search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரணம்"

    • முதல்வர் நிதிஷ் குமார் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    பீகாரில் கடந்த சில வாரங்களாக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தொடர்பான சம்பவங்களில் மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    அதிகபட்சமாக மதுபானியில் 6 பேர், அவுரங்காபாத்தில் 4 பேர், பாட்னாவில் 2 பேர், ரோஹ்தாஸ், போஜ்பூர், கைமூர், சரண், ஜெகனாபாத், கோபால்கஞ்ச், சுபால், லக்கிசராய் மற்றும் மாதேபுரா மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர் என்று சிஎம்ஓ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    நீரில் மூழ்கிய சம்பவங்களில் ஒன்பது பேர், ஃபதேபூர் மற்றும் பிரதாப்கரில் தலா மூன்று பேர், எட்டாவில் இருவர் மற்றும் பண்டாவில் ஒருவர். அமேதி மற்றும் சோன்பத்ராவில் பாம்பு கடித்ததால் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில் இருந்து மழை மற்றும் மின்னல் தொடர்பான சம்பவங்களில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் நிதிஷ் குமார் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் மற்றும் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    மோசமான வானிலையின் போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும், தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், அவ்வப்போது பேரிடர் மேலாண்மைத் துறையின் அறிவுரைகளைப் பின்பற்றவும் அவர் மக்களை வலியுறுத்தினார்.

    பாட்னா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அத்துடன், கிஷன்கஞ்ச், அராரியா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    வியாழனன்று, தங்களது வகுப்பறைக்கு அருகில் இருந்த பனை மரத்தில் மின்னல் தாக்கியதை அடுத்து பர்கா காவ்ன் கிராமத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    • அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறியதோடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.
    • இருவர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் அந்த குடோன் அறை பலத்த சேதம் அடைந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறியதோடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதற்கிடையே வெடி மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரா புரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 45), முத்துமுருகன் (45) ஆகிய 2 பேரும் உடல் சிதறியும், கருகியும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இந்த கோர விபத்தில் சரோஜா (55), சங்கரவேல் (54) ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    சிவகாசி அடுத்த காளையார் குறிச்சி வெடி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    சிவகாசி பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிவாரணமும், விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபர்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணமும் வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    • உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
    • எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அக்கறையற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு காளையார்குறிச்சி, சிதம்பராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர். அவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் குடோன் அமைந்துள்ள அறையில் வெடி மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் அந்த குடோன் அறை பலத்த சேதம் அடைந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் அனைத்தும் வெடித்து சிதறியதோடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதற்கிடையே வெடி மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிதம்பரா புரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 45), முத்துமுருகன் (45) ஆகிய 2 பேரும் உடல் சிதறியும், கருகியும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இந்த கோர விபத்தில் சரோஜா (55), சங்கரவேல் (54) ஆகிய 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.

    விபத்து ஏற்பட்டதும் அங்கு பணியில் இருந்த மற்ற தொழிலாளர்கள் பட்டாசு ஆலையை விட்டு பதறியடித்து கொண்டு வெளியில் ஓடினர். மேலும் அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் எம்.புதுப் பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் சிவகாசி உள்ளிட்ட அருகில் உள்ள ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலைக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டன. அத்துடன் பலியான மாரியப்பன், முத்துமுருகன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்ததாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

    படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண உடல்நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    விருதுநகர் மாவட்டத்தின் பட்டாசு ஆலைகளில் தொடர்ச்சியாக வெடிவிபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து நானும் பல்வேறு முறை சுட்டிக்காட்டி வந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அக்கறையற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தரப்பரிசோதனை மேற்கொள்வதுடன், வெடிவிபத்தை தடுப்பதற்கான புதிய கொள்கை வடிவமைத்து செயல்படுத்துமாறும் விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.
    • கூட்டநெரிசலில் திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அலறல் அந்த பகுதியையே ஆட்கொண்டுள்ளது.

    விபத்தில் சிக்கிய தனி நபர்களின் கதைகள் மனதை ரணமாக்குவதாக உள்ளன. டிரக்கில் கிடத்தப்பட்ட 6 சடலங்களுக்கு மத்தியில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் பெண் ஒருவர் அங்கு உள்ள தனது குழந்தையின் உடலை வெளியே எடுக்க உதவி கேட்டு அழுகிறார். படுகாயமடைந்த பலர் மருத்துவமனை நுழைவிடத்தில் கிடத்தப்பட்டு சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.

    அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட போதுமான வசதிகள் அங்கு இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. படுகாயமடைந்தவர்கள்  ஓருவர் மீது ஒருவர் உயிரிழந்த உடல்களைப் போல் கிடக்கும் காட்சிகள் காண்போரை கலங்கடிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு  மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அறிவித்திருக்கும் நிலையில் முதலில், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    கூட்ட நெரிசலில் உயிர்பிழைத்தவர்கள் சொல்லும் விவரங்கள் மேலும் அதிர்ச்சியூட்டுகின்றன. நிகழ்ச்சி முடிந்ததும் போலே பாபா அமர்ந்திருந்த இடத்தின் காலடி மண்ணை எடுக்க பலர் காத்திருந்தனர். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோதே திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தனது தாய், மனைவி, 16 வயது மகள் ஆகிய மூவரையும் இழந்த வினோத் என்பவர் கூறுகையில், 'நான் அனைத்தையும் இழந்து நிற்கிறேன். அவர்கள் வெளியே ஒன்றாக வெளியே சென்றனர் என்பது மட்டுமே எனக்கு தெரியும், ஆனால் இங்கே வந்தது தெரியாது. இந்த விபத்தை கேள்விப்பட்டு அவர்கள் இங்கே வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வந்து தேடியபோது எனது மனைவி மகள் உடல்களை கண்டெடுத்தேன். எனது தாயின் உடல் கிடைக்கவே இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

    மகளைத் தொலைத்த தாய் ஒருவர் கூறுகையில், எனது மகளால் பேச முடியாது அழ மட்டுமே முடியும் அவளை எங்கு தேடியும் இந்த இடத்தில்  கண்டுபிடிக்கமுடியவில்லை என்று தேடியபடி செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறார்.

    குழந்தைகளை இழந்த தாய்மார்கள், தாய்மார்களை இழந்த குழந்தைகள் என பலர் இந்த சம்பவத்தில் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளனர். பல வருடங்களாக போலே பாபாவின் சத்சங்கத்தை கேட்க வந்துகொண்டிருந்தவர்களே இந்த கூட்டத்தில் அதிகம். இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போலே பாபா தலைமறைவாகியுள்ளார் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். 

    • லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.
    • மோசமான வானிலையால் ஏற்பட்ட திடீர் குலுக்கலில் ஒருவர் உயிரிழந்தார்.

    லண்டன்:

    லண்டனில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலையால் கடும் குலுக்கலை எதிர்கொண்டது. நடுவானில் நிலைதடுமாறி குலுங்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

    இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தது. இதனால் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார் என தெரிவித்தது.

    இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை.

    இந்நிலையில், கடந்த மாதம் நடந்த விமான குலுக்கலில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

    சிறிய காயங்கள் உள்ள பயணிகளுக்கு 10,000 டாலர் வழங்கப்படும். கடுமையான காயங்கள் உள்ளவர்கள் தங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பைப் பற்றி விவாதிக்கலாம். கடும் காயங்களுக்கு ஆளாகி இருப்பதாக மருத்துவ ரீதியாக மதிப்பிடப்பட்ட பயணிகளுக்கு நீண்டகால மருத்துவ பராமரிப்பு தேவை மற்றும் நிதி உதவி கோரும் அவர்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய 25,000 டாலர் முன்பணமாக வழங்கப்படும். பயணிகள் அனைவருக்கும் விமானச்சீட்டுக்கான முழுத்தொகை திருப்பித் தரப்படும் என தெரிவித்துள்ளது.

    • சொத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.
    • எனது ஆவணங்கள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்பட்டதாக ஜூனியர் என்டிஆர் கூறினார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர், 24 கோடி மதிப்பு சொத்து விவகாரம் தொடர்பாக நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

    ஜூப்லி ஹில்ஸ், ரோடு எண். 75ல் உள்ள 681 சதுர முற்றம் கொண்ட இந்த சொத்தை, ஜூபிலி ஹில்ஸ் ஹவுசிங் சொசைட்டியைச் சேர்ந்த சுங்கு கீதா லட்சுமி என்பவரிடமிருந்து ஜூனியர் என்டிஆர் 2003ல் ரூ.36 லட்சத்திற்கு வாங்கினார். இப்போது நடிகர் கட்டிய ஆடம்பரமான வீட்டை உள்ளடக்கிய இந்த நிலம் தற்போதைய சந்தை விலை சதுர அடிக்கு ரூ. 3.5 லட்சம் என்ற நிலையில் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், சொத்து விவகாரத்தில் முந்தைய உரிமையாளரின் உறவினர்கள் போலி ஆவணங்களை உருவாக்கி வங்கிகளில் கடன் பெற்றதாக அவர் குற்றம்சாட்டினார். வங்கிகள் டிஆர்டியை அணுகியதை அடுத்து, சொத்தை கையகப்படுத்துவதற்கான உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.

    இந்நிலையில், இந்த சொத்து தொடர்பான நிலத் தகராறில் நிவாரணம் கோரி ஜூனியர் என்டிஆர் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

    இதுகுறித்து ஜூனியர் என்டிஆர் கூறுகையில், "வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட உரிமை ஆவணங்கள் மற்றும் என்னிடம் உள்ள உரிமை ஆவணங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன, மேலும் எனது ஆவணங்கள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்பட்டது. அனைத்து வங்கியாளர்கள் மீதும் தற்போது குற்ற வழக்குகள் உள்ளன" என்றார்.

    • செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது
    • இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிறுநாகலூர் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சிறுநாகலூர் கிராமம். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று 12.3.2024 தொழுப்பேடுவிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக மோதியது.

    அந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மதுராந்தகம் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் தனுஷ் (வயது 21) த.பெ. முனியப்பன். கமலேஷ் (வயது 19) த.பெ. முருகேசன் மற்றும் மோனிஷ் (வயது 19) த.பெ. சிவகுமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிழிந்தனர் மேலும் இவ்விபத்தில் திரு ரவிச்சந்திரன் (வயது 20) த.பெ. குணசேகரன் என்பவர் மதுராந்தகம் அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும். வேதனையுமடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்களின் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடுசெய்ய முடியாத இந்தப் பேரிழப்பு நம் அனைவருக்கும் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது உயிரிழந்த மாணவர்களின் பெற்றோருக்கு தலா இரண்டு இலட்சம்ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • படுகொலை விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
    • உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி காணாமல் போன ஆர்த்தி என்கிற 9 வயது சிறுமி கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்து சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சந்தித்து பேசினர்.

    குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியில் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் தரப்பில் கோரப்பட்டது.

    உடலை வாங்க மறுத்த நிலையில், பெற்றோர் உடன் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும், சிறுமியின் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்க முதல்வர் ரங்கசாமியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

    • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இதில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன.

    இதற்கிடையே, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 ஆண்கள், 4 பெண்கள் அடங்குவர்.

    இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் வெம்பம்கோட்டை பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    • தீ விபத்தில் 11 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • அரவிந்த் கெஜ்ரிவால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

    டெல்லி மாநிலம் அலிபுர் தயால்பூர் மார்க்கெட்டில் உள்ள பெயின்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இதில், 11 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்பு பணியில் ஈடுட்ட போலீசார் உள்பட நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். 

    பின்னர், விபத்து குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

    தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக மிகுந்த கவலை அடைகிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். சிறிய காயம் அடைந்தோரும் தலா ரூ.20 ஆயிரமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும்.

    தீ விபத்தில் சேதடைந்த கடைகளுக்கும், வீடுகளுக்கும் அரசு கொள்கையின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.

    மேலும், தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இதில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. குடியிருப்பு பகுதியில் இந்த தொழிற்சாலை எப்படி இயங்கியது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். விரைவில் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.
    • வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக கடந்த 3 மற்றும் 4 தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.

    இதில் பொதுமக்களின் உடமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகையை அறிவித்து வழங்கியது.

    இந்நிலையில் அதே டிசம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் 2 மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இரண்டு மாவட்டங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.6 ஆயிரம், குறைந்த பாதிப்புக்கு உள்ளான இடங்களுக்கு ரூ.1000 நிவாரண தொகையை தமிழக அரசு வழங்கியது.

    அந்த சமயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக மழை வெள்ள பாதிப்பு பற்றி எடுத்துக்கூறினார்.

    தமிழகத்தில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிவாரணத் தொகையாக ரூ.37,907.19 கோடி வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

    ஆனால் இதுவரை மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண தொகையை இன்னும் ஒதுக்கவில்லை.

    இதனால் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்து வதற்காக உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு முடிவு செய்தது.

    அமித் ஷாவை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாறும் குழு கேட்டுக் கொண்டனர்.

    அதன்படி டெல்லியில் தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் குழுவை சந்திக்க உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து உள்ளார். அமித்ஷாவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

    அமித்ஷாவை சந்திக்கும் குழுவில் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஜெயக்குமார் (காங்கிரஸ்), வைகோ (ம.தி.மு.க.), சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்டு), பி.ஆர்.நடராஜன் (இந்திய மார்க்சிஸ்ட்), ரவிக்குமார் (வி.சி.க), நவாஸ்கனி (முஸ்லிம் லீக்), சின்ராஜ் (கொங்குநாடு மக்கள் கட்சி) ஆகிய 8 பேர் அமித்ஷாவை சந்திக்க செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து டி.ஆர்.பாலு எம்.பி. கூறுகையில், வெள்ள நிவாரணம் தொடர்பாக போதுமான நிதி வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். அதை வலியுறுத்துவதற்காக உள்துறை மந்திரி அமித்ஷாவை நாளை அவரது வீட்டில் சந்திக்க உள்ளோம் என்றார்.

    • கனமழை, வெள்ளத்தால் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
    • மீட்பு பணிகள் பெரும்பாலும் முடிந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்படைந்த தாலுகா பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதிகளுக்கு ரூ.1000 நிவாரண தொகையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி டோக்கன்கள் வழங்கப்பட்டு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    மேலும், டோக்கன் பெற்றவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    ×