search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teynampet Police"

    • புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சினிமா ஆசை காட்டி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
    • மோசடி நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை தி.நகர் பிரகாசம் தெருவில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    அந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி விளம்பரம் கொடுத்து சினிமாவில் நடிக்க விண்ணப்பிக்கும் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்களிடம் பணத்தை பறித்து மர்மநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் வெளியிட்ட விளம்பரத்தை நம்பி துணை நடிகர்கள், நடிகைகள் சிலரும் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களிடமும் பணத்தை வசூலித்து மோசடி கும்பல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இப்படி பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் தி.நகரில் உள்ள தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளனர். அப்போதுதான் தங்களது நிறுவனத்தின் பெயரை சொல்லி ஏமாற்றி பண மோசடி நடைபெற்றிருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.

    இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் 2 செல்போன் எண்களை கொடுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் அந்த எண்களில் இருந்து பேசி இருக்கும் நபர்கள்தான் பண வசூலில் ஈடுபட்டு மோசடி செய்து உள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.

    இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சினிமா ஆசை காட்டி பண மோசடியில் ஈடுபட்டவர்கள் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மோசடி நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தேனாம்பேட்டையில் போலீஸ்காரர் ஒருவர் வாக்கி டாக்கியில் விடுமுறை கேட்ட சம்பவம் உயர் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. #TNPolice
    சென்னை:

    சென்னையில் நேற்று இரவு போக்குவரத்து போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளின் பயன்பாட்டில் உள்ள வாக்கி டாக்கியில் வழக்கத்துக்கு மாறாக போலீஸ்காரர் ஒருவர் பேசுவது எதிரொலித்தது.

    எப்போதும் உயர் போலீஸ் அதிகாரிகள் வாக்கி டாக்கியில் உத்தரவை பிறப்பிப்பார்கள். இதனை பணியில் இருக்கும் போலீசார் ஆமோதிப்பார்கள். ஆனால் நேற்று வாக்கி டாக்கியில் பேசிய போலீஸ்காரரோ தனக்கு தனது மேல் அதிகாரி விடுமுறை தர மறுக்கிறார் என்று கதறினார்.

    எனது தாயின் சாவுக்கு கூட விடுமுறை தர மறுக்கிறார்களே என்று அவர் ஆதங்கப்பட்டார். இதனை கேட்டு உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குறிப்பிட்ட போலீஸ்காரர் விடுமுறை கிடைக்காத விரக்தியின் விளிம்பில் அதுபோன்று வாக்கி டாக்கியில் பேசியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் தேனாம்பேட்டையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றின் அருகில் இருந்தே போலீஸ்காரர் வாக்கி டாக்கியில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகிறார்கள். #TNPolice
    ×