என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு ரெயில்"

    • கோவை வரும் சிறப்பு ரெயில் ரேணிகுண்டா, பகலா, காட்பாடி ஆகிய மாற்றுப்பாதை வழியாக இயக்கப்படும்.
    • காச்சிகுடாவில் இருந்து வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-

    * ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06182), ரேணிகுண்டா, பகலா, காட்பாடி ஆகிய மாற்றுப்பாதை வழியாக இயக்கப்படும்.

    * அசாம் மாநிலம் திப்ருகாரில் இருந்து வருகிற 8-ந்தேதி இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் (22504), 1 மணி நேரம் 45 நிமிடம் தாமதமாக புறப்படும்.

    * காச்சிகுடாவில் இருந்து வருகிற 10-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17652), 1 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடைபெறுகிறது.
    • அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    இந்நிலையில், தைப்பூச நிகழ்வை ஒட்டி அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
    • ரெயில் மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

    முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, கடந்த சில நாட்களாக பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.

    ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் பக்தர்கள் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரெயில் ஒன்று இயக்கிட வேண்டும் என்ற ரெயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை மறு நாள்(சனிக்கிழமை) சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து தாம்பரத்திற்கு வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடி வந்தடைகிறது.

    மொத்தம் 20 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள இந்த ரெயில் நாளை மறுநாள் நள்ளிரவு 11.50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள்(சனிக்கிழமை) நண்பகல் 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடைகிறது.

    இதேபோல் மறுமார்க்கமாக வருகிற 1-ந்தேதி இரவு 11.55 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள்(2-ந்தேதி) காலை 10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. இந்த ரெயிலால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு திரும்புகிறார்கள். காலையில் இருந்து பஸ் மற்றும் ரெயில்களில் பயணத்தை தொடர முன்பதிவு செய்துள்ளனர். 19-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்கப்படுவதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு தயாராகி வருகின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. கூடுதலாக சிறப்பு ரெயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. 18-ந்தேதி மாலை 5 மணிக்கு இந்த சிறப்பு ரெயில் (எண்.06160 ) புறப்பட்டு மறுநாள் (திங்கள்கிழமை) அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த அதிவேக சிறப்பு ரெயில் வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. 

    • தெற்கு ரெயில்வே ஏற்கனவே 34 சிறப்பு ரெயில்களை அறிவித்தது.
    • ரெயில்களில் எல்லாம் இடங்கள் நிரம்பிவிட்டதால் மேலும் 10 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடச் சொல்லும் பொதுமக்கள் வசதிக்காக தெற்கு ரெயில்வே ஏற்கனவே 34 சிறப்பு ரெயில்களை அறிவித்தது.

    குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிக்கும் தென் மாவட்ட பகுதி மக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக அறிவிக்கப்பட்ட இந்த ரெயில்களில் எல்லாம் இடங்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன.

    ஒரு சில ரெயில்களில் ஏசி படுக்கைகள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. இதேபோல கோவை மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்களும் நிரம்பி விட்டதால் கூடுதலாக 10 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த சிறப்பு ரெயில்களில் 8 ரெயில்கள் தென் மாவட்டங்களுக்கு விடப்பட்டுள்ளது. சென்னை-திருநெல்வேலி இடையே 6 ரெயில்களும், சென்னை-தூத்துக்குடி இடையே 2 ரெயில்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போல சென்னை சென்ட்ரல்-போத்தனூர் இடையே 2 சிறப்பு ரெயில்களும் அறிவிக்கட்டு இருக்கிறது.

    கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள 10 சிறப்பு ரெயில்களில் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 8 ரெயில்களுக்கு இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.

    அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் 2 ரெயில்கள் பகல் நேரத்தில் அமர்ந்து செல்லக் கூடிய கூடியது. திருநெல்வேலி-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் 13 மற்றும் 20-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு பகல் 2 மணிக்கு வந்து சேர்கிறது. இந்த ரெயில் அன்று பிற்பகல் 3 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலிக்கு அதிகாலை 2 மணிக்கு சென்றடைகிறது.

    இந்த சிறப்பு ரயிலில் ஏசி சேர் கார், சாதாரணமாக உட்கார்ந்து செல்லக்கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி இதில் இல்லை. இதே போல 14-ந் தேதி திருநெல்வேலி-செங்கல்பட்டு இடையே பகல் நேர சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி-தாம்பரம் இடையே 12 மற்றும் 19-ந் தேதி பகல் நேர படுக்கை வசதி சிறப்பு ரெயிலும் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல்-தூத்துக்குடி இடையே 12 மற்றும் 19-ந் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. தூத்துக்குடி-சென்ட்ரல் இடையே 13 மற்றும் 20-ந் தேதி இயக்கப்படும் சிறப்பு ரெயில் அரக்கோணம், காட்பாடி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை வழியாக செல்கிறது.

    இந்த 8 ரெயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சிறப்பு ரெயில்களில் முன்பதிவு செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். ஆன்லைன் வழியாகவும், ஏஜென்சி மூலமாகவும் டிக்கெட்டை பெறுவதில் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஒரு சிலர் மட்டுமே ரெயில் நிலையங்களில் அதிகாலையிலேயே வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றனர்.

    தெற்கு ரெயில்வே இந்த ஆண்டு தென் மாவட்டங்களுக்கு அதிக ரெயில்களை இயக்கி வருவது சிறப்பாகும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் ரெயில்களில் எப்படியாவது பயணம் செய்ய டிக்கெட் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

    ஒரே நாளில் சேரும் வகையில் பகல் நேர ரெயில்கள் விடப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நெல்லையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை நெல்லை சென்றடைகிறது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி, ஜனவரி 12,13,19 மற்றும் 20ம் தேதிகளில் நெல்லையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    நெல்லையில் இருந்து 12, 19ம் தேதிகளில் அதிகாலை 12.30க்கு புறப்படும் சிறப்பு ரெயில் பிற்பகல் 1.30க்கு தாம்பரம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மறுமார்க்கத்தில் பிற்பகல் 4.40 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 8 மணிக்கு நெல்லை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லையில் இருந்து 13, 20ம் தேத அதிகாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு ரெயில் பிற்பகல 2 மணிக் தாம்பரம் செல்லும் என கூறப்பட்டுள்ளது.

    மறுமார்க்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை நெல்லை சென்றடைகிறது.

    நெல்லையில் இருந்து 14ம் தேதி அதிகாலை 3.45க்கு புறப்படும் சிறப்பு ரெயில் பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு செல்கிறது.

    மறுமார்க்கத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 2 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    • ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந் தேதி மாலை புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் மதியம் நாகர்கோவில் சென்றடையும்.
    • வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை செகந்திராபாத் சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- மங்களூரு, ஈரோடு-நாகர்கோவில், செந்திராபாத்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    கர்நாடக மாநிலம் மங்களூரு ஜங்சனில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 30-ந்தேதி காலை 3.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06126), அதேநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து வருகிற 24, 31 ஆகிய தேதிகளில் காலை 4.15 மணிக்கு புறப்பட்டு மங்களூரு ஜங்சன் செல்லும் சிறப்பு ரெயில் (06125), அதேநாள் இரவு 11.30 மணிக்கு மங்களூரு ஜங்சன் சென்றடையும்.

    இதேபோல, ஈரோட்டில் இருந்து நாளை மற்றும் 30-ந் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06025), மறுநாள் மதியம் 1.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வருகிற 24,31 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் சிறப்பு ரெயில் (06026), மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு சென்றடையும்.

    மேலும், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் சிறப்பு ரெயில் (07407), மறுநாள் மாலை 5.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 25-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு செகந்திராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (07408), மறுநாள் காலை 6.10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை தாம்பரம் வந்தடையும்.
    • தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் மறுநாள் நெல்லை சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நெல்லை-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நெல்லையில் இருந்து வருகிற 28, ஜனவரி 4 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06166), கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வருகிற 29, ஜனவரி 5 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (06165), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
    • திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், நாளை காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாரவிடுமுறையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சில சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * நாகர்கோவிலில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06011), மறுநாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    * திருவனந்தபுரத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06108), நாளை காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கமாக, எழும்பூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) மதியம் 1.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06107), மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொல்லத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பர் 7, 14, 21, ஜனவரி 11, 18, 2026) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும்.
    • பயணிகளின் வசதிக்காக ஆந்திரா மற்றும் கேரளா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (எண்.07103/07104) இயக்கப்படும் என கடப்பா ரெயில்வே முதுநிலை வணிக ஆய்வாளர் ஏ.ஜனார்தன் தெரிவித்துள்ளார் .

    இந்த ரெயில் வெள்ளிக்கிழமைகளில் (டிசம்பர் 5, 12, 19 மற்றும் ஜனவரி 9, 16, 2026) காலை 11 மணிக்கு மச்சிலிப்பட்டினத்தில் இருந்து புறப்படும். அதிகாலை 3.25 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும்.

    இது அதே நாளில் இரவு 10 மணிக்கு காட்பாடி, ஜோலர்பேட்டை வழியாக கொல்லத்தை அடையும். கொல்லத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பர் 7, 14, 21, ஜனவரி 11, 18, 2026) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும். அதே நாளில் இரவு 9.50 மணிக்கு ரேணிகுண்டாவையும், 10.36 மணிக்கு கோடூரையும், 11.08 மணிக்கு ராஜம்பேட்டையையும், 11.53 மணிக்கு கடப்பாவையும் சென்றடையும்.

    இது நள்ளிரவு 12.28 மணிக்கு எர்ரகுன்லாவையும், மதியம் 12.53 மணிக்கு புரோட்டாத்தூரையும் சென்றடையும். பயணிகளின் வசதிக்காக ஆந்திரா மற்றும் கேரளா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    • வரும் நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்.
    • சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    பௌர்ணமி கிரிவல நிகழ்வை ஒட்டி நவ.4ம் தேதி விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

    • பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • திருச்செந்தூரில் இருந்து நாளை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06135), மறுநாள் காலை 8 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரெயில் (06136), மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நேற்று (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×