search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கோ பூஜை
    X

    நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கோ பூஜை

    நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கோபூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோ பூஜை செய்தார்.
    தாமிரபரணி மகா புஷ்கர விழா வருகிற 11-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறைகளில் நடக்கிறது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த புஷ்கர விழா எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் வருகிற 9-ந்தேதி காலை 6 மணிக்கு தசமஹா வித்யா யாகம், கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

    இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு கொடியேற்றம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து ஹோமம் நடக்கிறது. 10-ந்தேதி காலையில் மகாகாளி யாகம் நடக்கிறது. 11-ந்தேதி காலை 6 மணிக்கு சுவாமி தீர்த்தவாரி, 9 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு, மகா ஆரத்தியை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் தொடங்கி வைக்கிறார்.

    12-ந்தேதி காலையில் ராஜமாதங்கி யாகம், 13-ந்தேதி காலையில் திரிபுர பைரவி யாகம், மாலையில் வைணவ திருவிழா, 14-ந்தேதி காலையில் சின்னமஸ்தா யாகம், மாலையில் வைணவ திருவிழா, 15-ந்தேதி காலையில் ஷோடச யாகம், மாலையில் வைணவ திருவிழா நடக்கிறது. 16-ந்தேதி காலையில் தூமாவதி யாகம் நடக்கிறது.

    17-ந்தேதி காலையில் பகளாமுகி யாகம், 18-ந்தேதி காலையில் கமலாத்மிகா யாகம், 19-ந்தேதி காலையில் புவனேசுவரி யாகம், 20-ந்தேதி காலையில் வராகி யாகம், 21-ந்தேதி காலையில் பிரத்திரிங்காரா யாகம், 22-ந்தேதி காலையில் மகா சண்டியாகம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு சுவாமிக்கு தீர்த்தவாரி, கோபூஜையும், மாலை 4 மணிக்கு ஆரத்தியும் நடக்கிறது.

    இதையொட்டி எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு துறையில், சிதிலமடைந்த படித்துறைகளை அகற்றிவிட்டு அங்கு புதிதாக கருங்கல்லால் படித்துறை அமைக்கப்பட்டு வருகிறது. 
    Next Story
    ×