search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகதிகள் முகாம்"

    • அகதிகள் முகாமில் உள்ளவர்களின் பிரச்சனைகளுக்கு முன்னின்று தீர்வு கண்டு வந்தார்.
    • கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது

    குழித்துறை :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ஞாறான்விளை இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் பிறேமராஜ் ரவிஷாந்தர் (வயது 54). இவர் இலங்கை அகதிகள் முகாமில் தலைவராக இருந்து வருவதோடு, அகதிகள் முகாமில் உள்ளவர்களின் பிரச்சனைகளுக்கு முன்னின்று தீர்வு கண்டு வந்தார்.

    இந்நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளை கள்அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்த இளம்பெண் மண்டபம் கேம்ப் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    • மண்டபம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் முகமது சாதிக். இவரது மகள் சல்மியா பானு (வயது 26). இவரும் மண்டபம் ஏ.கே.எஸ். தோப்பு பகுதியை சேர்ந்த காசி விக்னேஸ்வரன் (28) என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் சல்மியா பானுவை தனக்கு பதிவு திருமணம் செய்து தருமாறு காசி விக்னேஸ்வரன் கேட்டுள்ளார். பெரியவர்களிடம் பேசிவிட்டு பின்னர் சொல்கிறேன் என்று கூறி அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து சல்மியா பானுவிடம் செல்போனில் பேசி வீட்டை விட்டு வருமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த காசி விக்னேஸ்வரன், சல்மியா பானு வீட்டிற்கு நேரில் வந்து தகராறு செய்துள்ளார். அப்போது தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சல்மியா பானுவின் முதுகு, வலது மற்றும் இடது கைகளில் வெட்டினார். தடுக்க வந்த முகமது சாதிக் மற்றும் அவர் மனைவியை கல்தூணில் பிடித்து தள்ளிவிட்டு, தகாத வார்த்தைகளை பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்த சல்மியா பானு மண்டபம் கேம்ப் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மண்டபம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விக்னேஸ்வரனை தேடி வருகின்றனர். வீடு புகுந்து இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகாலையில் முகாமின் அருகாமையில் உள்ள ஒரு மரத்தில் தர்மகுணசிங்கம் கயிற்றில் பிணமாக தொங்கினார்
    • தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா எனவும் விசாரணை

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஞாறான்விளை அகதிகள் முகாமில் வசிப்பவர் தர்மகுணசிங்கம் (வயது 59) தொழிலாளி. இவருக்கு மேரி அஜந்தா என்ற மனைவியும் குழந்கதைளும் உண்டு.

    இன்று அதிகாலையில் முகாமின் அருகாமையில் உள்ள ஒரு மரத்தில் தர்மகுணசிங்கம் கயிற்றில் பிணமாக தொங்கியதை பார்த்து அவரது மனைவி மேரி அஜந்தா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் முகாமில் உள்ள உறவி னர்களிடம் போலீசார் தர்மகுணசிங்கம் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவரது உடலை குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அகதிகள் முகாமில் தொழிலாளி தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திண்டுக்கல் அருகில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கட்டப்படும் வீடுகள் தரமானதாக உள்ளது.
    • விரைவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்க உள்ளார்.

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் அருகில் உள்ள தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டியில் இலங்கை அகதிகள் முகாமை ஒருங்கிணைத்து தோட்டனூத்தில் முகாம் அமைக்க திட்டமிட்டப்பட்டது. இதற்காக கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி 321 வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஒவ்வொரு வீடும் தலா ரூ.4.75 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணி தொடங்கியது. தற்போது 210 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

    மற்ற வீடுகள் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணிகளை இன்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அவருடன் அமைச்சர் இ.பெரியசாமி, கலெக்டர் விசாகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர் செஞ்சிமஸ்தான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    இப்பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் வாழ் தமிழர்களுக்காக கட்டப்படும் வீடுகள் தரமானதாக உள்ளது. பணிகள் நிறைவடைந்ததும் விரைவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்க உள்ளார்.

    தமிழக மாணவர்கள் இனி எக்காலத்திலும் வெளிநாடுகளில் சென்று படிக்கின்ற நிலையை உருவாக்காத வகையில் முதல்-அமைச்சர் செயலாற்றி வருகிறார். உக்ரைனில் இருந்து மருத்துவம் மற்றும் இன்னும் பிற படிப்புகளுக்காக சென்று பாதியில் படிப்பை தொடரமுடியாமல் திரும்பியவர்களுக்கு தடையின்றி கல்வியை தொடர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் தமிழகத்திலேயே கல்வியை தொடர முதல்-அமைச்சர் பாடுபட்டு வருகிறார்.

    இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களை நாங்கள் இங்கு வருமாறு அழைக்கவில்லை. சூழ்நிலை காரணமாக அவர்கள் இங்கு வருகின்றனர். தமிழக பாரம்பரிய எண்ணத்தின் அடிப்படையில் தாயுள்ளத்தோடு அவர்களை வரவேற்று பாதுகாத்து வருகிறோம். மேலும் இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலை மனதில் கொண்டு அங்குள்ள மக்களுக்கும் முதல்-அமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

    ஏற்கனவே நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட நிலையில் 2-ம் கட்டமாக ரூ.123 கோடி மதிப்பில் அரிசி, பால்பவுடர், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வக்புவாரிய சொத்துக்கள் சுமார் 500 கோடி மதிப்பீட்டில் 11 இடங்கள் மீட்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்பிரச்சினை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டதால் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாமாக முன்வந்து அந்த இடத்தை ஒப்படைத்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலூர் அருகே இலங்கை அகதிகள் முகாமில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ளது திருவாதவூர். இங்கு இலங்கை அகதிகள் முகாம்  உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழாவை முன்னிட்டு  ஏராளமான பக்தர்கள் கடந்த ஒரு வார காலமாக விரதம் இருந்து வந்தனர். 

    விழாவையொட்டி அங்குள்ள  முனியாண்டி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம்  எடுத்தும், வாயில் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். 

    முதல்நாள் மாலை பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இத்திருவிழாவை முன்னிட்டு  மேலும் பல இலங்கை அகதகள் முகாம்களில் இருந்து  ஏராளமானோர் வந்திருந்தனர்.
    ×