என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "go pooja"
- செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டது.
- அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி, சுவாமி சிலைகள், கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் காந்தி ரோட்டில் செல்வ விநாயகர், பாலதண்டபாணி கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டது.
பின்னர் திருப்பணி செய்ய பாலாலய பூஜை நடைபெற்றது.இதை தொடர்ந்து சுவாமி சிலைகள் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டு, அருகே உள்ள பொன்காளியம்மன் கோவிலில், தனி அறையில் பாதுகாப்புடன் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பக்தர்கள் வழிபடுவதற்காக அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி, சுவாமி சிலைகள், கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கோவில் கட்டுவதற்கு முன் அங்கு பாசிப்பயிர், கம்பு, ராகி உள்ளிட்ட பயிர்களை வளர்த்து அதனை கால்நடைகளை விட்டு மேய விட வேண்டும் என்பது ஐதீகம். இதன்படி செல்வ விநாயகர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கோவில் கட்டப்பட உள்ள இடத்தில் மாடுகள், மற்றும் குதிரை ஆகியவற்றை விளைந்த தானிய பயிர்களை மேய விட்டனர்.
இதுகுறித்து திருப்பணி குழுவினர் கூறுகையில், செல்வ விநாயகர், பால தண்டபாணி திருக்கோவில் கட்டுவதற்காக அரசின் ஸ்தபதியிடம் கட்டுமான வரைபடம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். கட்டுமான வரைபடம் வந்தவுடன் அதனை அரசின் ஒப்புதல் பெற்று விரைவில் திருப்பணிகள் துவங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.நீண்ட காலமாக திருப்பணி நடைபெறாமல் இருந்த செல்வ விநாயகர், தண்டபாணி கோவிலில் தற்பொழுது திருப்பணிகள் நடைபெறுவது பல்லடம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரகப் பிரவேசத்தில் கோ பூஜை செய்வார்கள். மணிவிழா நடைபெறும் போதும், கணபதி ஹோமம் செய்யும் பொழுதும் கோ பூஜை செய்யப்படும்.
பசு நுழைந்த வீட்டில் தீய சக்திகள் அண்டாது. முன்பு அரசர்களின் ஊர்வலங்களில், பசுதான் முதலில் செல்லும். அதிகாலையில் பசுவை தரிசனம் செய்தால், எல்லா தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பசு வழங்கும் ஐந்து பொருட்கள்:- பால், தயிர், வெண்ணெய், கோமியம், சாணம் ஆகும். இந்த ஐந்தும் கலந்த கலவையே சக்தி பெற்ற ‘பஞ்சகவ்யம்’ என்று அழைக்கப் படுகிறது. சிரவண சடங்குகளில் பஞ்சகவ்யம் கொடுக்கப்படும். வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த இடத்தில் பஞ்சகவ்யம் தெளிக்கப்படும்.
கர்ப்பம் தரித்த பெண்கள் 3-ம் மாதத்தில் இருந்து பஞ்சகவ்யம் சாப்பிடுவார்கள். புதிதாக வாங்கும் ஆடைகளை பசுவின் முதுகில் வைத்து வழிபட்டு விட்டு, பிறகு அணிந்து கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். நோயுற்ற குழந்தைகளின் முகத்திற்கு எதிரே, பசுவின் வாலை 3 முறை சுற்றிக் காட்டினால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. பசு பால் வழங்குவதில் இருந்து 11-வது நாள் வரும் பாலை, அனைவருக்கும் இலவசமாக வழங்கினால், அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
கலங்கும் உள்ளத்தைக் காப்பதற்கு விலங்குகள் பெரிதும் உதவுகின்றன. பசு ஒரு சக்தி வாய்ந்த விலங்கு. வீடுகளில் பசுக்களை வளர்ப்பது நல்லது.
கோ பூஜை செய்வதன் மூலம் ஆபத்துக்கள் அகலும். பாவம் தீரும். செல்வம் செழிக்கும். கிரகப் பிரவேசத்தில் கோ பூஜை செய்வார்கள்.
அதேபோல் மணிவிழாவின் போதும், கணபதி ஹோமம் செய்யும் பொழுதும் கோ பூஜை செய்வார்கள். பசு நுழைந்த வீட்டில் தீய சக்திகள் அண்டாது.
முன்பு அரசர்களின் ஊர்வலங்களில் பசு முதலில் செல்லும். அதிகாலையில் பசுவைத் தரிசித்தால் எல்லா தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும்.
இந்த புஷ்கர விழா எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் வருகிற 9-ந்தேதி காலை 6 மணிக்கு தசமஹா வித்யா யாகம், கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு கொடியேற்றம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து ஹோமம் நடக்கிறது. 10-ந்தேதி காலையில் மகாகாளி யாகம் நடக்கிறது. 11-ந்தேதி காலை 6 மணிக்கு சுவாமி தீர்த்தவாரி, 9 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு, மகா ஆரத்தியை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் தொடங்கி வைக்கிறார்.
12-ந்தேதி காலையில் ராஜமாதங்கி யாகம், 13-ந்தேதி காலையில் திரிபுர பைரவி யாகம், மாலையில் வைணவ திருவிழா, 14-ந்தேதி காலையில் சின்னமஸ்தா யாகம், மாலையில் வைணவ திருவிழா, 15-ந்தேதி காலையில் ஷோடச யாகம், மாலையில் வைணவ திருவிழா நடக்கிறது. 16-ந்தேதி காலையில் தூமாவதி யாகம் நடக்கிறது.
17-ந்தேதி காலையில் பகளாமுகி யாகம், 18-ந்தேதி காலையில் கமலாத்மிகா யாகம், 19-ந்தேதி காலையில் புவனேசுவரி யாகம், 20-ந்தேதி காலையில் வராகி யாகம், 21-ந்தேதி காலையில் பிரத்திரிங்காரா யாகம், 22-ந்தேதி காலையில் மகா சண்டியாகம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு சுவாமிக்கு தீர்த்தவாரி, கோபூஜையும், மாலை 4 மணிக்கு ஆரத்தியும் நடக்கிறது.
இதையொட்டி எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு துறையில், சிதிலமடைந்த படித்துறைகளை அகற்றிவிட்டு அங்கு புதிதாக கருங்கல்லால் படித்துறை அமைக்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்