search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    தொடர் விடுமுறையால் கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • விவேகானந்தர் மண்டபத்தை ஒரேநாளில் 6 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்
    • படகில் பயணம் செய்யும் போது செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுதந்திர தினத்தையும் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அவர்களை கவரும் வகையிலும், சுதந்திர தினத்தை முன்னிட்டும் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மற்றும் காமராஜர் நினைவு இல்லங்களில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தது.

    இதனை ரசித்துப் பார்த்த சுற்றுலா பயணிகள், சூரியன் உதயமாகும் காட்சியையும் பார்த்து மகிழ்ந்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.தொடர்ந்து விவேகா னந்தர் நினைவு மண்ட பத்தை பார்வையிட்டனர்.

    இங்கு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 310 தேசிய கொடிகள் பறக்க விடப்பட்டு இருந்தன. இதனையும் சுற்றுலா பயணி கள் பார்த்து ரசித்தனர்.

    கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 10-30 மணிக்கு பிறகே படகு போக்குவரத்து தொடங்கிய தால் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்து அதன்பிறகு மண்டபத்தை பார்வையிட்டனர்.

    நேற்று ஒரே நாளில் விவேகானந்தர் மண்ட பத்தை 6 ஆயித்து 100 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்யும் போது செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்,திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    Next Story
    ×