என் மலர்
வழிபாடு
- ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
- காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்தசஷ்டி விழா பிரசித்தி பெற்றதாகும். ஐப்பசி மாதம் 7 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகருக்கு காப்பு கட்டப்பட்டு, உற்சவர் சுப்பிரமணியசுவாமி தெய் வானைக்கு காப்பு கட்டப்பட்டது. உற்சவ நம்பியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 9 மணிக்கு மேல் கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்புகட்டப்பட்டது.
இதையொட்டி மதுரை மட்டுமல்லாது விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் தங்கி கந்தசஷ்டி விரதம் தொடங்கினார்கள். விழாவினை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை நடைபெறும்.
தினமும் இரவு 7 மணிக்கு தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி ஆறுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 17-ந் தேதி மாலை 6:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்ய கோவர்த்தன அம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 18-ந்தேதி சூரசம்ஹார லீலை நடைபெறும். திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சூரனை சுப்பிரமணியசுவாமி வதம் செய்யும் சூரசம்காரம் நடை பெறும்.
விழாவில் நிறைவு நாளான 19-ந்தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதி மற்றும் கிரி விதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பார். அன்று மாலை பாவாடை தரிசனம் நடைபெற்று மூலவர் சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.
- பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா
- பழனி கோவிலின் உபகோவில்களிலும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், கல்பபூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், மயில், வேல் மற்றும் நவவீரர்களுக்கு காப்புக்கட்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பழனி கோவிலின் உபகோவில்களிலும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனியில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவையொட்டி கோவில் யானை கஸ்தூரி அடிவாரத்தில் இருந்து யானைப்பாதை வழியே மலைக்கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி கோவில் யானை கஸ்தூரி யானைப்பாதை வழியே அசைந்தாடி சென்றதை தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் பார்த்து பரவசமுடன் வழிபட்டனர். நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
7 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் 6-ம்நாளான 18-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் சூரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவிலில் சின்னக்குமாரர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மலைக்கோவில் நடை சாத்தப்படுகிறது.
பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக சின்னக்குமாரர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் நவவீரர்களுடன் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் பாதவிநாயகர் கோவிலுக்கு வருகிறார். பின்னர் திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுத சுவாமியிடம் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் உள்ள ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது.
விழாவின் 7-ம் நாளில் மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்கு மாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
- வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா இன்று காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், யாக பூஜையை முன்னிட்டு அதிகாலை 5.40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலையில் எழுந்தருளினார்.
அங்கு காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கியது. 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடந்தது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேள வாத்தியங்கள் முழங்க சண்முக விலாசம் மண்டபம் சேர்தல் அங்கு தீபாராதனை நடைபெற்றது.
திருவிழா தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி தங்கள் விரதத்தை தொடங்கினர். பக்தர்கள் தங்கி விரதம் இருக்க கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் 26 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 35 ஆயிரம் பக்தர்கள் தங்கலாம்.
தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் ஆகி, அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவில் 2-ம் நாளில் இருந்து 5-ம் நாள் வரை (14 முதல் 17-ந்தேதிவரை) காலை 7 மணிக்கு யாகசாலையில் பூஜை ஆரம்பமாகும். பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, 12.45 மணிக்கு சண்முக விலாசம் வருதல், அங்கு தீபாராதனை நடக்கிறது.
பின்னர் சுவாமி அங்கி ருந்து மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபம் வருகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனைக்கு பிறகு கிரிவீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழா 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூபம் தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
அன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு யாகசாலை பூஜையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் வருதல், அங்கு தீபாராதனை நடைபெற்று பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் நடைபெற்று அதன் பின் சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழாவின் 7-ம்நாளான 19-ந்தேதி (ஞாயிறுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.
8-ம்நாளான 20-ந்தேதி (திங்கட்க்கிழமை) இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம் பல்லக்கிலும் பட்டின பிரவேசம் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
திருவிழா 9, 10, 11 ஆகிய 3 நாட்களும் (21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை) தினமும் மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி நடக்கிறது.
12-ம் திருவிழா வெள்ளிக்கிழமை 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்று, சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது. கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முரு கன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- தீபாவளி முடிந்ததும் சஷ்டி விரத காலம் ஆரம்பமாகும்.
- முருகப்பெருமான் சூரனை வதைத்த நாளே கந்தசஷ்டி எனப்படுகிறது.
தீபாவளி முடிந்ததும் சஷ்டி விரத காலம் ஆரம்பமாகும். இன்று (திங்கட்கிழமை) விரதம் தொடங்கி விட்டது. சஷ்டி விரதம் என்பது ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசையில் தொடங்கி சஷ்டி எனப்படும் வளர்பிறை ஆறாவது நாள் நிறைவுறும். முருகப்பெருமான் சூரனை வதைத்த நாளே கந்தசஷ்டி எனப்படுகிறது. சஷ்டியில் விரதமிருந்து அகப்பையாகிய கருப்பையில் கருவைத் தாங்கியோர்
ஏராளம். ஆறுமுகரை வழிபட்டால் வாழ்வில் எந்த குறையும் வராது. வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை' என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சரவணன் தரும் சந்தான செல்வத்தை குறை ஏதும் வராமல் காத்திடும் சஷ்டி தேவி பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது.
குமரேசன் தாள்பற்றி குழந்தைவரம் பெறலாம் என்றாலும், அன்னை சஷ்டிதேவியே பரிந்துரைத்து அந்த பாக்கியத்தை பெற்றுத்தருகிறாள் என்கின்றன புராணங்கள். குழந்தைகள் நலம்காக்கும் தாயாகத் திகழும் சஷ்டி தேவி யார்?
தோன்றிய விதம்:
சஷ்டி தேவி, முருகனது தேவியாகிய தெய்வானையின் அம்சமாகத் தோன்றியவள் என்றும், சஷ்டி தேவியே சண்முகனை மணக்க மனம்கொண்டு தேவசேனாவாக வடிவெடுத்தாள் எனவும் இருவிதமான கருத்துகள் உண்டு. அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் யுத்தம் நடந்த காலகட்டம். முருகப்பெருமான் தேவர்கள் படைத்தலைவனாக பொறுப்பேற்று வீரத்திருக்கோலம் பூண்டு களமாடினார்.
அந்த நேரத்தில் மருமகனான முருகனின் வீரத்தையும் அழகையும் கண்டு மகிழ்ந்த மகா விஷ்ணு ஆனந்தக்கண்ணீர் சிந்த அது ஒரு பெண்ணுருக் கொண்டது. பெருமாளின் ஆனந்தக்கண்ணீரில் இருந்து தோன்றியதால் மக்களுக்கு ஆனந்தத்தையும், நலத்தையும் அருள வல்லவள் என்று மகாலட்சுமியால் ஆசிர்வதிக்கப்பட்டாள் அந்தப் பெண். அமாவாசை முடிந்த ஆறாம் நாள் தோன்றியதால் இவளுக்கு சஷ்டி என்றே பெயர் சூட்டப்பட்டது.
வெள்ளையானையான ஐராவதம் அப்பெண் குழந்தையைக் கண்டு எடுத்துவந்து தேவேந்திரனிடம் அளிக்க, இந்திரனும், இந்திராணியும் சஷ்டி தேவியை தங்களது மகளாகப் பேணி வளர்த்தனர். மிகுந்த வீரம் உடைய சஷ்டி தேவி, தேவர்கள் படையில் இருந்து யுத்தம் செய்தாள். அசுர கணங்கள் தோல்வி அடைந்து ஓடின.
வெற்றியைக் கொண்டாடும் விதமாக சரவணனுக்கு மாலைகள் சூட்டி, 'அரோகரா' என்று கோஷமிட்டு வாழ்த்தினார்கள் அனைவரும், தேவர்கள் யாவரும் தத்தமது பரிசுகளை வழங்கி வாழ்த்திய சமயத்தில் இந்திரன், தனது மகளான சஷ்டி. என்கிற தேவ சேனாவை குமரக் கடவுளுக்குத் திருமணம் செய்து தருவதாகக் கூறினார். முருகனுக்கு மிகவும் பிரியமானவள் சஷ்டி. போர்க்கோலத்தில் இருந்த சஷ்டியை மணப்பெண்ணாக அலங்கரித்தாள் மகாலட்சுமி தேவி, தேவர்சேனையில் இணைந்து போரிட்டதால், சஷ்டி தேவிக்கு `தேவசேனா' என்ற பெயரும் வந்தது என்றொரு புராணக்கதை சொல்கிறது.
பொன்னாபரணங்கள், அழகான ரத்தினக் கிரீடம், இடுப்பிலே பல மணிகள் கொண்ட மேகலை, புயங்களிலே தோள் வளைகள், கைகளிலே வைர நவமணி வளையல்கள், கால்களில் அழகான வெள்ளிக் கொலுசுகள் என அணிந்து அழகே உருவாக நின்ற தேவசேனாவின் வளைக்கரத்தை தனது தெய்வீக திருக்கரத்தால் பற்றி திருமங்கல நாணிட்டு மாலைசூட்டி மணம் செய்து கொண்டார் மயில்வாகனன். இதை ஒட்டியே சூரசம்ஹார நிகழ்ச்சியின் நிறைவாக தெய்வானை திருக்கல்யாணம் நடத்தப்படும் வழக்கம் வந்தது.
சஷ்டி தேவியின் சிறப்பு:
மிகவும் பழமையான காலம் தொட்டே சஷ்டி தேவி வழிபாடு இருந்திருக்கிறது. இதனை பத்மபுராணம், யாக்ஞ் யவல்கிய ஸ்மிரிதி போன்ற நூல்கள் மூலமாக அறியலாம். பெண்களுக்கு குறிப்பாக கர்ப்பிணிகளுக்கும். அவர்களது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பவள் சஷ்டி தேவி. குழந்தைகள் கருவாக உருவாவது முதல், பதினாறு வயது வரும் வரை சஷ்டியின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், திருஷ்டி, தோஷம், பயக்கோளாறு போன்றவற்றை நீக்குபவள் சஷ்டி தேவியே. அவளது சிறப்பை விளக்க தேவி பாகவதத்திலும், வாயு புராணத்திலும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
பலப்பல யுகங்களுக்கு முன்னால் பிரியவிரதன் என்னும் ஓர் அரசன் இருந்தான். அவனது மனைவி மாலினி தேவி. இருவருக்கும் பலகாலமாகக் குழந்தைகள் இல்லை. பல முனிவர்களிடமும் குலகுருவிடமும் யோசனை கேட்டனர். அப்போது சுயம்புவமனு என்பவர் புத்திர காமேஷ்டி யாகத்தைப் பற்றிக் கூறினார். அப்படியே இருவரும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தனர். ஒவ்வொரு முறையும் மகாராணிக்கு குழந்தை பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை இறந்தே தான் பிறக்கும் இப்படியே பன்னிருமுறை நிகழ்ந்தது. அப்போது அங்கே வந்த யாக்ஞ் யவல்கிய மகரிஷி சஷ்டி தேவியின் பெருமைகளை அரசனுக்கும் அரசிக்கும் எடுத்துரைத்தார்.
`மன்னா! நீ வழக்கம் போல புத்திர காமேஷ்டி யாகம் செய்! அதோடு உன் குழந்தை பிறந்த ஆறாம் நாள் சஷ்டி தேவிக்கு பூஜை செய்வதாகவும், வருடா வருடம் சஷ்டி விரதம் இருப்பதாகவும் வேண்டிக்கொள். அப்படிச் செய்தால் உன் குறை நீங்கும்" என்று சொல்லி, பூஜை முறையையும் கற்றுக் கொடுத்தார். அதேபோல அவர்களும் வேண்டிக்கொள்ள, இம்முறை அழகான ஆண் குழந்தை உயிரோடு பிறந்தது. மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர் அரச குடும்பத்தினர்.
அந்த சந்தோஷத்தில் சஷ்டி தேவிக்கு பூஜை செய்வதை மறந்து போய்விட்டனர். அதனால் குழந்தை பிறந்த ஆறாம் நாள் இறந்துவிட்டது. மன்னரும் அரசியும் கதறிக் கலங்கி கண்ணீர் வடித்தனர். 'பூஜை செய்ய மறந்தது எங்கள் குற்றம்தான்! ஆனால் ஏன் பச்சிளம் குழந்தையை தண்டிக்கிறாய்?" என்று அழுது கேட்டனர். அப்போது சஷ்டி தேவி அவர்கள் முன் தோன்றினாள்.
`மன்னா! இந்த பூவுலகில் எந்த குழந்தை பிறந்தாலும் பிறந்த ஆறாம் நாள், தாயும் சேயும் இருக்கும் அறைக்குள்ளேயே எனக்கென்று சாதம் படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அந்தக் குழந்தைக்குப் பதினாறு வயதாகும் வரை எந்தக் கெடுதலும் வராமல் நான் பார்த்துக் கொள்வேன்" என்றாள்.
அதன்படியே அரசனும் அரசியும் கொஞ்ச சாதத்தில் பால் கலந்து அதனை அன்னை சஷ்டிக்கு அர்ப்பணித் தனர். மகிழ்ந்த சஷ்டி தேவி, இறந்த குழந்தையை எடுத்து முத்த மிட அது உயிர் பிழைத்தது. அன்று முதல் இன்று வரை வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் குழந்தை பிறந்த ஆறாம் நாள் பால் சாதம் சஷ்டி தேவிக்குப் படைக் கப்படும் வழக்கம் தொடர்கிறது.
சஷ்டி தேவியின் வடிவம்:
யசூர் வேதம் மற்றும் யாக்ஞ்யவல்கிய ஸ்மிரிதி, தேவி கொலு விருக்கும் விதத்தை வர்ணிக்கிறது. அழகான பொன்னிற மேனியில் சிவப்பு நிற பட்டுப்புடவை இலங்க பொன்னாபரணங்கள் மின்னக் காட்சி யளிப்பாளாம் அன்னை. மடியில் எட்டுக் குழந்தைகளைத் தாங்கியபடி தோற்றம் தருவாள். இவளது வாகனம், கரும்பூனை. முருகனைப் போற்றி வழிபட்டால் சஷ்டி தேவிக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் முருகனை நினைத்து சஷ்டி விரதம் இருப்பவர் களுக்கு கேட்டவற்றை எல்லாம் அளிக்கிறாள்.
வயல்களில் நல்ல விளைச்சல் பெற, பெண்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்க, கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவத்தில் நல்ல குழந்தை பெற, பிறந்த குழந்தையை கெட்ட சக்திகள் தீண்டாதிருக்க என்று சஷ்டி தேவியை வேண்டி வழிபடுகிறார்கள்.
குழந்தை வரம் வேண்டி சஷ்டி விரதம் இருப்போர், குழந்தை பிறந்த பின் நினைவாக பிறந்த ஆறாம் நாள் தாயும் சேயும் இருக்கும் அறையிலேயே சஷ்டி தேவிக்கு அன்னம் படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கிடைத்தற்கரிய பாக்கியமான சந்தான பாக்கியம் நிலைத்து, அக்குழந்தை நோய் நொடியின்றி பலகாலம் வாழும்.
வழிபாடு:
கந்த சஷ்டி அன்றே சஷ்டி தேவியையும் பூஜித்து வணங்கலாம். அன்னைக்கு என்று உருவச்சிலைகள் எதுவும் இல்லை. ஆகையால் முருகன் படத்துக்கே பூஜைகள் செய்ய வேண்டும். பொதுவாக சிவப்பு வர்ணம் இந்த தேவிக்கு உரியது. சிவப்பு நிறப் பூக்களால் முருகனை அர்ச்சித்து விட்டு சஷ்டி தேவியை மனமுருகி வேண்டினால் போதும். தேவியின் அருள் கிட்டி விடும்.
பூஜையின் போது சிவப்பு வண்ணப் புடவையும் சிவப்புக்கயிறும் வைப்பது வழக்கம். அந்தக் கயிற்றை குழந்தையின் கைகளில் கட்டினால் எந்தத் தீங்கும் வராமல் பாதுகாப்பாள் அன்னை சஷ்டி. புடவையை யாராவது ஏழை சுமங்கலிக்குத் தானமாகக் கொடுப்பது சிறந்தது. கண்டிப்பாக திருமணமான பெண்களுக்கு மட்டுமே அந்தப்புடவையை தானமாக அளிக்கவேண்டும்.
கன்னிப் பெண்கள்அதனை உடுத்தக் கூடாது என்பது ஐதீகம். இந்த வருடம் நவம்பர் 18-ம் தேதி கந்த சஷ்டி வருகிறது. அன்று நாம் முருகனோடு சேர்த்து அவனது பிரியத்துக்குரிய தேவியான சஷ்டியையும் பூஜித்து வணங்கி, சந்தான சவுபாக்யங்களைப் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் உள்ள குழந்தைச் செல்வங்களுடன் ஆனந்த வாழ்வு வாழுங்கள்!
திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப்பெருமான் முற்றுப்பெறச் செய்தார். இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
உண்மையில் முருகன் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. சூரன் முருகனிடம் சரணாகதி அடைந்தான். அவன் வேண்டு கோளை ஏற்று அவனை இரு கூறாக்கி ஒன்றை சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் முருகன் மாற்றினார். அவைகளை கொடியாகவும், வாகனமாகவும் வைத்துக் கொண்டு அவனை முருகப்பெருமான் தன்னுடனேயே சேர்த்துக் கொண்டார். இப்படி பகைவனுக்கும் அருளியது கந்தன் கருணை எனப்படுகிறது.
இப்படி சேவற்கொடியோன் ஆன மயில்வாகனனை வணங்கும் போது பகவானு டைய மயில், வேல், சேவல், திருச்செந்தூர் ஆலயம் மற்றும் கடல், கடலை ஒட்டிய பகுதி ஆகியவற்றையும் நாம் வணங்க வேண்டும். எனவே நாளை திருச்செந்தூர் தலத்தின் சிறப்புகளை காணலாம்.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.
- மாயவரம் கவுரி மாயூரநாதர் மூன்று கொத்து மஞ்சத்தில் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 26 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி பிற்பகல் 3.09 மணி வரை
பிறகு அமாவாசை
நட்சத்திரம்: சுவாதி பின்னிரவு 3.58 மணி வரை
பிறகு விசாகம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை
மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று தீபாவளிப் பண்டிகை. சுப முகூர்த்த தினம். போதாயன அமாவாசை. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. வள்ளியூர் முருகப்பெருமான் கலைமான் கிடா வாகனத்தில் காலை ஏக சிம்மாசனத்தில் புறப்பாடு. மெய்கண்ட நாயனார் குருபூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. மாயவரம் கவுரி மாயூரநாதர் மூன்று கொத்து மஞ்சத்தில் புறப்பாடு. திருநெல்வேலி காந்திமதியம்மன் மஞ்சள் நீராட்டு விழா.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-சுபம்
மிதுனம்-முயற்சி
கடகம்-பொறுமை
சிம்மம்-சுகம்
கன்னி-வெற்றி
துலாம்- நிம்மதி
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- ஆக்கம்
மகரம்-செலவு
கும்பம்-ஊக்கம்
மீனம்-வரவு
- நிறைவு நாளான 18-ந் தேதி இரவு தென்மாட வீதியில் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.
- 19-ந் தேதி மாலை சந்தனக்காப்பும், 20-ந் தேதி பாலாபிஷேகமும் நடைபெறுகிறது.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் ஆறுமுக சுவாமி கந்த சஷ்டி உற்சவம் நாளை மறுநாள் துவங்குகிறது. இந்த உற்சவம் வரும் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடுகள் நடைபெறுகிறது. நிறைவு நாளான 18-ந் தேதி இரவு தென்மாட வீதியில் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.
19-ந் தேதி மாலை சந்தனக்காப்பும், 20-ந் தேதி பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறையினர் கந்த சஷ்டி உற்சவவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- மாயவரம் கவுரிமாயூரநாதர் பூத வாகனத்தில் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 25 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி பிற்பகல் 2.18 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: சித்திரை பின்னரிவு 2.47 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
மாத சிவராத்திரி. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். வள்ளியூர் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். வெள்ளி மயில் வாகனத்தில் பவனி. மாயவரம் கவுரிமாயூரநாதர் பூத வாகனத்தில் புறப்பாடு. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. இரவு நான்காம் ஜாமத்தில் நரக சதுர்த்தசி ஸ்நானம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்செயல்
ரிஷபம்-நன்மை
மிதுனம்-நம்பிக்கை
கடகம்-நாட்டம்
சிம்மம்-நலம்
கன்னி-உதவி
துலாம்- வெற்றி
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- சாதனை
மகரம்-முயற்சி
கும்பம்-ஆதாயம்
மீனம்-நிறைவு
- கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
அன்று அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளுகிறார். காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேள வாத்தியங்கள் முழங்க சண்முக விலாசம் மண்டபம் சேர்தல், அங்கு தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
திருவிழா 2-ம் நாளில் இருந்து 5-ம் நாள் வரை (14 முதல் 17-ந்தேதிவரை) காலை 7 மணிக்கு யாகசாலையில் பூஜை ஆரம்பமாகும். பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன் மேள வாத்தியங்களுடன் சண்முக விலாசம் வருதலும், அங்கு தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் சுவாமி அங்கிருந்து மாலை 4 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபம் வருகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, தீபாராதனைக்கு பிறகு கிரிவீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழா 6-ம் நாளான 18-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. பகல் 12 மணிக்கு யாகசாலை பூஜையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடலுடன் மேள வாத்தியம் முழங்க சுவாமி சண்முக விலாசம் வருதல் நடக்கிறது. அங்கு தீபாராதனை நடைபெற்று பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பின் மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரமாகி, தீபாராதனைக்கு பிறகு கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயாபிஷேகம் நடைபெற்று அதன் பின் சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழா 7-ம்நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழா 8-ம்நாளான 20-ந்தேதி இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம் பல்லக்கிலும் பட்டின பிரவேசம் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். திருவிழாவின் 9, 10, 11 ஆகிய 3 நாட்களும் (21, 22, 23-ந்தேதிவரை) தினமும் மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஊஞ்சல் காட்சி நடக்கிறது.
12-ம் திருவிழாவான 24-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு வைபவம் நடைபெற்று சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவில் சேர்தலுடன் விழா நிறைவு பெறுகிறது.
கோவில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன் கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- காலம் காலமாக நடைமுறையில் உள்ள நம்பிக்கை.
- திருமணத்தை முடிவு செய்வதற்கான முதல் படியே அதுதான்.
ஜாதக பொருத்தம் பார்ப்பது என்பது காலம் காலமாக நடைமுறையில் உள்ள ஒரு பெரும்பான்மை நம்பிக்கை. தம் பிள்ளைகளின் திருமண வாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் இயல்பான ஆசையின் எதிர்பார்ப்புதான் இந்த ஜாதக பொருத்தம். இந்தியாவில் பெரும்பாலான திருமணங்கள் ஜாதகம் பார்த்துதான் நடக்கின்றன. ஆண், பெண் ஜாதகம் பொருந்தும் போது, திருமணம் முடிவு செய்யப்படுகிறது. குறிப்பாக திருமணத்தை முடிவு செய்வதற்கான முதல் படியே அதுதான். ஜாதக பொருத்தம் இருந்தால் மட்டுமே திருமண பேச்சுவார்த்தையே தொடங்குகிறது.
திருமணம் என்பது இரு மனங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இதில் நாம் அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததாக இல்லாமல் பொருத்தம் பார்க்கும்போது எந்தெந்த பொருத்தங்கள் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதில் முக்கியமாகப் பார்க்கவேண்டிய பொருத்தங்கள் எவை என்பது குறித்து ஜோதிடம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
தினப்பொருத்தம்:
ஓர் பெண்ணின் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து ஆணின் ஜன்ம நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது, 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24 ஆக அதன் எண்ணி க்கை இருந்தால், தினப்பொருத்தம் இருக்கிறது என்று பொருள். தினப்பொருத்தம் இருந்தால்தான் தம்பதிகள் மன ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.
கணப்பொருத்தம்:
மணமகன், மணமகள் இருவரின் நட்சத்திரங்களும் தேவ கணத்தில் இருந்தால், கணப்பொருத்தம் கன கச்சிதம். இருவரின் நட்சத்திரங்களும் மனித கணத்தில் இருந்தாலும், கணப்பொருத்தம் உண்டு.
மகேந்திரப் பொருத்தம்:
புத்திரப் பாக்கியத்தைக் குறிக்கக்கூடிய பொருத்தம் மகேந்திரப் பொருத்தமாகும். பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக அந்த எண்ணிக்கை இருந்தால் மகேந்திரப் பொருத்தம் இருக்கிற தென்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்:
பெண்ணின் ஜன்ம நட்சத்திரத்திலிருந்து ஆணின் ஜன்ம நட்சத்திரம் வரை எண்ணி னால், 13-க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் இருக்கி றது எனக் கொள்ள வேண்டும்.
யோனிப் பொருத்தம்:
திருமண வாழ்வில் இணைந்தபின் தம்பதியிடையே நிலவும் இல்லறம் பற்றி கூறும் பொருத்தம் யோனிப் பொருத்தம். ஒவ்வொருவரின் நட்சத்திரத்துக்கும் ஒரு விலங்கினம் குறிக்கப்படுகிறது. ஒன்றுக்கு ஒன்று பகை இல்லாத விலங்கினங்களைச் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.
ராசிப் பொருத்தம்:
பெரும்பாலும் ராசிப் பொருத்தம் மட்டுமே பார்த்து திருமணம் செய்யும் நடைமுறை இன்றளவும் பல குடும்பங்களில் உள்ளது. பெண்ணின் ராசி மேஷம் என்றால், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிகளில் அமையும் சித்திரை முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்களுக்கு ராசிப் பொருத்தம் உண்டு.
ராசி அதிபதி பொருத்தம்:
நவகிரகங்களில் ராகு, கேது தவிர்த்து மீதமுள்ள 7 கிரகங்களும், 12 ராசிகளுக்கும் அதிபதிகளாகத் திகழ்கின்றனர். இந்த கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு, சமநிலை, பகை என்னும் மூன்று நிலைகளில் இருப்பார்கள்.
ஆணின் ராசி அதிபதியும் பெண்ணின் ராசி அதிபதியும் நட்பு அல்லது சம நிலை என்னும் அளவில் அவர்களின் உறவு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு.
வசியப் பொருத்தம்:
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது வசியப் பொருத்தம் பார்ப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆண், பெண் இருவரும் ஒருவரை மற்றவர் அனுசரித்துச் செல்லும் மனோபாவத்துக்குக் காரணமாக அமையும்.
ரஜ்ஜு பொருத்தம்:
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு ரஜ்ஜு உண்டு. இதை கயிறு பொருத்தம் என்றும் கூறுவார்கள். சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, நாபி ரஜ்ஜு, தொடை ரஜ்ஜு,பாத ரஜ்ஜு என ஐந்து வகை ரஜ்ஜு உண்டு. ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருக்கக்கூடாது. எனவே, முக்கியப் பொருத்தமாக ரஜ்ஜு பொருத்தம் பார்க்கப்படுகிறது.
வேதைப் பொருத்தம்:
வேதை என்றால் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று பொருள். பரஸ்பரம் ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்ளும் தன்மை உள்ளவை. இதுவும் மிக முக்கியமாகப் பார்க்க வேண்டிய பொருத்தமாகும்.
எனவே இந்தப் பொரு த்தங்கள் இருக்கின்றனவா என்று நன்கு பார்த்த பிறகே திருமணம் செய்ய வேண்டும். இப்படி அமையும் திருமண வாழ்வில் எந்தவித பிரச்னையும் ஏற்படாது என்பதே ஜோதிடம் கூறுவதோடு நம் நம்பிக்கையும் அதுதான்.
- தீபாவளி என்றாலே மனதில் மத்தாப்பு வெடிப்பதை போன்ற மகிழ்ச்சி உண்டாகும்.
- தலை தீபாவளி என்பதோ வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே வரும்.
தீபாவளி என்றாலே நமது மனதில் மத்தாப்பு வெடிப்பதை போன்ற மகிழ்ச்சி உண்டாகும். தீபாவளி எப்படா வரும், ஒரு மாசத்துக்கு முன்னாலேயே வாங்கி வச்ச புத்தாடையை எப்படா போடலாம்னு எல்லாரும் ஏங்கிட்டு இருப்பாங்க.. இவங்க எல்லாருடைய ஏக்கமும் ஒரு பக்கம் இருந்தால், தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்க தானே செய்யும். தீபாவளி என்பது வருடா வருடம் வரக்கூடியது. ஆனால் தலை தீபாவளி என்பதோ வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே வரக்கூடியதாகும். இந்த தலை தீபாவளி நமது தமிழகத்தில் மிக மிக விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
திருமணமாகி முதல் ஆண்டில் வரும் தீபாவளியே தலை தீபாவளியாக தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது! திருமணத்திற்குப் பின்னர் வரும் அனைத்து பண்டிகைகளும் மணமகனின் வீட்டில் கொண்டாடப்பட்டாலும் இந்த தலை தீபாவளி மட்டும் மணமகள் வீட்டில் கொண்டாடப்படுவது மற்றுமொரு சிறப்பு. புதிதாக மணமுடித்த மணமக்களை தீபாவளிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே பெண்ணின் பெற்றோர் அவர்களது வீட்டிற்குச் சென்று சீர் வரிசை (வெற்றிலை, பூ, பழங்கள், இனிப்புகள், ஆடைகள்) வைத்து தலை தீபாவளி கொண்டாட வீட்டிற்கு வருமாறு அழைப்பர்.
அதன்படி மணமக்களும் தீபாவளிக்கு முன் தினமே பெண்ணின் வீட்டிற்குச் செல்வர்.தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடை களில் மஹா விஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படு வதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம்..
பூஜைகள் செய்து, பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் இனிப்புகள் உண்டு மகிழ்வர். அவர்கள் ஜோடியாக பெண்ணின் குடும்பத்தாருடன் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்வர். மணமகன் தன் மனைவியின் குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாடுவது தான் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தலை தீபாவளி. பெண் எடுத்த வீட்டில் மணமகனும் ஒரு அங்கத்தினர் தான் என்பதை கூறும் வகையிலும், பெண்ணை தங்கள் வீட்டிற்கு அனுப்பிய சம்பந்தி வீட்டிற்கு தீபாவளி அன்று தனது மகனை உங்களது மகனாக ஏற்றுக் கொள்ளும்படியாக அனுப்பி வைத்து பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் உறவு பாராட்டிக் கொள்வதும் இந்த தலை தீபாவளியின் வழக்கமாகும்.
தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரி யோரை வணங்கி வாழ்த்து பெறுவர். உறவு பாராட்டும் தீபாவளியை நாமும் கொண்டாடுவோம்.
- சிவபெருமானுக்கு, `மாத்ரிகேஸ்வரர் மகாதேவ்’ எனப் பெயர்.
- தீபாவளி பண்டிகையின்போது ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும்.
நேப்பாள் தலைநகர் காத்மாண்டுவின் தொழிற்பேட்டைக்கு அருகில், 400 சதுர மீட்டரில், `ராணி போக்காரி' என்ற ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தின் நடுவில் ஒரு சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த சிவபெருமானுக்கு, `மாத்ரிகேஸ்வரர் மகாதேவ்' எனப் பெயர்.
இந்த சிவன் கோவில் வருடத்தின் தீபாவளி பண்டிகையின்போது ஒரு நாள் மட்டுமே திறந்திருக்கும். அன்றைய தினம் இந்த ஈசனை தரிசிக்க ஏராளமானோர் வருகை தருகின்றனர்!
நேப்பாளத்தில் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதனை திகார் என அழைக்கின்றனர் இந்த ஊர் மக்கள். விழா சமயத்தில் நம் ஊரைப் போலவே வீட்டில் பெரிய பெரிய கோலமிட்டு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து, இனிப்பு, காரம் என பட்சணங்களும் பதார்த்தங்களும் செய்து இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.
புராண கதையின்படி, ஓய்வறியாது கடமையைச் செய்யும் எமனுக்கு ஐந்து நாட்கள் ஓய்வு தந்து அருளுகின்றார் மகாவிஷ்ணு. அந்த ஓய்வு நாளில் தனது சகோதரி யமுனா வீட்டுக்கு வருகிறான் எமன்! அவனை வரவேற்று, திலகமிட்டு விதவிதமாக விருந்து அளிக்கிறாள் யமுனா! விருந்தில் மகிழ்ந்த எமன், அவளை ஆசீர்வதிப்பதுடன், இன்று இதேபோல் நடந்துகொள்ளும் சகோதர, சகோதரியர் நீண்ட நாட்கள் எமபயம் இல்லாமல் வாழ வரம் தந்துவிட்டுச் செல்கிறான். இப்படியாக, நேப்பாளத்தில் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் விழாவாக அனுசரிக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையின் ஐந்தாம் நாளான ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும். மாத்ரிகேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். குளத்தின் நடுவில் உள்ள கோவிலுக்குச் செல்ல ஒரு பாலம் கட்டி, அதற்கு அழகாக வெள்ளை வண்ணமும் அடித்துள்ளனர். அதன் வழியாக நடந்து செல்லும்போது, கோவில் வாசலில் வெள்ளை யானை சிற்பம் நம்மை வரவேற்கிறது. சிறிய கோவில் கோபுரம், நேப்பாளத்துக்கே உரிய இரண்டு அடுக்கு மாடத்துடன் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கருவறையில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு சகோதரி இல்லாத சகோதரர்கள் வந்தால், சகோதரி சார்பாக அவர்களுக்குத் திலகமிட்டு வாழ்த்துகிறார் கோவில் அர்ச்சகர். இதேபோல், சகோதரர் இல்லாத சகோதரிகள் வந்தால், சுவாமியை வழிபட வந்த ஒருவரை அந்தப் பெண்ணுக்கு சகோதரனாக்கி அவனுக்கு திலகமிட்டு அந்தப் பெண்ணை வாழ்த்தச் செய்கிறார்.
அன்று ஒரு நாள் மட்டும் இந்த கோவிலில் சிறப்பு நைவேத்தியமாக ஏராளமான இனிப்புகள் படைக்கப்படுகின்றன. பூஜைக்குப் பிறகு அவற்றை சகோதர, சகோதரிகளுக்கு வழங்குகிறார் அர்ச்சகர். அன்று இரவே கோவில் நடை சாத்தப்படுகிறது. இனி, அடுத்த வருடம் தீபாவளியின் ஐந்தாவது நாள் மட்டுமே அந்த கோவில்ல் திறக்கப்படும். வாருங்கள் அந்த கோவிக்கு சென்று வருவோம்..
- 16-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்படுகிறது.
- வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக வருகிற 16-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து வழக்கமான பூஜைகளும் தொடங்கும். பக்தர்கள் அன்று முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
சாமி தரிசனத்துக்கு வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது. சபரிமலையில் மண்டல பூஜை தொடங்க ஒரு வாரமே உள்ளதால், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் சபரி மலைக்கு யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் அய்யன் என்ற செயலி அறிமுகப்படுத்ததப்பட்டு உள்ளது. பெரியார் வன விலங்கு சரணாலயம் மேற்கு பிரிவு சார்பில் தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை வனத்துறையினர் நேற்று வெளியிட்டனர்.
இந்த செயலியில் பம்பை, சன்னிதானம், சுவாமி ஐயப்பன் சாலை, பம்பை-நீலிமலை, சன்னிதானம், எரிமேலி-அழுதைமலை-பம்பை உள்ளிட்ட சன்னிதான வழித்தடங்களில் உள்ள சேவைகள், யாத்திரையின் அனைத்து அம்சங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, சபரிமலைக்கு செல்லும் பாரம்பரிய வழத்தடங்களில் உள்ள சேவை மையங்கள், மருத்துவ அவசர சிகிச்சை பிரிவுகள், தங்குமிடங்கள், யானைப்படை குழுக்கள், பொது கழிப்பறைகள், ஒவ்வொரு தளத்தில் இருந்தும் சன்னிதானம் வரை உள்ள தூரம், இலவச குடிநீர் வினியோகிக்கப்படும் இடங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த செயலி வழங்குகிறது.
யாத்திரையின் போது பக்தர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்களும் அய்யன் செயலியில் இடம் பெற்றிருக்கிறது. இந்த செயலியை தமிழ், மலை யாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கும் செய்து கொள்ளலாம்.
மேலும் சபரிமலை யாத்திரை செல்லக்கூடிய காட்டுப்பகுதியில் ஆங்காங்கிகே கியூ-ஆர் கோர்டு வைக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஸ்கேன் செய்தும் செல்போன்களில் அய்யன் செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஆப்லைன் மற்றும் ஆன்லைனில் இந்த செயலி வேலைசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.






