டதால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களையே நம்பி உள்ளனர்.

    இன்று மே தின விடுமுறை என்பதால் அலுவலகங்களுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சொந்த ஊருக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகளின் வசதிக்கேற்ப கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    முன்பதிவு செய்த பயணிகள் திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்கு சிரமம் இன்றி பயணம் செய்தனர்.

    ஆனால் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் முன்பதிவு செய்யாமல் வந்த பயணிகள் பஸ்களில் இருக்கை கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனால் அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ் நிலையங்களுக்கு படையெடுத்தனர்.

    இதன் காரணமாக ஆம்னி பஸ் நிலையங்களில் பயணிகளின் வருகை திடீரென்று உயர்ந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் 2 மடங்கு அதிகரிக்கப்பட்டது.

    குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லை செல்வதற்காக ரூ.3,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல வந்தவர்கள் ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வை பார்த்து செய்வதறியாது திகைத்தனர்.

    இந்த திடீர் கட்டண உயர்வு தொடர்பாக பயணிகள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

    மே மாதம் பள்ளி விடுமுறையில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு விரைவு பஸ்களுடன், பிற போக்குவரத்து கழக பஸ்களையும் சேர்த்து போதுமான அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை வரவழைத்து அவர்களை அதில் ஏற்றி உடனுக்குடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறோம்.

    ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக புகர்கள் வருகிறது. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை கண்டறிய தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் தலைமையில், பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அதன் மூலம் ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வு தடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பேட்டியளித்தார்
    • விவசாயிகள் கூட்டத்தில் என்எல்சி குறித்து பேசக்கூடாது என தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்:

    பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியிலும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த வடசேரி பகுதியிலும் நிலக்கரி எடுப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்காமல் டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது துகுறித்து, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரியவில்லை, நெய்வேலியில் நிலக்கரி எடுத்ததால் அந்தப் பகுதியில் நீர்நிலைகள் மாசுபட்டு வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும், கடலூர் மாவட்ட கலெக்டர், விவசாயிகளுக்கும் வேளாண்மைக்கு ஆதரவாக இல்லாமல் என்எல்சி நிர்வாகத்துக்கு துணையாக நிற்கிறார் மேலும் விவசாயிகள் கூட்டத்தில் என்எல்சி குறித்து பேசக்கூடாது என தெரிவித்துள்ளார்   சுங்க சாவடி கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மற்றவைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததுபடி பார்த்தால் 37 சுங்க சாவடிகளை எடுத்து இருக்க வேண்டும் இதுவரை எடுக்கப்படவில்லை தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் நீதிமன்றத்திற்கு சென்று உடனடியாக 37 சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு வருங்காலத்தில் 15000 மெகாவாட் உற்பத்தியில் செய்யப் போவதாக அறிவித்துள்ளது,

    இந்த ஆண்டு வெப்பமான ஆண்டு அதுற்கு ஏற்ற முறையில் மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்களை தீட்ட வேண்டும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள் காலியிடங்களை நிரப்புவதற்குஅறிக்கை அளித்துள்ளேன் விரைவில் நிரப்புவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது, மேலும் இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் விவாதிப்பார்கள் எனவும் விழுப்புரத்தில் நடந்த கொலை குறித்து கேட்டதற்கு தமிழகத்தில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிகமாக புழங்குவதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போதையால் தான் அதிகமாக குற்றங்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வால் வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
    • இதனால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளது. நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கப்பலூர் சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் உள்ள சுங்கசாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தனியார் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள கப்பலூர் உள்ளிட்ட 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன்படி கப்பலூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகனங்கள் ஒருமுறை சுங்கச்சாவடியினை கடந்து செல்ல 100ரூபாயும், 24மணி நேர பயன்பாட்டிற்கு 150 ரூபாயும், 50தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.3280 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இலகுரக வணிக வாகனம் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.160-ம் 24மணி நேர பயன்பாட்டிற்கு ரூ.240-ம், 50தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.5 ஆயிரத்து 295 ஆகவும், 2 அச்சு கனரக வாகனம், பஸ்கள் ஒரு முறை பயன்பாட்டிற்கு ரூ.335, 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கு ரூ.500, 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.11095 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    3 அச்சு கனரக வாகனங்க ளுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.365-ம், 24 மணி நேர பயன்பாட்டு கட்டணம் ரூ.545-ம், 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.12,105 ஆகவும், 4 முதல் 6 அச்சு வரையிலான கனரக வாகனங்கள் ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.520-ம், 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கு ரூ.785-ம், 50 தடவை பயன்பாட்டிற்கான மாத கட்டணம் ரூ.17 ஆயிரத்து 400 ஆகவும் உயர்த்த ப்பட்டுள்ளது.

    7 மற்றும் அதற்கு மேல் அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு ஒரு முறை பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.635-ம், 24 மணி நேரத்தில் திரும்பும் பயன்பாட்டிற்கான கட்டணம் ரூ.955-ம், 50 தடவை பயன்பாட்டிற்கு மாத கட்டணம் ரூ.21 ஆயிரத்து 180 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வால் வாகன உரிமையாளர்களும், வாடகை வாகன ஓட்டிகளும், கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே பெட்ேரால், டீசல் விலை அதிகமாக உள்ள நிலையில் சுங்க கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால் ேபாக்குவரத்து செலவு கடுமையாக அதிகரிக்கும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இதனால் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×