search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டச்சத்து குறைபாடு"

    • முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
    • வயது அதிகமாகும் போது முடிகொட்டுவது இயற்கையாகவே நடக்கும்.

    முடிகொட்டுதல் பிரச்சினை அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினையாகும். பொதுவாக எல்லோருக்குமே தினமும் கொஞ்சம் முடிகள் தலையில் இருந்து கொட்டத்தான் செய்யும். இது போக கொட்டும் முடியைவிட சற்று அதிகமாகவே புதிய முடிகளும் வளர ஆரம்பிக்கும். முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

    1) பரம்பரை காரணங்கள் முக்கியமான தாகும்

    2) பெண்களைப் பொறுத்தவரை கர்ப்ப காலம், பிரசவ காலம், மாதவிடாய் நிரந்தரமாக நிற்கின்ற காலம், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கு தலைமுடி தற்காலிகமாகவோ, அல்லது நிரந்தரமாகவோ கொட்டலாம்.

    3) தலையில் ஏற்படும் தோல் நோய்கள், நோய்த் தடுப்பு சக்தி குறைவு, இன்னும் சில காரணங்களினாலும் தலைமுடி கொட்டலாம்.

    4) புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு தலை முடி முழுவதும் கொட்டி, நோய் குணமான பிறகு மறுபடியும் தலை முடி வளர்ந்து விடுவதுண்டு,

    5) உடலாலும், மனதாலும் ஏற்படும் மிகப் பெரிய அதிர்ச்சியான சம்பவத்திற்குப் பின்னர், தலைமுடி கொட்டுவதுண்டு. பிரச்சினை சரியான பின் முடி மீண்டும் வளர ஆரம்பித்துவிடும்.

    6) அடிக்கடி விதவிதமாக ஹேர் ஸ்டைல் செய்தல், தலைமுடி கொட்டுவதைத் தடுக்க எண்ணெய், கிரீம், பேஸ்ட் போன்ற ரசாயனப் பொருட்கள் கலந்தவைகளை அடிக்கடி அதிகமாக உபயோகித்தல், ஹேர் டை, ஹேர் ஷாம்பு, ஹேர் கிரீம் இன்னும் தலைமுடியை பாதுகாக்க என்னென்ன ரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிக்கிறீர்களோ அவை எல்லாமே பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்.

    7) அப்பா, அம்மாவுக்கு தலை வழுக்கை. தலைமுடி அதிகமாக கொட்டுதல் இருந்தால், பிள்ளைகளுக்கும் அதே போன்று மூடி கொட்டலாம்.

    8) வயது கூடக்கூட முடிகொட்டுவது இயற்கையாகவே நடக்கத்தான் செய்யும்.

    9) திடீரென்று உடல் எடை குறைந்தால் தலைமுடி கொட்ட வாய்ப்புண்டு.

    10) சர்க்கரை நோய், லூப்பஸ் நோய் உள்ளவர்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டும்.

    11) அதிக மன அழுத்தம், தலைமுடியை அதிகமாக பிய்த்துக் கொள்வது, டென்ஷன் முதலியவைகளும் தலைமுடியைக் கொட்டச்செய்யும்.

    12) போதுமான, தேவையான சரிவிகித சத்துணவு உடலுக்குக் கிடைக்காவிட்டாலும் தலைமுடி கொட்டும்.

     ஆண்களை பொறுத்தவரை தலைமுடி இழப்பால் குடும்பத்திலோ, சமுதாயத்திலோ பெரிய பிரச்சினை எதுவும் வராது. ஆனால், பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு தலைமுடி இழப்பும் குடும்பத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி மிகப்பெரிய பிரச்சினைதான். தலைமுடியை மிகவும் லாவகமாகக் கையாள வேண்டும்.

    தலைமுடியிடம் உங்கள் கோபத்தை காட்டக்கூடாது. பெரிய பல் உள்ள சீப்புகளை உபயோகிக்க வேண்டும். ரப்பர், பிளாஸ்டிக் கிளிப்புகளை தவிர்க்க வேண்டும். தலைமுடி இழப்பை சரிகட்ட என்னென்ன வைட்டமின்கள், சத்துணவுகள், பழங்கள் சாப்பிடலாம் என்பதை உங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டறிந்து அவைகளை அதிகமாக பயன்படுத்துங்கள்.

    அதிக சூரிய ஒளி நேரடியாக தலையில் படுமாறு இருப்பதை தவிர்க்கவும். சிகரெட் புகைப்பவர்கள் உடனே நிறுத்தவும். புற்றுநோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் உங்களது டாக்டரிடம் கூலிங் தொப்பி போட்டுக் கொள்ளலாமா என்று கேட்டபின் அதை உபயோகிக்கவும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். தலைமுடி காய்ந்து போய் இருக்கக் கூடாது என்று பெற்றோர்கள் கண்டிப்பதுண்டு. மூத்தோர் சொல்லை தட்டக்கூடாது. விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். அது முடியுமோ முடியாதோ தலை முடியின் விதியை யாராலும் வெல்ல முடியாது.

    • மருந்துகளால் மலச்சிக்கல் உண்டாகலாம்.
    • பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    மலச்சிக்கல் என்பது ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறுவது அல்லது மிகவும் உலர்ந்தும், வலியுடனும் வெளியேறுவதாகும். சர்க்கரை நோயாளிகளில் 60 சதவீதம் பேர் மலச்சிக்கலால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கியகாரணம் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும் போது ஏற்படும் குடற்பாதை நரம்புகளின் பாதிப்பாகும்.

    மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு, நீரிழிவு நோய்க்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளாலோ (டாப்பாகிளப்லோ சின் போன்ற எஸ்.ஜி. எல்.டி2 இன்ஹிபிட்டர்ஸ்) அல்லது கூடுதலாக உள்ள இதய நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளாலோ மலச்சிக்கல் உண்டாகலாம். (புரூஸிமைடு, கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து மாத்திரைகள்). புரூப்பன், ஆஸ்பிரின், ஒபியாட்ஸ் போன்ற வலி நிவாரண மருந்துகள் உட்கொள்பவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

    மலச்சிக்கலுக்கு தீர்வாக சர்க்கரை நோயாளி கள் நார்ச்சத்து அதிகமாக உள்ள பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலுக்கு நீர் வறட்சி காரணம் என்பதால் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மைதா போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    எக்காரணம் கொண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மலச்சிக்கலுக்காக மலமிளக்கி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

    • சிலர் மூன்று வேலை உணவுகளையுமே ஒழுங்காக சாப்பிடுவதில்லை.
    • உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவில் இருந்து தான் கிடைக்கிறது.

    ஒரு நாளைக்கு அனைவரும் மூன்று முறை சாப்பிடுவது வழக்கம். ஆனால் சிலர் பல காரணங்களினால் ஒரு வேலை உணவையாவது தவிர்த்து விடுகின்றனர். இன்னும் சிலர் மூன்று வேலை உணவுகளையுமே ஒழுங்காக சாப்பிடுவதில்லை. இதனால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

     உயிரினங்களுக்கும் உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று. நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவில் இருந்து தான் கிடைக்கிறது. எனவே, இதனை நாம் ஒழுங்காக உட்கொள்ளவில்லை என்றால் உடலானது பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறது.

     ஒருவேளை சாப்பிடாமல் இருந்தால் கூட உங்கள் மூளை உங்கள் பேச்சை கேட்காது. எதைப்பார்த்தாலும் கோபமாகவும், வெறுப்பாகவும் இருக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்காமல் இருக்கும் நேரத்தில் உடலானது முழு ஆற்றலையும் இழக்கிறது. இதனால் கோபமும், எரிச்சலும் உண்டாகும்.

    உணவினை சாப்பிடாமலோ அல்லது குறைவாக சாபிடுவதன் மூலம் உடலில் ஹார்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிப்பதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

     தினமும் ஒருவேளை உணவை தவிர்ப்பதன் மூலமாகவோ அல்லது ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பதன் மூலமாகவோ உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதாவது நீங்கள் குறைவான அளவில் சாப்பிட்டு வருவதால் நாளடைவில் உங்கள் ஊட்டச்சத்தின் அளவு குறைந்து உடல் வலிமையற்று காணப்படும்.

    தொடர்ந்து உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதால் உடலில் மெட்டபாலிசத்தின் அளவு பாதிக்கப்படுகிறது. இதனால் உடல் எடை குறையத்தொடங்குகிறது. குறிப்பாக காலை உணவையும், இரவு உணவையும் தவிர்ப்பதன் மூலம் உடலில் உள்ள ஒட்டுமொத்த மெட்டபாலிசமும் பாதிக்கப்படுகிறது.

    • உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும்.
    • கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    தற்போது பெரும்பாலான பெண்களின் கவலையை அதிகரிப்பது அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைதான். இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், பித்தப்பை நோய்கள், பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய், கீல்வாதம், பக்கவாதம், மனி அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும். இதை தவறாக புரிந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது, காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.

    காலை உணவை தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் முரண்பாடு ஏற்படும். இது உடல் பருமன் பிரச்சினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும், காலை உணவை தவிர்ப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் நொறுக்குத்தீனிகள் மீது கவனம் செல்லும், மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.

    முதலில் எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள். துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    நமது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதச்சத்து. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவுமுறையை பின்பற்ற வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'டி' மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் அவசியமானதாகும் இவை நிறைந்த உணவுகளை தினசரி உணவுப் பட்டியவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    காலை உணவாக முழு தானியங்கள் பழங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மதிய மற்றும் இரவு உணவாக கோழி இறைச்சி அல்லது மீன், வேகவைத்த காய்கதிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம். தினமும் போதுமான அளவு தண்ணிர் குடிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதோடு சீரான தூக்கமும் முக்கியமானது. இவற்றோடு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால் உடல் எடை எளிதாக குறையும்.

    • குஜராத் மாநிலத்தில் 100 பேரில் மூன்று பேர் வீதம் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு கொண்ட குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் நான்காவது இடம்.

    நிதி ஆயோக் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி, குஜராத் மாநிலத்தை சேர்ந்த சுமார் 38.09 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கிராமபுறங்களை சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டோர் (44.45 சதவீதம்), நகர்ப்புறங்களில் சுமார் 28.97 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது.

    பின்தங்கிய மாநிலங்களாக இருக்கும் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்டவை ஊட்டச்சத்து குறைபாடு அளவில் குஜராத் மாநிலத்தை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன. தேசிய குடும்பநல கணக்கெடுப்பின் படி தேசிய அளவில் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் நான்காவது இடம்பிடித்துள்ளது. இந்த மாநில குழந்தைகளில் சுமார் 39 சதவீதம் பேர் தங்களது வயதிற்கு ஏற்ற எடையை விட குறைந்த எடை கொண்டிருக்கின்றனர்.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    "ஊட்டச்சத்து மிகுந்த கவனமுடன் கையாளப்பட வேண்டிய ஒன்று. 2016-ம் ஆண்டு மேற்கு வங்காள குடும்பங்களை சேர்ந்த சுமார் 33.6 சதவீதம் பேர், குஜராத் மாநிலத்தில் 41.37 சதவீதம் பேரும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டுள்ளனர். 2021-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் 27.3 சதவீதம் பேரும், குஜராத் மாநிலத்தில் 38.9 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது," என பொருளாதார பேராசிரியர் அட்மன் ஷா தெரிவித்தார்.

    இந்த தகவல்களின் படி குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு 100 பேரில் மூன்று பேர் வீதம் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலக்கட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் 100 பேரில் ஆறு பேர் வீதம் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நிதி ஆயோக் தகவல்களின் படி, குஜராத் மாநிலத்தின் 23.30 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. கேரளா, பஞ்சாப மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குஜராத்தை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன.

    நாடு முழுக்க குஜராத் மாடல் மற்றும் வளர்ச்சி என பல்வேறு தகவல்கள், கருத்துக்கள் வெளியாகி வந்துள்ளன. இந்த நிலையில், அம்மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு விவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

    • ஊட்டச்சத்து குறைபாடுள்ள 43,299 குழந்தைகளுக்கு சிறப்பு டாக்டர்கள் வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
    • 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட 93,200 குழந்தைகளுக்கு உடனடியாக உட்கொள்ளும் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டுள்ளன.

    உடுமலை:

    தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் வாயிலாக குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குதல், ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் சுகாதார கல்வி ஆகியவை அங்கன்வாடி வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

    இதுவரை 37.27 லட்சம் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை கணக்கிடப்பட்டு அவர்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 43,299 குழந்தைகளுக்கு சிறப்பு டாக்டர்கள் வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல 6 மாதங்களுக்கு உட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 11,917 குழந்தைகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 16,415 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவு, பேரிச்சம்பழம், ஆவின் நெய், புரோட்டின் பிஸ்கட் இரும்புச்சத்து திரவம் மற்றும் குடற்பூச்சி நீக்க மாத்திரை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டுள்ளன. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட 93,200 குழந்தைகளுக்கு உடனடியாக உட்கொள்ளும் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு உணவு அரைத்த வேர்க்கடலை, பால் பவுடர் சர்க்கரை, எண்ணெய், வைட்டமின்கள் மற்றும் மினரல் பொருட்களை கொண்டதாகும்.

    திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையினர் கூறுகையில், இத்திட்டத்தின் பயன்களை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்கள் வாயிலாக பொதுமக்கள் தெரிந்து கொண்டு முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.அங்கன்வாடி ஊழியர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

    • அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு சிறப்பு ஊட்டசத்து வழங்கப்படுகிறது.
    • மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் சுமார் 400 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    பொன்னேரி:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை மற்றும் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மீஞ்சூர் ஒன்றியத்தில் ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிய வீடு, வீடாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையங்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு சிறப்பு ஊட்டசத்து வழங்கப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் சுமார் 400 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மேனகா, குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் அபுபக்கர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேற்பார்வையாளர் சசிகலா, அங்கன்வாடி ஆசிரியர் ரகுமாபீ உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    • குழந்தைகளின் எடை குறைவு பாதிப்பு 35.8 சதவீதத்தில் இருந்து 32.1 சதவீதமாக குறைந்துள்ளது
    • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 49.7 சதவீதத்தில் இருந்து 41.9 சதவீதமாகவும் குறைந்துள்ளது

    புதுடெல்லி:

    ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், ஊட்டச்சத்து குறைபாட்டால் எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்பு இல்லை என்றும்,

    2015-16 மற்றும் 2019-21க்கு இடையில் குழந்தைகளின் எடை குறைவு பாதிப்பு 35.8 சதவீதத்தில் இருந்து 32.1 சதவீதமாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 49.7 சதவீதத்தில் இருந்து 41.9 சதவீதமாகவும் குறைந்துள்ளது என்றும் ஸ்மிருதி இரானி பேசினார்.

    மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, ஆள் கடத்தல் (பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா என்பது அடிமட்ட உண்மை நிலவரம் மற்றும் தேவைகளுக்கு முறையாகப் பதிலளிக்கும் நோக்கத்துடன் மறு வரைவு செய்யப்பட்டுள்ளது என்றார். 

    • கோவையில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான ஆய்வு 2 கட்டங்களாக நடைபெற்றது.
    • 1 முதல் 5 வயதுக்கு உட்பட்ட 1.47 லட்சம் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    கோவை

    கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,697 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் 1 முதல் 5 வயதுக்கு உட்பட்ட 1.47 லட்சம் குழந்தைகள் படித்து வருகின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரிடையே ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஊட்டச்சத்து பற்றாக்குறை தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சத்துமாவு, சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் கோவை மாவட்டத்தில் 1 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு கண்டறிவது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,154 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி முருகேஸ்வரி கூறியதாவது:-

    கோவையில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான ஆய்வு 2 கட்டங்களாக நடைபெற்று. முதல் கட்டமாக அங்கன்வாடி பணியாளர்கள் மூலமும், 2-வது கட்டமாக ஆர்.பி.எஸ்.கே மருத்துவக் குழு மூலமும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல்கட்ட ஆய்வில் 20 ஆயிரம் குழந்தைகள் வயதுக்கேற்ற எடை, எடைக்கேற்ற உயரம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து 20 ஆயிரம் குழந்தைகளையும் ஆர்.பி.எஸ்.கே மருத்துவக் குழு பரிசோதனை செய்தது. இவர்களில் 1,154 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மற்றவர்களுக்கு பெரியளவில் பாதிப்பில்லை.

    ஆனால், 1,154 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் கண்பார்வை குறைபாடு, காது கேளாமை, வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் காணப்படுகின்றன. இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இவர்களை அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் மாவட்ட இடையீட்டு சேவை மையத்திற்கு சிகிச்சைப் பெறவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    மேலும் முழுமையான ஊட்டச்சத்து உணவு எடுத்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனவே ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 1,154 குழந்தைகளுக்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் தொழில் முனைவோர்களுக்கான உற்பத்தி மற்றும் பயிற்சி மையத்தினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
    • தேனி மாவட்ட விவசாயிகள், கிராமப்புற இளை ஞர்கள் இதனை பயன்ப டுத்தி வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட காமாட்சிபுரம் கிராமத்தில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கான உற்பத்தி மற்றும் பயிற்சி மையத்தினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் முரளிதரன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் தெரிவித்த தாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் மூலம் தமிழகத்தி ல் அனைத்து குழந்தைகளின் எடை மற்றும் உயரம் கணக்கிடப்பட்டதில் 9,50,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், காதுகேளாத, வாய்பேசதா உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் 45,000 குழந்தைகளுக்கு மேல்சிகிச்சைக்காக கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை அளித்திட நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    எனவே, கருவுற்ற தாய்மார்கள் கருவுருவானதி லிருந்து அந்த நாள் ஆயிரம் நாட்கள் மிகவும் முக்கியான நாட்கள், தாய், சேய்க்கு தேவையான பால், முட்டை, கீரை, பருப்பு போன்ற சத்தான உணவு பொரு ட்களை உட்கொள்ளும் போது தாயின் நலன் பாதுகாக்கப்பட்டு, குழந்தை களின் மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமாகவும் வளர்வதற்கு வாய்ப்பாக அமையும். இதுகுறித்து, கருவுற்ற தாய்மார்களிடம் போதிய விழிப்புணர்வுவை ஏற்படுத்திட வேண்டும்.

    6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பட்டம், பட்டயம் பயிலுகின்ற மாணவியர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல் வழங்கப்படவுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தினை உருவாக்கிடும் பொருட்டு, 1 முதல் 5-வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ, மாணவிகளுக்கு சத்தான உணவு அளித்திடும் பொருட்டு, முதல்-அமை ச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    சென்டெகட் வேளாண் அறிவியல் மையமானது புது டெல்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் 1994ல் இருந்து, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் மூலம் விவசாயிகள் கிராமப்புற இளைஞர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகள் விளைவி க்கும் வேளாண் பொருட்கள் உற்பத்தி அதிகமாகும் போது அதற்க்கேற்ப விலை கிடைக்கவில்லை என்றால் சேதார இழைப்பை குறைக்கவும் மற்றும் விலை குறைவான தருணத்தில் உணவு பதப்படுத்தல் மற்றும் மதிப்புக் கூட்டல் தொழில்நு ட்பங்கள் சார்ந்த பயிற்சிகள் மற்றும் செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வேளாண் அறிவியல் மையமானது 5000 விவ சாயிகளை ஒருங்கிணைத்து 5 உழவர், உற்பத்தியாளர் நிறுவனங்களை செயல்படுத்தி வருகிறது. வேளாண் சார்ந்த பல்வேறு குழுக்கள் அமைத்து, தேவையான தொழில்நு ட்பங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கி வருமானத்தை இரட்டிப்பாக்கும் முனை ப்பில் செயலாற்றி வருகிறது.

    பெண்களை சிறந்த தொழில் முனைவோராக்கும் நோக்கில் வேளாண் அறிவியல் மையமானது கடந்த 5 மாதங்களில் கிராமப்புற பெண்களை 50 சுயஉதவிக் குழுக்களாக அமைத்து திராட்சையில் மதிப்புக் கூட்டல் திறன் மேம்பாட்டுபயிற்சிகள் வழங்கப்பட்டு, தொழில் முனைவோர்கள் உருவா க்கப்பட்டு தகுந்த வழிமுறை கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

    தேனி மாவட்ட விவசா யிகள், கிராமப்புற இளை ஞர்கள் இதனை பயன்ப டுத்தி வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவி த்தார்.

    ×