search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 12,665 மாணவர்கள் பயன்
    X

    நீலகிரி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 12,665 மாணவர்கள் பயன்

    • 1214 தன்னார்வலர்கள் மாவட்டம் முழுவதும் கல்விப்பணியாற்றி வருகின்றனர்.
    • தன்னார்வலர்கள் மாணவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகளின் மூலம் பல திட்டங்களை அறிவித்து மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பள்ளிக் கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு, எண்ணும் எழுத்தும் என பல்வேறு திட்டங்கள் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் கலை நிகழ்ச்சி மற்றும் துண்டறிக்கைகள் மூலமாக விழிப்புணர்வு கொடுக்கப்பட்டதின் விளைவாக மாவட்டம் முழுவதும் 3737 தன்னார்வலர்கள் இணைய வழியில் இத்திட்டத்தில் பதிவு செய்திருந்தனர். இவர்களில் மொத்தம் 2108 தன்னார்வலர்கள் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு உளவியல், கணினி வழி தேர்வு மற்றும் குழு கலந்தாய்வு மூலம் இறுதியாக 1814 தன்னார்வலர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தால் வடிவமைக்கப்பட்ட பாடத்தை கையாள பயிற்சி பெற்ற வல்லுனர் குழுவால் முறையான பயிற்சி வழங்கப்பட்டு, அந்தந்த மையங்களில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் பணியமர்த்தப்பட்டு நாளது வரையில் 1214 தன்னார்வலர்கள் மாவட்டம் முழுவதும் கல்விப்பணியாற்றி வருகின்றனர்.

    மேலும், மாணவர்கள் வகுப்பு அடிப்படையில் 1 -ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை தொடக்க நிலை தன்னார்வலர்களாலும், 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உயர் தொடக்க தன்னார்வலர்களாலும் மையம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இத்திட்டத்தினை சிறப்பாக கள அளவில் செயல்படுத்த ஒவ்வொரு குடியிருப்பிலும் தன்னார்வலர்கள் மாணவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே தினசரி ஒன்று முதல் இரண்டு மணி நேரம் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள நான்கு ஒன்றியங்களில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தொடக்க நிலையில் 7652 மாணவர்களும், உயர் தொடக்க நிலையில் 5013 மாணவர்களும் என மொத்தம் 12,665 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

    இத்திட்டத்தினை செயல்படுத்தி வரும் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஏற்படும் தற்காலிக காலிப்பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் தகுதி அடிப்படை யில் முன்னுரிமை அளிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியராகவும் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் தற்காலிக காலிப்பணியிடங்களிலும் வாய்ப்பு வழங்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி, குன்னூர் வட்டம் சில்வர் டேல் பகுதியிலுள்ள சி.எம்.எஸ் மையத்தை பார்வையிட்டு தன்னார்வலர் காளியம்மாளின் செயல்பாடுகளை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தன்னார்வலர்களுடன் முதல்-அமைச்சர் தொலை பேசியில் கலந்துரையாடி இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் செயல்பா டுகளை கேட்டறிந்தார்.நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் பொறுப்பு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களும், மாவட்டத்திற்கு மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளாரும் இணைந்து இத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

    இதற்கான பிரத்யேக இல்லம் தேடி கல்வி திட்டத்தால் வடிவமைக்கப்பட்ட இணைய வழி செயலி மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இல்லம் தேடி கல்வி மையங்களை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், மாவட்ட மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையிட்டு தங்களது செல்போன் செயலி வழியாக பதிவு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த மகத்தான திட்ட மானது மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அனைத்து மாணவர்களும் அடிப்படை திறனை சிறப்பாக பெறும் வகையில் இக்கல்வியாண்டும் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடரும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×