search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Walkie Talkie"

    • வழக்கு திருச்சுழி நீதிமன்றத்தில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
    • தவக்கண்ணன் மீது அ.முக்குளம் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்தது உண்மையென ஆதாரப்பூர்வமாக விசாரணையில் தெரிய வந்தது.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள சாலைமறைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தவக்கண்ணன். டிப்ளமோ என்ஜினீயரான இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார்.

    கடந்த 2020 மார்ச் 20-ந்தேதி பாஸ்போர்ட் விசாரணைக்காக அ.முக்குளம் போலீசார் அழைத்ததன் பேரில் தவக்கண்ணன் தனது நண்பருடன் 21-ந் தேதி காலை அ.முக்குளம் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு விசாரணை சரிபார்ப்பு முடிந்த நிலையில் வீடு திரும்பினார்.

    இதற்கிடையில் அ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தனது போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு வாக்கி-டாக்கியுடன் பாதுகாப்பு பணிக்காக சென்று விட்டு போலீசார் குடியிருப்புக்கு திரும்பிய நிலையில் அங்கிருந்து மீண்டும் அ.முக்குளம் காவல் நிலையத்திற்கு எஸ்.ஐ.மணிகண்டன் திரும்பியுள்ளார்.

    அப்போது திடீரென அவரது வாக்கி-டாக்கி காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில் கடைசியாக போலீஸ் நிலையத்திற்கு பாஸ்போர்ட் விசாரணைக்காக வந்து விட்டு திரும்பிய தவக்கண்ணனை தொடர்பு கொண்டு தனது வாக்கி-டாக்கி காணாமல் போனதாகவும் அதனை நீ திருடியதாகவும் அது சம்பந்தமாக போலீஸ் நிலையத்தில் பதிவாகிய சி.சி.டி.வி. பதிவுக்காட்சிகள் ஆதாரமாக இருப்பதாகவும் கூறி விசாரணைக்காக போலீஸ் வருமாறு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் அழைத்துள்ளார்.

    அதன்பேரில் போலீஸ் நிலையத்திற்கு சென்ற தவக்கண்ணனை எஸ்.ஐ. உள்பட போலீசார் தாக்கியதாக கூறப்பட்டது. இதற்கிடையே தொலைந்து போனதாக கூறப்படும் வாக்கி டாக்கி கிடைத்து விட்ட நிலையிலும் தவக்கண்ணனை விடுவிக்காமல் வாக்கி-டாக்கியை திருடியதாக ஒப்புக்கொள்ள சொல்லி தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் வாக்கி-டாக்கி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து அ.முக்குளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தவக்கண்ணன் குடிபோதையில் பொது இடத் தில் ஆபாசமாக பேசியதாகவும், அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். குடிபோதையில் இருந்ததாக கூறப்படும் தவக்கண்ணனுக்கு மதுப்பழக்கம் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வழக்கு திருச்சுழி நீதிமன்றத்தில் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அரசு தரப்பிலும், குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் தவக்கண்ணன் தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி வழக்கில் வாதிட்டனர்.

    தவக்கண்ணன் மீது அ.முக்குளம் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்தது உண்மையென ஆதாரப்பூர்வமாக விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டதாரியான தவக்கண்ணனை இந்த வழக்கில் இருந்து விடுவித்து திருச்சுழி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அபர்ணா நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.

    • நெல்லை மாநகர பகுதியில் மொத்தம் உள்ள 8 போலீஸ் நிலையங்களுக்கும் தலா 10 வாக்கி டாக்கிகள் வீதம் 80 எண்ணங்கள் பயன்பாட்டில் உள்ளது.
    • பெரும்பாலான நேரங்களில் இந்த வாக்கி டாக்கிகளில் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை.

    நெல்லை:

    தமிழகத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச்செ ல்லும் குற்றவாளிகள் குறித்தும், போக்குவரத்து நெருக்கடிகள் உள்ளிட்ட பிரச்சினை கள் குறித்தும் உடனடியாக போலீ சார் தங்களுக்குள் பேசி கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வசதியாக இருக்கும் ஒரு தொடர்பு சாதனமாக வாக்கி டாக்கி பயன்பட்டு வருகிறது.

    வாக்கி டாக்கி

    நெல்லை மாவட்டத்திலும் வாக்கி டாக்கியின் பயன்பாடு மிகவும் தேவையானதாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள 38 போலீஸ் நிலையங்கள், புறக்காவல் நிலையங்கள், போக்குவரத்து போலீஸ் என 500-க்கும் மேற்பட்ட வாக்கி டாக்கிகள் செயல்பட்டு வருகிறது.

    இதுதவிர மாநகர பகுதியில் மொத்தம் உள்ள 8 போலீஸ் நிலையங்களுக்கும் தலா 10 வாக்கி டாக்கிகள் வீதம் 80 எண்ணங்கள் பயன்பாட்டில் உள்ளது. மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சுமார் 27 இடங்களில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் 30 வாக்கி டாக்கிகள் உள்ளன. இவைகள் போக சிறப்பு பிரிவுகளான குற்ற ஆவண பிரிவு, மதுவிலக்கு, ரோந்து வாகனங்கள் என 40 வாக்கி டாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறாக மாநகரில் மட்டும் சுமார் 150 வாக்கி டாக்கிகள் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், இவை அனைத்துமே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக வழங்கப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை பழுதடைந்து காணப்படு கிறது. இதனால் ரப்பர், கயிறு, பசை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகிறோம்.

    ஆப்சென்ட்

    பெரும்பாலான நேரங்களில் இந்த வாக்கி டாக்கிகளில் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை. அந்த நேரங்களில் உயர் அதிகாரிகள் எங்களை தொடர்பு கொள்ளும்போது எங்களால் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளமுடிய வில்லை.

    இதனால் நாங்கள் அந்த இடங்களில் இல்லை என்று கூறி எங்களுக்கு ஆப்சென்ட் செய்து விடப்போவதாக உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்கி டாக்கி பழுதுக்கு நாங்கள் என்ன செய்வது? என்று விரக்தியாக தெரிவித்தார்.

    போக்குவரத்து சிக்னல்

    மாநகர பகுதியில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக காலை 7 மணி முதல் சுழற்சி முறையில் காவலர்கள் பணியாற்றுவார்கள். ஆனால் சமீப காலமாக அனைத்து சிக்னல்களிலும் காலை 6 மணி முதல் பணியில் இருக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    காலை 8 மணிக்கு பிறகே பெரும்பாலும் சாலைகளில் போக்குவரத்து அதிகரிக்கும். ஆனால் கமிஷனர் 6 மணிக்கு அந்தந்த சிக்னல்களில் நிற்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் எங்களது குடும்பத்தினருக்கு சமையல் செய்வது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது உள்ளிட்டவற்றை செய்ய முடியவில்லை என்று மனவேதனையுடன் பெண் போலீசார் கூறுகின்றனர்.

    தேனாம்பேட்டையில் போலீஸ்காரர் ஒருவர் வாக்கி டாக்கியில் விடுமுறை கேட்ட சம்பவம் உயர் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. #TNPolice
    சென்னை:

    சென்னையில் நேற்று இரவு போக்குவரத்து போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளின் பயன்பாட்டில் உள்ள வாக்கி டாக்கியில் வழக்கத்துக்கு மாறாக போலீஸ்காரர் ஒருவர் பேசுவது எதிரொலித்தது.

    எப்போதும் உயர் போலீஸ் அதிகாரிகள் வாக்கி டாக்கியில் உத்தரவை பிறப்பிப்பார்கள். இதனை பணியில் இருக்கும் போலீசார் ஆமோதிப்பார்கள். ஆனால் நேற்று வாக்கி டாக்கியில் பேசிய போலீஸ்காரரோ தனக்கு தனது மேல் அதிகாரி விடுமுறை தர மறுக்கிறார் என்று கதறினார்.

    எனது தாயின் சாவுக்கு கூட விடுமுறை தர மறுக்கிறார்களே என்று அவர் ஆதங்கப்பட்டார். இதனை கேட்டு உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குறிப்பிட்ட போலீஸ்காரர் விடுமுறை கிடைக்காத விரக்தியின் விளிம்பில் அதுபோன்று வாக்கி டாக்கியில் பேசியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் தேனாம்பேட்டையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றின் அருகில் இருந்தே போலீஸ்காரர் வாக்கி டாக்கியில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகிறார்கள். #TNPolice
    சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு போலீசாரின் ‘வாக்கி-டாக்கி’ மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    அடையாறு:

    சென்னை காமராஜர் சாலையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ‘ஈ’ மற்றும் ‘சி’ பிரிவு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    கடந்த 11-ந்தேதி ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ‘ஈ’ பிரிவு போலீசார், பணி முடிந்து தாங்கள் பயன்படுத்திய பாதுகாப்புக்கான கருவிகளை ஒப்படைத்து விட்டு சென்றனர். இதையடுத்து ‘சி’ பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியை ஏற்றனர்.

    அப்போது ‘ஈ’ பிரிவு போலீசார் ஒப்படைத்த பாதுகாப்பு கருவிகளில் ஒரு ‘வாக்கி-டாக்கி’ மாயமாகி இருப்பதை கண்ட தமிழ்நாடு சிறப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மயில்வாகனன், இதுபற்றி மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    மாயமான ‘வாக்கி-டாக்கி’ டி.ஜி.பி. அலுவலகத்திலேயே தொலைந்து போனதா? அல்லது யாராவது அதை திருடிச்சென்றார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த ‘வாக்கி-டாக்கி’யை கடைசியாக பயன் படுத்திய போலீசாரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 
    ×