என் மலர்
நீங்கள் தேடியது "விருது"
- 2006 முதல் 2011 வரை முதலமைச்சராகப் பணியாற்றிய இவர், பல தசாப்தங்களாக பொது வாழ்வில் ஒரு முக்கிய குரலாக இருந்தார்.
- 19 பெண்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது.
கடந்தாண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதியன்று காலமான அச்சுதானந்தன், கேரள அரசியலில் ஒரு உயர்ந்த நபராகவும், இந்தியாவின் மிக மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். 2006 முதல் 2011 வரை முதலமைச்சராகப் பணியாற்றிய இவர், பல தசாப்தங்களாக பொது வாழ்வில் ஒரு முக்கிய குரலாக இருந்தார்.
இதுதவிர கேரளாவைச் சேர்ந்த மேலும் இருவருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷனும், எஸ்என்டிபி யோகம் பொதுச் செயலாளர் வெள்ளப்பள்ளி நடேசனுக்கு பத்ம ஸ்ரீயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட பட்டியலில், ஐந்து பத்ம விபூஷன் விருதுகள், 13 பத்ம பூஷன் விருதுகள் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் உள்ளன. விருது அறிவிக்கப்பட்டவர்களில் 19 பேர் பெண்கள், ஆறு பேர் வெளிநாட்டினர். பதினாறு விருதுகள் மரணத்திற்குப் பின் அறிவிக்கப்பட்டுள்ளன.
- கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றில் கிராசா மஷேல் ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது.
- கிரகா மச்செல்லின் முதல் கணவரான மொசாம்பிக் நாட்டு அதிபர் சமோரா மொயிசஸ் மச்செல் 1986-ம் ஆண்டு மறைந்தார்.
அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் இந்திரா காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை இந்த விருதை வழங்குகிறது.
இந்த விருது ரூ.1 கோடி பரிசுத்தொகை, பாராட்டுப் பத்திரம் மற்றும் கோப்பை ஆகியவற்றை கொண்டுள்ளது.
2025-ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதிப் பரிசு, மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த மனித உரிமைப் செயல்பாட்டாளரும் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவியுமான கிராசா மஷேல்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம், மனித உரிமைகள் ஆகியவற்றில் கிராசா மஷேல் ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் நியாயமான மற்றும் சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம் பின்தங்கிய சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
கிரகா மச்செல்லின் முதல் கணவரான மொசாம்பிக் நாட்டு அதிபர் சமோரா மொயிசஸ் மச்செல் 1986-ம் ஆண்டு மறைந்தார். அதைத்தொடர்ந்து நெல்சன் மண்டேலாவை கிரகா திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
11-வது அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் ஆண்டுதோறும் பத்மபாணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பத்மபாணி விருது தமிழின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள எம்ஜிஎம் வளாகத்தில் உள்ள ருக்மிணி அரங்கில் வரும் 28 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்படும்.
விருதுடன் பாராட்டு பத்திரம் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு ஆகியவையும் வழங்கப்படும்.
- சாரண இயக்கத்தின் இந்த உயரிய விருதினை, உ.பி. ஆளுநர் வழங்கிக் கெளரவித்தார்.
- வலிமையான சமுதாயத்தைப் படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.
பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருது அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற #19thNationalJamboree நிகழ்வில் @bsgnhq இயக்கத்தின் மிக உயரிய அங்கீகாரமான வெள்ளி யானை விருதினைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். சாரண இயக்கத்தின் இந்த உயரிய விருதினை, உ.பி. ஆளுநர் அவர்கள் வழங்கிக் கெளரவித்தார்.
மிக உயரிய வெள்ளி யானை விருதினை மாணவர்களின் நலன் காக்கும் நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்கால இந்தியாவின் நம்பிக்கைத் தூண்களான என் அன்பு மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்களுக்கும் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.
அன்பு, மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய வலிமையான சமுதாயத்தைப் படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.
அன்பும் நன்றியும்!
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
- தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
- நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டது.
இன்று நவம்பர் 13-ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் 'எனது சினிமா குறிப்புகளில் இருந்து' என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி நாளை நவம்பர் 14-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது.
கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது.
முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
ஓவியரான தோட்டா தரணி, கலை இயக்குனராக சினிமா காட்சிகளுக்கு தத்ரூபமாக செட் அமைப்பதில் பெயர் பெற்றவர்.
நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி காட்சிகள், காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள, ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்கக் காட்சிகள், சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
ஆனால் சினிமாவை தீவிரமாக பின்தொடர்பவர்களால் கூட அவை சென்னையில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதை நம்ப கடினமாக இருக்கும். அவ்வளவு தத்ரூபமாக உண்மைத் தன்மையுடன் அவரின் செட்கள் அமைந்தன.
கடைசியாக, அவர் 'குபேரா', 'ஹரிஹர வீர மல்லு', 'காட்டி' ஆகிய படங்களுக்குக் கலை வடிவமைப்பை மேற்கொண்டிருந்தார்
- முன்னதாக நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசனுக்கு (2016) வழங்கப்பட்டது.
- சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு, 1957-ம் ஆண்டு முதல் செவாலியர் விருதை வழங்கி வருகிறது.
முன்னதாக தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் (1995), கமல்ஹாசன் (2016) உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். தற்போது, அந்தப் பட்டியலில் தோட்டா தரணியும் இணைந்துள்ளார்.
ஓவியரான தோட்டா தரணி, கலை இயக்குனராக சினிமா காட்சிகளுக்கு தத்ரூபமாக செட் அமைப்பதில் பெயர் பெற்றவர்.
நாயகன், சிவாஜி, தசாவதாரம், வரலாறு, சச்சின், பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி காட்சிகள், காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர், இந்தியன் திரைப்படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள, ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்கக் காட்சிகள், சிவாஜி படத்தில் இடம்பெற்ற 'வாஜி.. வாஜி..' பாடல் செட் ஆகியவற்றை சென்னையிலேயே தோட்டா தரணி அமைத்தார்.
ஆனால் சினிமாவை தீவிரமாக பின்தொடர்பவர்களால் கூட அவை சென்னையில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்பதை நம்ப கடினமாக இருக்கும். அவ்வளவு தத்ரூபமாக உண்மைத் தன்மையுடன் அவரின் செட்கள் அமைந்தன.

கடைசியாக, அவர் 'குபேரா', 'ஹரிஹர வீர மல்லு', 'காட்டி' ஆகிய படங்களுக்குக் கலை வடிவமைப்பை மேற்கொண்டிருந்தார்
வரும் நவம்பர் 13-ம் தேதி சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நடைபெறும் விழாவில் அவருக்கு செவாலியர் விருது வழங்கப்படவுள்ளது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இந்த விருதை அவருக்கு வழங்க இருக்கிறார்.
இந்த நிகழ்வோடு சேர்த்து, அதே வளாகத்தில் 'எனது சினிமா குறிப்புகளில் இருந்து' என்ற தலைப்பிலான தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி வரும் நவம்பர் 14-ம் தேதி வரை அங்கு நடைபெற உள்ளது.
- Orizzonti நடுவர் மன்றத்தின் தலைவரான பிரெஞ்சு இயக்குனர் ஜூலியா டுகோர்னாவ் இந்த விருதை அனுபர்ணாவுக்கு வழங்கினார்.
- இந்தப் படத்தை பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ளார்.
82வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை இளம் இந்திய இயக்குனர் அனுபர்ணா ராய் வென்று வரலாறு படைத்துள்ளார்.
அவரது 'சாங்ஸ் ஆஃப் ஃபார்காட்டன் ட்ரீஸ்' திரைப்படம் இந்த விருதை வென்றது. வெனிஸ் திரைப்பட விழாவின் Orizzonti பிரிவு போட்டியில் அனுபர்ணா சிறந்த இயக்குனர் விருதை வென்றார்.
Orizzonti நடுவர் மன்றத்தின் தலைவரான பிரெஞ்சு இயக்குனர் ஜூலியா டுகோர்னாவ் இந்த விருதை அனுபர்ணாவுக்கு வழங்கினார்.
'சாங்ஸ் ஆஃப் ஃபார்காட்டன் ட்ரீஸ்' என்பது மும்பையில் புலம்பெயர்ந்த இரண்டு பெண்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது.
வாழ்வாதாரம், தனிமை மற்றும் உறவுகள் ஆகிய கருப்பொருள்களைக் கொண்டு அனுபர்ணா இந்தப் படத்தைத் எடுத்துள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ளார்.
Orizzonti பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே படம் இதுவாகும். மேலும் அவ்விருதை வெல்லும் முதல் இந்திய படமாகவும் இது அமைந்துள்ளது.
- சிம்பா பீர் பல்வேறு வகைகளுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
- வெண்கல பதக்க விருது பெற்ற சிம்பா ஸ்டவுட் சற்று கசப்பான சுவையுடன் தயாரிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
மதுபான உற்பத்தியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் உள்ளிட்ட குழு உலகில் சிறந்த பீர் வகைகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. முதலிடம் பிடிக்கும் பீர் வகைகளுக்கு தங்க பதக்கமும், 2- வது வகைக்கு வெள்ளி பதக்கமும், 3-வது இடம் பிடிக்கும் பீருக்கு வெண்கல பதக்கம் போன்ற விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் 2025-ம் ஆண்டில் உலக பீர் வகைகளில் இந்தியாவில் தயாரிக்கப்படும் சிம்பா பீருக்கு சிறந்த சுவைக்கான விருது கிடைத்துள்ளது.

சிம்பா பீர் பல்வேறு வகைகளுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இதன் தயாரிப்பான சிம்பா விட்டிற்கு வெள்ளி பதக்க விருதும், சிம்பா ஸ்டவுட் பீர் வகை வெண்கல பதக்க விருதும் பெற்றுள்ளது.
இதில் சிம்பா விட் பெல்ஜியம் விட் பாணியில் தயாரிக்கப்படுகிறது. மிக குறைந்த கசப்பு தன்மையுடன் ஆரஞ்சு தோல், கொத்தமல்லி, கோதுமை மால்ட் உள்ளிட்டவைகள் அடங்கிய பொருட்களும் சிறந்த நறுமணம் மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இந்த பீர் வகைகள் தயாரிக்கப்படுகிறது.
வெண்கல பதக்க விருது பெற்ற சிம்பா ஸ்டவுட் சற்று கசப்பான சுவையுடன் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் கிடைத்ததன் மூலம் இந்தியாவில் மதுபான துறை வளர்ச்சி அடைந்துள்ளதை காட்டுகிறது. உலக அளவிலும் இந்திய தயாரிப்புக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.
- சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக விருது எனப் புகழாரம்.
- கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் சத்குருவிற்கு இந்தாண்டிற்கான 'குளோபல் இந்தியன் விருது' வழங்கப்பட்டது.
ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற 'க்ரேட்டர் விழா 2025' எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு "ப்ளூ டங்" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சத்குருவின் துணிச்சலான குரல், ஆழமான ஞானம், அசைக்க முடியாத தெளிவுக்காக இவ்விருதினை வழங்குவதாக க்ரேட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
ஜெர்மனியில் செயல்பட்டு வரும் "க்ரேட்டர் (Greator)" எனும் நிறுவனம், உலகெங்கும் உள்ள இளைஞர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் சுயமுன்னேற்றம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
இதில் உலக அளவில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, உலக புகழ் எழுத்தாளர்கள் டோனி ராப்பின்ஸ், கேரி வீ உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளனர்.
மேலும் அந்நிறுவனம் சார்பில், சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆளுமைகளை அடையாளம் கண்டு, ஆண்டுதோறும் "ப்ளூ டங்" (Blue tongue) என்ற விருதினை வழங்கி கவுரவித்து வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டிற்கான விருது ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டது.

இது குறித்து க்ரேட்டர் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், "சத்குரு நம் காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆன்மீக ஆசிரியர்களில் ஒருவர். அவரது தெளிவான, ஆழம்மிக்க, அடிப்படையான ஞானம் மற்றும் நுட்பமான நகைச்சுவைக்காக உலகம் முழுவதும் அவர் கொண்டாடப்படுகிறார். அவரது வார்த்தைகள் நம்மை விழித்தெழச் செய்கின்றன. நமது எல்லைகளை விரிவுபடுத்துகின்றன மற்றும் நேரடியாக இதயத்தைத் தொடுகின்றன.
அதனால்தான் இந்த ஆண்டின் "ப்ளூ டங்" விருது சத்குருவுக்கு வழங்கப்படுகிறது. அவரது துணிச்சலான குரல், ஆழமான ஞானம் மற்றும் அசைக்க முடியாத தெளிவுக்காக இந்த விருதை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும் இதுகுறித்த சத்குருவின் எக்ஸ் தள பதிவில், " உங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் நன்றி. ஆனந்தமான மனிதர்களை உருவாக்குவதே மனிதகுலத்தை உருமாற்றுவதற்கான ஒரே வழி. ஏனெனில், ஆனந்தத்தை விட மேலான நறுமணம் வேறில்லை. பேரன்பும் ஆசிகளும்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடா இந்தியா அறக்கட்டளை சார்பில் சத்குருவிற்கு இந்தாண்டிற்கான 'குளோபல் இந்தியன் விருது' வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கானா நாட்டிற்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக கானா நாட்டிற்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசு பயணமாக கானா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, 'The Officer of the Order of the Star of Ghana' என்ற விருதை வழங்கி கானா அரசு கௌரவித்துள்ளது. இந்த விருது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய மரியாதையாக கருதப்படுகிறது.
கானா நாட்டை தொடர்ந்து டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். மேலும், வரும் 6, 7ம் தேதி பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
- எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு “சாகித்ய பால புரஸ்கார் 2025” விருது அறிவிப்பு.
- மாத இதழ்களின் வெற்றிக்கு பங்களித்து வருபவர்தான் எழுத்தாளர் சரவணன்.
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் எழுதிய 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விழும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு "சாகித்ய பால புரஸ்கார் 2025" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஒற்றைச் சிறகு ஓவியா" என்ற சிறார் நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் இவ்விருது பெறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் நமது பள்ளிக் கல்வித்துறையால் மாணவர்களுக்காக வெளியிடப்படும் தேன்சிட்டு, ஊஞ்சல் ஆகிய மாத இதழ்களின் வெற்றிக்கு பங்களித்து வருபவர்தான் எழுத்தாளர் திரு.விஷ்ணுபுரம் சரவணன்.
அறிவியல் - முற்போக்கு சிந்தனைகளை குழந்தைகளிடம் விதைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குழந்தைகளுக்கான அவரது எழுத்துப்பணி உயிர்ப்போடு தொடரட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
- மென்மேலும் பல விருதுகளை வெல்ல, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் எழுதிய 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விழும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
2025 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதினை வென்றுள்ள எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒற்றைச் சிறகு ஓவியா என்ற சிறுவர் நாவலுக்காக இந்த உயரிய விருதை வென்றுள்ள திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள், கவிஞர், கட்டுரையாளர், கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், இதழாசிரியர் என, பல தளங்களில் முத்திரை பதித்தவர்.
திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள், இலக்கியத்தில் தொடர்ந்து பல படைப்புகளை மேற்கொண்டு, மென்மேலும் பல விருதுகளை வெல்ல, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






