என் மலர்
நீங்கள் தேடியது "எழுத்தாளர்கள் தேர்வு"
இந்த ஆண்டிற்கான பால சாகித்ய விருதுகள் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த கிருங்கை சேதுபதி, சுனீல் கிருஷ்ணன் ஆகியோர் விருது பெறுகின்றனர். #SahityaAwards #SahityaAkademi #BalSahitya #YuvaPuraskar
புதுடெல்லி:
இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு ‘யுவ புரஸ்கார்’ விருதையும் சிறுவர் இலக்கியத்துக்கான ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதையும் வழங்கி வருகிறது. இந்திய பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி இந்த ஆண்டிற்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 23 எழுத்தாளர்களுக்கு பால சாகித்திய விருதுகளும் 21 எழுத்தாளர்களுக்கு யுவ புரஸ்கார் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அம்பு படுக்கை என்ற சிறுகதையை எழுதிய தமிழகத்தைச் சேர்ந்த சுனீல் கிருஷ்ணனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆஸ்தீக் வாஜ்பேயி (இந்தி), சம்ரங்னி பந்தோபாத்யா (பெங்காலி), ஈஷா தடாவாலா (குஜராத்தி), டோங்பிரம் அமர்ஜித் சிங் (மணிப்பூரி), துஷ்யந்த் ஜோஷி (ராஜஸ்தானி), முனி ராஜ்சுந்தர் விஜய் (சமஸ்கிருதம்) ஆகியோர் உள்ளிட்டவர்களின் 10 கவிதை தொகுப்புகள் யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2 நாவல்கள், ஒரு நாடகம் ஆகியவையும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான பால் சாகித்ய புரஸ்கார் விருதுகளைப் பொருத்தவரை, தமிழகத்தைச் சேர்ந்த கிருங்கை சேதுபதி எழுதிய சிறகு முளைத்த யானை என்ற கவிதைத் தொகுப்புக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதானது தாமிரப் பட்டயம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். பால புரஸ்கார் விருதுகள், குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவ புரஸ்கார் விருது வழங்கும்தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. #SahityaAwards #SahityaAkademi #BalSahitya #YuvaPuraskar






