என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்பந்து"

    • ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.
    • இந்த அன்பு இருக்கிறது என்று எனக்கு முன்பே தெரியும்.

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி தனது இன்டர் மியாமி அணியினருடன் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் வந்திருந்தனர்.

    இந்நிலையில் இன்றுடன் அவர்களின் பயணம் முடிவடைந்து அவர்கள் புறப்பட்டனர்.

    3 நாள் சுற்றுப்பயணத்தில் முதாவதாக கொல்கத்தாவில் தனது முழுஉருவ சிலையை திறந்து வைத்த பிறகு சால்ட்லேக் ஸ்டேடியத்திற்கு சென்ற மெஸ்ஸி அங்கு கூட்டம் அதிகம் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அங்கிரந்து சிறிது நேரத்தில் வெளியேறினார்.

    அவரை கண்குளிர பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்.

    அடுத்ததாக ஐதராபாத் சென்ற மெஸ்ஸி அங்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து ஆடினார்.

    இதனையடுத்து 2-வது நாள் பயணமாக அவர் நேற்று மும்பை சென்றார். அங்குள்ள வான்கடே ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.

    மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி உள்பட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

    மெஸ்ஸிக்கு தனது கையெழுத்திட்ட பனியனை நினைவுப் பரிசாக டெண்டுல்கர் வழங்கினார். இங்கு மெஸ்ஸி ஒரு மணி நேரம் செலவிட்டார்.

    இதனையடுத்து மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி சென்றார். மதியம் மும்பையில் இருந்து டெல்லி வந்தடைந்த மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

    மாலை 4 மணிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் 10வது எண் ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்தார்.

    மேலும் 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான டிக்கெட்டைப் பரிசாக வழங்கி, அவரைப் போட்டிகளை காண வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார்.

    நிகழ்வில் ஸ்பானிஷ் மொழியில் பேசிய மெஸ்ஸி, "நன்றி டெல்லி! விரைவில் சந்திப்போம்" என்று கூறியபோது அரங்கில் இருந்தவர்களிடமிருந்து பெரும் கரவொலி எழுந்தது.

    மெஸ்ஸி பேசியதாவது "இந்த நாட்களில் இந்தியாவில் நீங்கள் எங்களுக்குக் காட்டிய அனைத்து அன்புக்கும் நன்றி.

    இதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தது எங்களுக்கு உண்மையிலேயே ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது.

    இது தீவிரமானதாகவும் மிகக் குறுகியதாகவும் இருந்தபோதிலும், இந்த அன்பைப் பெற்றது அற்புதமாக இருந்தது.

    இந்த அன்பு இருக்கிறது என்று எனக்கு முன்பே தெரியும், ஆனால் அதை நேரடியாக அனுபவித்தது நம்பமுடியாததாக இருந்தது."

    இந்த நாட்களில் நீங்கள் எங்களுக்காகச் செய்த அனைத்தும் ஆச்சரியமாக இருந்தது. முற்றிலும் வியக்கத்தக்கது.

    எனவே, இந்த அன்புக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. நாங்கள் நிச்சயமாக ஒரு நாள் திரும்புவோம்.

    ஒருவேளை ஒரு போட்டியில் விளையாடுவதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திற்காகவோ.ஆனால் நாங்கள் நிச்சயமாகத் திரும்புவோம். நன்றி, நன்றி." என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே பனிமூட்டத்தால் மெஸ்ஸியின் விமானம் மும்பையில் இருந்து வர தாமதமானதாலும், பிரதமர் மோடி ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் கிளம்பியதாலும் அவர்கள் இருவரின் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • அவரை காண ரூ.5,000 முதல் ரூ.25,000 டிக்கெட் எடுத்து ரசிகர்கள் திரண்டனர்.
    • நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார்.

    அர்ஜன்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். முதற்கட்டமாக மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவுக்கு சென்றார்.

    இன்று அங்கு சால்ட் லேக் விவேகானந்தா யுவ பாரதி மைதானத்தில் மெஸ்ஸி வருகை தந்த நிலையில் அவரை காண ரூ.5,000 முதல் ரூ.25,000 டிக்கெட் எடுத்து ரசிகர்கள் திரண்டனர்.

    ஆனால் மைதானத்தில் மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் ஏராளமானோர் நின்றதால் அவரை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் பாட்டில்களை மைதானத்தில் வீசி அமளியில் ஈடுபட்டனர். போலீசார் தடையடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

    மெஸ்ஸி மைதானத்தில் 20 நிமிடங்கள் மட்டுமே இருந்துவிட்டு உடனே வெளியேறினார். இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரிய மேற்கு வங்க ஆளுநர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கால்பந்து சம்மேளனம் AIFF, "விவேகானந்தா யுவ பாரதி மைதானத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இது ஒரு தனியார் PR நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு.

    அதன் திட்டமிடல், மேலாண்மை அல்லது செயல்படுத்தலில் AIFF எந்தப் பங்கையும் கொண்டிருக்கவில்லை. இந்த நிகழ்வின் விவரங்கள் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை, மேலும் எங்களிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.  

    • நேற்று அல் நசார் மற்றும் அல் கலீஜ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
    • தனது 40 வயதில் 954வது கோலை BICYCLE KICK-ல் ரொனால்டோ அடித்துள்ளார்.

    போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

    நேற்று அல் நசார் மற்றும் அல் கலீஜ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ரொனால்டோ BICYCLE KICK-ல் மிகத் துல்லியமாக அடித்ததைக் கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    தனது 40 வயதில் 954வது கோலை BICYCLE KICK-ல் ரொனால்டோ அடித்துள்ளார். கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு, ரொனால்டோ ரியல் மேட்ரிட் அணிக்காக BICYCLE கிக்கில் கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
    • அர்மேனியா வுக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ விளையாடவில்லை

    2026 கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி அர்மேனியா அணியை எதிர்கொண்டது.

    இப்போட்டியில் போர்ச்சுகல் அணியில் கேப்டன் ரொனால்டோ விளையாடவில்லை. ஏனெனில் கடந்த போட்டியில் ரெட் கார்டு வாங்கியதால் இந்த போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    ரொனால்டோ இல்லாமல் களமிறங்கிய போர்ச்சுகல் அணி அர்மேனியாவை 9-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியால் போர்ச்சுகல் அணி உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்றது இதன் மூலம் 6வது முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளார்.

    • மெஸ்சி இதுவரை 895 கோல்கள் அடித்துள்ளார். 401 கோல்களை அடிக்க உதவியுள்ளார்.
    • ஐரோப்பா கண்டத்தில் தான் மெஸ்சி அதிகபட்சமாக 714 கோல்களை அடித்து உள்ளார்.

    ஆப்பிரிக்க கண்டத்தி்ல் உள்ள அங்கோலா நாட்டின் 50-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி உலக கால்பந்து சாம்பியனான அர்ஜென்டினா அணியை காச்சி கால்பந்து போட்டியில் விளையாட அழைக்கப்பட்டடு இருந்தது.

    இந்தப் போட்டியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி 44-வது நிமிடத்தில் கோலும் அடித்தார்.

    இதன்மூலம் ஆப்பிரிக்க மண்ணில் தனது முதல் கோல் அடித்து மெஸ்சி அசத்தினார். மொத்தமாக அவர் 895 கோல்கள் அடித்துள்ளார். 401 கோல்களை அடிக்க உதவியுள்ளார்.

    ஐரோப்பா கண்டத்தில் தான் மெஸ்சி அதிகபட்சமாக 714 கோல்களை அடித்து உள்ளார். ஸ்பெயினில் 624, பிரான்சில் 34, இங்கிலாந்தில் 9, ஜெர்மனி, சுவிட்சர்லாந்தில் தலா 6 கோல்களும் அடித்துள்ளார்.

    ஆசியாவில் 22 கோல்கள் அடித்துள்ளார். 2022 உலகக் கோப்பை நடந்த கத்தாரில் 8 கோல்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல், ஜப்பானில் தலா 3 கோல்களும் அடித்து உள்ளார்.

    அமெரிக்க கண்டத்தில் 156 கோல்கள் அடித்து உள்ளார். அமெரிக்காவில் 92, அர்ஜென்டினாவில் 37 கோல்கள் அடித்தார். கிளப் போட்டிகளில் அவரது சொந்த மண்ணில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
    • அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்

    போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், சவுதி கால்பந்து லீக்கில் அல் நசார் க்ளப்காக 100 கோல்கள் பங்களிப்பு (83 கோல்கள் + 17 Assists) செய்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்.

    இதன் மூலம் கால்பந்து வரலாற்றில் நான்கு வெவ்வேறு கிளப்புகளுக்காக 100 கோல்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

    கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம்.
    • விளையாட்டைத் தாண்டி இருவரும் கால்பந்து உலகின் ஐகானாக விளங்குகின்றனர்.

    கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி. இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். விளையாட்டைத் தாண்டி இவ்விருவர் உலக ஐகானாக விளங்குகின்றனர்.

    மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரர் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

    அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் பேசிய ரொனால்டோ, "உலக கோப்பை வெல்வது என் கனவு கிடையாது. வரலாற்றில் சிறந்த வீரரை வரையறுக்க உலக கோப்பை வேண்டுமா? ஒரு தொடரின் 6 அல்லது 7 போட்டிகளில் மட்டும் வென்றால் அவர் சிறந்த வீரர் என்பது நியாயம் என்று நினைக்கிறீர்களா? மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரரா? அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை" என்று தெரிவித்தார். 

    • 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் ரொனால்டோ பழக தொடங்கினார்
    • ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் - ரொனால்டோ ஜோடிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

    போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) கால்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.

    இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார்.

    திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் மோதிரம் மாற்றும் நிச்சயம் செய்துகொண்டனர்.

    2026 கால்பந்து உலக கோப்பை தொடர் முடிந்ததும் கோப்பையுடன் தனது காதலி ஜார்ஜினாவை திருமணம் செய்யவுள்ளதாக ரொனால்டோ அறிவித்துள்ளார். 

    • பரபரப்பான ஆட்டத்தில் பார்சிலோனாவை 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வீழ்த்தியது.
    • ரியல் மாட்ரிட் அணியில்ன் கைலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார்.

    லா லிகா லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வீழ்த்தியது.

    ரியல் மாட்ரிட் அணி சார்பில் கைலியன் எம்பாப்பே ஒரு கோலும், பெல்லிங்காம் ஒரு கோலும் அடித்தார். பார்சிலோனா அணிக்காக லோபஸ் ஒரு கோல் அடித்தார்.

    • 7-வது முறையாக துனிசியா உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
    • மொராக்கோ தகுதி பெற்ற நிலையில், 2ஆவது ஆப்பிரிக்க நாடாக தகுதி பெற்றுள்ளது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.

    இந்த நிலையில் 18-வது நாடாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு துனிசியா தகுதி பெற்றது. ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் துனிசியா, ஈக்வடோரியல் கினியா அணிகள் மோதின. மலாபோ நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் துனிசியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 94-வது நிமிடத்தில் முகமது பென் ரோம்தானே இந்த கோலை அடித்தார். இதன்மூலம் 'எச்' பிரிவில் 22 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்தது. துனிசியா உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

    7-வது முறையாக துனிசியா உலக கோப்பை போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதற்கு முன்பு 1978, 1998, 2002, 2006, 2018, 2022 ஆகிய உலக கோப்பையில் விளையாடி இருந்தது.

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தேர்வான 2-வது ஆப்பிரிக்க நாடு துனிசியாவாகும். மொராக்கோ பிறகு அந்த அணி தகுதி பெற்றுள்ளது.

    • சர்வதேச போட்டியில் முதன்முறையாக ஓமனை இந்தியா வீழ்த்தியுள்ளது.
    • பெனால்டி ஷூட் அவுட்டில் ஓமன் முதல் இரண்டு மற்றும் கடைசி வாய்ப்பை நழுவவிட்டது.

    CAFA Nations Cup கால்பந்து தொடர் தஜிகிஸ்தானில் உள்ள ஹிசோர் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஓமன் நாடுகள் தாங்கள் இடம் பிடித்த குரூப்பில் 2ஆம் இடம் பிடித்ததால், 3ஆவது மற்றும் 4ஆவது இடத்திற்கான போட்டியில் இன்று மோதின. இந்த போட்டி 1-1 என டிராவில் முடிவடைந்தது. இதனால் பொனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.

    மேற்கு ஆசிய நாடுகளில் அதிக தரவரிசையில் உள்ள நாட்டை முதன்முறையாக இந்தியா வீழ்த்தியுள்ளது. மேலும், சர்வதேச கால்பந்து போட்டியில் முதன்முறையாக ஓமனை வீழ்த்தியுள்ளது.

    பெனால்டி ஷூட்அவுட்டில் ஓமன் முதல் இரண்டு வாய்ப்புகளையும் நழுவ விட்டது. அதன்பின் கடைசி வாய்ப்பை குர்ப்ரீதி சிங் சந்து சிறப்பான முறையில் தடுத்ததால் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் லாலியான்ஜுயாலா சங்க்டே, ராகுல் பெகே, ஜிதின் எம்.எஸ். ஆகியோர் பெனால்டி ஷூட்அவுட்டில் கோல் அடித்தனர். அன்வர் அலி, உதண்டா சிங் ஆகியோர் மிஸ் செய்தனர்.

    ஓமனுக்கு எதிராக இந்தியா கடந்த 2000-த்தில் இருந்து 9 முறை மோதியுள்ளது. இதில் 6 முறை தோல்வியடைந்துள்ளது. 2021 மார்ச் மாதம் இரண்டு அணிகளும் கடைசியாக மோதின. இந்த போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.

    • போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர்.
    • கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

    போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஜோட்டாவின் மரணம் கால்பந்து உலகை உலுக்கியது.

    கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். லிவர்பூல் கிளப் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணியின் முக்கிய முன்கள வீரராக டியோகோ ஜோட்டா இருந்தவர். 28 வயதான அவர் 2019 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் UEFA நேஷன்ஸ் லீக்கை வென்ற போர்ச்சுகல் அணியில் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், டியாகோ ஜோட்டாவுக்கு போர்ச்சுகல் அணி வீரர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ ஜோட்டாவின் தந்தையை கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். .

    ×