என் மலர்
ஆன்மிகம்
- இன்று சுபமுகூர்த்த நாள்.
- திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி - 23 (திங்கட்கிழமை)
திதி : துவாதசி இரவு 12.02 மணிக்கு மேல் திரயோதசி
நட்சத்திரம் : அனுஷம் இரவு 2.30 மணிக்கு மேல் கேட்டை
யோகம் : சித்தயோகம்.
நல்லநேரம் : காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
ராகுகாலம் : 7.30 மணி முதல் 9.00 மணி வரை
எமகண்டம் : காலை: 10.30 மணி முதல் 12.00 மணி வரை
சூலம் : கிழக்கு
திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பவனி
இன்று சுபமுகூர்த்த நாள். வாசுதேவ துவாதசி. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி வருஷாபிஷேகம். திருக்கோளக்குடி களோளபுரீஸ்வரர் தேர். திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்- உயர்வு
மிதுனம்-புகழ்
கடகம்-அச்சம்
சிம்மம்-நட்பு
கன்னி-உயர்வு
துலாம்- இரக்கம்
விருச்சிகம்-பரிவு
தனுசு- பகை
மகரம்-போட்டி
கும்பம்-நஷ்டம்
மீனம்-கவலை
- பக்தர்களின் 'அரோகரா' முழக்கத்துடன், மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
- பக்தர்கள் மீது டிரோன்கள் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர்:
தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், கடற்கரையோரம் அமைந்துள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது.
இந்த கோவிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.
இதற்கிடையே, திருச்செந்தூர் கோவிலை திருப்பதிக்கு இணையாக மாற்றும் வகையில், கடந்த 2022-ம் ஆண்டு ரூ.300 கோடி மதிப்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பெருந் திட்டவளாகப் பணிகள் தொடங்கியது. இதில் பல்வேறு திட்டப்பணிகள் முடிவுற்றதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடத்து வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூலை 7-ந்தேதி(இன்று) கும்பாபிஷேக விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைந்து நடந்தது.
இதைத்தொடர்ந்து கோவிலின் மேற்கு கோபு ரத்தின் அருகே கடந்த 40 நாட்களுக்கு முன்பு யாக சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. சுமார் 8 ஆயிரம் சதுர அடி யில் பிரம்மாண்ட யாக சாலை பக்தர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டது.
அங்கு கடந்த 1-ந் தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. சுவாமி சண்முகருக்கு ராஜகோபுர வாசல் அருகே 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு சுவாமி சண்முகருக்கு 49, ஜெயந்திநாதர் 5, நடராஜர் 5, பெருமாள் 5 மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 12 என மொத்தம் 76 குண்டங்களில் சுமார் 400 கும்பங்கள் வைக்கப்பட்டு காலை, மாலை என ஒவ்வொரு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.
நேற்று காலை 10-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 11-ம் கால யாகசாலை பூஜை மற்றும் மகாதீபாராதனை நடந்தது. இன்று அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
அதிகாலை 4 மணி அளவில் 12-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனையும் பூர்ணாகுதியும் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கடம் புறப்பாடு தொடங்கியது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன்வளம் , மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கோவிலை சுற்றி வந்த கடத்திற்கு பின்னால் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என கோஷ மிட்டபடி பின்தொடர்ந்து வந்தனர்.
தொடர்ந்து ராஜகோ புரத்திற்கு புனித நீர் ஊற்றப்படும் கடம் கோவிலின் மேற்கு வாசல் வழியாக அமைக்கப்பட்ட தற்காலிக பாதை மூலம் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 9 கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து காலை 6.22 மணிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பச்சை கொடி காட்டவும் 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதே நேரத்தில் மூலவர், சண்முகம், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் உள்பட பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் உள்ள கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டது.
அப்போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என கோஷமிட்டது விண்ணை பிளக்கும் அளவிற்கு இருந்தது.
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், கோவில் தக்கார் அருள் முருகன், சிருங்கேரி சாரதா பீடாதிபதி விதுசேகர பாரதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், திருவாவடு துறை ஆதீன குரு மகா சன்னிதானம், தருமை ஆதீனம் குரு மகா சன்னிதானம், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், ஜப்பான் நாட்டை சேர்ந்த பாலகும்பா குருமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்பாபிஷேக விழா நிறைவடைந்ததும் பக்தர்கள் இருந்த கடற்கரை பகுதியில் 20 ராட்சத டிரோன்கள் மூலம் பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தலா 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒவ்வொரு டிரோன் மூலம் 3முறை பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷேக விழா வில் லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கண்குளிர பார்த்து மகிழ்ந்தனர்.
- குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது.
- நம் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடன், பூஜைகளை சரிவர செய்ய வேண்டும்.
குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள்.
குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோவிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை தொடங்குபவர்கள் உடனே குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது செலுத்தி விடுவது வழக்கம்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.
குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும், பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். உதாரணமாக, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது பலர் வழக்கம். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்கு கூட செல்வது கிடையாது.

எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான். மூலவரை வழிபடாமல் அங்கிருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல் தான் பிற வழிபாடுகளை மட்டும் செய்வது. குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது. அப்படிப்பட்ட நம் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடன், பூஜைகளை சரிவர செய்ய வேண்டும். அதை சரியாக செய்ய தவறினாலோ அல்லது மறந்து விட்டாலோ குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். குலதெய்வம் நம் குடும்பத்தின் மீது கோபமாக இருப்பதை சில அறிகுறிகள் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.
உங்கள் குலதெய்வ கோவிலுக்கு நீங்கள் செல்லும் போது குடும்பத்தில் இருப்பவர்கள் சிலர் உங்களோடு கோவிலுக்கு வரமுடியாத சூழ்நிலை உருவாகும். தடங்கல்கள் ஏற்படும். அதையும் மீறி கோவிலுக்கு சென்றாலும் அங்கே பூஜை செய்ய முடியாதப்படி தடங்கல்கள் ஏற்படும். அப்படியும் பூஜை செய்து வழிபாட்டால் அங்கேயோ அல்லது வீட்டிற்கு திரும்பி வரும்போதோ பிரச்சனை ஏற்பட்டு மனக்கஷ்டத்தோடு வரவேண்டி இருக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றுவிட்டாலும் காயம் ஏற்படுவது போன்று ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைப்பது ஒன்றாக இருக்கும். ஆனால் நடப்பது வேறொன்றாக இருக்கும். தீயசக்திகள் கனவில் வருவது போன்ற கனவுகள் ஏற்படும். வாழ்வில் தொடர்ந்து பிரச்னை மேல் பிரச்னை வந்துக் கொண்டேயிருக்கும்.
சில நேரங்களில் தெய்வத்தின் மீது திடீரென வெறுப்புணர்ச்சி தோன்றுவது. குடும்ப உறுப்பினர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவுகள் ஏற்படுவது, மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காமல் இருப்பது. வேலை தேடுவதில் தடைகள், தொழிலில் நஷ்டம், முன்னேற்றம் இல்லாமல் இருப்பது.
இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் நம் குலதெய்வம் கோபமாக இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். இதை தவிர்க்க நம் வீட்டில் குலதெய்வத்திற்கு என்றே ஒரு விளக்கை ஏற்றி, 'நாங்கள் தெரியாமல் செய்த பாவங்களுக்கு எங்களை மன்னித்து உன் சன்னதிக்கு வந்து வழிப்பட அருள் புரியுங்கள்' என்று வேண்டி வழிபடலாம். மேலும், குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபட்டு, பரிகாரங்களைச் செய்து, உங்கள் குலதெய்வத்தின் அருளைப் பெறுவது நல்லது.
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.
- திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-22 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி இரவு 10.15 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : விசாகம் நள்ளிரவு 12.05 மணி வரை பிறகு அனுஷம்
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
இன்று சர்வ ஏகாதசி. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் ஊஞ்சலில் காட்சி. காணாடுகாத்தான் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் ஸப்தவர்ணம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் ஊஞ்சலில் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. காஞ்சி காமாட்சியம்மன், இருக்கண்குடி, சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-ஆதாயம்
மிதுனம்-அமைதி
கடகம்-ஆர்வம்
சிம்மம்-நலம்
கன்னி-ஆக்கம்
துலாம்- அனுகூலம்
விருச்சிகம்-அன்பு
தனுசு- பண்பு
மகரம்-சாந்தம்
கும்பம்-குணம்
மீனம்-பண்பு
- முருகப்பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாக தினத்தன்று வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறும்.
- முருகப்பெருமானை வழிபட்டால் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் கடவுளை வழிபட்டதற்கு சமம் என்கிறார்கள்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. கடற்கரையில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்து சிவபெருமானை வழிபடுகிறார். தன்னிடம் வேண்டி வந்தவர்களின் தீவினைகளை அழித்து வெற்றி அருளுகிறார் இறைவன்.
கோவிலில் மூலவராக சுப்பிரமணிய சுவாமி காட்சி அளிக்கிறார். உற்சவர்களாக ஜெயந்திநாதர், சண்முகர், குமரவிடங்க பெருமான், அலைவாயுகந்த பெருமான் அருள்பாலிக்கின்றனர். கோவிலில் விநாயகர், பார்வதி தேவி, சுவாமி வீரபாகுமூர்த்தி, வீரமகேந்திரர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், வள்ளி, தெய்வானை, சூரசம்ஹார மூர்த்தி, பாலசுப்பிரமணியர், மயூரநாதர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சனி பகவான், பைரவர், அருணகிரிநாதர் என அனைத்து சுவாமிகளுக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
மூலவர் சுப்பிரமணிய சுவாமியின் இடது பக்கத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. அவருக்கு 'ஜெகநாதர்' என்று பெயர். மூலவருக்கு நடைபெறும் அனைத்து அபிஷேகம் மற்றும் கால பூஜை, தீபாராதனை இவருக்கும் நடைபெறும். முருகனின் வலது கையில் தாமரை மலர் இருக்கும். தாமரை மலரால் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். மூலவருக்கு பின்புறம் சிறுபாதை வழியாக சென்றால் அங்கு பஞ்சலிங்கம் (5 லிங்கம்) இருக்கிறது.
கோவில் வளாகத்தில் வள்ளிக்குகையின் அருகே உள்ள சந்தனமலையில் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் அமைய மஞ்சள் கயிறும், குழந்தை இல்லாத தம்பதியர் தொட்டிலும் கட்டி வழிபடுகிறார்கள். மேலும் 'குரு தலம்' என்று அழைக்கப்படும் இக்கோவில் முக்கிய பரிகார தலமாகவும் விளங்குகிறது. குருப்பெயர்ச்சி தினத்தன்று லட்சக் கணக்கான பக்தர்கள் மூலவர் மற்றும் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வழிபடுவார்கள். கோவிலில் தங்க கொடிமரம், செப்பு கொடிமரம் என 2 கொடிமரங்கள் உள்ளன.
முருகப்பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாக தினத்தன்று வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறும். மேலும் ஆவணி திருவிழா, கந்த சஷ்டி திருவிழா, தைப்பூச திருவிழா, மாசி திருவிழா ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
மாசி மற்றும் ஆவணி திருவிழா 7-ம் நாள் மாலை மூலவரின் உற்சவரான சுவாமி சண்முகர், வள்ளி - தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவன் அம்சமாகவும், 8-ம் நாள் அதிகாலை வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு அணிந்து பிரம்மா அம்சமாகவும், அன்று பகல் வள்ளி - தெய்வானையுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பெருமாள் அம்சமாக பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். எனவே முருகப்பெருமானை வழிபட்டால் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் கடவுளை வழிபட்டதற்கு சமம் என்கிறார்கள்.
கந்தசஷ்டி திருவிழா 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். 6-ம் நாள் மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி கடற்கரையில் நடைபெறும். 7-ம் நாள் இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். அதேபோல் பங்குனி உத்திர தினத்தன்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.
கோவிலில் ஆண்டுதோறும் 2 வருஷாபிஷேக விழா நடைபெறும். சுவாமி மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளான தை உத்தர தினத்தன்று வருஷாபிஷேகம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்த தினமான தமிழ் மாதம் ஆனியில் மற்றொரு வருஷாபிஷேகம் நடைபெறும்.
ஆலயத்தில் மொத்தம் ரூ.300 கோடி செலவில் பக்தர்களுக்கான பல்வேறு கட்டமைப்பு வசதிகள் கொண்ட பெருந்திட்ட வளாக பணிகள், கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்றது. முருகப்பெருமானின் மற்ற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, திருத்தணி ஆகிய சன்னிதிகள் புதிதாக கோவில் நாழிக்கிணறு அருகே கட்டப்பட்டு வருகிறது.
16 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் கோவிலில் 2.7.2009-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக யாகசாலை பந்தலில் 76 ஓம குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
7-ந் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர விமான கலசங்களுக்கும், சுவாமி மூலவர், சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்க பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறுவதால் திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
- முருகப்பெருமானின் 12 கைகளில் உள்ள நரம்புகளைப் போன்று பன்னிரு நரம்புகள் இலையில் உள்ளதால் இதனை ‘பன்னிரு இலை’ என்பர்.
- கோவில் திருப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு கூலியாக இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர் கோவிலில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி தீராத நோய்களை தீர்க்கும் அருமருந்து. முருகப்பெருமானின் 12 கைகளில் உள்ள நரம்புகளைப் போன்று பன்னிரு நரம்புகள் இலையில் உள்ளதால் இதனை 'பன்னிரு இலை' என்பர். அதுவே நாளடைவில் மருவி 'பன்னீர் இலை' என்றானது.
கோவில் திருப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு கூலியாக இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்டவர்கள் தூண்டிகை விநாயகர் கோவிலைக் கடந்து சென்று, இலை விபூதி பிரசாதத்தை திறந்து பார்த்தால், அவர்களுக்குரிய கூலி தங்க காசாக மாறியிருந்தது.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். ராமநாதபுரம் ஸ்ரீ கோண்டராம சுவாமி ரதம்.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-21 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி இரவு 8.18 மணி வரை
பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : சுவாதி இரவு 9.32 மணி வரை பிறகு விசாகம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். ராமநாதபுரம் ஸ்ரீ கோண்டராம சுவாமி ரதம். வீரவநல்லூர் ஸ்ரீ பூமிநாத சுவாமி தெப்பம். மதுரை சொக்கலிங்கம் புதூர் நகர சிவாலய வருஷாபிஷேகம், திருக்கல்யாணம். ஸ்ரீ பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சனம். திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-விவேகம்
மிதுனம்-ஆக்கம்
கடகம்-ஆதரவு
சிம்மம்-லாபம்
கன்னி-வெற்றி
துலாம்- அமைதி
விருச்சிகம்-உற்சாகம்
தனுசு- மேன்மை
மகரம்-பாராட்டு
கும்பம்-ஊக்கம்
மீனம்-ஈகை
- உங்களால் இயன்ற அளவிற்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள்.
- ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும்.
உலகளந்த பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் உகந்த நாள்தான். சனிக்கு அதிபதியாக இருக்கும் பெருமாள் தான் சனிபகவானை கட்டுப்படுத்துகிறார். வேண்டிய வரம் கிடைக்க வேங்கடவன் பெருமாளை சனிக்கிழமையில் வணங்கினாலே போதும் எல்லா வரங்களும் உங்களைத் தேடி வரும். அத்தகைய பெருமாளை சனிக்கிழமை அன்று எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா? தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
சனிக்கிழமைதோறும் காலை, மாலை என இருவேளையும் பூஜையறையில் விளக்கேற்றி ஒரு சிறிய கிண்ணத்தில் அவல் வைத்து உள்ளன்போடு பெருமாளுக்கு நைவேத்தியம் படைத்து வழிபடுங்கள். கொஞ்சம் துளசி கிடைத்தால் பெருமாளின் திருப்பாதங்களில் தூவுங்கள். உள்ளம் உருகி, இரு கைகளையும் கூப்பி ஓம் நாராயணா என்று உண்மையான பக்தியோடு அவரிடம் உங்கள் வேண்டுதலை வைத்து வழிபடுங்கள்.
வாராவாரம் சனிக்கிழமை இந்த வழிபாட்டை உள்ளன்போடு செய்து பாருங்கள்... உங்கள் வாழ்வில் பெருமாள் ஏற்படுத்தும் அதிசயங்களை உங்களால் நிச்சயம் கண்கூடாக பார்க்க முடியும்.
உங்களால் இயன்ற அளவிற்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். முக்கியமாக ஏகாதசி வழிபாடு மேற்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒன்று வளர்பிறை ஏகாதசி, மற்றொன்று தேய்பிறை ஏகாதசி. இந்த இரண்டு ஏகாதசியிலும் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறந்தது. முக்கியமாக உங்களால் முடிந்தால் ஏகாதசியில் விரதம் தொடங்கி அடுத்த நாள் துவாதசியில் விரதம் முடித்து பெருமாளை வழிபட்டு துளசி தீர்த்தம் பருக எல்லா வரங்களையும், வளங்களையும் பெருமாள் உங்களுக்கு வழங்குவார்.
முடிந்தால் ஏகாதசி நாளில், பெருமாளுக்கு தயிர்சாதம் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். வழிபாட்டின்போது விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நீங்கள் இழந்த செல்வங்களை அந்த வேங்கடவன் பெருமாள் உங்களுக்குத் தந்தருள்வார் என்பது ஐதீகம்.
- திருமலைநாயக்கர் மீது போர் தொடுத்து வென்ற டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் கோவிலிலும் கொள்ளையடித்தனர்.
- கடல் சீற்றம் அதிகமானதால் அஞ்சிய டச்சுக்காரர்கள் சுவாமி சண்முகர், நடராஜர் சிலைகளை கடலில் போட்டு விட்டு சென்றனர்.
1648-ம் ஆண்டு டச்சுக்காரர்கள் இந்தியாவின் மீது படையெடுத்தனர். அப்போது திருமலைநாயக்கர் மீது போர் தொடுத்து வென்ற அவர்கள் திருச்செந்தூர் கோவிலிலும் கொள்ளையடித்தனர். தங்கம், வெள்ளி பொருட்களுடன் சுவாமி சண்முகர், நடராஜர் சிலைகளையும் கப்பலில் ஏற்றி சென்றனர். அப்போது கடல் சீற்றம் அதிகமானதால் அஞ்சிய டச்சுக்காரர்கள் சுவாமி சண்முகர், நடராஜர் சிலைகளை கடலில் போட்டு விட்டு சென்றனர்.
இதற்கிடையே பக்தர் வடமலையப்பரின் கனவில் தோன்றிய இறைவன், கடலில் கிடக்கும் சுவாமி சிலைகளை மீட்குமாறு அறிவுறுத்தினார். அதன்படி சிலரை படகில் அழைத்து கொண்டு நடுக்கடலுக்கு சென்றார். அங்கு கருட பகவான் வானில் வட்டமடித்த இடத்தில் சுவாமி சிலைகளின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்து பிரகாசமாக ஜொலித்தன. மேலும் அங்கு எலுமிச்சை பழமும் மிதந்து கொண்டிருந்தது. பக்தி பரவசத்துடன் சுவாமி சிலைகளை மீட்டு மீண்டும் கோவிலில் சேர்த்தார்.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
- இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-20 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி இரவு 6.21 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம் : சித்திரை இரவு 6.58 மணி வரை பிறகு சுவாதி.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி குதிரை வாகனத்தில் பவனி. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர்பிரான் ரதோற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம், மாலையில் ஊஞ்சல் சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை. லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இரக்கம்
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-மாற்றம்
கடகம்-ஜெயம்
சிம்மம்-பக்தி
கன்னி-கவனம்
துலாம்- நற்செயல்
விருச்சிகம்-சாந்தம்
தனுசு- களிப்பு
மகரம்-துணிவு
கும்பம்-சுபம்
மீனம்-வரவு
- கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
- தான்ய வழிபாடு, முதன்மைத் திருக்குட வழிபாடு, பரிகார வேள்வி, திருக்குட வழிபாடு, மூலவர் திருக்குட அபிஷேகம், நண்பகல் வழிபாடு ஆகியவை நடைபெற்றது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. கோவிலில் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மற்றும் கோவில் நிதியில் இருந்து. ரூ.100 கோடி என ரூ.300 கோடியில் 90 சதவீத மெகா திட்ட வளாக பணிகள் நிறைவு பெற்று தக்கார் அருள் முருகன் தலைமையில் மகா கும்பாபிஷேகப் பணிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 12 கால யாக பூஜை நடக்கிறது. நேற்று இரவு கோவில் கலையரங்கில் மாதவி வில்லிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் நான்காம் கால யாக பூஜை தொடங்கியது.
இதில் தான்ய வழிபாடு, முதன்மைத் திருக்குட வழிபாடு, பரிகார வேள்வி, திருக்குட வழிபாடு, மூலவர் திருக்குட அபிஷேகம், நண்பகல் வழிபாடு ஆகியவை நடைபெற்றது. மாலையில் 5-ம் கால யாக பூஜை நடக்கிறது அதில் தான்ய வழிபாடு வேள்விச் சாலை தூய்மை ஆகியவை நடக்கிறது.
வருகிற 7-ந் தேதி அதிகாலை 4மணிக்கு 12-ம் கால வேள்வி வழிபாடு, வேள்வி, மகா தீபாராதனை, யாத்ரா தானம், காலை 5.30 மணிக்கு கடம் மூலாலயப் பிரவேசம், 6.15மணிக்கு விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல், சுவாமி சண்முகர், ஜெயந்தி நாதர், நடராஜர்,குமரவிடங்க பெருமான் மற்றும் உள், வெளி பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பெரு நன்னீராட்டு, காலை 9 மணிக்கு சண்முகர் உருகு சட்ட சேவை நடைபெற்று சண்முகர் விலாசம் சேருதல் நடக்கிறது. பின்னர் சிறப்பு அபிஷேகம் இரவு 7மணிக்கு தங்க திருவாபரணம் அணிவித்து அலங்காரமாகி சண்முகர் தீப வழிபாடு பரிவார மூர்த்திகளுடன் வீதிஉலா வந்து சேர்க்கையில் சேர்தல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளார்கள் செய்து வருகின்றனர்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம்.
- ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-19 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி மாலை 4.32 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : அஸ்தம் மாலை 4.33 மணி வரை பிறகு சித்திரை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம், அபிஷேகம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். கண்டதேவி, காணாடுகாத்தான் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஊஞ்சலில் காட்சி. திருக்கோளக்குடி ஸ்ரீ கோளபுரீஸ்வரர் திருக்கல்யாணம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி உற்சவம் ஆரம்பம். குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு அபிஷேகம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-களிப்பு
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-இன்பம்
கடகம்-இரக்கம்
சிம்மம்-நன்மை
கன்னி-பண்பு
துலாம்- பணிவு
விருச்சிகம்-ஆர்வம்
தனுசு- வெற்றி
மகரம்-சுகம்
கும்பம்-லாபம்
மீனம்-ஆதரவு






