என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய கிரிக்கெட் அணி"
- எனது விளையாட்டை என்னால் ரசிக்க முடியவில்லை.
- மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக நெருக்கடியை உணர்ந்தேன்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆல்-ரவுண்டராக வலம் வந்த யுவராஜ்சிங், 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த உலகக் கோப்பையின் தொடர்நாயகனாக (362 ரன் மற்றும் 15 விக்கெட்) ஜொலித்தார். அதன் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் அதில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடினார்.
2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி அணியில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெற்றார்.
இந்த நிலையில் தனது ஓய்வுக்கான காரணத்தை 7 ஆண்டுக்கு பிறகு யுவராஜ்சிங் வெளிப்படுத்தியுள்ளார். முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் யூடியூப் சேனலில் கலந்துரையாடிய போது யுவராஜ்சிங் பேசுகையில், 'எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி பகுதியில் அணியில் எனக்கு உரிய மரியாதையும், ஆதரவும் கிடைக்கவில்லை.
எனது விளையாட்டை என்னால் ரசிக்க முடியவில்லை. தேவையான ஆதரவும், மரியாதையும் இல்லாத போது ஏன் தொடர்ந்து விளையாட வேண்டும்? யாருக்காக, எதை நிரூபிப்பதற்காக விளையாட வேண்டும்? என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. இதைவிட மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக நெருக்கடியை உணர்ந்தேன். கிரிக்கெட் தான் எனது வாழ்வின் முக்கியமானதாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அதுவே சுமையானது. கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த பின்னரே, அந்த சுமை விலகி பழைய நிலைக்கு திரும்பினேன் ' என்றார்.
- பி.சி.சி.ஐ என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் சங்கம்.
- பணம் சம்பந்தப்பட்டிருப்பதால் சில சமயங்களில் வால் நாயை ஆட்டுவிக்கிறது என்பதுதான் இங்கிருக்கும் பிரச்சனை.
"பி.சி.சி.ஐ-ஆல் நடத்தப்படும் கிரிக்கெட் அணியை 'டீம் இந்தியா'என்றோ அல்லது 'இந்திய தேசிய கிரிக்கெட் அணி' என்றோ அழைப்பதற்கு பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதிக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று விமர்சித்த உச்சநீதிமன்றம், தேவையற்ற வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றங்களின் சுமையைக் கூட்டுவதாகவும் மனுதாரரை கண்டித்தது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் ரீபக் கன்சல் தாக்கல் செய்த பொதுநல மனுவை நிராகரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் டெல்லி உயர் நீதிமன்றமே முன்மாதிரியான அபராதம் விதித்திருக்க வேண்டும் என்றும், "உயர் நீதிமன்றம் அபராதம் விதிக்காதது நியாயமற்றது. முன்மாதிரியான அபராதம் விதிக்கப்படவில்லை என்றால், இது போன்ற தேவையற்ற மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வருவதை எப்படி நிறுத்துவது?" என்று அந்த அமர்வு கேள்வி எழுப்பியது. மேலும், மனுதாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க நீதிமன்றம் முற்பட்டது. ஆனால் மனுதாரரின் வழக்கறிஞர் விடுத்த தொடர் கோரிக்கைகளை ஏற்று அந்த அபராதத்தைத் தள்ளுபடி செய்தது.
விசாரணையின்போது மனுமீது கேள்விகளை அடுக்கிய உச்ச நீதிமன்றம்,
"இது நீதிமன்றத்தின் நேரத்தையும், உங்கள் நேரத்தையும் அப்பட்டமாக வீணடிக்கும் செயலாகும். இது என்ன மாதிரியான வாதம்? அந்த அணி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்கிறீர்களா? எல்லா இடங்களுக்கும் சென்று விளையாடும் அந்த அணி, நாட்டைப் பற்றி தவறாகச் சித்தரிக்கிறதா? பி.சி.சி.ஐ-யை விட்டுவிடுங்கள், தூர்தர்ஷனோ அல்லது வேறு ஏதேனும் அதிகார அமைப்போ அதை 'டீம் இந்தியா' என்று காட்டினால், அது இந்திய அணி இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது.
இதனிடையே பி.சி.சி.ஐ-க்கு ஆதரவாக மத்திய அரசு இருப்பதாக தெரிவித்த நீதிபதி பாக்சி, "மத்திய அரசு இங்கே வந்திருந்தால் ஒரு பிரச்சனை இருந்திருக்கும், ஆனால் பி.சி.சி.ஐ-க்கு மிகச்சிறந்த ஆதரவு உள்ளது. இப்போது பரவலான கட்டுப்பாடு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பணம் சம்பந்தப்பட்டிருப்பதால் சில சமயங்களில் வால் நாயை ஆட்டுவிக்கிறது என்பதுதான் இங்கிருக்கும் பிரச்சனை.
பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன?
பி.சி.சி.ஐ என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் சங்கம். அது ஒரு தேசிய விளையாட்டு கூட்டமைப்பாகவோ அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(h)-ன் கீழ் ஒரு "பொது அதிகார அமைப்பாகவோ" அங்கீகரிக்கப்படவில்லை. மேலும் இந்திய அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லாத நிலையில், பி.சி.சி.ஐ அணியை 'டீம் இந்தியா' அல்லது 'இந்திய தேசிய அணி' என்று குறிப்பிடுவது பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது.
இந்த நடைமுறையானது தவறான சித்தரிப்புக்கு சமமானதாகும். மேலும் இது தேசியப் பெயர், தேசியக் கொடி மற்றும் சின்னங்களின் பயன்பாட்டை முறைப்படுத்தும் 'சின்னங்கள் மற்றும் பெயர்கள் (தவறான பயன்பாடு தடுப்பு) சட்டம், 1950' மற்றும் 'இந்தியக் கொடி விதிமுறை, 2002' ஆகியவற்றை மீறும் வாய்ப்புள்ளது. என தெரிவிக்கப்பட்டிருந்தது.
டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
"இந்த அணி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்கிறீர்களா? எல்லா இடங்களுக்கும் சென்று இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அணியை, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா? அது 'டீம் இந்தியா' இல்லையா? அது 'டீம் இந்தியா' இல்லை என்றால், ஏன் இல்லை என்பதை எங்களுக்குத் தயவுசெய்து விளக்குங்கள்," என்று நீதிபதி துஷார் ராவ் கெடேலா கேள்வி எழுப்பினார்.
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயாவும் இந்த வழக்கை அர்த்தமற்றது எனக் குறிப்பிட்டதோடு, "இது நீதிமன்றத்தின் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் அப்பட்டமாக வீணடிக்கும் செயலாகும். ஏதேனும் ஒரு விளையாட்டில் அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசிய அணியைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். காமன்வெல்த் போட்டிகள், ஒலிம்பிக் போன்றவற்றுக்குச் செல்லும் இந்தியக் குழுவினர் அவர்கள் அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? அவர்கள் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையா? ஹாக்கி, கால்பந்து, டென்னிஸ் என எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் சரி அது அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
- டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர வாய்ப்பில்லை.
- டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் கழற்றி விடப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனாக சுப்மன் கில் விளையாடி வருகிறார். சூர்யகுமார் யாதவுக்கு அடுத்து டி20 அணிக்கும் அவரை கேப்டனாக நியமிக்க டி20 அணியில் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய கில், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதனால் ஜனவரி மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் அதனை தொடர்ந்து வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சுப்மன் கில் கழற்றி விடப்பட்டார்.
டி20 உலக கோப்பை தொடர் முடிந்தவுடன் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடர வாய்ப்பில்லை. இதனால் அடுத்த டி20 அணியின் கேப்டனாக அக்ஷர் படேல் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஏனெனில் அவர் தான் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் டி20 உலககோப்பை அணிக்கான தொடரில் துணை கேப்டன். அதனால் அடுத்த கேப்டனாக அவர்தான் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அடுத்த இந்திய டி20 அணியின் கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட உள்ளார் என பிசிசிஐ-யின் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ரோகித் சர்மாவுக்கு பிறகு அவர் தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கபட உள்ள நிலையில் காயம் காரணமாக அவர் கேப்டனாக நியமிக்கபடவில்லை. பும்ரா காயத்தால் அடிக்கடி வெளியேறுவதால் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்து கில்லுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
தற்போது பும்ரா தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடுவதில்லை. குறிப்பாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் அதிக அளவில் பங்கேற்பதில்லை. உலககோப்பைக்காக டி20 தொடரில் மட்டும் அதிக அளவில் பங்கேற்கிறார். மேலும் பும்ரா அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் அவரை டி20 அணிக்கு கேப்டனாக நியமித்து பார்க்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
- DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
- போட்டி ஒன்றுக்கு ரூ.4.5 கோடி வீதம் அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது எனவும் கூறினார். இதனால் ஆசிய கோப்பை தொடரின் போது ஸ்பான்சர் இல்லாத ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தேர்வாகி உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.579 கோடிக்கு அப்போலோ டயர்ஸ் உரிமையை பெற்றுள்ளது.
போட்டி ஒன்றுக்கு ரூ.4.5 கோடி வீதம் அப்போலோ டயர்ஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
- DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
- இதனால் ஆசிய கோப்பை தொடரின் போது புதிய ஸ்பான்சர் ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கும்.
சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது எனவும் கூறினார்.
இதனால் ஆசிய கோப்பை தொடரின் போது புதிய ஸ்பான்சர் ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கும்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஸ்பான்சருக்கான போட்டி எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. இதில் முக்கியமாக டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் ஃபின்டெக் ஸ்டார்ட் அப் ஆகிய நிறுவனங்கள் டீம் இந்தியாவின் டைட்டில் ஜெர்சி ஸ்பான்சராக ஆர்வம் காட்டியுள்ளன.
- Dream 11 பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
- ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.
பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், புதிய ஆன்லைன் விளையாட்டுகள் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ட்ரீம் 11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிதி சார்ந்த நிறுவனங் களான ஜெரோகா, ஏஞ்சல் ஒன், குரோவ், ஆட்டோ மொபைல், எப்.எம்.சி.ஜி. செக்டார், ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமம் போன்ற நிறுவனங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஸ்பான்சருக்கான போட்டியில் உள்ளன.
- இந்திய மகளிர் அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை.
- ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை:
13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம், இந்தூரிலும், இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கிராந்தி கவுட், அமஞ்சோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யஸ்திகா (விக்கெட் கீப்பர்).
இந்திய மகளிர் அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை.
- 2023 ஆம் ஆண்டில் இந்திய அணி 35 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது.
மும்பை:
இந்தியாவில் இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான அணி சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மும்பையில் இன்று சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அழைப்பின் பேரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லட்சுமணன், ரோஜர் பின்னி, முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், 50 ஓவர் உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என உத்தேச பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 20 வீரர்களையும் இனிவரும் ஒரு நாள் போட்டிகளில் சுழற்சி முறையில் பயன்படுத்த பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை. அவரது கேப்டன்ஷிப் குறித்து அதிருப்தியான அம்சங்கள் எதையும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ரோகித் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரது கேப்டன்சி சாதனை சிறப்பாக உள்ளது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023 ஆம் ஆண்டில் இந்திய அணி 35 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு அறிவுறுத்தல்களை பிசிசிஐ வழங்கி உள்ளது. மேலும், வரும் ஐபிஎல் சீசனில் விளையாடுவதை தவிர்க்கும்படி முன்னணி வீரர்களுக்கு அறிவுறுத்தப்படலாம்.
- இலங்கைக்கு எதிரான நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
- இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கேரளா வந்துள்ளனர். இலங்கைக்கு எதிராக நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில் கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், கோயில் வெளியே இந்திய கிரிக்கெட் வீரர்கள் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- ரூ.350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம், பிசிசிஐ உடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.
- இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இருக்கும்.
இந்தியாவின் ஜெர்சியில் ஆரம்பம் முதல் சஹாரா என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பிறகு இந்திய அணியின் ஜெர்சியின் நிறமும் மாறிக் கொண்டே வந்தது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பைஜூஸ் எம்பிஎல், ஓப்போ ஆகிய நிறுவனங்கள் இந்திய அணியின் ஜெர்சிக்கு ஸ்பான்சராக இருந்தன.
கடந்த ஆண்டு எம்பிஎல் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து கில்லர் நிறுவனம் இந்திய அணிக்கு ஸ்பான்சராக இருந்தது. தற்போது அதனுடைய ஒப்பந்தம் முடிவடைய உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சிக்கு அடிடாஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
விளையாட்டுப் பொருட்களின் ஜாம்பவானான அடிடாஸுடன் பிசிசிஐ பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. எல்லாம் சரியாக நடந்தால், ஜூன் 1-ம் தேதிக்குள் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக அடிடாஸ் களமிறங்கும்.
ரூ.350 கோடிக்கு அடிடாஸ் நிறுவனம், பிசிசிஐ உடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்தியா டீம் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.65 லட்சம் பிசிசிஐக்கு வழங்கும். வரும் ஜூன் மாதம் அடிடாஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர் ஆரம்பமாகிறது. இந்த ஒப்பந்தம் வரும் 2028 ஆம் ஆண்டு வரையில் இருக்கும்.
- ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை.
ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
2023-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரை நடத்துவதாகவும், இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்துவதாகாவும் தகவல்கள் வெளியாகின.
ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு பதிலாக இலங்கையில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கான ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இந்திய வீரர்கள் வேற்றுகிரகவாசிகளா என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியதாவது:-
பாகிஸ்தானில் நிலைமை நன்றாக உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என மற்ற அணிகள் வந்தாலும், பாதுகாப்பு பிரச்சனை இல்லை என்றால், இந்தியாவுக்கு என்ன பிரச்சனை? காரணம் என்ன? அவர்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்த வேற்றுகிரகவாசிகளா?
ஐசிசி இந்த பிரச்சினைகளை கவனிக்க வேண்டும். பாகிஸ்தான் இல்லாமல் கிரிக்கெட் சாத்தியமில்லை. பாகிஸ்தான் ஒரு சிறிய அணி அல்ல. சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தது. இன்னும் முதல் மூன்று அணிகளில் ஒன்றாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
- இந்த காட்சியை அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரலை பார்த்து மகிழ்ந்தனர்.
சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது.
இந்த 'லேண்டர்', இன்று (புதன்கிழமை) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதனை தரையிறக்குவதற்கான ஆயத்த பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று மாலை 05:44 மணிக்கு தொடங்கினர். அதன்படி லேண்டரை தரையிறக்கும் ஒவ்வொரு நொடியும் பரபரத்தது. இறுதியில் சரியாக இன்று மாலை 06.04 மணிக்கு விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
இந்த காட்சியை அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரலை பார்த்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






