என் மலர்
நீங்கள் தேடியது "3 பேர் கைது"
- ஜாஸ்மின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
திருச்சி மாவட்டம் பால க்கரை பீம நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் (வயது 65). இவரது மகள் ஜாஸ்மின் (22). இவரை உறவினரான ஈரோடு பெரிய அக்ரஹாரம், விஜிபி நகரைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவருக்கு கடந்த 2020ல் திருமணம் செய்து கொடுத்தனர்.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சாகுல் அமீது குடியிருக்கும் வீட்டில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் அருகில் உள்ள பொது குடிநீர் குழாயில் ஜாஸ்மின் தண்ணீர் பிடித்து வருவா ராம்.
இதனால் வேறு வீடு மாற்றுமாறு ஜாஸ்மின் தனது கணவரிடம் கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சாகுல் அமீது தூங்கி விழித்து பார்த்த போது ஜாஸ்மின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
பின்னர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜாஸ்மினை பரிசோ தித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து ஜாஸ்மினின் தந்தை முகமது இப்ராஹிம் அளித்த புகா ரின் பேரில் கருங்கல்பா ளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஜாஸ்மினுக்கு திருமணமாகி சுமார் மூன்றரை ஆண்டுக ளேயாவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு கள்ளுக்கடை மேடு முத்துக்குமாரசாமி வீதியைச் சேர்ந்தவர் இம்ரான் (35). எல்.ஐ.சி. முகவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜாஸ்மின் பானு (32). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இம்ரான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வங்கியில் கடன் பெற்று நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகில் இடம் வாங்கியுள்ளார். இதனால் வங்கிக் கடனை செலுத்தவும், குடும்பத்தை பராமரிக்கவும் போதிய வருமானமின்றி இம்ரான் கடும் மன உளை ச்சலுக்குள்ளாகி உள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ த்தன்று எலிபேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இம்ரானை அவரது குடும்பத்தினர் மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த இம்ரான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெருந்துறை அடுத்த பெரியவேட்டு வபாளை யத்தைச் சேர்ந்த சென்னி யப்பன் மகன் குருசாமி (46). கூலி தொழிலாளி. இவர் மனைவி பிரேமாதேவி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
குருசாமி உடல் நிலை பாதிக்கபட்டு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார். அதனால் வேலை க்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்தார். இதனால் மனமுடைந்த குருசாமி சம்பவத்தன்று கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகு றித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மரத்தில் தூக்கிட்ட நிலையில் பொன்னுசாமி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
- பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைக் கிராமம், கல்வாரை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (73). இவரது மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்.
இதையடுத்து அவர் அந்தியூர் எண்ணமங்கலம் ஆலயங்கரட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் தனது மகன் பழனிசாமி (40) வீட்டில் வசித்து வந்தார். பழனிசாமி லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பொன்னு சாமிக்கு உடல் நலம் பாதிக்க ப்பட்டு அரசு மருத்து வமனையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்து உள்ளார்.
பொன்னுசாமி அடிக்கடி, அவரது அக்கா வீட்டுக்கு சென்று சில நாள்கள் தங்கி விட்டு பின்னர் மகன் வீட்டுக்கு வருவது வழக்க மாம்.
அப்படி தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக கடந்த 20-ந் தேதி கூறி விட்டு சென்ற பொன்னுசாமி 3 நாள்களாகியும் வீடு திரும்பவில்லையாம்.
இதையடுத்து, அவரது அக்காள் மாதம்மாளிடம் விசாரித்த போது அவர், அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும் பொன்னுசாமி கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கோவிலூர் புதுக்கரடு, வறட்டுமலை வனப்பகுதியில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் பொன்னுசாமி இறந்து கிடப்பதாக மகன் பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் உறவினர்க ளுடன் அங்கு சென்ற பழனிசாமி அழுகிய நிலை யில் இருந்த தனது தந்தை பொன்னுசாமியின் சடலத்தை மீட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், பர்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு, பெரியசேமூர், கல்லான்கரடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி (45). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி வளர்மதி (43). இவர்களது மகள் சவுந்தர்யா. இவரை, வளர்மதியின் தம்பிக்கு திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சவுந்தர்யா கணவரை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இதனால், தந்தை கருப்பு சாமி மன உளைச்சலுக்கு ஆளாகி மதுவுக்கு அடிமை யாகி தினமும் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது மகளின் நிலை குறித்த விரக்தியில் மதுபோதையில் கருப்புசாமி புலம்பிக் கொண்டிருந்துள்ளார்.
பின்னர் அனைவரும் தூங்கிவிட்டனர். நேற்று அதிகாலை வளர்மதி எழுந்து பார்த்தபோது கருப்புசாமி, சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன், உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே கருப்புசாமி இறந்து விட்ட தாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு பஸ் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் புதிய கட்டிட வளாகத்தில், இரும்புக் கம்பியில் தூக்கி ட்ட நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் தொங்கிக் கொண்டி ருப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
தூக்கில் தொங்கிய நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரிய வில்லை. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வீரக்கல் குரும்பபட்டி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். 21 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே வீரக்கல் குரும்பபட்டி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமை யில்,சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுபாண்டி, பாலசுப்பிர மணியன், எஸ்.பி. தனிப்பிரிவு காவலர் வினோத் கண்ணன் மற்றும் பாலசுப்பிரமணியன், ரவி ச்சந்திரன், ஜெய ச்சந்திரன், செந்தில், சிவபெருமாள் ஆகியோர் கொண்ட போலீ சார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சோலைக்காடு பகுதியில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்துக்கிடமாக பதுங்கி இருந்தனர்.போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர்.போலீசார் தப்பி ஓடிய 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் காலாடிபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 31),முருகன் (43),வீரக்கல் குரும்ப பட்டியைச் சேர்ந்த பிரபு (34) என்பதும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்த தும் தெரியவந்தது.
இதை யடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களி டமிருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய வட்டப்பாறையைச் சேர்ந்த செவ்வந்து (58), ராதா(38) ஆகிய 2 பெண்களை போலீ சார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது
- ரூ.3 கோடி செலவில் குடிநீர் மற்றும் சாலை திட்டப் பணிகளை நிறைவேற்றுதல்
நாகர்கோவில் :கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், துணை தலைவி ஜெனஸ் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் லிங்கேஸ் வரி, மகேஷ், சுஜா, இந்திரா,ராயப்பன், சிவசுடலைமணி, இக்பால், வினிற்றா, சகா யசர்ஜினாள், சகாயஜூடு அல்பினோ, பூலோக ராஜா, அட்லின், ஆனிரோஸ் தாமஸ், டெல்பின், பேரூ ராட்சி சுகாதார அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் பேரூராட்சி பொது நிதியில் இருந்தும், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்தும் ரூ.3 கோடி செலவில் குடிநீர் மற்றும் சாலை திட்டப் பணிகளை நிறைவேற்றுதல்.
தெருக்களில் உள்ள மின்விளக்குகளை பரா மரித்தல், அலங்கார தரைத்தளம் அமைத்தல், கழிவுநீர் ஓடை சீரமைத்தல் உள்ளிட்ட பல வளர்ச்சி திட்ட பணிகளை நிறை வேற்று வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் பல்வேறு வரவு-செலவு கணக்குகள் வாசித்து அங்கீகரிக்கப்பட்டன.
- பாலசந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அனுமதியின்றி ம விற்பதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் ேபரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் பாலசந்திரன் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சித்தோடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரியசோமூர் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் சூர்யபிரகாஷ் (22), பப்பாளி என்ற பைசல் ஆகியோரை சித்தோடு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோம்பை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் பண்ணைப்புரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
- அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் கோம்பை சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையிலான போலீசார் பண்ணைப்புரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை நடத்திய போது அதில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சாவை கடத்த முயன்ற பண்ணைப்புரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரபிரபு (வயது 48), கோம்பையைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் (37), பண்ணைப்புரம் 9-வது வார்டைச் சேர்ந்த இளங்குரமன் (43) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் எங்கிருந்து இந்த கஞ்சாவை கடத்தி வந்தனர்? யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போதை பொருட்களை விற்பனை செய்த சிக்காந்தர் என்பவரை கைது செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் முல வாய்க்கால் டாஸ்மாக், சிங்கி ரிபாளையம் டாஸ்மார்க் கடை அருகே அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடை த்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு அனுமதியின்றி மதுவிற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம் மரு தவாயல் பகுதியை சேர்ந்த காசி மகன் கோபால் (வயது 46),
நம்பியூர் தாலுகா கரட்டுப்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் பாலமுருகன் (30) ஆகி யோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 26 மது பாட்டில்களை போலீ சார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஈரோடு ஈ.பி.பி.நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்த சிக்காந்தர் (56 என்பவரை கைது செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.
மேலும் அவர் விற்பனை க்காக வைத்திருந்த புகையி லைப் பொருட்களை பறி முதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாரி இன்று அதிகாலை 4 மணி அளவில் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது.
- இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்து லாரியை அங்கிருந்து அகற்றி போக்குவரத்ைத ஒழங்கு படுத்தினர்
வேடசந்தூர்:
மதுரை செல்லூைர சேர்ந்தவர் அய்யப்பன் (வயது37). இவர் ஒரு லாரியில் கரூரில் இருந்து துண்டுகளை ஏற்றி க்கொண்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். லாரியில் மதுரையை சேர்ந்த ராஜா (21), பாண்டி (35) ஆகியோரும் இருந்தனர்.
லாரி இன்று அதிகாலை 4 மணி அளவில் வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவர் அய்யப்பன் உள்பட 3 பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பி னர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு விரைந்து வந்து லாரியை அங்கிருந்து அகற்றி போக்குவரத்ைத ஒழங்கு படுத்தினர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- போலீசார் சுற்றி வளைத்து அவர்களை பிடித்து விசாரித்தனர்.
- 52 சீட்டுகள் கொண்ட சீட்டு கட்டு ஒன்றையும், 200 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஏரியூர்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் அருகே உள்ள சாம்பள்ளி கிராமத்தில் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காட்டுக் கொட்டாய் சுடுகாடு பின்புறம் அமர்ந்து சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் சிடும்பட்டி பகுதியை சேர்ந்த சின்ன கண்ணு (60), நல்லதம்பி (70) மற்றும் சாம்பள்ளி காலனியை சேர்ந்த ரஜினி (40) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக ஏரியூர் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் கொண்ட சீட்டு கட்டு ஒன்றையும், 200 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
- சாமுவேலை நண்பர்கள் 3 பேருடன் சென்று கத்தியால் வயிற்றில் குத்தினார்.
- மேல்கிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட் டம்,தேன்கனிக் கோட்டை தாலுகா விற்கு உட்பட்ட கெலமங்கலம் துளசி நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 26). கூலித்தொழிலாளி.
இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (32), என்பவரது மனைவி ரேணுகா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை அறிந்த ஜெகதீஷ் பலமுறை கண்டித்துள்ளார். இதை சாமுவேல் கேட்க வில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷ் நேற்று கெலமங் கலம் ராஜலட்சுமி தியேட்டர் அருகே அமர்ந்திருந்த சாமு வேலை நண்பர்கள் 3 பேருடன் சென்று கத்தியால் வயிற்றில் குத்தினார்.
படுகாயமடைந்த சாமு வேல் கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக் கப்பட்டார். அங்கிருந்து மேல்கிச் சைக்காக ஓசூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக, கெல மங்கலம் போலீசில் சாமு வேல் புகார் செய்தார்.
இதையடுத்து தலை மறைவாக இருந்த ஜெகதீஷ் மற்றும் ஜெக்கேரி அருகே உள்ள சின்னட்டியை சேர்ந்த விஜய் (25) மற்றும் கெலமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருமூர்த்தி (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.