என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sahityaawards"

    • எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு “சாகித்ய பால புரஸ்கார் 2025” விருது அறிவிப்பு.
    • மாத இதழ்களின் வெற்றிக்கு பங்களித்து வருபவர்தான் எழுத்தாளர் சரவணன்.

    எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் எழுதிய 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விழும் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு "சாகித்ய பால புரஸ்கார் 2025" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    "ஒற்றைச் சிறகு ஓவியா" என்ற சிறார் நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் இவ்விருது பெறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் நமது பள்ளிக் கல்வித்துறையால் மாணவர்களுக்காக வெளியிடப்படும் தேன்சிட்டு, ஊஞ்சல் ஆகிய மாத இதழ்களின் வெற்றிக்கு பங்களித்து வருபவர்தான் எழுத்தாளர் திரு.விஷ்ணுபுரம் சரவணன்.

    அறிவியல் - முற்போக்கு சிந்தனைகளை குழந்தைகளிடம் விதைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குழந்தைகளுக்கான அவரது எழுத்துப்பணி உயிர்ப்போடு தொடரட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மென்மேலும் பல விருதுகளை வெல்ல, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் எழுதிய 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விழும் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    2025 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதினை வென்றுள்ள எழுத்தாளர் திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒற்றைச் சிறகு ஓவியா என்ற சிறுவர் நாவலுக்காக இந்த உயரிய விருதை வென்றுள்ள திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள், கவிஞர், கட்டுரையாளர், கதை சொல்லி, சிறார் எழுத்தாளர், இதழாசிரியர் என, பல தளங்களில் முத்திரை பதித்தவர்.

    திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள், இலக்கியத்தில் தொடர்ந்து பல படைப்புகளை மேற்கொண்டு, மென்மேலும் பல விருதுகளை வெல்ல, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த ஆண்டிற்கான பால சாகித்ய விருதுகள் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த கிருங்கை சேதுபதி, சுனீல் கிருஷ்ணன் ஆகியோர் விருது பெறுகின்றனர். #SahityaAwards #SahityaAkademi #BalSahitya #YuvaPuraskar
    புதுடெல்லி:

    இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு ‘யுவ புரஸ்கார்’ விருதையும் சிறுவர் இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதையும் வழங்கி வருகிறது. இந்திய பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 

    அதன்படி இந்த ஆண்டிற்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 23 எழுத்தாளர்களுக்கு பால சாகித்திய விருதுகளும் 21 எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    அம்பு படுக்கை என்ற சிறுகதையை எழுதிய தமிழகத்தைச் சேர்ந்த சுனீல் கிருஷ்ணனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆஸ்தீக் வாஜ்பேயி (இந்தி), சம்ரங்னி பந்தோபாத்யா (பெங்காலி), ஈஷா தடாவாலா (குஜராத்தி), டோங்பிரம் அமர்ஜித் சிங் (மணிப்பூரி), துஷ்யந்த் ஜோஷி (ராஜஸ்தானி), முனி ராஜ்சுந்தர் விஜய் (சமஸ்கிருதம்) ஆகியோர் உள்ளிட்டவர்களின் 10 கவிதை தொகுப்புகள் யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வு  செய்யப்பட்டுள்ளன. 2 நாவல்கள், ஒரு நாடகம் ஆகியவையும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    குழந்தைகளுக்கான பால் சாகித்ய புரஸ்கார் விருதுகளைப் பொருத்தவரை, தமிழகத்தைச் சேர்ந்த கிருங்கை சேதுபதி எழுதிய சிறகு முளைத்த யானை என்ற கவிதைத் தொகுப்புக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விருதானது தாமிரப் பட்டயம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். பால புரஸ்கார் விருதுகள், குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவ புரஸ்கார் விருது வழங்கும்தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. #SahityaAwards #SahityaAkademi #BalSahitya #YuvaPuraskar
    ×