என் மலர்tooltip icon

    வழிபாடு

    • கர்நாடகத்தின் முக்கியமான இடங்களில் ஒன்று, பாதாமி குகை.
    • மகாவிஷ்ணுவின் சிற்பம் காண்பவர்களை மயக்குவதாக இருக்கிறது.

    கர்நாடகத்தின் முக்கியமான இடங்களில் ஒன்று, பாதாமி குகை. இதன் பழங்காலப் பெயர் வதாபி என்பதாகும். இது ஆரம்ப கால சாளுக்கிய வம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.

    சாளுக்கியர்கள் 6-ம் நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டு வரை, கர்நாடகாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர்கள். இவர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான மந்திர்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    பாதாமி சாளுக்கியர்களின் காலத்தைச் சேர்ந்த இரண்டு மந்திர்கள், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் முடிமாணிக்யம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

     1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கோவில்கள், இந்து வம்ச வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தை பிரதிபலிக்கின்றன. அவை அந்த காலத்தின் பொதுவான கட்டிடக்கலை பாணிகளின் கலவையை வெளிப்படுத்துகின்றன.

    கோவில்களில் ஒன்றில், கருவறைக்குள் ஒரு சிவலிங்கத்தின் அடித்தளமாக செயல்படும் ஒரு பாணவட்டத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். மற்றொரு கோவிலில் விஷ்ணு சிலையை மீட்டெடுத்துள்ளனர்.

    இங்கு நின்ற கோல நரசிம்மர், திரிவிக்ரமன், வாராகர் என்று விஷ்ணுவின் பல்வேறு உருவங்கள் அழகுற அமைக்கப்பட்டிருந்தாலும், சுருண்ட பாம்பின் மீது அமர்ந்த நிலையில் காலை தொங்கவிடாமல், குத்துக்காலிட்டது போல் தூக்கி வைத்திருக்கும் மகாவிஷ்ணுவின் சிற்பம் காண்பவர்களை மயக்குவதாக இருக்கிறது.

    • ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும்.
    • ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியானது பெருமை வாய்ந்தது.

    ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். அவை ஒவ்வொன்றுமே ஒரு சிறப்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியானது, பெருமை வாய்ந்தது. இந்த ஏகாதசியை 'சயினி ஏகாதசி' என்பார்கள்.

    'பத்ம ஏகாதசி', 'தேவபோதி ஏகாதசி', 'விஷ்ணு சயன ஏகாதசி', 'தாயினி ஏகாதசி' என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    விஷ்ணு பகவான் தன்னுடைய உலக கடமைகளை நிறைவேற்றிய பிறகு, பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்து நான்கு மாதங்கள் தியானத்தில் ஆழ்ந்த தினம் இது வாகும். அந்த நான்கு மாதங்களும் 'சதுர்மாஸ்' என்று அழைக்கப்படுகின்றன.

    ஆடி மாதம் என்பது பொதுவாகவே சிறப்புக்குரிய மாதமாகும். அதோடு மகாவிஷ்ணுவின் அருள் நிறைந்த சந்திரனும், சூரியனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் சிறப்பைப் பெற்ற மாதமாகவும் இது திகழ்கிறது.

    இந்த நாளில் 'கோ பத்ம விரதம்' இருப்பது மிகவும் விசேஷமானது. கோ என்னும் பசு வழிபாடு புராணங்களில் மிகச் சிறப்புக்குரியதாக சொல்லப்பட்டிருக்கிறது.

    பாற்கடலைக் கடைந்த போது, அதில் இருந்து பல்வேறு பொருட்களும், உயிரினங்களும், தேவர்களும் வெளிப்பட்டனர். அவற்றில் கேட்டதை கொடுக்கும் 'காமதேனு' பசுவும் அடங்கும். இந்த பசுவிற்கு பட்டி, விமலி, சயனி, நந்தினி, கொண்டி என்ற ஐந்து குட்டிகள் பிறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

    சிவபெருமான், நான்கு பசுக்களை நான்கு திசை தெய்வங்களுக்கு வழங்கியதாக சிவபுராணம் கூறுகிறது.

    அதன்படி இந்திரனுக்கு 'சுசிலை' என்ற பசுவும், எமனுக்கு 'கபிலை' என்ற பசுவும், வருணனுக்கு 'ரோகிணி' என்ற பசுவும், குபேரனுக்கு 'காமதேனு' என்ற பசுவும் வழங்கப்பட்டுள்ளது. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்து அருள்புரிகின்றனர்.

    ஆடி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, 'கோ பத்ம விரத'த்தை கடைப்பிடிக்க வேண்டும். அன்றைய தினம் காலையில் எழுந்ததும் நீராடுவது அவசியம். பின்னர் பசு மாடு வைத்திருப்பவர்கள், அந்த பசுவை கட்டி வைத்திருக்கும் கொட்டிலில் (பசு கொட்டில் இல்லாதவர்கள், பூஜை அறையில் செய்யலாம்) பச்சரிசி மாவால், தாமரைப் பூ போன்று வரைந்து கோலம் போட்டு விட்டு, பின்னர் சிறிய சிறிய கோலங்களாக தாமரைப் பூ இதழ்களுடன் 33 கோலங்கள் போட வேண்டும்.

    இதனை பல வண்ணப் பொடிகளால் அலங்கரிக்கலாம். இந்த கோலங்களின் நடுவில் பெருமாளும், தாயாரும் இருக்கும் படத்தை வைக்க வேண்டும். லட்சுமி நாராயணர் படம் அல்லது விக்கிரகம் இருந்தால் அவற்றை வைக்கலாம். இல்லையெனில் கலசம் வைத்து பூஜிக்க வேண்டும்.

    பூஜை தொடங்கியதும், ஓம் கேசவா நமஹா, ஓம் நாராயணா நமஹா, ஓம் மாதவா நமஹா, ஓம் கோவிந்தா நமஹா, ஓம் விஷ்ணு நமஹா, ஓம் மதுசூதனா நமஹா, ஓம் திரிவிக்கிரமா நமஹா, ஓம் வாமனா நமஹா, ஓம் ஸ்ரீதரா நமஹா, ஓம் ஹ்ருஷிகேஷா நமஹா, ஓம் பத்மநாபா நமஹா, ஓம் தாமோதரா நமஹா என்ற 12 நாமங்களை சொல்லி இறைவனை ஆவாகனம் செய்ய வேண்டும்.

    பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து 33 முறை இறைவனை சுற்றி வர வேண்டும். பூஜையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவற்றை வைத்து, 33 வெல்லத்தில் செய்த அப்பத்தை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

    பூஜையின் முடிவில் அந்த நைவேத்திய பிரசாதத்தை 33 பேருக்கு பகிர்ந்து கொடுக்கலாம். இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவார்கள். அவர்களுக்கு விஷ்ணு பகவானின் அருள் முழுமையாகக் கிடைக்கும்.

    இந்த நாளில் விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்வது மிகமிக சிறப்பானது. பசுவை முதலில் பூஜித்து விட்டு இந்த விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் குடும்பத்தில் துன்பமான நிகழ்வுகள் நடக்காது. அதோடு மகாலட்சுமியின் அருள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது. அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும். மரண பயம் விலகும்.

    • 19-ந்தேதி பிரதோஷம்.
    • 21-ந்தேதி பவுர்ணமி.

    16-ந்தேதி (செவ்வாய்)

    * அங்கரன்கோவில் கோமதியம்மன் கனக தண்டியல் அலங்காரம்.

    * வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    17-ந்தேதி (புதன்)

    * சர்வ ஏகாதசி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * சமநோக்கு நாள்.

    18-ந்தேதி (வியாழன்)

    * வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    19-ந்தேதி (வெள்ளி)

    * பிரதோஷம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பவித்ரோற்சவம்.

    * ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன், நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.

    * திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (சனி)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனத்தில் பவணி.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வெண்ணெய் தாழி சேவை.

    * வடமதுரை சவுந்திர ராஜர் குதிரை வாகனத் தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (ஞாயிறு)

    * பவுர்ணமி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித் தபசு உற்சவம், மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    22-ந்தேதி (திங்கள்)

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தீர்த்தவாரி. இரவு சப்தாவர்ணம்.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
    • சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-32 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி இரவு 6.38 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: விசாகம் நள்ளிரவு 1 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். வடமதுரை சவுந்திர ராஜப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் கனக தண்டியலில் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக் கோட்டை கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். சிவகாசி ஸ்ரீ விஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-பரிசு

    கடகம்-ஓய்வு

    சிம்மம்-சாதனை

    கன்னி-பண்பு

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-உறுதி

    தனுசு- யோகம்

    மகரம்-மாற்றம்

    கும்பம்-நற்சொல்

    மீனம்-கடமை

    • மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன.
    • ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் வேங்கடரமண சுவாமி, மகாலட்சுமி தேவி சந்நிதிகள் விசேஷமானவை.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் 'காட்டுவீர ஆஞ்சநேயர்' என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்பெறுகிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு காட்டுவீர ஆஞ்சநேயரின் திருக்கோயில் இல்லை. இந்த பகுதி குன்றுகளாகவும் விளைநிலங்களாகவுமே இருந்துள்ளது. இந்த விளைநிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின் மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூசித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே சென்றது.


    ஆஞ்சநேயரின் மீது அளவற்ற பக்தியையும் நம்பிக்கொண்டு மக்கள் வழிபட்டு வருவதை கண்ட வெங்கட்ராம செட்டியார், அங்கு ஆஞ்சநேயருக்கு கோயில் ஒன்றை கட்ட வேண்டும் என முடிவு செய்தார். திருக்கோயில் கட்டுவதற்கு தன்விளைநிலத்தில் இருந்து எவ்வளவு அளவு இடம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என ஊர்மக்களிடம் கூறியுள்ளார். பிறகு இதற்கென்று அறக்கட்டளை ஒன்றும் அமைக்கப்பட்டது, திருக்கோயிலானது எழிலுற எழுந்தது.

    மூலவர் ஸ்ரீஅருள்மிகு ஆஞ்சநேயர் ஒற்றைப் பாறையின் மீது செதுக்கப்பட்டிருப்பது வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு. இந்த சிற்பத்தை செதுக்கியவர் யார் என்பது தெரியவில்லை என்றாலும் வரலாறு செவி வழி செய்தியாக ஒரு தகவலைக் கூறுகிறது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் மார்கத பிராமணர் என ஒருவர் இருந்தாராம். இவர் அனுமன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். இதனால் இவர் பல ஊர்களுக்குச் சென்று அங்குள்ள பாறைகளின் மீதும் மலைகளின் மீதும் அனுமன் சிலைகளை செதுக்கி வந்தாராம். இதனால் அனுமனின் மீது பலருக்கும் பக்தி வரும் என்று எண்ணி உள்ளார். அதனால் இதுவும் அவருடைய கைவண்ணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    ஏனென்றால் அவர் வடிவமைத்த அனுமன் சிற்பங்கள் அனைத்திலும், அனுமன் வலது புறம் திரும்பி நின்றும், தலை மேல் நோக்கியும் , வால் தூக்கி நின்றவாறும், வாலில் சிறிய மணி ஒன்று கட்டியவாறும் இருக்கும். இங்கும் அவ்வாறே உள்ளது. ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் வேங்கடரமண சுவாமி, மகாலட்சுமி தேவி சந்நிதிகள் விசேஷமானவை.


    ராம நாமம் எழுகிறதோ அவ்விடத்தில் நிச்சயம் அனுமன் இருப்பார். இங்கும் ஆஞ்சநேயர் கோயிலின் வலது பக்கம் பொன்மலை எனும் சிறுமலையொன்றுள்ளது. அங்கு ஒரு பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் அனுமன் வலது புறம் திரும்பி தலை தூக்கி மலைமீதுள்ள பெருமாளைத் துதித்தபடி நின்றிருக்கிறார். இதனை காணக் கண் கோடி வேண்டும்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருந்து ஸ்ரீமத் பாலமுருக நரசிம்ம ஸ்வாமி எனும் சித்தர் ஒருவர் காட்டுவீர ஆஞ்சநேயரை தரிசிக்க வந்துள்ளார். அவர், ஹரியும் சிவனும் ஒன்று என்பதை மெய்ப்பிக்கும் சிறப்பை பெற்றுள்ளது இத்திருத்தலம் என கூறியிருக்கிறார். ஹரிக்கு உகந்தவரான அனுமனும், சிவபெருமானுக்கு உகந்தவரான நந்தீஸ்வரரும் ஒரே இடத்தில் எழுந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வேறு எங்குமே காணப்படாத அதிசயம் என்றும் கூறியுள்ளார்.

    மூலவருக்கு இடது புறம் பெரிய உருண்டை பாறையின் மீது சிறிய நந்தீஸ்வரர் சிலை ஒன்று உள்ளது. இச்சிலை வளர்ந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது. எல்லா அனுமன் கோயில்களிலும் வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுதல் விசேஷம் எனலாம். ஆனால் இங்கு தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். எவரொருவர் ஒரு முழுத்தேங்காயை, மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றாரோ, அவருடைய கோரிக்கைகள் மூன்று மாதங்களுக்குள்ளாக நிறைவேறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.


    ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாளன்று மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்தும் ஏராளமாகப் பக்தர்கள் இங்கு வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

    காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் தங்களது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

    கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் எனப்படும் சேலம் பைபாஸை ஒட்டிய இடதுபுற சாலையில் அமைந்துள்ள தேவசமுத்திரத்தில் கலையம்சத்துடன் வளர்ந்து நிற்கிறது அருள்மிகு ஸ்ரீ காட்டுவீர ஆஞ்சிநேயர் திருக்கோயில்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    வருஷாபிசேகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோவில் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    அதேபோல் குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டு காலை 10.15 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு புனித நீர் உற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கும் வருஷாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    விழாவில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீரவநல்லூர் ஸ்ரீ பூமிநாத சுவாமி தெப்ப உற்சவம்.
    • ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி தீர்த்தம்.

    குரோதி ஆண்டு ஆனி-31 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி மாலை 5.32 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: சுவாதி இரவு 11.21 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: அமிர்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். வீரவநல்லூர் ஸ்ரீ பூமிநாத சுவாமி தெப்ப உற்சவம். ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி தீர்த்தம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராமாவதாரம் ஸ்ரீ அனுமார் வாகனத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிச் சப்பரத்தில் புறப்பாடு. மதுரை சொக்கலிங்க புதூர் நகர சிவாலயங்களில் வருஷாபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-புகழ்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-திறமை

    கடகம்-வெற்றி

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-சிந்தனை

    துலாம்- பரிசு

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- ஜெயம்

    மகரம்-உயர்வு

    கும்பம்-கடமை

    மீனம்-பணிவு

    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்காரம்.
    • வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் விழா தொடக்கம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-29 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி பிற்பகல் 2.13 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: அஸ்தம் இரவு 6.53 மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்காரம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் விழா தொடக்கம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன அலங்கார சேவை. திருவாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-ஓய்வு

    கடகம்-விருத்தி

    சிம்மம்-துணிவு

    கன்னி-போட்டி

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-மேன்மை

    தனுசு- இன்பம்

    மகரம்-வெற்றி

    கும்பம்-பணிவு

    மீனம்-உற்சாகம்

    • இன்று காலை மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது.
    • 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெரியபாளையம்:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் புனரமைப்பு, கும்பாபிஷேக விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் ரூ.1.52 கோடியிலும், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் ரூ.1.12 கோடியிலும் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.

    இதேபோல் பொன்னேரி ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதேஸ்வர் கோவில், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குருதலம்) கோவில், திருச்சி பூர்த்தி கோவில், திருமுக்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட மொத்தம் 65 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று இன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் உள்ளிட்ட 65 கோவில்களிலும் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்

    பெரியபாளையம் பவானி அம்மன்கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த புதன்கிழமை காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

    இன்று காலை மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடந்தது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் பெரியபாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி

    பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் உள்ள சூரிய பரிகார தலமான சொர்ணாம்பிகை சமேத புஷ்பரதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

    புனித கலசநீர் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டது. இதில் பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், மீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மீஞ்சூர் அடுத்த வல்லூர் ஸ்ரீதேவி பூதேவி நாயிகா சமேத வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை கோலாகலமாக நடந்தது. இந்த கோவிலில் 66 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்று இருந்தது. பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகள் கழித்து பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது.

    இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டு கருகாத்தம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    • இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது புனித தோமையார் ஆலயம்.
    • புனித தோமையார் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

    தமிழ்நாட்டில் தமிழ்மொழி முதன்முதலாக அச்சேறிய இடம், வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கும் இடம் என பல்வேறு சிறப்புகளைப் பெற்றது தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே அமைந்துள்ள புன்னக்காயல்.

    வரலாற்று சிறப்புமிக்க இவ்வூரில் தாமிரபரணி ஆறு 5 கிளைகளாக பிரிந்து கடலில் ஐக்கியமாகிறது. அவற்றின் நடுவில் கடலின் முகத்துவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது புனித தோமையார் ஆலயம்.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார், கேரள மாநிலம் முசிறி துறைமுகம் வந்தடைந்து கிறிஸ்தவத்தைப் போதித்தார். பின்னர் தமிழகத்திலும் வேதத்தைப் போதித்தார்.

    அவர் வாழ்ந்த இடங்களில் ஒன்றாக கருதப்படும் புன்னக்காயலில் அவரது நினைவாக ஆலயம் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளைக் கடந்த இந்த ஆலயத்தில், ஏராளமான புதுமைகள் நிகழ்வதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் புன்னக்காயலுக்கு வந்து, புனித தோமையார் ஆலயத்தில் வழிபட்டு செல்கின்றனர்.

    உள்ளூர் மக்கள் தாமிரபரணி ஆற்றின் 5 கிளைகளின் வழியாகவும் நடந்தே புனித தோமையார் ஆலயத்துக்கு செல்கின்றனர்.

    வெளியூர்களில் இருந்து வருகிறவர்கள் படகில் பயணித்து புனித தோமையார் ஆலயத்துக்கு வந்து வழிபடுகின்றனர். தவக்காலத்தில் ஏராளமானவர்கள் இங்கு வந்து புனிதரை தரிசிக்கின்றனர். இங்கு புனிதர் நிகழ்த்திய அற்புதம் ஏராளம்.

    முன்பு தாழ்த்தப்பட்ட மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்தினர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இந்த புனித தோமையார் ஆலயத்துக்கு வந்து வழிபட்டதும் அவர்களின் நோய் நீங்கிற்று.

    இதையடுத்து அந்த குடும்பத்தினர் நேர்த்திக்கடனாக ஆலயத்தில் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்காக அசைவ உணவு சமைத்தனர். ஆனால், தாழ்த்தப்பட்ட பிற மதத்தினர் சமைத்த உணவு என்பதால் அதனை சாப்பிட யாருமே செல்லவில்லை.

    இதனால் வருத்தம் அடைந்த அந்த குடும்பத்தினர், தாங்கள் தயாரித்த உணவை, ஆலய வளாகத்தில் ஓரிடத்தில் மண்ணில் குழி தோண்டி, பாத்திரங்களுடன் புதைத்துச் சென்றனர்.

    இதையடுத்து சில நாட்களில் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது புன்னக்காயல் ஊரையே தண்ணீர் சூழ்ந்தது. உடைமைகளை படகில் ஏற்றிக்கொண்டு மக்கள் கடலின் முகத்துவாரம் வழியாக வெளியூர்களுக்கு செல்லத் தொடங்கினர்.

    அவர்களில் பெரும்பாலானோர் முகத்துவாரத்தில் உள்ள புனித தோமையார் ஆலயத்தில் தஞ்சமடைந்தனர். அவர்கள் ஆலய வளாகத்தில் அடுத்தவேளை உணவின்றி, கடும் பசியுடன் துயருற்று சோர்வுடன் கண் அயர்ந்தனர்.

    அப்போது அங்கு வந்த ஒருவர், "ஏன் உணவில்லாமல் அனைவரும் வாடுகிறீர்கள்? இங்குதான் அனைவருக்கும் தேவையான உணவு உள்ளதே?" என்று ஓரிடத்தை காட்டி விட்டு மறைந்தார்.

    அப்போது அங்கு சுடச்சுட சாதம் வடித்து, கறிக்குழம்பு வைத்த மணம் நிலத்துக்கு அடியில் இருந்து வெளிப்பட்டது. அந்த இடத்தை தோண்டியபோது, அங்கு ஏற்கனவே தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் புதைத்து வைத்திருந்த சாப்பாடு, கறிக்குழம்பு நெடுநாட்களாகியும், கெட்டுப் போகாமல் அப்போது சமைத்த நிலையிலேயே சுடச்சுட ஆவி பறந்து கொண்டிருந்தது.

    அதனை எடுத்து சாப்பிட்டு பசியாறிய மக்கள், மேலும் 2 நாட்கள் வைத்து அவற்றை ருசித்து சாப்பிட்டனர். அதற்குள் வெள்ளமும் முழுமையாக வடிந்ததால் மக்கள் தங்களது வீடுகளுக்கு படகுகளில் திரும்பிச் சென்றனர்.

    சாதி, மத பேதங்களின்றி அனைவரும் சமத்துவமாக வாழ, புனித தோமையாரே நேரில் வந்து தங்களுக்கு உணர்த்தியதாக அவ்வூர் மக்கள் இன்றும் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். இதேபோன்று எண்ணற்ற புதுமைகளை புனிதர் நிகழ்த்தியதாக தெரிவிக்கின்றனர்.

    தாமிரபரணி ஆற்றின் 5 கிளைகளை மக்கள் கடந்து செல்லும்போது, யாரேனும் வழி தவறி சென்றால், அவர்களுக்கு முன்னால் நாய்கள் நீந்திச் சென்று ஆலயத்துக்கு வழிகாட்டி அழைத்து வந்து சேர்ப்பதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

    ஆற்றங்கரைகளில் ஆங்காங்கே சாதுவான நாய்கள் சுற்றித் திரிவதை எப்போதும் காண முடியும். ஆற்றைக் கடக்கும்போது பாதைக்காக ஆங்காங்கே கொடிகளை நட்டு வைத்துள்ளனர். புனித தோமையார் ஆலயத்தின் முகப்பில் 2 சிலுவைகள் உள்ளன.

    அவற்றில் ஒரு சிலுவையை தோமையார் நிறுவி வழிபட்டதாகவும், மற்றொரு சிலுவை கடலில் மிதந்து வந்ததாகவும், அதனை ஆலயத்தில் நிறுவி வழிபடுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    • இறைவனை பல வழிகளில் நாம் தரிசிக்க முடியும். அதில் ஒரு வழியே பஜனை.
    • நாம சங்கீர்த்தனம் வாயிலாக இறைவனை வழிபடுவார்கள்.

    முந்தைய காலங்களில் கிராமப் புறங்களில் ஒரு சிறிய கோவிலை அமைத்து, அதில் ராமபிரான் அல்லது கண்ண பிரான் திரு உருவப்படங்களை வைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. இத்தகைய கோவில்கள் 'பஜனைக் கோவில்கள்' என்று அழைக்கப்பட்டன.

    இறைவனை பல வழிகளில் நாம் தரிசிக்க முடியும். அதில் ஒரு வழியே பஜனை. நமது முன்னோர்கள் ஒன்றாய்க் கூடி பஜனைப் பாடல்களை இசையோடு பாடுவதன் மூலம் இறைவனை தரிசிக்க முடியும் என்ற நம்பிக்கையில், பல ஊர்களிலும் பஜனை மடங்களை நிறுவினர்.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் பஜனைக் கோவில்கள் இருப்பதைக் காணலாம். இந்த பஜனைக் கோவில்களில் சனிக்கிழமை மற்றும் ஏகாதசி, மார்கழி மாதங்களில் பக்தர்கள் ஒன்று கூடி பஜனை இசைத்து நாம சங்கீர்த்தனம் வாயிலாக இறைவனை வழிபடுவார்கள்.

    இந்த பஜனை கோவில்கள் நாளடைவில் விரிவுபடுத்தப்பட்டு, கருவறையில் ராமபிரான், ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபாலர் ஆகியோரது சிலைகளை பிரதிஷ்டை செய்து முழுமையாக ஆலயமாக மாற்றப்பட்டன.

    அப்படிப்பட்ட ஒரு கோவில்தான் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா பெரியகாட்டுப்பாக்கம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி திருக்கோவில்.

    சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இந்த பஜனைக் கோவிலில், நவநீதக் கண்ணன் ஆராதிக்கப்பட்டு வந்துள்ளார். 1904-ம் ஆண்டு முதல் தற்போது வரை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஏகாதசி தினத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.

    நவநீதக்கண்ணன் பஜனைக் கோவிலாகத் திகழ்ந்த இத் தலத்தில், முதலில் ருக்மணி - சத்யபாமா சமேத வேணு கோபால சுவாமியை பிரதிஷ்டை செய்த மக்கள், பின்னர் பல்வேறு திருப்பணி மூலமாக கருடாழ்வார் சன்னிதி, ஆஞ்சநேயர் சன்னிதி, சக்கரத்தாழ்வார் சன்னிதி, காளிங்க நர்த்தனர் சன்னிதி, தும்பிக்கை ஆழ்வார் சன்னிதி ஆகிய சன்னிதிகளையும் அமைத்தனர்.

    கோவிலுக்குள் நுழைந்ததும் ஒரு சிறிய சன்னிதியில் சிறிய திருவடியான பக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து பலிபீடமும், அதற்குப் பின்னால் பெரிய திருவடியான கருடாழ்வார் சன்னிதியும் உள்ளன.

    கருவறையின் முன்னால் சுதைச்சிற்ப வடிவில் துவாரபாலகர்கள் இருபுறமும் காட்சி தருகிறார்கள். கருவறைக்குள் ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.

    வேணுகோபால சுவாமி புல்லாங்குழலை தனது திருக்கரங்களில் ஏந்தியுள்ளார். உற்சவர்களாக ருக்மணி - சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி, ஆஞ்சநேயர், ஆண்டாள் மற்றும் நவநீதக்கண்ணன் இருக்கிறார்கள்.

    இத்தலத்தில் பொங்கல் பண்டிகை, மாட்டுப்பொங்கல் அன்று பரிவேட்டை உற்சவம், கிருஷ்ணஜெயந்தி, ராமநவமி, அனுமன் ஜெயந்தி, நரசிம்ம ஜெயந்தி, திருவாடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மூன்றாவது வாரம் சிறப்பு வழிபாடுகள், விஷேச சிறப்பு கல்யாண உற்சவம் முதலானவை விமரிசையாக நடை பெறுகின்றன.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை ஏகாதசி மற்றும் தேய்பிறை ஏகாதசி அன்று தவறாமல் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    சந்தான பாக்கியம் அளிக்கும் தலமாக விளங்கும் இத்தலத்திற்கு வந்து, இத்தல இறைவனை வழிபட்டால் குழந்தைப் பேறு நிச்சயம் கிடைக்கும் என்கிறார்கள்.

    மன அமைதியை நாடுவோர் இத்தலத்திற்கு ஒரு முறை வந்து வேணுகோபால சுவாமியை மனம் குளிர தரிசித்தால் நம் மனம் முழுவதும் அமைதி பரவுவது நிச்சயம். ஒரு கால பூஜை நடைபெறும் இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணிநேரம் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருக்கழுக்குன்றத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வீராபுரம் - விட்டிலாபுரம் சாலையில் அமைந்துள்ளது, பெரியகாட்டுப்பாக்கம் திருத்தலம்.

    • இன்று சஷ்டி விரதம்.
    • சகல சிவாலயங்களில் ஆனி உத்திர தரிசன விழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 28 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: சஷ்டி நண்பகல் 12.15 மணி வரை. பிறகு சப்தமி.

    நட்சத்திரம்: உத்திரம் மாலை 4.20 மணி வரை. பிறகு அஸ்தம்.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சஷ்டி விரதம். சுபமுகூர்த்த தினம். ஸ்ரீநடராஜர் அபிஷேகம், ஆனி உத்திர தரிசனம். சகல சிவாலயங்களில் ஆனி உத்திர தரிசன விழா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் தண்டியலில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி. திருவிடைமருதூர். ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமாள் கிளி வாகன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-பண்பு

    கடகம்- உதவி

    சிம்மம்-போட்டி

    கன்னி-அன்பு

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-உயர்வு

    தனுசு- உண்மை

    மகரம்-தேர்ச்சி

    கும்பம்-சாந்தம்

    மீனம்-பயணம்

    ×