search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் விடுமுறை எதிரொலி: விழுப்புரம்  பஸ் -ரெயில்  நிலையத்தில்  பயணிகள் அலைமோதல்
    X

    தொடர் விடுமுறை எதிரொலி: விழுப்புரம் பஸ் -ரெயில் நிலையத்தில் பயணிகள் அலைமோதல்

    • சென்னை கோய ம்பேடு பஸ் நிலையம் உட்பட பல்வேறு பஸ் நிலை யங்களில் பொது மக்களின் கூட்டம் அலை மோதியது.
    • இரவு நேரம் சிற்றுண்டிகளில் விற்பனை அதிகமாக இருந்தது.

    விழுப்புரம்:

    நாடு முழுவதும் 75- வது சுதந்திர தின விழா வருகிற 15-ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பம்சங்கள் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுதந்திர தின விழாவிற்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு விடுமுறை அளித்தது போல் வங்கிகள் மற்றும் பிரபல தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளித்துள்ளது. இந்தத் தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு நேற்று மாலை முதலே புறப்பட்டு சென்றனர். இதனால் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் உட்பட பல்வேறு பஸ் நிலையங்களில் பொது மக்களின் கூட்டம் அலை மோதியது. இதே போல் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில்வே ஜங்ஷன்களில் பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

    விழுப்புரம் புதிய பஸ் நிலைய த்தில் பயணிகளின் எ ண்ணிக்கை அதிகமானதால் பஸ்களில் ஒருவருக்கொருவர் முண்டி அடித்து கொண்டு ஏறினர். மேலும் இந்த தொடர் விடு முறை எதிரொலியாக சென்னை யில் இருந்து விழுப்புரம் வழியாக திருச்சி, சேலம் ,மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊருக்கு ஏராள மான அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேற்று இரவு முழுவதும் சென்றது. இதனால் சென்னையில் இருந்து விழுப்புரம் வரை இருக்கும் நான்கு சுங்க சாவடிகள் வரை பஸ்களில் கார்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொது மக்களின் நீண்டதூரம் வரிசை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக இருந்தது. மேலும் நேற்று மாலை முதல் பொதுமக்களின் கூட்டம் அதிகமானதால் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரம் சிற்றுண்டிகளில் விற்பனை அதிகமாக இருந்தது. குறிப்பாக நெடுஞ்சா லைத்துறை சிற்றுண்டிகளில் கூட்டம் அலைமோதியது. தொடர் விடுமுறை எதிரொலியால் பஸ்,ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமானதால் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இரவு வீசிய குளிர்ந்த காற்று இதமான சூழ்நிலையை ரசித்தபடி பயணிகள் அனை வரும் பஸ்களில் கார்களில் பயணித்தனர்.

    Next Story
    ×