search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இல்லம் தேடி கல்வி"

    • இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் கலையரசி தலைமை தாங்கினார்.

    பல்லடம்:

    தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பல்லடம், பொங்கலூர் ஒன்றிய கிளைத் துவக்க விழா மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் வானவில் மன்ற கருத்தாளர்கள் சமுதாய பங்கேற்பாக கோடை விடுமுறையில் நடத்திய ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழாவில் உறுதுணையாக செயல்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் கலையரசி தலைமை தாங்கினார்.

    மாவட்ட இணை செயலாளர் ராணி ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.பல்லடம் கிளை செயலாளர் சரண்யா வரவேற்றார்.இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்க தலைவர் சுந்தர்ராஜன், ரோட்டரி உதவி ஆளுநர் கவிதா சுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய பயிற்றுனர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.

    தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கௌரிசங்கர் இயக்க செயல்பாடுகள் குறித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி பல்லடம், பொங்கலூர் கிளை பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வரும் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 10 நாட்கள் புத்தகத்திருவிழா நடைபெற உள்ளது.
    • மாணவர்கள் குழுவாக புத்தகம் வாசிப்பில் ஈடுபட்டனர்.

    பென்னாகரம்,

    தருமபுரியில் வரும் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 10 நாட்கள் புத்தகத்திருவிழா நடைபெற உள்ளது. இந்த புத்தகத் திருவிழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகளில் "தருமபுரி வாசிக்கிறது"நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிலையில் பென்னாகரத்தில் உள்ள 809 இல்லம் தேடிகல்வி மையங்களிலும் தருமபுரி வாசிக்கிறது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, மாணவர்கள் குழுவாக புத்தகம் வாசிப்பில் ஈடுபட்டனர்.

    பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி அருகே உள்ள நல்லப்ப நாயகனஅள்ளி மையத்தில் தருமபுரி மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், பென்னாகரம் இல்லம் தேடி கல்வி பொறுப்பாளர் தாமோதரன் ஆகியோர்கள் மாணவர்களுடன் வாசிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

    மேலும் வட்டார கல்வி அலுவலர்கள் மணி கிருஷ்ணன், துளசிராமன், ஜெகன் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் உடன் இருந்தனர்.  

    • 1214 தன்னார்வலர்கள் மாவட்டம் முழுவதும் கல்விப்பணியாற்றி வருகின்றனர்.
    • தன்னார்வலர்கள் மாணவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகளின் மூலம் பல திட்டங்களை அறிவித்து மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, எண்ணும் எழுத்தும் என பல்வேறு திட்டங்கள் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் கலை நிகழ்ச்சி மற்றும் துண்டறிக்கைகள் மூலமாக விழிப்புணர்வு கொடுக்கப்பட்டதின் விளைவாக மாவட்டம் முழுவதும் 3737 தன்னார்வலர்கள் இணைய வழியில் இத்திட்டத்தில் பதிவு செய்திருந்தனர். இவர்களில் மொத்தம் 2108 தன்னார்வலர்கள் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு உளவியல், கணினி வழி தேர்வு மற்றும் குழு கலந்தாய்வு மூலம் இறுதியாக 1814 தன்னார்வலர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தால் வடிவமைக்கப்பட்ட பாடத்தை கையாள பயிற்சி பெற்ற வல்லுனர் குழுவால் முறையான பயிற்சி வழங்கப்பட்டு, அந்தந்த மையங்களில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் பணியமர்த்தப்பட்டு நாளது வரையில் 1214 தன்னார்வலர்கள் மாவட்டம் முழுவதும் கல்விப்பணியாற்றி வருகின்றனர்.

    மேலும், மாணவர்கள் வகுப்பு அடிப்படையில் 1 -ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை தொடக்க நிலை தன்னார்வலர்களாலும், 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உயர் தொடக்க தன்னார்வலர்களாலும் மையம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இத்திட்டத்தினை சிறப்பாக கள அளவில் செயல்படுத்த ஒவ்வொரு குடியிருப்பிலும் தன்னார்வலர்கள் மாணவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தினசரி ஒன்று முதல் இரண்டு மணி நேரம் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள நான்கு ஒன்றியங்களில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தொடக்க நிலையில் 7652 மாணவர்களும், உயர் தொடக்க நிலையில் 5013 மாணவர்களும் என மொத்தம் 12,665 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

    இத்திட்டத்தினை செயல்படுத்தி வரும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஏற்படும் தற்காலிக காலிப்பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் தகுதி அடிப்படை யில் முன்னுரிமை அளிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியராகவும் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் தற்காலிக காலிப்பணியிடங்களிலும் வாய்ப்பு வழங்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி, குன்னூர் வட்டம் சில்வர் டேல் பகுதியிலுள்ள சி.எம்.எஸ் மையத்தை பார்வையிட்டு தன்னார்வலர் காளியம்மாளின் செயல்பாடுகளை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தன்னார்வலர்களுடன் முதல்-அமைச்சர் தொலை பேசியில் கலந்துரையாடி இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் செயல்பா டுகளை கேட்டறிந்தார்.நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் பொறுப்பு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களும், மாவட்டத்திற்கு மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளாரும் இணைந்து இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

    இதற்கான பிரத்யேக இல்லம் தேடி கல்வி திட்டத்தால் வடிவமைக்கப்பட்ட இணைய வழி செயலி மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இல்லம் தேடி கல்வி மையங்களை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், மாவட்ட மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையிட்டு தங்களது செல்போன் செயலி வழியாக பதிவு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த மகத்தான திட்ட மானது மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அனைத்து மாணவர்களும் அடிப்படை திறனை சிறப்பாக பெறும் வகையில் இக்கல்வியாண்டும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடரும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒவ்வொரு குடியி ருப்பு பகுதிகளிலும் கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு அறிக்கைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த ப்பட்டது.
    • மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து, பேச்சு திறன், வாசிப்பு திறன், கற்பனை திறன், ஓவியத் திறன் போன்ற பல்வேறு திறன்கள் அதிகரி த்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்வி துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் 12 ஆயிரத்து 665 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருவதாக கலெக்டர் அம்ரித் தெரிவி த்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    கொரோனா பெருந்தொ ற்றால் மாணவா்களின் கற்றலில் ஏற்பட்ட இடை வெளியை சரி செய்வத ற்காக தமிழக அரசு இல்லம் தேடி கல்வி என்ற திட்ட த்தை பள்ளி கல்வி துறை மூலம் 2021 அக்டோபா் 27-ந்தேதி தொடங்கியது. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடியி ருப்பு பகுதிகளிலும் கலை நிகழ்ச்சி மற்றும் துண்டு அறிக்கைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்த ப்பட்டது.

    இதனால் மாவட்டம் முழுவதும் 3,737 தன்னாா்வலா்கள் இணைய வழியில் பதிவு செய்திருந்த னா். இவா்களில் 2,108 தன்னாா்வலா்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் பரிந்துரை செய்ய ப்பட்டு இவா்களுக்கு உளவியல், கணினி வழித் தோ்வு மற்றும் குழுக் கலந்தாய்வு பயிற்சி அளிக்கப்பட்டு 1,814 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வடி வமைக்கப்பட்ட பாடத்தை கையாள பயிற்சி பெற்ற வல்லுநா் குழுவால் பயிற்சி வழங்கப்பட்டது. அந்தந்த மையங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் பணியமா்த்த ப்பட்டனா்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 1,214 தன்னாா்வலா்கள் கல்வி பணியாற்றி வருகின்றனா். மேலும், மாணவா்களின் வகுப்பு அடிப்படையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்க நிலை தன்னா ா்வலா்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உயா் தொடக்க தன்னாா்வ லா்களும் மாண வா்களின் இல்லங்களுக்கு அருகி லேயே தினசரி 1 முதல் 2 மணி நேரம் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வரு கின்றனா். இதன் அடிப்ப டையில், நீலகிரி மாவட்ட த்திலுள்ள 4 ஒன்றியங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொடக்க நிலையில் 7,652 மாணவா்க ளும், உயா்தொடக்க நிலையில் பயிலும் 5,013 மாணவா்க ளும் என மொத்தம் 12 ஆயிரத்து 665 மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகி ன்றனா்.

    இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து, பேச்சு திறன், வாசிப்பு திறன், கற்பனை திறன், ஓவியத் திறன் போன்ற பல்வேறு திறன்கள் அதிகரி த்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழு, மதுரை மாவட்ட இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து புத்தக கண்காட்சியை நடத்தியது.
    • இந்த கண்காட்சி மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.

    மேலூர்

    மேலூர் அல் அமீன் உருது தமிழ் உயர்நிலைப்பள்ளியில் மதுரை மாவட்ட நூலக ஆணைக் குழு, மதுரை மாவட்ட இல்லம் தேடி கல்வி ஆகியவை இணைந்து 38-வது தேசிய புத்தக கண்காட்சியை நடத்தியது. இதன் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தாளாளர் ஷாஜஹான் தலைமை தாங்கினார். புத்தக கண்காட்சியை மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை திறந்து வைத்து பேசினார். மேலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் மணிமேகலா தேவி, செல்வி ராம்கிளினிக் டாக்டர் கணேசன் முதல் புத்தக விற்பனையை பெற்றுக்கொண்டனர்.

    பள்ளியின் தலைவர் எம்.ஓ.சாகுல் ஹமீது, பொருளாளர் காதர் மைதீன், துணைத் தலைவர் ஜாகீர் உசேன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காஜாமைதீன், ராஜாமுகமது, ராஜா முகமது, பிலால் முகமது, ஜபார், சாகுல்ஹமீது, மேலூர் வருவாய் ஆய்வாளர் முனியசாமி, அரசு கலை கல்லூரி தமிழ் துறை முனைவர் பெரியவர், 2-ம் நிலை நூலகர் சீதாலட்சுமி, மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளர் மகேந்திரன், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், அல்அமீன் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சலீம் நன்றி கூறினார். புத்தக கண்காட்சி வருகிற 22-ந் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.

    • மே மாதம் 2ந் தேதி துவங்கி 22ந் தேதி வரை நடக்கிறது.
    • மாணவர்களின் திறமைகள் மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு தளத்தை உருவாக்குகிறது.

    உடுமலை :

    தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழா , ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்போடு வானவில் மன்ற கருத்தாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது.அனைத்து தரப்பு மாணவர்களும் அறிவியலை அணுகக் கூடியதாகவும், அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகவும் இத்திருவிழா கொண்டுள்ளது.மே மாதம் 2ந் தேதி துவங்கி 22ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான பயிற்சி முகாம் நடக்கிறது.

    இது குறித்து இல்லம் தேடி கல்வி திட்ட நிர்வாகிகள் கூறியதாவது:- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்களின் திறமைகள் மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு தளத்தை உருவாக்குகிறது. இந்த ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழாவில் எளிய அறிவியல் பரிசோதனைகள், கணிதத்தை எளிமையாக கற்றல், அறிவியல் அற்புதங்களை ஆராய்தல், உள்ளூர் வளங்களை பாதுகாப்பதற்கான வழிவகைகளை கண்டறிதலை உள்ளடக்கியுள்ளது. விளையாட்டுகள் மற்றும் பாடல்கள், ஒரிகாமி எனும் காகிதக்கலை பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கி இந்த திருவிழா நடக்கிறது.மொத்தம் 13 ஆயிரம் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், வானவில் மன்ற கருத்தாளர்களுடன் இணைந்து கோடை விடுமுறை காலத்தில் கிராம அளவில் குழந்தைகளை சந்தித்து அறிவியல் திருவிழாவை நடத்த உள்ளனர்.ஒவ்வொரு குழந்தையும், அவர்களது இல்லங்களுக்கு சென்று கற்றலை தொடர உள்ளதால், இந்த முன்னெடுப்பு, ஆயிரமாயிரமாக பல்கிபெருகி நோக்கத்தை நிறைவு செய்யும்.இது குழந்தைகளிடையே, அறிவியல் பாடப்பிரிவுகளின் மீதான ஆர்வத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தும். அறிவியல் சிந்தனைகளை வளர்க்க உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இல்லம் தேடி கல்வி சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
    • இதில் 27 வகையான அறிவியல் படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வருகை புரியும் மாணவ-மாணவிகள் அறிவியல் கண்காட்சியை அமைத்திருந்தனர். இதனை 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி பகுதியில் உள்ள தன்னார்வலர் ஈஸ்வரி, தனது உயர் தொடக்க நிலை மையத்திற்கு வருகை புரியும் மாணவ-மாணவிகளை கொண்டு இந்த கல்வியாண்டு முழுவதும் கற்றுக்கொண்ட அறிவியல் பாடத்தின் அடிப்படையில் இந்த கண்காட்சியை அமைத்திருந்தார்.

    இதை இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், திறந்து வைத்து பேசினார். இதில் 27 வகையான அறிவியல் படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர். இதனை தன்னார்வலர்கள் சிவரஞ்சினி, சிவமதி, பாண்டிச்செல்வி, பெற்றோர்கள் மற்றும் பிற பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

    • தமிழகம் முழுக்க 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.
    • மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள், பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நிலையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களிடம் ஏற்பட்ட கல்வி இடைவெளியை குறைக்க 2021 நவம்பரில் இல்லம் தேடி கல்வி மையங்கள் துவங்கப்பட்டன.தமிழகம் முழுக்க 1.80 லட்சம் மையங்களில் 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.

    இவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. மாலை நேர வகுப்பு மட்டுமல்லாமல், அரசுப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவிலும், தன்னார்வலர்கள் உறுப்பினராக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இல்லம் தேடி கல்வி மைய ஆலோசகர் லெனின் பாரதி கூறுகையில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அறிவியல் கண்காட்சி, கற்பித்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றல், தனித்திறன் போட்டிகள் நடத்துதல், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு கல்விசார் பணிகள், தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஊதியத்தை 2 ஆயிரமாக உயர்த்தி தர ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது.
    • இவர்களுக்கு 5-ம் தொகுதி பயிற்சி புத்தகம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 5-ம் தொகுதி பயிற்சி கிருஷ்ணன் கோவிலில் உள்ள வட்டார வளமையத்தில் நடந்தது. வட்டார வளமைய மேற்பர்வையாளர் மருதக்காளை தலைமை தாங்கினார். ஆசிரிய பயிற்றுநர் செல்வம், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளித் துணை ஆய்வாளர் தங்கேஸ்வரன் வரவேற்றார். பயிற்சியைத் தொடங்கி வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் சீனிவாசன் பேசினார். பயிற்சியின் கருத்தாளர்களாக கிறிஸ்டி தங்கநாயகம், ஜஸ்டின் தங்கராஜ், வரமணி அப்பன்ராஜ், பிரைட்டி சிங் ஆகியோர் செயல்பட்டனர். இதில் 110 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 5-ம் தொகுதி பயிற்சி புத்தகம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    • நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும்.
    • நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும்.

    திருப்பூர்:

    இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் குறைதீர் கற்றல் பயிற்சி குறுவளமைய அளவில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. குறைதீர் கற்றல் பயிற்சிக்கு ஒவ்வொரு குறுவளமையத்துக்கு, நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும். இவர்களுக்கு வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் நாளை 15-ந் தேதி பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி 17ந் தேதி அன்று குறுவளமைய அளவில் பயிற்சி சிறப்பாக நடத்தப்பட வேண்டும். ஒரு பயிற்சியாளர் மற்றும் பயிற்றுனருக்கு நாள் ஒன்றுக்கு, 130 ரூபாய் வழங்கப்படும். தன்னார்வலர் அனைவருக்கும் பயணப்படி அவரவர் வங்கி கணக்கிற்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தனர்.
    • இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர், செயற்பொறியாளர் சக்திமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலருமான ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் துலுக்கப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.11.77 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகளையும், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்து, கற்பிக்கும் முறைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தனர்.

    பின்னர், ரெங்கப்பநாய க்கன்பட்டியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.5.49 லட்சம் மதிப்பில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளையும், படந்தாலில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • இல்லம் தேடி கல்வி மையங்களில் பாதுகாப்பான தீபாவளி குறித்த விழிப்புணர்வு நடந்தது.
    • மாணவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு வரும் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக, விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கொத்தங்குளம் கிராமத்தில் நடந்தது.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் தலைமை தாங்கினார். இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் வரவேற்றார். கொத்தங்குளத்தில் செயல்படும் 6 இல்லம் தேடி கல்வி மையங்களின் மாணவர்களுக்கு தீபாவளிப் பண்டிகையின் போது எவ்வாறு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது? என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.

    இதில் கொத்தங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 

    ×