என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Lata Mangeshkar"
- புகழ்பெற்ற பாடகியான லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் மறைந்தார்.
- பிரமாண்ட வீணை சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
அயோத்தி :
புகழ்பெற்ற பாடகியான லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் மறைந்தார். அவரது புகழை போற்றும் வகையில் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் சாலை சந்திப்பு ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டு உள்ளது. சரயு நதிக்கரையில் உள்ள இந்த சந்திப்பு லதா மங்கேஷ்கர் சவுராகா என்று இனி அழைக்கப்படும்.
ரூ.7.9 கோடி செலவில் அந்த சந்திப்பை மேம்படுத்திய மாநில அரசு, அங்கு பிரமாண்ட வீணை சிலை ஒன்றையும் வைத்து இருக்கிறது. 12 மீட்டர் உயரம், 40 அடி நீளம் கொண்ட இந்த சிலை 14 டன் எடை கொண்டது ஆகும்.
லதா மங்கேஷ்கரின் 93-வது பிறந்த தினத்தையொட்டி இந்த சந்திப்பை மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண் ரெட்டியும் கலந்து கொண்டார்.
இதுபோன்ற பிரமாண்ட இசைக்கருவி நிறுவப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதல் இடம் என மாநில அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். சுற்றுலா பயணிகள் மற்றும் இசை ஆர்வலர்களை கவரும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர், இந்தியில் பாடல் ஒன்றை எழுதி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
அது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்பு ஆற்றிய உரை ஒன்றை கவனித்தேன். அதில் அவர் ஒரு கவிதையின் சில வரிகளை குறிப்பிட்டு இருந்தார். அது ஒவ்வொரு இந்தியரின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருந்தது. அந்த வரிகள் எனது மனதை தொட்டன. எனவே அந்த கவிதையை பதிவு செய்து பாடலாக வெளியிட்டு உள்ளேன். நாட்டின் தீரமிக்க வீரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன்’ என குறிப்பிட்டு இருந்தார்.
பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பின் ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ‘நான் தாய் நாட்டின் மீது சத்தியமாக கூறுகிறேன், இந்த நாட்டை விட்டுவிட மாட்டேன்’ என்ற கவிதையை கூறியிருந்தார். இதை மையமாக வைத்தே லதா மங்கேஷ்கர் அந்த பாடலை வெளியிட்டு உள்ளார்.
அவரது இந்த செயலுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். ராணுவ வீரர்கள் மீது லதா மங்கேஷ்கர் வைத்துள்ள பாசத்தின் வெளிப்பாடே இந்த பாடல் என அவர் கூறியுள்ளார். #LataMangeshkar #PMModi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்