என் மலர்
நீங்கள் தேடியது "நிவாரணம்"
- நேற்றிரவு திடீரென இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் மற்றும் தார்பாய் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பெரியநாயகிபுரம் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன்.
இவர் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு திடீரென இவரது வீடு தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் போராடி தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து, தகவலறிந்த நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் மற்றும் தார்பாய் வழங்கி ஆறுதல் கூறினார்.
மேலும், அரசால் வழங்கப்படும் உதவித்தொகை, வேஷ்டி, சேலை, அரிசி ஆகியவற்றையும் வழங்கினார்.
இதேபோல், தாசில்தார் காரல்மார்க்ஸ், துணை தாசில்தார் ஜோதிபாசு, வி.ஏ.ஒ. முருகானந்தம், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், கவுன்சிலர் ரமேஷ்குமார் ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
- மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு நிவாரண உதவி வழங்குகிறது.
- நிவாரணத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி இன்று தொடங்கும்.
சென்னை:
தமிழகத்தில் கடல் மீன்வளத்தைப் பேணி காப்பதற்காக 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசு நிவாரண உதவி வழங்குகிறது. அவ்வகையில், இந்த ஆண்டு 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தலா 5000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக ரூ.89.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 1.79 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறும். அரசு நிதி ஒதுக்கியதையடுத்து, மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி இன்று தொடங்கும்.
- விஷ சாராயம் குடித்து பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
- வெடி விபத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.
மன்னார்குடி:
முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ., மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் சாராய சாம்ராஜ்யம் கொடிகட்டி பறப்பது காவல்துறையினரின் தற்போதைய சாராயம் பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கையில் இருந்து தெரிய வருகிறது.
காவல்துறையின் முறையான நடவடிக்கை இல்லாத காரணத்தினால் தான் விஷசாராயம் அருந்தி இவ்வளவு பேர் உயிரிழந்து உள்ளனர்.
விஷ சாராயம் குடித்து பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
அதே நேரத்தில் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் நிகழ்ந்த வெடி விபத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.
இது ஒரு தவறான முன்னுதாரணம்.
ஸ்ரீரங்கத்தில் பாடசாலையில் படித்த மன்னார்குடியை சேர்ந்த 2 மாணவர்கள் உள்ளிட்ட 3 இளம் மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் அரசின் சார்பில் அறிவிக்கப்படாதது வருத்தத்தையும், வேதனையும் அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
நான் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதால்தான் தொடர்ந்து 3 முறை நன்னிலம் பகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகிறேன்.
எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக்கூடிய தெம்பு உள்ளவன் நான்.
பொதுச்செ யலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் கூட்டு என்பது ஜீரோவுடன் ஜீரோ சேர்ந்தால் ஜீரோ என்பதுதான்.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், நகர செயலாளர் ஆர்.ஜி.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது.
- தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
சிவகாசி
விருதுநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல், முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சிவகாசி அருகே ஊராம்பட்டியில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
ஆனால் இது போதாது. ரூ.500-க்கும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பட்டாசு தொழிலாளர்கள் இறந்துள்ளதால் அவர்களின் குடும்பம் போதிய வருமானம் இன்றி தவிக்கும். எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.
சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கியதைபோல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறக்கும் தொழிலாளர்களுக்கும் இனி வரும் காலங்களில் அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
- இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட உத்தரவு.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் கைது செய்யப்பட்டு உள்ளார். இதில் தொடர் புடைய இதர குற்றவாளி களைத் தேடும் பணியும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது.
மேலும், இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மணிப்பூரில் இதுவரை நடந்த கலவரங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு, 53 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள மெய்டீஸ் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிராக பழங்குடி மாணவர்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
கடந்த 3ம் தேதியன்று மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும், மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
வீடுகள், வாகனங்கள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டனர். மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டது. மணிப்பூரில் இதுவரை நடந்த கலவரங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வன்முறையில் உயிரிழந்த 60 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.
மேலும் வன்முறையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
- மின்வாரிய பணி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
- குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.7.5 லட்சம் நிவாரண தொகையும் வழங்க வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீராநல்லூர் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் அரவிந்தராஜ்(வயது22).
இவர் மின்சார வாரியத்தில் கடந்த இரண்டரை வருடமாக ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இவர் சீர்காழி அருகே உள்ள பழையாறு சுனாமி நகரில் மின்வாரிய பணி செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
இறந்த அரவிந்த்ராஜின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் புதிய பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவரது உயிரிழப்பிற்க்கு மின்வாரிய ஊழியர்களின் அலட்சியமே காரணம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன், சாலை மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் பங்கேற்ற அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் ரூ.7.5 லட்சம் நிவாரண தொகையும் வழங்குவதாக உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
- வைகை ஆற்றில் மூழ்கி பலியான 3 பேர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
- இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார்.
மதுரை
மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் 3-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பார்வையற்றோ ருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனியில் நடைபெற்றது.
அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலா ளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-
வைகை நதிக்கரையில் கள்ளழகர் ஆற்றிலே இறங்கி மக்களுக்கு அருளாசி வழங்கிய நிகழ்வு மதுரை யிலே சீரும் சிறப்போடும் நடைபெற்றது. இந்த நிகழ்விலே பல்வேறு பாது காப்பு நடவடிக்கைக ளையும் தாண்டி துரதிஷ்ட வசமாக 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த ஒரு சம்பவம் நடந்தது வருந்தத்தக்கது. இதில் ஒருவர் மூச்சுதிணறி உயிரிழந்துள்ளார். எனவே இவர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
2 ஆண்டுகளில் தி.மு.க. சாதனை செய்ததாக முதல் -அமைச்சர் ஸ்டாலின் பறைசாற்றி கொள்கிறார்.ஆனால் இதிலே நாம் ஆராய்ந்து பார்த்தால் இந்த 2 ஆண்டுகளிலே தி.மு.க. அரசு சாதித்ததை காட்டிலும் சரிக்கியது தான் அதிகம்.இன்றைய தி.மு.க. அரசு வெற்றி பெற்றது 30 சதவீதம் என்றால், தோல்வி பெற்றது 70 சதவீதமாக உள்ளது.
எம்.ஜி.ஆர். 5-வது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்திக் காட்டினார். அவருடைய வழியில் ஜெயலலிதா வெற்றி மாநாட்டை நடத்தினார். உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரையில் நடைபெறும். உலக பிரசித்தி பெற்ற சித்தரை திருவிழா அதேபோன்று மதுரையிலே ஆகஸ்ட் 20-ந் தேதி நடை பெறும். அ.தி.மு.க. மாநாடு இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடத்தி காட்டுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூரை வீடு மின் கசிவால் தீப்பற்றி முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது.
- ரூ.5 ஆயிரம் நிவாரணம், காய்கறி மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கினார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே சொக்கநாதபுரம் ஒத்தக்கடையில் கூலித் தொழிலாளியான நடேசன் என்பவரின் கூரை வீடு மின் கசிவால் தீ பற்றி எரிந்து முற்றிலும் நாசமாகிவிட்டது.
இதனை அறிந்த பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு அறிவுறுத்தலின் படி, பேராவூரணி தெற்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ நேரில் சென்று பாதிக்கப்ப ட்டவர்களுக்கு ஆறுதல் கூறி ரூபாய் 5000 நிவாரணத் தொகையும், காய்கறி மற்றும் அரிசி வழங்கினார்.
இந்நிகழ்வில் கட்டையங்காடு ஒன்றிய கவுன்சிலர் கவிதா செல்வ குமார், சொக்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராம் பிரசாத், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வராசு, முன்னாள் மாநில கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன் கூட்டுறவு சங்க தலைவர் வே.கூத்தலிங்கம், இளைஞரணி செயலாளர் கே.எஸ்.வினோத் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் எஸ்.சத்யராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- புதுப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் சுப்பிரமணியன் என்பவர் காளை குத்தி உயிரிழந்தார்.
- மின்செல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நவநீதகிருஷ்ணன் என்பவரின் வயிற்றில் காளை குத்தி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூர் கிராமத்தில் அரியநாயகி அம்மன் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்ளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது.
மஞ்சுவிரட்டில் களைகள் அவிழ்த்துவிடப்பட்டது. இதில் சீறிப்பாய்ந்த காளைகள் வீரர்களிடம் பிடிப்படாமல் தப்பி ஓட முயற்சித்தன. அப்போது, புதுப்பட்டியை சேர்ந்த பார்வையாளர் சுப்பிரமணியன் என்பவர் காளை குத்தி உயிரிழந்தார்.
இதேபோல், மஞ்சுவிரட்டு போட்டியில் படுகாயம் அடைந்த நபரை மீட்க சென்ற மின்செல் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நவநீதகிருஷ்ணன் என்பவரின் வயிற்றில் காளை குத்தி உயிரிழந்தார்.
இந்நிலையில், மாடு முட்டி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பலியான சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.