என் மலர்
நீங்கள் தேடியது "3 பேர் கைது"
- வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் தொழிலா ளர்கள் தங்கி வேலை செய்ய போடப்பட்டிருந்த குடிசை வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
- அருகிலே இருந்த கொட்ட கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டிராக்டர்கள், கரும்பு வெட்டும் எந்திரம் ஆகி யவை எரிந்து நாசமானது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே சரளைமேட்டில் கடந்த
21-ந் தேதி இரவு வக்கீல் துரைசாமி (வயது 57) என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரியும் தொழிலா ளர்கள் தங்கி வேலை செய்ய போடப்பட்டிருந்த குடிசை வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இதில் குடிசை வீட்டிற்கு அருகிலே இருந்த கொட்ட கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 டிராக்டர்கள், கரும்பு வெட்டும் எந்திரம் ஆகி யவை எரிந்து நாசமானது.
இதே நாளில் ஜேடர்பா ளையம்-நல்லூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு கூரை வீட்டிற்கு தீ வைத்த மர்மநபர்கள், வடகரை யாத்தூரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி வீட்டில் மண் எண்ணை குண்டுகளை வீசி சென்றனர்.
இதையடுத்து, பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலை யரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீ சார் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இதில் தொடர்புடைய வடகரை யாத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தர்மராஜ் (30), ஜேடர்பா ளையம் அருகே கரைப்பா ளையம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் பிரவீன் என்கிற பரமசிவம்(28), அதே பகுதியைச் சேர்ந்த கோட்டையப்பன் மகன் சுதாகர் (25) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களி டம் விசாரணை நடந்து வருகிறது.
தேனி:
தேனி மாவட்டம் கம்பம் 1-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் மாசாணம்(77). இவரது மனைவி ராசாத்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது முதல் மாசாணமும் உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படை ந்த அவர் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வருசநாடு அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து(47). இவருக்கு கடந்த 2 வருடமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வலது காலில் உள்ள 2-வது விரலை வெட்டி எடுத்து விட்டனர். இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.
பெரியகுளம் கீழவட கரையை சேர்ந்த ஜெயபாண்டியன் மனைவி லிபியாரோஸ்(35). இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாததால் பெரிய குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
போடி நாகலாபுரத்தை சேர்ந்தவர் குருவய்யா(58). இவர் வயிற்றுவலி காரணமாக பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- செல்லூரில் போக்குவரத்துக்கு இடையூறாக பட்டாசு வெடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தனிப்படை போலீசார் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை செல்லூரில் திருமண விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், பொதுமக்கள் சட்டவிரோதமாக வெடி போடுவது வழக்கத்தில் உள்ளது. இதற்கு போலீசிடம் முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். ஆனாலும் பலர் அப்படி செய்வதில்லை. போலீசாருக்கு தெரியாது என்று நினைப்பில் வெடி போட்டு மகிழ்கின்றனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது என்று செல்லூர் போலீசுக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் போலீசார் நேற்று காலை முதல் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
அய்யனார் கோவில் மெயின் ரோடு திருமண மண்டபம் முன்பு போலீசாரின் அனுமதியின்றி பட்டாசு வெடித்து போக்கு வரத்துக்கு இடையூறு விளைவித்த, மேலக்குயில்குடி, கீழத் தெருவை சேர்ந்த ராஜா(35) கைது செய்யப்பட்டார்.
செல்லூர் அய்யனார் கோவில் மெயின்ரோடு, ஆர்.எஸ்.நாயுடு தெரு சந்திப்பில் சட்ட விரோதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (39), கணேசன் (42) ஆகியோரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் செல்லூர் போலீஸ் நிலையத்தில் தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்துக்கு பேட்டரி மின்கசிவு தான் காரணம் என்ற போதிலும், தனிப்படை போலீசார் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
- மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தபால்மேடு டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களாக பணியாற்றுபவர் மாதேஷ் (வயது48). இவர் கடந்த 19-ந் தேதி இரவு பணி முடிந்து டாஸ்மாக் கடையை மூடி விட்டு மது விற்பனையான பணத்துடன் வீட்டுக்கு செல்வதற்காக வெளியே வந்தார்.
அப்போது 2 மோட்டார்சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் மாதேசின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து மாதேஷ் பர்கூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையாளர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஓசூரை சேர்ந்த மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதனிடையே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் ஓசூர் சக்தி நகர் சந்தோஷ் (23), முனீஸ்வரன் நகர் கோகுல் (21), வேலூர் மாவட்டம், குடியாத்தம் சூர்யா (23) ஆகியோர் என்பதும், நண்பர்களுடன் சேர்ந்து டாஸ்மாக் விற்பனையாளிடம் பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- பள்ளப்பட்டி உடையார் காடு பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
- முகத்தை மூடிக்கொண்டு வந்த 3 மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் 3 பேரையும் சாரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
சேலம்:
சேலம் கந்தம்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 46). இவர் பள்ளப்பட்டி உடையார் காடு பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த ஜனவரி 25-ந் தேதி இவரது பட்டறைக்கு தலையில் ஹெல்மெட் மற்றும் கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு வந்த 3 மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் பாஸ்கர் மற்றும் அவருடன் இருந்த செவ்வாபேட்டை நரசிம்மன்செட்டி தெருவை சேர்ந்த சிவகுமார் (44), கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சாரதி (18) ஆகிய 3 பேரையும் மூவரையும் சாரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை பாஸ்கர் உள்ளிட்டோரை வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதமுத்து பரத் (23), இதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் சாமுவேல் (20), விஜயகுமார் மகன் பாலமுருகன் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பஸ்நிறுத்தத்தில் நின்று வீடியோவை காட்டியபோது சிக்கினர்
- நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் ஒரிஜினல் நோட்டு கொடுத்தால், அதற்கு 3 மடங்கு கள்ளநோட்டு தருகிறோம்.
கோவை,
கோவை அரசு ஆஸ்பத்திரி எதிர்புறம் பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த பஸ்நிறுத்தத்தில் உக்கடம் அருகே உள்ள ஜே.கே. கார்டன் பகுதியைச் சேர்ந்த முகமது ஹனீபா (வயது 41) என்பவர் பஸ்சுக்காக காத்து நின்றார்.
அப்போது அங்கு நின்ற 3 பேர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். எங்களிடம் கள்ளநோட்டுகள் உள்ளன, நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் ஒரிஜினல் நோட்டு கொடுத்தால், அதற்கு 3 மடங்கு கள்ளநோட்டு தருகிறோம். அதனை வைத்து நீங்கள் செலவு செய்யலாம் என ஆசைவார்த்தைகள் கூறினர். தங்களிடம் கள்ளநோட்டு இருப்பதற்கு ஆதாரமாக செல்போன் வீடியோ ஒன்றையும் காண்பித்தனர்.அதற்கு முகமது ஹனீபா, நீங்கள் இங்கேயே காத்து இருங்கள், நான் பணம் எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார். நேராக அவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த விவரங்களை தெரிவித்தார்.
உடனே போலீசார் உஷாராகி அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்துக்கு சென்றனர். அங்கு முகமது ஹனீபா, பணம் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பில் 3 பேர் கும்பல் காத்து நின்றது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணை யில் அவர்கள் கோவை வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த பிரகாஷ் (47), குன்னூர் நஞ்சப்ப சத்தி ரத்தைச் சேர்ந்த கலைவாசன் (50), மதுரை வில்லா புரத்தைச் சேர்ந்த சண்முக பிரசாத் (36) என்பது தெரியவந்தது.
விசா ரணையில் அவர்களிடம் கள்ளநோட்டு எதுவும் இல்லை என்பதும், வீடி யோவில் கள்ள நோட்டுகளை காண்பித்து பணம் பறிக்க முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொ டர்ந்து 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது
- ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது. இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வப்போது வரும் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பெருந்துறையில் பல்வேறு பகுதியில் போலீசார் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர்.
அப்போது கஞ்சா விற்றதாக திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளியை சேர்ந்த சக்திவேல்(29), ராமு என்பவரது மகன் தினேஷ்கு மார்–(23), பெருந்துறை குள்ளம்பாளை யத்தை சேர்ந்த தனசேகர்(31) ஆகிய 3 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
இதில் தனசேகர் பெருந்துறை யில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது.
கைதானவர்களிடம் இருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பெருந்துறை போலீசார் கூறினர்.
கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தை அடுத்துள்ள பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது டி.ஜி.புதூரில் இருந்து கே.என்.பாளையம் செல்லும் சாலையில் காளியூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரபு (26), சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (26), டி.ஜி.புதூரை சேர்ந்த சதீஷ் (19) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் கர்நாடக மாநிலம் ஜல்லிபாளையம் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் மதிப்பிலான 1,100 கிராம் கஞ்சா, அதை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பணம் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- சம்பவத்தன்று காலையில் மருந்து கடைக்கு வேலைக்கு செல்வதற்காக சரத்குமார் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
- தாரமங்கலம் அருகில் இருந்து இரும்பாலை நோக்கி குதிரை வண்டி பந்தயம் நடந்துகொண்டிருந்தது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம், சேவகனுர் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் சரத்குமார் (வயது 24). இவர் அழகுசமுத்திரம் பகுதியில் ஒரு மருந்து கடையில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று காலையில் மருந்து கடைக்கு வேலைக்கு செல்வதற்காக சரத்குமார் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாரமங்கலம் அருகில் இருந்து இரும்பாலை நோக்கி குதிரை வண்டி பந்தயம் நடந்துகொண்டிருந்தது.
அந்த குதிரை வண்டியை கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த லோகநாதன்(25), சதீஷ்(23) ஆகிய 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்தபடி சமூக வலைத ளங்களில் பதிவிடுவதற்காக செல்போனில் வீடியோ எடுத்தனர்.அப்போது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக சரத்குமார் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீதுமோதியது. இதில் சரத்குமார், லோகநாதன், சதீஷ், ஆகிய 3 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து சரத்குமாரின் தந்தை குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் குதிரை வண்டி பந்தயம் நடத்த தடை விதித்துள்ளனர்.
- சம்பவத்தன்று கல்லூரி முடித்து அரசு பஸ்ஸில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்த போது பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று கொண்டு சென்றார்.
- திடீரென்று அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி ஆடூர் அகரம் சேர்ந்தவர் விஷ்ணு (வயது 20). கடலூர் அரசு பெரியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி முடித்து அரசு பஸ்ஸில் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்ஸில் கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று கொண்டு விஷ்ணு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் பஸ்க்குள் விஷ்ணு செல்ல வேண்டும் என கூறி திட்டியதாக தெரிகிறது.
இதன் காரணமாக விஷ்ணு பஸ்ஸிலிருந்து இறங்கி வேறு பஸ்ஸில் செல்வதற்கு குறிஞ்சிப்பாடி - புவனகிரி சாலை காமராஜர் சிலை அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென்று அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணுவை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த விஷ்ணு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார், பொட்டவெளி சேர்ந்த கிஷோர், வாஞ்சிநாதன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 பேரை பிடித்