என் மலர்
நீங்கள் தேடியது "கால்பந்து"
- செனகல் கால்பந்து சங்கத்துக்கு ரூ.5½ கோடியும், மொராக்கோ கால்பந்து சங்கத்துக்கு சுமார் ரூ.3 கோடியும் அபராதமாக விதித்துள்ளது.
- செனகல் தலைமை பயிற்சியாளர் பாப் தியாவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கேப்டவுன்:
நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த 18-ந்தேதி இரவு மொராக்கோவின் ரபாத் நகரில் நடந்தது. இதில் செனகல் அணி கூடுதல் நேரத்தில் கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
முன்னதாக கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடுவரிடம் வாக்குவாதம் செய்த செனகல் வீரர்கள் பயிற்சியாளரின் அறிவுறுத்தலின் பேரில் மைதானத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குழப்பத்தால் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. சமாதானத்திற்கு பிறகு மீண்டும் களம் திரும்பிய செனகல் வாகை சூடியது. ஆனால் ஆட்டத்தின் பாதியில் நடையை கட்டிய வீரர்களின் செயலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடுமையாக கண்டித்தது.
இந்த நிலையில் இது குறித்து விசாரித்த ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம், வீரர்களின் மோசமான நடத்தைக்காக செனகல் கால்பந்து சங்கத்துக்கு ரூ.5½ கோடியும், மொராக்கோ கால்பந்து சங்கத்துக்கு சுமார் ரூ.3 கோடியும் அபராதமாக விதித்துள்ளது.
மேலும் விளையாட்டின் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக செனகல் தலைமை பயிற்சியாளர் பாப் தியாவுக்கு 5 ஆப்பிரிக்க போட்டிகளில் பணியாற்ற தடையும், ரூ.92 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதே போல் ஒழுங்கீன செயலுக்காக செனகல் வீரர்கள் லிமன் என்டியாயே, இஸ்மைலா சர் ஆகியோருக்கு 2 ஆப்பிரிக்க போட்டிகளிலும், மொராக்கோ கேப்டன் அச்ரப் ஹாகிமிக்கு 2 போட்டிகளிலும், இஸ்மைல் சாய்பரிக்கு 3 போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
- உள்ளூர் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது.
- மைதானத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டது.
மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
மத்திய மெக்சிகோவின் மோரெலோஸ் மாநிலத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நேற்று இரவு உள்ளூர் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது.
அப்போது மைதானத்திற்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டது.
இந்தத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெக்சிகோவில் செயல்படும் இரண்டு போதைப்பொருள் கடந்த கும்பல்களுக்கு இடையே இருந்த மோதலே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
- நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் செனகல்- மொராக்கோ அணிகள் மல்லுக்கட்டின.
- கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கினார்
ரபாத்:
நேஷன்ஸ் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் மொராக்கோவின் ரபாத் நகரில் நடந்தது. இதில் செனகல்- மொராக்கோ அணிகள் மல்லுக்கட்டின. தொடக்கம் முதலே பரபரப்பாக நகர்ந்த ஆட்டத்தில் வழக்கமான நேரத்தில் எந்த அணியினரும் கோல் போடவில்லை.
கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கினார். இது ஒருதலைபட்சமான முடிவு என்று எதிர்ப்பு தெரிவித்த செனகல் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
அத்துடன் மைதானத்திற்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சர்ச்சையால் 14 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது. பிறகு ஒரு வழியாக சமாதானம் அடைந்த செனகல் வீரர்கள் மீண்டும் களம் திரும்பினர்.
பெனால்டி வாய்ப்பில் மொராக்கோ வீரர் பிராஹிம் டியாஸ் அடித்த ஷாட்டை செனகல் கோல் கீப்பர் எடுவர்டோ மென்டி எளிதில் தடுத்தார். தொடர்ந்து கூடுதல் நேரத்தில் செனகல் வீரர் பாப் கியே கோல் போட்டு அசத்தினார்.
முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் செனகல் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை சொந்தமாக்கியது. ஆனால் ஆட்டத்தில் பாதியில் நடையை கட்டிய வீரர்களின் செயலை வன்மையாக கண்டித்துள்ள சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் இன்பான்டினோ இது போன்ற சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். செனகல் அணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
- FIFA கால்பந்து கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
- இந்த கோப்பை 3 நாட்கள் இந்தியாவில் இருக்க உள்ளது
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.
இந்நிலையில், உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக FIFA உலகக்கோப்பை இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்தியாவில் FIFA கால்பந்து கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
உலகக் கோப்பை வென்ற முன்னாள் பிரேசில் வீரரும் ஃபிஃபா ஜாம்பவானுமான கில்பர்டோ டி'சில்வா மற்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா ஆகியோர் முன்னிலையில் நடந்த விழாவில் கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது.
உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த கோப்பை 3 நாட்கள் இந்தியாவில் இருக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அணி நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
- போட்டி தொடர்பாக சில மாதங்களாக நீடித்த குழப்பம் ஒரு வழியாக இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியை செப்டம்பர் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் போட்டியை நடத்தும் கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்துக்கும், இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கும் இடையே ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் உடன்பாடு ஏற்படாததால் ஐ.எஸ்.எல். போட்டியை நிறுத்தி வைப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது.
இதையடுத்து பிரச்சனையை தீர்க்க மத்திய விளையாட்டு அமைச்சகம் தலையிட்டது. அணி நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போட்டி தொடர்பாக சில மாதங்களாக நீடித்த குழப்பம் ஒரு வழியாக இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதன்படி 2025-26-ம் ஆண்டுக்கான ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந்தேதி தொடங்கும் என்றும், இதில் மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் உள்பட 14 கிளப் அணிகளும் பங்கேற்கும் என்றும் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அறிவித்தார்.
- ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.
- இந்த அன்பு இருக்கிறது என்று எனக்கு முன்பே தெரியும்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி தனது இன்டர் மியாமி அணியினருடன் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் வந்திருந்தனர்.
இந்நிலையில் இன்றுடன் அவர்களின் பயணம் முடிவடைந்து அவர்கள் புறப்பட்டனர்.
3 நாள் சுற்றுப்பயணத்தில் முதாவதாக கொல்கத்தாவில் தனது முழுஉருவ சிலையை திறந்து வைத்த பிறகு சால்ட்லேக் ஸ்டேடியத்திற்கு சென்ற மெஸ்ஸி அங்கு கூட்டம் அதிகம் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அங்கிரந்து சிறிது நேரத்தில் வெளியேறினார்.
அவரை கண்குளிர பார்க்க முடியாத ஆத்திரத்தில் ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்.
அடுத்ததாக ஐதராபாத் சென்ற மெஸ்ஸி அங்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் கால்பந்து ஆடினார்.
இதனையடுத்து 2-வது நாள் பயணமாக அவர் நேற்று மும்பை சென்றார். அங்குள்ள வான்கடே ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரசிகர்கள் கூட்டத்தால் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது.
மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கால்பந்து நட்சத்திரம் சுனில் சேத்ரி உள்பட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
மெஸ்ஸிக்கு தனது கையெழுத்திட்ட பனியனை நினைவுப் பரிசாக டெண்டுல்கர் வழங்கினார். இங்கு மெஸ்ஸி ஒரு மணி நேரம் செலவிட்டார்.
இதனையடுத்து மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி சென்றார். மதியம் மும்பையில் இருந்து டெல்லி வந்தடைந்த மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
மாலை 4 மணிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் 10வது எண் ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்தார்.
மேலும் 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான டிக்கெட்டைப் பரிசாக வழங்கி, அவரைப் போட்டிகளை காண வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார்.

நிகழ்வில் ஸ்பானிஷ் மொழியில் பேசிய மெஸ்ஸி, "நன்றி டெல்லி! விரைவில் சந்திப்போம்" என்று கூறியபோது அரங்கில் இருந்தவர்களிடமிருந்து பெரும் கரவொலி எழுந்தது.
மெஸ்ஸி பேசியதாவது "இந்த நாட்களில் இந்தியாவில் நீங்கள் எங்களுக்குக் காட்டிய அனைத்து அன்புக்கும் நன்றி.
இதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தது எங்களுக்கு உண்மையிலேயே ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது.
இது தீவிரமானதாகவும் மிகக் குறுகியதாகவும் இருந்தபோதிலும், இந்த அன்பைப் பெற்றது அற்புதமாக இருந்தது.
இந்த அன்பு இருக்கிறது என்று எனக்கு முன்பே தெரியும், ஆனால் அதை நேரடியாக அனுபவித்தது நம்பமுடியாததாக இருந்தது."
இந்த நாட்களில் நீங்கள் எங்களுக்காகச் செய்த அனைத்தும் ஆச்சரியமாக இருந்தது. முற்றிலும் வியக்கத்தக்கது.
எனவே, இந்த அன்புக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. நாங்கள் நிச்சயமாக ஒரு நாள் திரும்புவோம்.
ஒருவேளை ஒரு போட்டியில் விளையாடுவதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திற்காகவோ.ஆனால் நாங்கள் நிச்சயமாகத் திரும்புவோம். நன்றி, நன்றி." என்று தெரிவித்தார்.
இதற்கிடையே பனிமூட்டத்தால் மெஸ்ஸியின் விமானம் மும்பையில் இருந்து வர தாமதமானதாலும், பிரதமர் மோடி ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் கிளம்பியதாலும் அவர்கள் இருவரின் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அவரை காண ரூ.5,000 முதல் ரூ.25,000 டிக்கெட் எடுத்து ரசிகர்கள் திரண்டனர்.
- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார்.
அர்ஜன்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். முதற்கட்டமாக மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவுக்கு சென்றார்.
இன்று அங்கு சால்ட் லேக் விவேகானந்தா யுவ பாரதி மைதானத்தில் மெஸ்ஸி வருகை தந்த நிலையில் அவரை காண ரூ.5,000 முதல் ரூ.25,000 டிக்கெட் எடுத்து ரசிகர்கள் திரண்டனர்.
ஆனால் மைதானத்தில் மெஸ்ஸியை சுற்றி அதிகாரிகள் ஏராளமானோர் நின்றதால் அவரை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் பாட்டில்களை மைதானத்தில் வீசி அமளியில் ஈடுபட்டனர். போலீசார் தடையடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
மெஸ்ஸி மைதானத்தில் 20 நிமிடங்கள் மட்டுமே இருந்துவிட்டு உடனே வெளியேறினார். இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரிய மேற்கு வங்க ஆளுநர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கால்பந்து சம்மேளனம் AIFF, "விவேகானந்தா யுவ பாரதி மைதானத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இது ஒரு தனியார் PR நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு.
அதன் திட்டமிடல், மேலாண்மை அல்லது செயல்படுத்தலில் AIFF எந்தப் பங்கையும் கொண்டிருக்கவில்லை. இந்த நிகழ்வின் விவரங்கள் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை, மேலும் எங்களிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.
- நேற்று அல் நசார் மற்றும் அல் கலீஜ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
- தனது 40 வயதில் 954வது கோலை BICYCLE KICK-ல் ரொனால்டோ அடித்துள்ளார்.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று அல் நசார் மற்றும் அல் கலீஜ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ரொனால்டோ BICYCLE KICK-ல் மிகத் துல்லியமாக அடித்ததைக் கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
தனது 40 வயதில் 954வது கோலை BICYCLE KICK-ல் ரொனால்டோ அடித்துள்ளார். கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு, ரொனால்டோ ரியல் மேட்ரிட் அணிக்காக BICYCLE கிக்கில் கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
- அர்மேனியா வுக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ விளையாடவில்லை
2026 கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி அர்மேனியா அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் போர்ச்சுகல் அணியில் கேப்டன் ரொனால்டோ விளையாடவில்லை. ஏனெனில் கடந்த போட்டியில் ரெட் கார்டு வாங்கியதால் இந்த போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
ரொனால்டோ இல்லாமல் களமிறங்கிய போர்ச்சுகல் அணி அர்மேனியாவை 9-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் போர்ச்சுகல் அணி உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்றது இதன் மூலம் 6வது முறையாக கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளார்.
- மெஸ்சி இதுவரை 895 கோல்கள் அடித்துள்ளார். 401 கோல்களை அடிக்க உதவியுள்ளார்.
- ஐரோப்பா கண்டத்தில் தான் மெஸ்சி அதிகபட்சமாக 714 கோல்களை அடித்து உள்ளார்.
ஆப்பிரிக்க கண்டத்தி்ல் உள்ள அங்கோலா நாட்டின் 50-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி உலக கால்பந்து சாம்பியனான அர்ஜென்டினா அணியை காச்சி கால்பந்து போட்டியில் விளையாட அழைக்கப்பட்டடு இருந்தது.
இந்தப் போட்டியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி 44-வது நிமிடத்தில் கோலும் அடித்தார்.
இதன்மூலம் ஆப்பிரிக்க மண்ணில் தனது முதல் கோல் அடித்து மெஸ்சி அசத்தினார். மொத்தமாக அவர் 895 கோல்கள் அடித்துள்ளார். 401 கோல்களை அடிக்க உதவியுள்ளார்.
ஐரோப்பா கண்டத்தில் தான் மெஸ்சி அதிகபட்சமாக 714 கோல்களை அடித்து உள்ளார். ஸ்பெயினில் 624, பிரான்சில் 34, இங்கிலாந்தில் 9, ஜெர்மனி, சுவிட்சர்லாந்தில் தலா 6 கோல்களும் அடித்துள்ளார்.
ஆசியாவில் 22 கோல்கள் அடித்துள்ளார். 2022 உலகக் கோப்பை நடந்த கத்தாரில் 8 கோல்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல், ஜப்பானில் தலா 3 கோல்களும் அடித்து உள்ளார்.
அமெரிக்க கண்டத்தில் 156 கோல்கள் அடித்து உள்ளார். அமெரிக்காவில் 92, அர்ஜென்டினாவில் 37 கோல்கள் அடித்தார். கிளப் போட்டிகளில் அவரது சொந்த மண்ணில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
- அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்
போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், சவுதி கால்பந்து லீக்கில் அல் நசார் க்ளப்காக 100 கோல்கள் பங்களிப்பு (83 கோல்கள் + 17 Assists) செய்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்.
இதன் மூலம் கால்பந்து வரலாற்றில் நான்கு வெவ்வேறு கிளப்புகளுக்காக 100 கோல்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம்.
- விளையாட்டைத் தாண்டி இருவரும் கால்பந்து உலகின் ஐகானாக விளங்குகின்றனர்.
கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி. இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். விளையாட்டைத் தாண்டி இவ்விருவர் உலக ஐகானாக விளங்குகின்றனர்.
மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரர் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் பேசிய ரொனால்டோ, "உலக கோப்பை வெல்வது என் கனவு கிடையாது. வரலாற்றில் சிறந்த வீரரை வரையறுக்க உலக கோப்பை வேண்டுமா? ஒரு தொடரின் 6 அல்லது 7 போட்டிகளில் மட்டும் வென்றால் அவர் சிறந்த வீரர் என்பது நியாயம் என்று நினைக்கிறீர்களா? மெஸ்ஸி என்னை விட சிறந்த வீரரா? அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை" என்று தெரிவித்தார்.






