search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thangamani"

    • தயவுசெய்து சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து அரசே ஏற்று நடத்த வேண்டும்.
    • மக்களை பாதுகாக்க அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று தொழில்துறை, சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்க மணி (அ.தி.மு.க.) பேசியதாவது:-

    தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மாதான் போர்டு தொழிற்சாலை கொண்டு வந்தார். நோக்கியா கம்பெனி வருவதற்கு வித்திட்டவரும் அம்மாதான். எந்த ஆட்சியாக இருந்தாலும் தொழில் முதலீடு வந்தால்தான் தொழில் வளம் பெருகும்.

    எங்கள் ஆட்சியின் போது 2-வது தொழில் முதலீடு மாநாட்டை எடப்பாடியார் நடத்தினார். சீக்கிரம் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதாக கூறி உள்ளீர்கள்.

    புரட்சித்தலைவி அம்மா 1992-ம் ஆண்டில் சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வந்து தொழில் தொடங்குபவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் அனுமதி பெற்றுத் தந்தார். எடப்பாடியார் ஆட்சியிலும் ஒரு மாதத்தில் அனுமதி கிடைத்தது. ஆனால் இன்று எனக்கு கிடைத்த தகவல் படி இதில் காலதாமதம் ஆவதாக தெரிகிறது. இதை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

    நோக்கியா கம்பெனி மிக சிறப்பாக செயல்பட்ட நிலையில் சட்டத்தை மாற்றிய காரணத்தால் அந்த ஆலை மூடப்பட்டது. இதேபோல் தென் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையை பாதுகாக்கும் கடமை இந்த அரசுக்கு உள்ளது.

    புரட்சித்தலைவி அம்மாவை தொடர்ந்து எடப்பாடியாரும் தமிழ்நாட்டில் தொழில் துறை வளர பாடுபட்டார். ஆனால் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தால்தான் பலர் தொழில் தொடங்க முன் வருவார்கள். மின் கட்டண உயர்வால் இன்றைக்கு சிறு தொழில்கள் பாதிக்கப்படுகிறது.

    கோவை பகுதிகளில் தொழிற்சாலை நடத்துபவர் பலரிடம் அமைச்சர்கள் கேட்டுப்பார்த்தால் தெரியும்.

    நீங்கள் தந்துள்ள கொள்கை விளக்க குறிப்பில் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொழில் வளம் நன்றாக இருந்ததாக குறிப்பிட்டு உள்ளீர்கள். இன்றைக்கு செங்கல்சூளைக்கு கூட மணல் எடுக்க முடியாத நிலை உள்ளது. எங்கள் ஆட்சியில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

    கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் அதிக அளவு டெக்ஸ்டைல் தொழிற்சாலை, சாயப்பட்டறைகள் உள்ளன. இங்கு இது தவிர்க்க முடியாத தொழில். இந்த சாயப்பட்டறை கழிவுகள் ஆற்றில் கலப்பதால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆற்றில் மாசு கலப்பதை தடுக்க எடப்பாடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தார்.

    இந்த நேரத்தில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும். ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் புற்று நோய் பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கூட எனது சகோதரி புற்று நோயால் உயிரிழந்துள்ளார்.

    (இவ்வாறு பேசும்போது அவரது குரல் தழுதழுத்தது...கண்ணீர் மல்க அவர் தொடர்ந்து பேசினார்).

    இந்த அரசுக்கு நான் வேண்டுகோள் வைப்பது தயவுசெய்து சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து அரசே ஏற்று நடத்த வேண்டும். சாயப்பட்டறை சுத்திகரிப்பு நிலையத்தை அரசே நடத்தினால்தான் மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். இப்போது ஏற்படும் 10 இறப்புகளில் ஒரு இறப்பு புற்றுநோயால் ஏற்படுகிறது.

    எனவே மக்களை பாதுகாக்க அரசு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தங்கமணி பேசினார்.

    • மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க வரும் 15-ந் தேதி கடைசி நாளாகும். இது மேலும் நீட்டிக்கப்படாது.
    • மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அ.தி.மு.க., பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நூல் விலை உயர்வு குறித்து பேசுவதில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை 200 யூனிட்டில் இருந்து 300 ஆகவும், விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தோம். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அந்த அறிவிப்பினை வெளியிட முடியவில்லை.

    எனவே இலவச மின்சார அளவை உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை வெளியிட மத்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. தேர்தல் முடிந்ததும் தமிழகம் முழுவதும் விசைத்தறி, கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும்.

    கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மின்கட்டணம் 180 சதவீதம் உயர்த்தப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் தற்பொழுது 30 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல் குளம், திரையரங்கு போன்ற வசதிகள் உள்ளன. எனவே தான் அதற்கு தனியாக வணிக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்திற்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் சுமை ஏற்பட்டது. அதை சரிக்கட்டவே தற்போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்று பேசினாலும் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கூடுதலாக உற்பத்தி செய்யவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களால்தான், தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்தது. தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின்மிகை மாநிலம் என அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்துக் கொண்டார்கள்.

    தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கினோம். அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசின் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனிடமிருந்து, அதிக வட்டிக்கு மின்வாரியம் கடன் வாங்கி இருந்தது. அந்த வட்டியை குறைத்துள்ளோம். மின் விநியோகத்தில் மின்சார இழப்பு 17 சதம் உள்ளது. அதை கடந்தாண்டு 0.7 சதம் குறைத்துள்ளோம்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 26 ஆயிரம் புதிய ட்ரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளன. விவசாய பயன்பாடு மற்றும் குடியிருப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, மின் கட்டணத்தை நுகர்வோர் தெரிந்து கொள்ள விரைவில் வசதி செய்யப்படும். அ.தி.மு.க. ஆட்சியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி, மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து காணாமல் போனது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணை அறிக்கை வெளிவரும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மின் துறையில் நடந்த தவறுகள் குறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் பொதுவெளியில் நான் விவாதம் செய்ய தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?

    மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க வரும் 15-ந் தேதி கடைசி நாளாகும். இது மேலும் நீட்டிக்கப்படாது. இவ்வாறு இணைப்பதால் வீடுகளுக்கு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது.

    தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 32 ஆயிரம் மெகாவாட்டாகும். இதையடுத்த 10 ஆண்டுகளில் 64 ஆயிரம் என உயர்த்த திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளோம்.

    மின் கட்டண உயர்வு பற்றி பேசும் அ.தி.மு.க., பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, நூல் விலை உயர்வு குறித்து பேசுவதில்லை. மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை. அ.தி.மு.க. ஈ.பி.எஸ். அணி பா.ஜ.க.வின் பி டீமாக செயல்படுகிறது. அ.தி.மு.க. ஒன்றுபட்டாலும், இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் தி.மு.க. தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலுவையில் உள்ள மானியத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
    புதுடெல்லி:

    தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் அரசுமுறை பயணமாக டெல்லி சென்றனர். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை அவரது அமைச்சகத்தில் நேற்று சந்தித்து கோரிக்கை மனுவை அமைச்சர்கள் அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் நகர்ப்புற மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு 14-வது மத்திய நிதிக்குழு 2017-18-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியத்தின் 2-வது தவணையாக ரூ.1,390 கோடி ஒதுக்குவதற்கு நீங்கள் தலையிட்டு, தொடர்ச்சியாக உதவி புரிந்ததற்காக நன்றி தெரிவிக்கிறோம்.

    2017-18-ம் ஆண்டு செயல்திறன் மானியமாக ரூ.560.15 கோடியும், நகர்ப்புற மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கான 2018-19-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியம் ரூ.3,216.05 கோடியும் வழங்கவேண்டியது நிலுவையில் உள்ளது.

    தமிழக மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட வழங்குவதற்கு நிதி இல்லாமல் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தவித்து வருகின்றன. எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியம் மற்றும் செயல்திறன் மானியம் ஆகியவற்றை மத்திய நிதி குழு ஒப்புதல் அளித்து விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் தமிழ்நாடு பொதிகை இல்லத்துக்கு அமைச்சர்கள் திரும்பினர். அப்போது அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    14-வது நிதிக்குழு மானியத்தில் தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை உடனே பெற்றுத்தருமாறு ராணுவ மந்திரியிடம் கோரிக்கை வைத்தோம். கஜா புயலுக்கும் நிவாரண நிதியை உடனே அளிக்குமாறு கேட்டோம். நிதி கேட்க டெல்லிக்கு தொடர்ந்து வந்ததால்தான் 2 தவணைகள் வாங்க முடிந்தது.

    தேர்தல் கூட்டணி பற்றி முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் முடிவு எடுப்பார்கள். கூட்டணி பற்றி நாங்கள் பேசவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து, மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக எம்.பி.க்கள் நடத்திய கூட்டத்தில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். தமிழகத்துக்கு எதிரான அந்த கூட்டத்தில் ஏன் பங்கேற்றீர்கள்? என்று அவரிடம் கேட்டீர்களா? என்று நிருபர் ஒருவர் கேட்டார்.

    அதற்கு வேலுமணி பதில் அளிக்கையில், கர்நாடகத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி. என்ற முறையில் அவர் அந்த கூட்டத்துக்கு போயிருப்பார். மேகதாது அணையால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள், பிரச்சனைகளை சொல்வதற்காகக்கூட போயிருக்கலாம். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அவரும் அப்படித்தான் இருப்பார் என்று நம்புகிறோம் என்றார்.

    நிதி தொடர்பான கோரிக்கை வைக்க நிதித்துறை மந்திரி இருக்கும்போது, ராணுவ மந்திரியை சந்திக்க காரணம் என்ன? என்ற கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் கூறுகையில், உங்களது கண்ணோட்டமே தவறு. நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். கஜா புயலால் தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் அதற்கு தேவையான நிதியை பெற்றுத்தருமாறு தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற முறையில் அவரை சந்தித்தோம். இதில் என்ன தவறு இருக்கிறது? என்றார்.

    பின்னர் அமைச்சர் தங்கமணி சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அமைச்சர் வேலுமணி இன்று நிதி மந்திரி அருண் ஜெட்லி, ஊரக வளர்ச்சித்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் ஆகியோரை சந்திக்க இருக்கிறார். #TNMinisters #SPVelumani #thangamani
    இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #Thangamani

    குடியாத்தம்:

    தமிழகத்தில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உள்பட 18 சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் களப்பணிகளை அ.தி.மு.க.வினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் பூத்கமிட்டி அமைப்பது, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை என களப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களான மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தூசி மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வீடுகளுக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு படிப்படியாக கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வுக்கு டி.டி.வி.தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என முதல்-அமைச்சர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

    அ.தி.மு.க., எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் இயக்கம். இந்த இயக்கத்தில் நாங்கள் யாரையும் இழுத்து சேர்க்கவில்லை. கழகத்தில் தானாக வந்து சேர்ந்து கொண்டிருந்தனர். பொதுமக்கள் ஆதரவு இருக்கிறது. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் சிறப்பாக நிர்வாகத்தை கொண்டிருக்கின்றனர். அதனை பார்த்து தற்போது வரை கழகத்தில் 1½ கோடி உறுப்பினர்கள் சேர்ந்து இருக்கின்றனர்.

    மற்ற கட்சிகளில் இருந்து அழைத்து வந்து கட்சியில் சேர்க்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க.விற்கு இல்லை. இங்கு அனைவரும் வந்து சேரலாம் என்பது எங்கள் நோக்கம்.

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் சேர முயற்சி செய்தார். நாளை தி.மு.க. ஆட்சிக்கு வரவில்லை என்றால் வேறு கட்சிக்கு சென்று விடுவார்.

    தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிற்கு தேவையான நிதியை பெற முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசை தொடர்ந்து கேட்டு வருகிறோம். விரைவில் மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதி கிடைக்கும். இடைத்தேர்தலுக்காக கட்சியினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangamani

    வெளிநாட்டில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருப்பதால் தமிழகத்திற்கு மின் தட்டுபாடு வராது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். #MinisterThangamani #Electricity
    புதுடெல்லி:

    வெளிநாட்டில் இருந்து முதல்கட்டமாக 6 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இதனால் மின் தட்டுப்பாடு வராது என்றும் அவர் கூறினார்.

    தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக சில அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மின்வெட்டு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு ஒரு கடிதம் எழுதினார். அதில், தமிழகத்தில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும், அதனால் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏதுவாக மத்திய அரசு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.



    இந்த கோரிக்கையை நேரில் வலியுறுத்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று டெல்லி வந்தார். அவர் பகல் 12 மணி அளவில் ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை மந்திரி பியூஸ்கோயலை ரெயில்வே அமைச்சகத்தில் சந்தித்து பேசினார்.

    அப்போது அவரிடம் தமிழகத்துக்கான நிலக்கரி ஒதுக் கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர் தமிழ்நாடு இல்லம் திரும்பிய அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டுக்கு தினசரி 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் நமது மின் உற்பத்தித்திறன் (காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி இன்றி) 18 ஆயிரம் மெகாவாட் ஆகும். தமிழகத்தை இப்படி மின்மிகை மாநிலமாக ஜெயலலிதா உருவாக்கி இருந்தார். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் மின்வெட்டு என மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறார்கள்.

    தமிழகத்தில் எப்போதுமே மின்வெட்டு வராது. தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று மத்திய அரசு சமன்பாட்டு அறிக்கையிலும் தெரிவித்து இருக்கிறது.

    மே மாத கடைசியில் இருந்து அக்டோபர் முதல் வாரம் வரை காற்றாலை மின் உற்பத்தி இருக்கும். அப்போது அனல் மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வோம். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரம் காற்றாலை மின்சாரம் 3 ஆயிரம் மெகாவாட்டில் இருந்து திடீரென பூஜ்யமாகிவிட்டது.

    இதனால் கடந்த 9 மற்றும் 10-ந் தேதிகளில் தமிழகத்தில் சுழற்சி முறையில் ½ மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் அடுத்த நாளே சகஜநிலை திரும்பிவிட்டது.

    அனல் மின்நிலையங்களில் எப்போதுமே 15 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்பு வைத்திருப்போம். கடந்த வாரம் ஒடிசாவில் மழை பெய்ததால் நிலக்கரியை கொண்டுவருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் நிலக்கரி கையிருப்பு குறைந்துவிட்டது. தற்போது வடசென்னை அனல் மின்நிலையத்தில் 3 நாட்களுக்கும், தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 6 நாட்களுக்கும் தேவை யான நிலக்கரி இருக்கிறது.

    எனவே தான் தற்போது மத்திய நிலக்கரித் துறை மந்திரியை சந்தித்து தமிழகத்துக்கு தினந்தோறும் தரக்கூடிய நிலக்கரி ரெயில் பெட்டிகளை 16 ஆக உயர்த்தி தரவேண்டும் என்றும், கையிருப்பை அதிகரிக்க 20 பெட்டிகளாக உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

    இதனை ஏற்றுக்கொண்ட மத்திய மந்திரி பியூஸ் கோயல், தினமும் 16 பெட்டிகள் நிலக்கரியை தர ஒப்புக்கொண்டு இருக்கிறார். சூழ்நிலை சரியானதும் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அதிகரிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்துகொண்டிருப்பதால் தற்போது மின்சார தேவை குறைந்து இருக்கிறது. இதனால் தூத்துக்குடியில் 210 மெகாவாட், மேட்டூரில் 420 மெகாவாட் மின் உற்பத்தியை குறைத்து இருக்கிறோம். நிலக்கிரி இல்லாமல் குறைக்கவில்லை.

    இது தெரியாமல் எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் கூட ஒரு நாளைக்கான நிலக்கரி கையிருப்பெல்லாம் இருந்திருக்கிறது. எனவே, இது சகஜனமானது தான். அவர்களது எதிர்பார்ப்பு வீணாகத்தான் போகப்போகிறது. நிச்சயமாக எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டில் மின்வெட்டு வராது.

    பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு, ‘நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது, இந்தியாவில் இருக்கிற நிலக்கரியையே பயன்படுத்த வேண்டும்’ என்று கூறியிருந்தது. அதன் அடிப்படையில் நிலக்கரி இறக்குமதி நிறுத்தப்பட்டு, மத்திய அரசே அனைத்து மாநிலங்களுக்கும் நிலக்கரி ஒதுக்கிவருகிறது.

    சில நேரங்களில் இயற்கை சீற்றங்கள் காரணமாக நிலக்கரி வருவதில் காலதாமதம் ஏற்படுவதால் கையிருப்பு குறைந்துவிடுகிறது. தற்போது மத்திய மந்திரி உறுதி அளித்துள்ளதன் அடிப்படையில் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் தமிழகத்துக்கு தேவையான நிலக்கரி வரத்தொடங்கிவிடும். அதன்பிறகு நிலக்கரி கையிருப்பு அதிகமாகிவிடும்.

    நிலக்கரி இருப்பு குறைவாக இருப்பதால் 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்காக நாங்கள் ஒப்பந்தம் போட இருக்கிறோம்.

    உடனடியாக தூத்துக்குடிக்கு 6 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. மீதம் உள்ள நிலக்கரிக்கும் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி மாலையில் மத்திய மின்சாரத் துறை மந்திரி ஆர்.கே.சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, ‘மத்திய தொகுப்பில் இருந்து தமிழ்நாட்டுக்கு 6,152 மெகாவாட் மின்சாரம் தரவேண்டும். ஆனால் தற்போது 3,300 மெகாவாட் மின்சாரமே வருகிறது. எனவே, 6,152 மெகாவாட் மின்சாரத்தையும் முழுமையாக தரவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த சந்திப்புகளின்போது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் விக்ரம் கபூரும் உடன் இருந்தார்.
    ×