என் மலர்
ஆன்மிகம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மலைவலம் வந்து மகத்துவம் காணவேண்டிய நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். பழைய பாக்கிகள் வசூலாகும்.
ரிஷபம்
எதிரிகளின் பலம் கூடும் நாள். இல்லத்தில் அமைதி குறையும். அக்கம்பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சச்சரவு ஏற்படும்.
மிதுனம்
புதிய பாதை புலப்படும் நாள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உறவினர் பகை மாறும்.
கடகம்
யோகமான நாள். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன் பிறப்புகள் ஒத்துழைப்பு செய்வர். பயணத்தால் ஆதாயம் உண்டு. எதிர்காலம் பற்றிய பயம் அகலும்.
சிம்மம்
போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கன்னி
தேக்கநிலை மாறி ஊக்கமுடன் செயல்படும் நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டதற்கு ஆதாயம் கிடைக்கும்.
துலாம்
மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பால் கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். அலைபேசி மூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும். மனை தேடி மங்கலச் செய்தி வந்து சேரும்.
விருச்சிகம்
வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழும் நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.
தனுசு
தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெறுவது பற்றி சிந்திப்பீர்கள்.
மகரம்
முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். வரவு திருப்தி தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
கும்பம்
மனக்கலக்கம் அகலும் நாள். தேவைகள் பூர்த்தியாகத் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. பயணத்தால் பலன் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.
மீனம்
வசதிகள் பெருகும் நாள். வருமானம் உயரும். வழிபாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவர்.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-26 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி பின்னிரவு 3.11 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : மூலம் காலை 6.09 மணி வரை பிறகு பூராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பவுர்ணமி, குரு பகவானுக்கு அபிஷேகம், ராகவேந்திர சுவாமிக்கு திருமஞ்சனம்
இன்று பவுர்ணமி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ரதோற்சவம். திருமாலி ருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் முப்பழ பூஜை, திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-நிறைவு
கடகம்-ஓய்வு
சிம்மம்-மாற்றம்
கன்னி-ஓய்வு
துலாம்- புகழ்
விருச்சிகம்-நட்பு
தனுசு- போட்டி
மகரம்-வரவு
கும்பம்-நற்சொல்
மீனம்-வெற்றி
- பித்ரு தோஷங்களில் இருந்தும் நம்மை விடுவிக்கிறார் இந்த ருண விமோசன கணபதி.
- விநாயகருக்கு விளக்கேற்றி விட்டு, பின்னர் தயிரில் ஊற வைத்த அருகம்புல்லை எடுத்து சுத்தமான நீரில் அலசி, காய்ச்சாத பசும்பாலில் போட வேண்டும்.
அருகம்புல் வழிபாடு ஆன்மிக வழிபாட்டில் தனிச் சிறப்பு பெற்றது. அதுவும் விநாயகரையும் அருகம்புல்லையும் பிரிக்கவே முடியாது எனலாம். அதிலும் குறிப்பாக விநாயகப் பெருமானின் 54 அவதாரங்களில் 27 வது அவதாரமாக விளங்கும் 'ருண விமோசன கணபதி' தனிச் சிறப்பு பெற்றவர். ருணம் என்றால் கடன், விமோசனம் என்றால் விடைபெறுவது. அதாவது நம்முடைய கடன்களிலிருந்து விடுவித்து காக்கும் கணபதி என்று பொருள்.
கடன் என்றால் பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மட்டும் கிடையாது. நம் முன்னோர்களுக்கு நாம் செய்யத் தவறிய கடமைகளும் கடன் தான். அத்தகைய பித்ரு தோஷங்களில் இருந்தும் நம்மை விடுவிக்கிறார் இந்த ருண விமோசன கணபதி.
ருண விமோசன கணபதி எல்லா ஆலயங்களிலும் இருக்க மாட்டார். இவரை வழிபடுவதற்காக இவர் இருக்கும் ஆலயத்தை தேடிச் சென்று தான் வழிபட வேண்டும் என்றில்லை. உங்கள் வீட்டில் உள்ள விநாயகரையே வழிபடலாம் அல்லது அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்றும் வழிபடலாம்.
கடன்சுமை தீர்க்கும் அருகம்புல் வழிபாடு:

விநாயகர் வழிபாடு செய்வதற்கு முதல் நாள் இரவு 16 அருகம்புல் எடுத்து அதுவும் நுனி உடையாமல் எடுத்து தயிரில் போட வேண்டும். அருகம்புல் கிடைக்காத சூழ்நிலையில் குறைந்தது 3 ஆவது இருக்க வேண்டும். அடுத்த நாள் காலை எழுந்ததும் குளித்து முடித்து பூஜை அறையை அலங்காரம் செய்ய வேண்டும். விநாயகருக்கு விளக்கேற்றி விட்டு, பின்னர் தயிரில் ஊற வைத்த அருகம்புல்லை எடுத்து சுத்தமான நீரில் அலசி, காய்ச்சாத பசும்பாலில் போட வேண்டும். பிறகு ஒவ்வொரு அருகம்புல்லாக எடுத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி அர்ச்சனை செய்யும் போது, "ஓம் ருண விமோசன கணபதியே போற்றி" என பாராயணம் செய்ய வேண்டும். நீங்கள் ஆலயத்திற்கு செல்ல விரும்பினால் விநாயகரை 3 முறை சுற்றி வலம் வந்து பின்னர் செல்லலாம். இந்த வழிபாட்டை தொடர்ந்து 27 நாட்கள் செய்துவர உங்களை கடன் சுமையிலிருந்து ருண விமோசன கணபதி காத்தருள்வார் என்பது ஐதீகம்.
- பவுர்ணமியன்று சிவபெருமான், பிச்சாடனர் கோலத்தில் வீதி உலா வருவார்.
- மக்கள் உயரமான இடத்தில் இருந்து வீதியில் வரும் பிச்சாடனரை நோக்கி மாங்கனிகளை வீசுவர்.
காரைக்கால் அம்மையார் பிறந்த ஊரில் அவருக்கு ஆலயம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இங்கு காரைக்கால் அம்மையாரே, மூலவராக இருக்கிறார். அடியாராக வந்த ஈசனுக்கு சாப்பிட புனிதவதி மாங்கனி படைத்ததையும், புனிதவதிக்கு சிவபெருமான் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி இவ்வாலயத்தில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த விழாவானது, இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
பவுர்ணமியன்று சிவபெருமான், பிச்சாடனர் கோலத்தில் வீதி உலா வருவார். அப்போது மக்கள் உயரமான இடத்தில் இருந்து வீதியில் வரும் பிச்சாடனரை நோக்கி மாங்கனிகளை வீசுவர்.
குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறாத பெண்கள், இந்த மாங்கனிகளை தங்களது சேலை முந்தானையை விரித்து தாங்கிப் பிடிப்பர். அந்த மாங்கனியை சாப்பிடுவதால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- கணவரை காணாது துவண்டுபோன புனிதவதிக்கு, பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி கிடைத்தது.
- பேய் உருவத்துடன் சிவபெருமானைக் காண, கயிலாய மலைக்கு பயணமானார் புனிதவதி.
காரை வனம் என்று அழைக்கப்பட்ட காரைக்கால் பகுதியில் பெரும் வணிகராக இருந்தவர், தனதத்தன். இவரது மகள் புனிதவதி. இவர் தன்னுடைய சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவராக இருந்தார். பருவ வயதை எட்டியதும் புனிதவதியை, நாகப்பட்டினத்தில் வசித்த பரமதத்தர் என்ற வணிகருக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்.
ஒரு சமயம் பரமதத்தன் தனது கடையில் இருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர் அங்கு வந்தார். அவர் தனது வீட்டுத் தோட்டத்தில் காய்த்த 2 மாங்கனிகளை பரமத்தத்தரிடம் கொடுத்தார். அந்த கனிகளை, வேலையாள் மூலமாக தனது வீட்டிற்கு கொடுத்தனுப்பினார் பரமதத்தர்.
இந்தநிலையில் புனிதவதியின் சிவபக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், ஒரு அடியார் வேடத்தில் புனிதவதியின் வீட்டின் முன்பு வந்து நின்றார். வீட்டின் முன்பு யாசகம் கேட்டு நின்ற அடியாரை வரவேற்ற புனிதவதி, வீட்டின் திண்ணையில் அவரை அமரவைத்து, தயிர் கலந்த அன்னம் படைத்தார். அதோடு கணவர் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றையும் சிவனடியாருக்கு சாப்பிடத் தந்தார். இதையடுத்து உணவருந்திய மகிழ்ச்சியில் சிவனடியார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சிவனடியார் சென்ற சிறிது நேரத்தில் வழக்கம் போல, மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தார் பரமதத்தர். அவருக்கு பல வகை உணவுகளை சமைத்து பரிமாறினார் புனிதவதி. அதோடு மீதம் இருந்த மாங்கனி ஒன்றையும் இலையில் வைத்தார். மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தான் கொடுத்து அனுப்பியதில் மீதம் இருக்கும் மற்றொரு மாங்கனியையும் எடுத்துவரும்படி பரமதத்தர் கூறினார்.
கணவர் அப்படிக் கேட்டதும் பதறிப்போனர், புனிதவதி. 'கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை அடியாருக்கு சமர்ப்பித்து விட்டேன் என்று கூறினால் கணவர் கோபித்துக் கொள்வாரோ' என்று கருதிய புனிதவதி, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். பின்னர் நேரடியாக பூஜை அறைக்குச் சென்று சிவபெருமானை மனமுருக வேண்டினார். அப்போது புனிதவதியின் கையில் ஒரு மாங்கனி வந்தது. மகிழ்ச்சி அடைந்த புனிதவதி, அதை எடுத்துச் சென்று கணவருக்குக் கொடுத்து உபசரித்தார்.
ஆனால் முந்தைய கனியை விட, இந்த மாங்கனி இன்னும் அதிக சுவையுடன் இருந்ததால் பரமதத்தர் சந்தேகம் கொண்டார். 'ஒரே மரத்தில் விளைந்த இரு மாங்கனிகளின் சுவை மாறுபடுமா?' என்று நினைத்தவர், தன் மனைவியிடம் உண்மையை கூறும்படி கேட்டார். புனிதவதி, நடந்த விஷயங்களை கணவரிடம் கூறினார். ஆனால் அதை நம்ப பரமதத்தர் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. "சிவபெருமான் உனக்கு கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை இங்கேயே வரவழைத்து காட்டு" என்று மனைவியை நிர்ப்பந்தித்தார். புனிதவதி மீண்டும் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி அவரது கையில் வந்து, சிறிது நேரத்தில் மறைந்தது.
இறைவனின் இந்த திருவிளையாடலை கண்டு வியந்துபோன பரமதத்தர், "நீ.. மனிதப் பிறவி அல்ல. தெய்வப் பெண். உன்னுடன் நான் இனி வாழ்வது சரியல்ல" என்று கூறி, புனிதவதியைப் பிரிந்து, பாண்டியநாடு சென்று அங்கு வணிகம் செய்தார். சில காலத்தில் அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பரமதத்தர், தன்னுடைய முதல் மனைவியான புனிதவதியின் பெயரைச் சூட்டினார்.
இதற்கிடையே கணவரை காணாது துவண்டுபோன புனிதவதிக்கு, பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி கிடைத்தது. உடனடியாக அங்கு புறப்பட்ட புனிதவதி, பரமதத்தனின் இல்லத்தைச் சென்றடைந்தார். தன்னைத் தேடி வந்த புனிதவதியின் காலில் விழுந்து வணங்கிய பரமதத்தர், அதேபோல் தனது மனைவி, மகளையும் விழச்செய்தார்.
கணவர் தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத புனிதவதி, தனது அழகுமேனியை அழித்து பேய் வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டினார். இறைவனும் அப்படியே ஆசி வழங்கினார். பேய் உருவத்துடன் சிவபெருமானைக் காண, கயிலாய மலைக்கு பயணமானார் புனிதவதி.
கயிலாயம் புனிதமான இடம் என்பதால், காலை ஊன்றி நடக்காமல், தலையால் நடந்து சென்றார். இதைப் பார்த்த சிவபெருமான், "அம்மையே வருக.. அமர்க.." என்று அழைத்தார். மேலும் "உனக்கான வரத்தைக் கேள்" என்றார்.
அதற்கு புனிதவதி அம்மை, "இறைவா.. பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பிருந்தால் உனையென்றும் மறவாமை வேண்டும், எப்போதும் நீ ஆடும்போது உன் காலடியின் கீழ் நான் இருக்க வேண்டும்" என்று வரம் கேட்டார். அவ்வாறே அருளிய இறைவன், அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டினார். சிவபெருமானே 'அம்மையே' என்று அழைத்ததாலும், புனிதவதி பிறந்த ஊர் காரைக்கால் என்பதாலும், அவர் 'காரைக்கால் அம்மையார்' என்று பெயர் பெற்றார். காரைக்கால் அம்மையாரை திருவாலங்காடு திருத்தலத்திற்கு வரச்செய்து, அங்கு தன்னுடைய திருவடியின் கீழ் என்றும் இருக்க அருள்புரிந்தார், சிவபெருமான்.
- சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
தோலொடு நூலிழை சேர்ந்த மார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்த செந்தீ மால்புகை போய்விம்மு மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
சீர்கெள்செங் காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழல் ஆர்க்க ஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
-திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
வேதங்கள் உணர்ந்த அந்தணர்கள் எழுப்பும் வேள்வி தீயின் புகை வெளிப்படும் மாடங்களுடன் கூடிய வீதிகளை உடையது திருமருகல் திருத்தலம். இங்கு மான் தோலும், பூணூலும் மார்பில் அணிந்து வீற்றிருக்கும் இறைவனே, மீன்கள் நிறைந்த நீர்வளம் மிக்க வயல்களும், சோலைகளும் சூழ்ந்த செங்காட்டங்குடியில் திருவடி கழல்கள் ஒலிக்க ஆடும் திருநடனத்தை, கணபதி ஈச்சரத்தில் செய்ததற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-25 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி பின்னிரவு 2.35 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம் : மூலம் (நாள் முழுவதும்)
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். காணாடுகாத்தான் தெப்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி வெண்ணைத் தாழி சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளிங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-நலம்
கடகம்-வெற்றி
சிம்மம்-உயர்வு
கன்னி-ஆர்வம்
துலாம்- கவனம்
விருச்சிகம்-உண்மை
தனுசு- ஜெயம்
மகரம்-சிந்தனை
கும்பம்-களிப்பு
மீனம்-ஓய்வு
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் திருவீதி உலா.
- திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இந்த வார விசேஷங்கள்
8-ந் தேதி (செவ்வாய்)
* பிரதோஷம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் ரத உற்சவம்.
* திருவல்லிக்கேணி அழகியசிங்கர் புறப்பாடு.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.
9-ந் தேதி (புதன்)
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி வெண்ணெய்த்தாழி சேவை. கானாடுகாத்தான் சிவபெருமான் தெப்ப உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
10-ந் தேதி (வியாழன்)
* பவுர்ணமி.
* காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் முப்பழ பூஜை. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
11-ந் தேதி (வெள்ளி)
* திருத்தங்கல் அப்பன் குதிரை வாகனத்திலும், தாயார் பூம்பல்லக்கிலும் பவனி.
* மதுராந்தகம் கோதண்ட ராமர் திருவீதி உலா.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
12-ந் தேதி (சனி)
* சிரவண விரதம். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்.
* திருவரங்கம் நம்பெருமாள், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
13-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சப்தாவர்ணம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
14-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
- திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
- பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்திபெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் ஆனி மாதம் பவுர்ணமி வருகிற 10-ந் தேதி அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி 11-ந் தேதி அதிகாலை 3.08 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் உள்ளதால் நண்பகல் நேரத்தில் கிரிவலம் வருவதை பக்தர்கள் தவிர்த்து அதிகாலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் கிரிவலம் வரலாம் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
- திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
- திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-24 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி நள்ளிரவு 1.32 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : கேட்டை மறுநாள் விடியற்காலை 4.35 மணி வரை பிறகு மூலம்
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
இன்று பிரதோஷம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் ரதோற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகியசிங்கர் புறப்பாடு. திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கருட வாகனத்திலும், தாயார் அன்ன வாகனத்திலும் புறப்பாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் திருவீதியுலா, சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-இரக்கம்
கடகம்-ஈகை
சிம்மம்-ஊக்கம்
கன்னி-மாற்றம்
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-கவனம்
தனுசு- கண்ணியம்
மகரம்-நிறைவு
கும்பம்-நிம்மதி
மீனம்-உண்மை
- சிவனை மனித உருவில் பார்க்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குகிறது.
- இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் ஒன்றாகும். இங்கு நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
மேலும், இங்கு சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து, தோன்றிய அகோர மூர்த்தி மனித உருவில் அருள்பாலிக்கிறார். சிவனை மனித உருவில் பார்க்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலில் விநாயகர், முருகர், நடராஜர், அகோர மூர்த்தி, புதன், சுவேத மகாகாளி மற்றும் சவுபாக்கிய துர்க்கை உள்ளிட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. இங்கு சந்திர, சூரிய மற்றும் அக்னி ஆகிய பெயர்களில் 3 குளங்களும் உள்ளன. மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
முன்னதாக கடந்த 3-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் 109 குண்டங்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. சோமசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 4-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், 5-ந்தேதி 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்று, பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முறையே நேற்று 6 மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
பின்னர், இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து காலை 5.30 மணிக்கு கோவிலில் உள்ள அனைத்து பரிவார சன்னதி விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்கள் சுவேதராண்யேஸ்வரர் சுவாமி, பிரம்ம வித்யாம்பிகை அம்பாள், புதன் பகவான், அகோர மூர்த்தி உள்ளிட்ட சுவாமி சன்னதி விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சுதா எம்.பி., எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ராஜகுமார், தமிழ் சங்க தலைவர் மார்கோனி இமயவரம்பன், தி.மு.க. பிரமுகர் முத்து. தேவேந்திரன், மாருதி பில்டர்ஸ் அகோரம் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய...' எனும் பக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பாதுகாப்பு பணியில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு இருந்தனர். மேலும், திருவெண்காடு ஊராட்சி சார்பில் 4 வீதிகளிலும் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதேபோல், தற்காலிக கழிவறை வசதியும், சுகாதார துறை சார்பில் மருத்துவ குழுவினர்கள் முகாமும் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் வசதிக்காக கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் விடப்பட்டு இருந்தன.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
- இன்று சுபமுகூர்த்த நாள்.
- திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி - 23 (திங்கட்கிழமை)
திதி : துவாதசி இரவு 12.02 மணிக்கு மேல் திரயோதசி
நட்சத்திரம் : அனுஷம் இரவு 2.30 மணிக்கு மேல் கேட்டை
யோகம் : சித்தயோகம்.
நல்லநேரம் : காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
ராகுகாலம் : 7.30 மணி முதல் 9.00 மணி வரை
எமகண்டம் : காலை: 10.30 மணி முதல் 12.00 மணி வரை
சூலம் : கிழக்கு
திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பவனி
இன்று சுபமுகூர்த்த நாள். வாசுதேவ துவாதசி. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி வருஷாபிஷேகம். திருக்கோளக்குடி களோளபுரீஸ்வரர் தேர். திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்- உயர்வு
மிதுனம்-புகழ்
கடகம்-அச்சம்
சிம்மம்-நட்பு
கன்னி-உயர்வு
துலாம்- இரக்கம்
விருச்சிகம்-பரிவு
தனுசு- பகை
மகரம்-போட்டி
கும்பம்-நஷ்டம்
மீனம்-கவலை






