என் மலர்
நீங்கள் தேடியது "மாதவன்"
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் மாதவன், ரீமா சென் நடிப்பில், 2001ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி வெளியான திரைப்படம் மின்னலே.
இளைஞர்கள் மத்தியில் இந்த படம் தனி இடத்தை பிடித்தது. நிச்சயமான பெண்ணுடன் ஏற்படும் காதல் கதையாக இந்த கதை உருவாகி இருக்கும்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்த பாடல்கள் அனைத்தும் ஹிட். மொத்தத்தில் இந்த படம் இன்று வரையிலும் எவர்கிரீன் படமாக மின்னலே உள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி (நேற்றோடு) இப்படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
இதைமுன்னிட்டு, மின்னலே' திரைப்படம் வரும் பிப்ரவரி 13ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது.
- அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.
- அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்
நடிகர் அஜித் குமார் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸிங் மீது காதல் கொண்டு பல சர்வதேச போட்டிகளில் அண்மைக் காலமாக கலந்துகொண்டு வருகிறார்.
ஸ்பெயின் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெற்ற ரேஸிங் போட்டிகளில் அவர் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.
அபுதாபி ரேஸிங் களத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தை நேரில் சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சென்று சந்தித்தனர்
இதை தொடர்ந்து, அஜித்தை துபாய் ரேஸிங் களத்தில் நடிகர் மாதவன் நேரில் சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
- பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன.
- மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன.
கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், கல்வி, பொது சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், பொதுவாழ்க்கையில் நீண்டகாலம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் மறைந்த நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகர் மம்மூட்டி, நடிகர் மாதவன் ஆகியோருக்கு 2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மேந்திர சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அல்கா யாக்னிக் (பாடகி) மற்றும் மம்மூட்டி ஆகியோருக்கு 'பத்ம பூஷண்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவன், பிரசென்ஜித் சட்டர்ஜி (நடிகர்) மற்றும் சதீஷ் ஷா (மறைந்த நகைச்சுவை நடிகர்) ஆகியோருக்கு 'பத்ம ஸ்ரீ' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவிற்கு முன்னதாக விருதுகள் அறிவிக்கப்பட்டாலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த ஆண்டின் பிற்பகுதியிலேயே குடியரசுத் தலைவர் மாளிகையில் பதக்கங்களை வழங்குவார்.
- சீமான் இயக்கத்தில், மாதவன் நடிப்பில் கடந்த 2006ல் 'தம்பி' படம் வெளியானது.
- பிப்ரவரி மாதம் தம்பி படத்தை திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீப காலமாக 90கள் மற்றும் 2000களின் ஹிட் படங்கள் பலவும் 4K தொழில்நுட்பத்தில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் ரீ ரிலீஸ் கலாச்சாரத்தில் சீமானின் 'தம்பி' படமும் இணைந்துள்ளது. சீமான் இயக்கத்தில், மாதவன் நடிப்பில் கடந்த 2006ல் வெளியான 'தம்பி' திரைப்படம் 20 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் தம்பி படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
- ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
- 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.
பாலிவுட்டில் ரன்வீர் சிங்கின் புதிய ஸ்பை திரில்லர் படமான 'துரந்தர்' இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
ரன்வீர் சிங் உடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, ஆர். மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' புகழ் ஆதித்ய தார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தக் கதை பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டது.
வெளியான ஒரு வாரத்திற்குள் இந்தியாவில் இந்தப் படம் ரூ. 200 கோடி நிகர வசூலைத் தாண்டியது. வளைகுடா நாடுகளை தவிர மற்ற வெளிநாட்டுச் சந்தைகளில் ரூ. 44.5 கோடியை வசூலித்தது.
இந்த படம் பாகிஸ்தானுக்கு எதிரான செய்தியைக் கொண்டிருப்பதாகக் கூறி ஆறு வளைகுடா நாடுகள் படத்தைத் தடை செய்துள்ளன.
பாலிவுட் படங்களுக்கு வளைகுடா பகுதி ஒரு முக்கியமான சந்தையாகும். இந்த சூழலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத், ஓமன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் படத்தின் கருப்பொருளை எதிர்த்து அதன் வெளியீட்டிற்கு அனுமதி மறுத்தனர்.
முன்னதாக 'ஃபைட்டர்', 'டைகர் 3', 'ஆர்டிகிள் 370' மற்றும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' போன்ற படங்களும் கடந்த காலங்களில் வளைகுடா நாடுகளில் இதேபோன்ற தடைகளைச் சந்தித்துள்ளன.
- இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
- இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் புதிய படத்தில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
'ஓஹோ எந்தன் பேபி' பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. போஸ்டரில் அடையாளம் தெரியாத அளவுக்கு வயதான தோற்றத்துடன் ஜி.டி.நாயுடுவின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாதவன் காணப்பட்டார். இப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இந்த நிலையில், 'ஜி.டி.என்' படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பை தடையின்றி முடித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ளது.
- தெய்வத் திருமகள் சாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுஆர்ஐ தி சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் இயக்குகிறார். இப்படம் அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி உள்ளது.
இப்படத்தில் இவருடன் சஞ்சய் தத், அக்ஷயே கண்ணா, அர்ஜுன் ரம்பல், மாதவன் மற்றும் தெய்வத் திருமகள் சாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
படத்திற்கு சச்தேவ் இசையமைத்துள்ளார். மேலும் ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா மற்றும் லோகேஷ் தர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
- இப்படத்தில் அவந்திகா மிஸ்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதவன், கங்கனா ரனாவத் இணைந்து நடித்த படம் 'Tanu Weds Manu Returns'. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'சர்க்கிள்'.
'சர்க்கிள்' இதற்கு முன்பு பார்த்திராத ஒரு அசாதாரண உளவியல் த்ரில்லர் படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் அவந்திகா மிஸ்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எ.எல். விஜய் இயக்கி உள்ள இப்படத்தை ட்ரைடென்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஊட்டி, சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத்தில் படமாக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 'சர்க்கிள்' படம் தசரா பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் மாதம் வெளியாகிறது.
- காதல், ஆக்ஷனில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
- வித்யாசாகர் இசையில் உருவான பாடல்களும் ஹிட் ஆனது.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜயின் 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
அந்த வரிசையில், மாதவன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற 'ரன்' திரைப்படம் மீண்டும் வெளியாக உள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்து வெளியான படம் 'ரன்'. காதல், ஆக்ஷனில் உருவான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் வித்யாசாகர் இசையில் உருவான பாடல்களும் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு 'ரன்' திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் விரைவில் வெளியாகும் என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
- இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார்.
- ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் அடுத்ததாக துரந்தர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுஆர்ஐ தி சர்ஜிகல் ஸ்டிரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தர் இயக்குகிறார். ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் அதிரடி ஆக்ஷன் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் இவருடன் சஞ்சய் தத், அக்ஷயே கண்ணா, அர்ஜுன் ரம்பல், மாதவன் மற்றும் சாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
படத்தின் இசையை சச்தேவ் இசையமைத்துள்ளார். மேலும் ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா மற்றும் லோகேஷ் தர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
- நான் பள்ளியில் படித்தபோது, பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி 4 பாடங்கள் இருந்தன.
- சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றி ஒரே ஒரு பாடப் பகுதி மட்டுமே இருந்தது.
மத்திய அரசின் புதிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய கவுன்சில் எனப்படும் NCERT-ன் 7-ம் வகுப்புக்கான புத்தகங்களில் இருந்து முகலாயர்கள் மற்றும் சுல்தான்கள் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது.
தற்போது திருத்தப்பட்ட புத்தகங்களில் இந்த பாடங்கள் அடியோடு நீக்கப்பட்டுள்ளன. தற்போது 7-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இந்திய அரசுகளான, மகதப் பேரரசு தொடங்கி சாதவாகனர்கள் ஆட்சி வரையான பாடங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த பகுதியில் சோழர்கள், பாண்டியர்கள் அரச வம்சங்கள் குறித்த பாடங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
NCERT புத்தகத்தில் முகலாயர்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது பற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் மாதவன் கூறியதாவது:
நான் பள்ளியில் படித்தபோது, பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி 4 பாடங்கள் இருந்தன. ஆனால் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றி ஒரே ஒரு பாடப் பகுதி மட்டுமே இருந்தது.
800 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் குறித்து விரிவான பாடங்கள் இடம்பெற்ற நிலையில், 2 ஆயிரத்து 400 ஆண்டுகளாக ஆட்சி செய்த சோழர்கள் குறித்து ஏன் விரிவாக பாடப்புத்தகத்தில் இடம்பெறவில்லை. இந்த பாடத்திட்டத்தை யார் தீர்மானித்தது? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
- ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் டெஸ்ட்.
- இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.
'விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் டெஸ்ட். இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் ஆராய்ச்சியாளராகவும், நயன்தாரா மாதவனின் மனைவி மற்றும் ஆசிரியராகவும் நடித்து இருக்கிறார்கள்.
இந்த மூன்று பேரும் தங்களுக்கு கிடைத்த இறுதி வாய்ப்பை தவறவிடாமல் நிரூபிக்க போராடுபவர்களாக நடித்து அசத்தி இருக்கிறார்கள். ஆராய்ச்சிக்காக எதையும் செய்ய துணியும் கதாபாத்திரத்தில் மாதவன் அட்டகாசப்படுத்தி உள்ளார். மனைவி நயன்தாராவுடன் காதல், சித்தார்த்தை மிரட்டும் காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
பாசமான மனைவியாக நயன்தாரா கவருகிறார். அவரது அழகான சிரிப்பும், ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும் ரசிக்க வைத்து இருக்கிறது. கிரிக்கெட் வீரராக வரும் சித்தார்த், நேர்த்தியான நடிப்பால் சிலிர்க்க வைக்கிறார். கிரிக்கெட்டுக்காக அவர் செய்யும் விஷயங்கள் எதார்த்தம்.
கிரிக்கெட் போட்டியை களமாக கொண்டு இயக்கி இருக்கிறார் இயக்குனர் சஷிகாந்த். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கான முயற்சியை கடைசி வரை மேற்கொள்ள வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆனால் படத்தின் திரைக்கதை மெதுவாக செல்வது பலவீனமாக அமைந்துள்ளது. திரைக்கதை விறுவிறுப்பாக இருந்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.






