search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fee hike"

    • கட்டட ஒப்பந்தம் பதிவு செய்வதற்கான கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்ப ட்டுள்ளது.
    • விடுதலைப்பத்திரம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பதிவுக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து, கட்டுமானத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக இந்திய கட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,

    தமிழக அரசு அறிவித்து ள்ள பதிவுக் கட்டண உயர்வு அபரிமிதமாக உள்ளது. கட்டட ஒப்பந்தம் பதிவு செய்வதற்கான கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்ப ட்டுள்ளது. இதனால் பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அரசுக்கு தெரிவிக்காமலேயே பல பணிகள் நிறைவேற வாய்ப்புள்ளது.குடும்பத்தினர் அல்லாதோர் பொது அதிகாரம் பெறும்போது சொத்தின் மதிப்பில் 1 சதவீத கட்டணம் என அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொழில்முனைவோரை முடக்கிவிடும்.

    விடுதலைப்பத்திரம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சொத்தை அடமானம் வைக்கும்போது அதற்கும் 50 சதவீத கட்டண உயர்வு என்பது ஏற்கத்தக்கதல்ல.தொழில் செய்வோரையும், மக்களையும் வெகுவாக பாதிக்கும் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
    • ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஊட்டி,

    தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    சமவெளியில் வெயில் நிலவி வரும் அதே வேளை யில், நீலகிரி மாவட்டத்தில் குளுமையான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.இதையடுத்து நீலகிரியில் நிலவி வரும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே அறை எடுத்து இங்கு தங்குவது வழக்கம்.

    இதற்காக அவர்கள் சுற்றுலாவுக்கு ஊரில் இருந்து புறப்படும் முன்பே இணையதளத்தில் சென்று விடுதியை புக் செய்வது வழக்கம்.

    தற்போது கோடை சீசன் தொடங்கி நடந்து வருகிறது. சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பலர் தங்களது குடும்பத்தி னருடன் ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர்.

    இந்த நிலையில் தங்கும் விடுதிகளில் வாடகை கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களில் விடுதி கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிக அதிகமாகும். இதனால் ஊட்டிக்கு வரக்கூடிய நடுத்தர மற்றும் ஏழை சுற்றுலா பயணிகள் மி கவும் பாதிப்படைந்து ள்ளனர். விடுதி கட்டணம் மட்டு மின்றி, லாட்ஜ் அறைகள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். காசு அதிகம் கொடுத்து உணவு வாங்கி சாப்பிட்டாலும், அந்த உணவு தரமாக இருக்க வேண்டும் என அனை வரும் எதிர்பார்ப்பது தான். ஆனால் அங்குள்ள பல ஓட்டல்களில் காசை அதிகமாக வாங்கி கொண்டு தரமற்ற உணவுகளை விற்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    சமீபத்தில் கூட ஊட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுபோன உணவு பரிமாறப்பட்டதாக பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி வீடியோவை பகிர்ந்திருந்தது நினைவுகூரத்தக்கது.

    2 நாள்கள் ஊட்டிக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, நிம்மதியாக தங்கி செல்லலாம் என வரும் சுற்றுலா பயணிகளுக்கு விடுதி கட்டணம் உயர்வு, தரமற்ற உணவு போன்றவை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • தூய்மை பணியாளர் சம்பளம் உயர்த்தி வழங்கிட தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
    • கோவை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

     கோவை,

    கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேயரால் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் படி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வருகிற ஜனவரி 1 -ந் தேதி முதல் ரூ.648 என சம்பளத் தொகையை உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை அனைத்து 100 வார்டு கவுன்சிலர்களும் ஏற்றதையடுத்து மேயரால் இந்த தீர்மானம் அனுமதிக்கப்பட்டது.

    அதன் பின்னர் கூட்டத்தில் வ.உ.சி. சிறுவர் பூங்காவிற்கு கட்டணம் சிறுவர்களுக்கு ரூ. 5 எனவும், பெரியவர்களுக்கு ரூ.10 என உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வ.உ.சிதம்பரனாருக்கு முழு உருவச் சிலையினை வ.உ.சி. பூங்காவில் பொதுப்பணிதுறை மூலம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்தல், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் கீழ் சேதமடைந்த தார் சாலைகளை சீரமைக்க ரூ.26 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து மூன்றாம் நபர் ஆய்வு மேற்கொள்ள ரூ.35 லட்சத்து 51 ஆயிரத்து 800 ஆகும், இதற்கான அனுமதி கோருதல்,

    மாநகராட்சி பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு குடிநீர் இணைப்பு கட்டணமின்றி வழங்குதல், தெரு நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ள தெரு நாய் ஒன்றுக்கு ரூ.445 யில் இருந்து ரூ.700 என்ற வீதத்தில் முதல்கட்டமாக ஒரு மண்டலத்திற்கு 1000 தெரு நாய்கள் வீதம், 5 மண்டலங்களுக்கு 5000 தெருநாய்களை பிடிக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட 65 தீர்மானங்களுக்கு அனுமதி கோரப்பட்டது. இந்த தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

    கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் பேசுகையில், " மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் பூமி பூஜை போடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் 75 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. மீதம் உள்ள பணிகள் நிறைவு பெறாமல் அரைகுறையாக உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்," என்றார்.

    மத்திய மண்டல தலைவர் மீனா லோகு பேசுகையில், தெரு நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளும் பணி நடக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் இப்பணியை மேற்கொள்கிறது. அன்மையில் பெண் நாய் ஒன்றுக்கு கருத்தடை செய்யப்பட்டது ஆனால் 6 மாதம் கழித்து அந்த நாய் மீண்டும் கர்ப்பம் ஆனது," என்றார். இதனால் மன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

    முன்னதாக அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் கூட்டரங்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி கவுன்சிலர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறுகையில் கோவை மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களுக்குள் யார் அதிகமாக சம்பாதிப்பது என்ற போட்டி நிலவுகிறது. மக்களை பற்றிய அக்கறை தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இல்லை. மேலும் மேயரை கண்டித்தும் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார்.

    ×