இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது.இவர்களுக்கு 5-ம் தொகுதி பயிற்சி புத்தகம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 5-ம் தொகுதி பயிற்சி கிருஷ்ணன் கோவிலில் உள்ள வட்டார வளமையத்தில் நடந்தது. வட்டார வளமைய மேற்பர்வையாளர் மருதக்காளை தலைமை தாங்கினார். ஆசிரிய பயிற்றுநர் செல்வம், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலை வகித்தனர். பள்ளித் துணை ஆய்வாளர் தங்கேஸ்வரன் வரவேற்றார். பயிற்சியைத் தொடங்கி வைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரக் கல்வி அலுவலர் சீனிவாசன் பேசினார். பயிற்சியின் கருத்தாளர்களாக கிறிஸ்டி தங்கநாயகம், ஜஸ்டின் தங்கராஜ், வரமணி அப்பன்ராஜ், பிரைட்டி சிங் ஆகியோர் செயல்பட்டனர். இதில் 110 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 5-ம் தொகுதி பயிற்சி புத்தகம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com