என் மலர்

    நீங்கள் தேடியது "3 பேர் கைது"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தபால்மேடு டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களாக பணியாற்றுபவர் மாதேஷ் (வயது48). இவர் கடந்த 19-ந் தேதி இரவு பணி முடிந்து டாஸ்மாக் கடையை மூடி விட்டு மது விற்பனையான பணத்துடன் வீட்டுக்கு செல்வதற்காக வெளியே வந்தார்.

    அப்போது 2 மோட்டார்சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் மாதேசின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து மாதேஷ் பர்கூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையாளர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ஓசூரை சேர்ந்த மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதனிடையே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் ஓசூர் சக்தி நகர் சந்தோஷ் (23), முனீஸ்வரன் நகர் கோகுல் (21), வேலூர் மாவட்டம், குடியாத்தம் சூர்யா (23) ஆகியோர் என்பதும், நண்பர்களுடன் சேர்ந்து டாஸ்மாக் விற்பனையாளிடம் பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளப்பட்டி உடையார் காடு பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
    • முகத்தை மூடிக்கொண்டு வந்த 3 மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் 3 பேரையும் சாரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 46). இவர் பள்ளப்பட்டி உடையார் காடு பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த ஜனவரி 25-ந் தேதி இவரது பட்டறைக்கு தலையில் ஹெல்மெட் மற்றும் கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு வந்த 3 மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் பாஸ்கர் மற்றும் அவருடன் இருந்த செவ்வாபேட்டை நரசிம்மன்செட்டி தெருவை சேர்ந்த சிவகுமார் (44), கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சாரதி (18) ஆகிய 3 பேரையும் மூவரையும் சாரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் இன்று காலை பாஸ்கர் உள்ளிட்டோரை வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதமுத்து பரத் (23), இதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் சாமுவேல் (20), விஜயகுமார் மகன் பாலமுருகன் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஸ்நிறுத்தத்தில் நின்று வீடியோவை காட்டியபோது சிக்கினர்
    • நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் ஒரிஜினல் நோட்டு கொடுத்தால், அதற்கு 3 மடங்கு கள்ளநோட்டு தருகிறோம்.

    கோவை,

    கோவை அரசு ஆஸ்பத்திரி எதிர்புறம் பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த பஸ்நிறுத்தத்தில் உக்கடம் அருகே உள்ள ஜே.கே. கார்டன் பகுதியைச் சேர்ந்த முகமது ஹனீபா (வயது 41) என்பவர் பஸ்சுக்காக காத்து நின்றார்.

    அப்போது அங்கு நின்ற 3 பேர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். எங்களிடம் கள்ளநோட்டுகள் உள்ளன, நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் ஒரிஜினல் நோட்டு கொடுத்தால், அதற்கு 3 மடங்கு கள்ளநோட்டு தருகிறோம். அதனை வைத்து நீங்கள் செலவு செய்யலாம் என ஆசைவார்த்தைகள் கூறினர். தங்களிடம் கள்ளநோட்டு இருப்பதற்கு ஆதாரமாக செல்போன் வீடியோ ஒன்றையும் காண்பித்தனர்.அதற்கு முகமது ஹனீபா, நீங்கள் இங்கேயே காத்து இருங்கள், நான் பணம் எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார். நேராக அவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த விவரங்களை தெரிவித்தார்.

    உடனே போலீசார் உஷாராகி அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்துக்கு சென்றனர். அங்கு முகமது ஹனீபா, பணம் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பில் 3 பேர் கும்பல் காத்து நின்றது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணை யில் அவர்கள் கோவை வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த பிரகாஷ் (47), குன்னூர் நஞ்சப்ப சத்தி ரத்தைச் சேர்ந்த கலைவாசன் (50), மதுரை வில்லா புரத்தைச் சேர்ந்த சண்முக பிரசாத் (36) என்பது தெரியவந்தது.

    விசா ரணையில் அவர்களிடம் கள்ளநோட்டு எதுவும் இல்லை என்பதும், வீடி யோவில் கள்ள நோட்டுகளை காண்பித்து பணம் பறிக்க முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது
    • ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது. இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வப்போது வரும் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பெருந்துறையில் பல்வேறு பகுதியில் போலீசார் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர்.

    அப்போது கஞ்சா விற்றதாக திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளியை சேர்ந்த சக்திவேல்(29), ராமு என்பவரது மகன் தினேஷ்கு மார்–(23), பெருந்துறை குள்ளம்பாளை யத்தை சேர்ந்த தனசேகர்(31) ஆகிய 3 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.

    இதில் தனசேகர் பெருந்துறை யில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது.

    கைதானவர்களிடம் இருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பெருந்துறை போலீசார் கூறினர்.

    கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தை அடுத்துள்ள பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது டி.ஜி.புதூரில் இருந்து கே.என்.பாளையம் செல்லும் சாலையில் காளியூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரபு (26), சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (26), டி.ஜி.புதூரை சேர்ந்த சதீஷ் (19) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் கர்நாடக மாநிலம் ஜல்லிபாளையம் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் மதிப்பிலான 1,100 கிராம் கஞ்சா, அதை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பணம் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவத்தன்று காலையில் மருந்து கடைக்கு வேலைக்கு செல்வதற்காக சரத்குமார் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • தாரமங்கலம் அருகில் இருந்து இரும்பாலை நோக்கி குதிரை வண்டி பந்தயம் நடந்துகொண்டிருந்தது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம், சேவகனுர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் சரத்குமார் (வயது 24). இவர் அழகுசமுத்திரம் பகுதியில் ஒரு மருந்து கடையில் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலையில் மருந்து கடைக்கு வேலைக்கு செல்வதற்காக சரத்குமார் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாரமங்கலம் அருகில் இருந்து இரும்பாலை நோக்கி குதிரை வண்டி பந்தயம் நடந்துகொண்டிருந்தது.

    அந்த குதிரை வண்டியை கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த லோகநாதன்(25), சதீஷ்(23) ஆகிய 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தபடி சமூக வலைத ளங்களில் பதிவிடுவதற்காக செல்போனில் வீடியோ எடுத்தனர்.அப்போது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக சரத்குமார் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீதுமோதியது. இதில் சரத்குமார், லோகநாதன், சதீஷ், ஆகிய 3 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து சரத்குமாரின் தந்தை குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் குதிரை வண்டி பந்தயம் நடத்த தடை விதித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சம்பவத்தன்று கல்லூரி முடித்து அரசு பஸ்ஸில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று கொண்டு சென்றார்.
    • திடீரென்று அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி ஆடூர் அகரம் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 20). கடலூர் அரசு பெரியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி முடித்து அரசு பஸ்ஸில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று கொண்டு விஷ்ணு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் பஸ்க்குள் விஷ்ணு செல்ல வேண்டும் என கூறி திட்டியதாக தெரிகிறது.

    இதன் காரணமாக விஷ்ணு பஸ்ஸிலிருந்து இறங்கி வேறு பஸ்ஸில் செல்வதற்கு குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலை காமராஜர் சிலை அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென்று அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த விஷ்ணு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், பொட்டவெளி சேர்ந்த கிஷோர், வாஞ்சிநாதன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
    • 2½ பவுன் தங்கசெயினை பறித்து க்கொண்டு மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்து. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள ரெட்டியபட்டிைய சேர்ந்தவர் திவேஸ்மேரி(62). இவருக்கு திருமணமாக வில்லை. அதேபகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து இருந்ததால் கொள்ளையடிக்கும் நோக்கில் மூதாட்டியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தி வந்தனர்.

    மாவட்ட எஸ்.பி பாஸ்க ரன் உத்தரவின்பேரில் ரூரல் டி.எஸ்.பி உதயகுமார் ஆலோசனையில், தாலுகா இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகணேஷ் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள்தான் மூதாட்டியை கொலை செய்தது என உறுதியானது. இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ரெண்டலப்பாறையை சேர்ந்த ஸ்டீபன்ராஜா(24) என்பவர் ஜே.சி.பி டிரைவ ராக வேலைபார்த்து வரு கிறார். இவருக்கு கடன்பி ரச்சினைகள் இருந்துள்ளது. இதனால் திவேஸ்மேரியிடம் பணம் கேட்டுள்ளார்.

    அதற்கு அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் அரசு ஐ.டி.ஐ அருகே கடை நடத்தி வரும் முத்துராஜா(43) என்பவரிடம் தனது பிரச்சி னைகளை ஸ்டீபன்ராஜா தெரிவித்தார். அதற்கு முத்துராஜா தன்னிடமும் பணம் இல்லை. திவேஸ்மேரி வீட்டில் பணம் மற்றும் நகை உள்ளது. அவர் வீட்டில் கொள்ளையடி த்தால் நமது 2 பேரின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று கூறினார்.

    அதன்படி ஸ்டீபன்ராஜா மற்றும் முத்துராஜா தனது 17 வயது மகனுடன் அவரது வீட்டிற்கு சென்றனர். பின்னர் சிறுவனை மேற்கூரையின் மீது ஏறவிட்டு ஓட்டைபிரித்து உள்ளே இறங்க செய்தனர்.

    உள்ளே சென்ற சிறுவன் கதவை திறந்து ஸ்டீபன்ராஜா மற்றும் முத்துராஜாவை உள்ளே வரவழைத்துள்ளார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து திவேஸ்மேரியிடம் பணம் மற்றும் நகை உள்ளதா என கேட்டுள்ளனர். அவர் தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறவே அவர் அணிந்திருந்த 2½ பவுன் தங்கசெயினை பறித்து க்கொண்டு அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிஓடினர்.

    அதன்பின்னர் போலீசார் தேடியதால் நகையை விற்க முடியாமல் அலைந்து வந்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து நகையையும் பறிமுதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசம்பட்டு ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒருவர் தப்பி ஓடினார். மீதமுள்ள 3 பேரையும் பிடித்து கைது செய்தனர்
    • போலீசார், அவர்களிடம் இருந்து 240 லிட்டர் சாராயம் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான காவலர்கள் அரசம்பட்டு ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்தஅரசம்பட்டு ஆற்று பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒருவர் மட்டும் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினார். மீதமுள்ள 3 பேரையும் பிடித்து சோதனை செய்தபோது, லாரி டியூப்களில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22), தவமணி (19), அஜித் (20) என்பதும், தப்பி ஓடியவர் மல்லாபுரம் முத்துராமன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 240 லிட்டர் சாராயம் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துராமனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இவரது வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி.இவரது வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் இரவு ரோந்து பணியில் இருந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன், முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.எஸ்.ஐ. கலியமூர்த்தி ஆகியோர் ஆடு திருடர்கள் தேடுதல் வேட்டையை தீவிரப் படுத்தினர்க.டலூர் வாரசந்தையில் வடலூர் போலீசார் ஆடுகள் விற்க முயன்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து முத்தாண்டிக் குப்பம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்

    விசாரணையில் பேர்பெரியான் குப்பம் அசோக்குமார் (வயது 22), கருக்கை பிரதாப் (17), கீழ்காங்கேயன்குப்பம் ஹரிஷ் (17) என்பது தெரிய வந்தது. இவர்கள் 3 பேரும் பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை வீட்டில் 2 ஆடுகளை திருடி சென்று வடலூர் சந்தையில் விற்க முயன்றது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், 2 ஆடுகள் ஆகிவற்றை பறி முதல் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print