search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sonu nigam"

    • ஐ.பி.எல். துவக்க விழா தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
    • முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 டி20 கிரிக்கெட் தொடர் உலகம் முழுக்க பிரபலமான கிரிக்கெட் தொடர் எனலாம். கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்களை கொண்ட தொடராக ஐ.பி.எல். பார்க்கப்படுகிறது.

    ஐ.பி.எல். சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். துவக்க விழா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல். துவக்க விழா தொடர்பான தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன.

     


    2024 ஐ.பி.எல். தொடரின் துவக்க விழா சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் ஏ.ஆர். ரகுமான், சோனு நிகம், டைகர் ஷெராஃப், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து இந்த சீசனின் முதல் போட்டி துவங்கும். அதன்படி 2024 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.

    • இந்தி மற்றும் கன்னடத்தில் பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர் சோனு நிகாம்.
    • இவர் செல்பி எடுக்க மறுத்ததால் எம்.எல்.ஏ. மகனின் உடன் வந்தவர்கள் இவரை தாக்கினர்.

    இந்தி மற்றும் கன்னடத்தில் பிரபலமான பல பாடல்களை பாடி கவனம் பெற்றவர் சோனு நிகாம். இவர் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார். இவரது இசை நிகழ்ச்சி மும்பையில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த சிவசேனா எம்.எல்.ஏ பிரகாஷ் பட்டர்பேகரின் மகன் மற்றும் மருமகன் ஆகியோர் சோனு நிகாமுடன் செல்பி எடுக்க விரும்பினர்.


    அப்போது நேரலை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்ததால் சோனு நிகாம் பாதுகாவலர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் கோபம் அடைந்த எம்.எல்.ஏ. மகனின் உடன் வந்தவர்கள் பாதுகாவலர்களையும் பாடகர் சோனு நிகாமையும் கடுமையாக தாக்கினர். இதில் சோனு நிகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது சோனு நிகாம் நன்றாக இருக்கிறார், அவரது குரு, குலாம் முஸ்தபா கான், அவரது நெருங்கிய உதவியாளர், ரப்பானி கான் மற்றும் அவரது பாதுகாவலர் அனைவரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    ×