என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

    ரிஷபம்

    சிக்கல்கள் விலகி சிகரத்தைத் தொடும் நாள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கும் சூழ்நிலை உண்டு.

    மிதுனம்

    வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வரவைக் காட்டி லும் செலவு கூடும். ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள்.

    கடகம்

    யோகமான நாள். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

    சிம்மம்

    பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி உண்டு.

    கன்னி

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வழக்குகள் சாதகமாகும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பிறரின் விமர்சனங்களைத் தாண்டி முன்னேற்றம் காண்பீர்கள்.

    துலாம்

    உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    விருச்சிகம்

    மகிழ்ச்சி கூடும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடன்பிறப்புகள் வழியில் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் மனதை வாட்டும்.

    தனுசு

    புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.

    மகரம்

    வரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறும் வாய்ப்பு உண்டு.

    கும்பம்

    பணத்தேவைகள் உட னுக்குடன் பூர்த்தியாகும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்த படி நடைபெறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களைத் தேடி வரும்.

    மீனம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடு உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் நன்மை உண்டு.

    • திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவான் அலங்காரம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-28 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவிதியை நள்ளிரவு 2.47 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : உத்திராடம் காலை 8.04 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    காஞ்சி வரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம், திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்

    இன்று திருவோணம் விரதம். திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவான் அலங்காரம். காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம். திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் ரதோற்சவம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-தெளிவு

    கடகம்-மாற்றம்

    சிம்மம்-பணிவு

    கன்னி-நன்மை

    துலாம்- நலம்

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- உயர்வு

    மகரம்-நிறைவு

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-சிறப்பு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    குழப்பங்கள் அகலும் நாள். கூடுதல் வருமானம் உண்டு. குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய நல்ல தகவல் வரலாம்.

    ரிஷபம்

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    மிதுனம்

    மனக்கலக்கம் ஏற்படும் நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாகனம் பழுதுகளால் வாட்டம் காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும்.

    கடகம்

    இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் வருமானங்கள் உண்டு. இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    ஆதாயம் தரும் தகவல் அலைபேசி வழியில் வரும் நாள். வசதியான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள்.

    கன்னி

    சேமிப்பு உயரும் நாள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் உடனடியாக செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

    துலாம்

    வாங்கிய கடனைக் கொடுத்து மகிழும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.

    விருச்சிகம்

    பணவரவு திருப்தி தரும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.

    தனுசு

    செல்வாக்கு அதிகரிக்கும் நாள். திடீர் பயணம் திகைக்க வைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். மாலை நேரம் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரலாம்.

    மகரம்

    தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாள். திறமை பளிச்சிடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

    கும்பம்

    நட்பு வட்டம் விரிவடை யும் நாள். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். எடுத்தோம், முடித்தோம் என்று எந்தச் செயலையும் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு.

    மீனம்

    இடமாற்றத்தால் இனிமை ஏற்படும் நாள். தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர் பகையால் உள்ளம் கவலை கொள்ளும். எதிர்பாராத செலவு உண்டு.

    • பூஜைகளை முடித்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு மதிய உணவு பரிமாறலாம்.
    • அம்பிகையின் சிலையோ அல்லது திருவுருவப்படத்தையோ வைத்து மலர் தூவி, தூபமேற்றி வழிபடலாம்.

    ஆடி முதல் ஞாயிறு நெருங்கிவிட்டது. இப்போதே திருமணமான பெண்கள் கணவன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்றும் கன்னிப்பெண்கள் வருங்கால கணவர் நல்லவராகவும், மனதிற்கு பிடித்தவராகவும் எந்தவித தோஷங்களும் இருக்கக் கூடாது என்றும் விரதமிருந்து வேண்டிக்கொள்வதற்காக சுமங்கலி பூஜைக்கு ஆயத்தமாகி இருப்பர்.

    பெரும்பாலான பெண்கள் சுமங்கலி பூஜை எப்படி செய்ய வேண்டும், அம்பிகையை விரதமிருந்து வழிபடும் முறை முதலானவற்றை தெரிந்து வைத்திருப்பர். ஆனால், சுமங்கலி பூஜையின் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன? எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிந்திருக்கமாட்டார்கள். அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்...

    சுமங்கலி பூஜையின் போதும் சரி, பொதுவாக அன்றாடம் திருமாங்கல்யத்திற்கு குங்குமம் வைக்கும் போதும் சரி "ஓம் தீர்க்க சுமங்கலி தேவியை, இரட்சிப்பாய் இரட்சிப்பாய்" என்ற இந்த மந்திரத்தை மனதார சொன்னாலே போதும்.

    நெற்றி பொட்டில் குங்குமம் வைக்கும் போது, "ஓம் மஹிமா சக்தியை திலக தேவியை பூரண சக்திதா நமோ நமஹ" என்ற மந்திரத்தையும்,

    நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் போது, " ஓம் யாதேவி சர்வ பூதேஷூ ஸ்ரீம் ஐம் க்லீம் சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை யோகம் இரட்சிப்பாய் இரட்சியப்பாய் நமோ நமஹ"என உச்சரிக்க கணவரின் ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.

    சுமங்கலி பூஜை செய்வதற்கு உகந்த நேரம்:

    காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை சுமங்கலி பூஜை செய்யலாம். பூஜைகளை முடித்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு மதிய உணவு பரிமாறலாம். காலையில் சுமங்கலி பூஜை செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்து, சுமங்கலி பெண்களுக்கு இரவு உணவு பரிமாறலாம். சுமங்கலி பூஜையை ஆடி ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய முடியாதவர்கள் ஆடி வெள்ளி நாளிலும் செய்து பலன் பெறலாம்.

    சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து சுமங்கலி பூஜை செய்ய முடியாதவர்கள், பூஜையறையில் ஒரு மனை போட்டு, மாக்கோலமிட்டு, அந்த மனையில் அம்பிகையின் சிலையோ அல்லது திருவுருவப்படத்தையோ வைத்து மலர் தூவி, தூபமேற்றி வழிபடலாம். அவ்வாறு வழிபடும் போது நித்திய சுமங்கலியான தாயே, உன் மகளான எனக்கும் நித்திய சுமங்கலி வரத்தை தந்தருள வேண்டும் என்று மனமுருகி வேண்டிக்கொள்ளுங்கள். அந்த அன்னையின் அருள் என்றென்றும் உங்களோடு நிலைத்திருக்கும்.

    • சாப்பிடாமல் இருக்க இயலாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் மதியம் சாப்பாடு சாப்பிட்டாலும் இந்த வழிபாட்டை செய்யலாம்.
    • பச்சை கற்பூரத்தை பெருமாள் பாதத்தில் வைத்து மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

    பெருமாளுக்கு உகந்த இரண்டு மிக முக்கியமான விரதங்கள் ஏகாதசியும், திருவோணமும். இவற்றில் ஏகாதசி விரதம் மாதத்திற்கு இரு முறையும், திருவோணம் ஒரு முறையும் வரும். ஏகாதசி விரதம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவோண விரதம் பற்றி பலருக்கும் தெரியாது. இதனால் மிக சிலர் மட்டும் திருவோணம் நட்சத்திரம் வரும் நாட்களில் விரதம் இருப்பது உண்டு.

    முருகப் பெருமானுக்கு எப்படி திதிகளில் சஷ்டி திதியும், நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரமும் விரத நாட்களாக கருதப்படுகிறதோ, அதே போல் பெருமாளுக்குரிய நட்சத்திர விரதம் தான் திருவோணம். இது பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் விரதம் ஆகும்.

    மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தை அவர் எடுத்தது திருவோணம் நட்சத்திர நாளில் தான். நட்சத்திரங்களில் "திரு" என பெருமைப்படுத்தி சொல்லப்படும் இரண்டு நட்சத்திரங்களில் ஒன்று பெருமாளுக்குரிய திருவோணமும், சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரமும் தான்.

    வாமனராகவும், திரிவிக்ரமனாகவும் அவதாரம் எடுத்தது திருவோண நட்சத்திர நாளில் தான் வாழ்வில் வளர்ச்சியையும், சகலவிதமான நலன்களையும் தரக்கூடியது திருவோண விரதம் ஆகும். பெருமாளுக்கு நெருக்கமானவராகவும், பிரியமானவராகவும் ஆக வேண்டும் என்றால் திருவோண விரதம் இருக்கலாம்.

    ஏகாதசியை போல் திருவோண நட்சத்திரம் வரும் நாட்களிலும், நாள் முழுவதும் கடுமையான விரதத்தை பக்தர்கள் மேற்கொள்வார்கள். பெருமாளின் அருளை வேண்டி இருக்கப்படும் இந்த விரதம் மகிழ்ச்சி, செல்வ வளம், முன்னேற்றம், மோட்சம் ஆகியவற்றை தரக் கூடியதாகும்.



    அது மட்டுமல்ல வைகுண்டத்திற்கு சென்று ஸ்ரீமன் நாராயணனை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை தரக் கூடியது திருவோணம் விரதம் ஆகும். பெருமாளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கும், கடந்த கால பாவங்கள், தவறுகளில் இருந்து மன்னிப்பு கிடைப்பதற்கும், ஆன்மிகம் ஞானம் பெறுவதற்கும், தன்னை தானே உணர்ந்து கொள்வதற்கும் வழியை ஏற்படுத்தக் கூடியது திருவோணம் விரத நாளாகும்.

    நாளை திருவோண விரதம் அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடைகளை உடுத்திக் கொண்டு, தீர்த்தம், பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். வாசனை மிகுந்த மலர்களை பெருமாளுக்கு சூட்டி வழிபட வேண்டும். ஏகாதசி விரதத்திற்கு கடைபிடிக்கும் விரத முறைகளை இதற்கும் கடைபிடிக்க வேண்டும்.

    உணவை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். தியானம், வழிபாடு, மந்திர ஜபம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

    மாலையில் சூரியன் மறைந்த பிறகு பெருமாளுக்கு பூஜைகள் செய்து வழிபட்ட பிறகு, பெருமாளுக்கு படைத்த நைவேத்தியத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டையும் ஒருசேர பெறுவதற்கு இந்த திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். திருவோண நட்சத்திரம் பெருமாளின் நட்சத்திரம். நீங்கள் இந்த திருவோண நட்சத்திரத்திற்கு விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வது நல்லது.

    சாப்பிடாமல் இருக்க இயலாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் மதியம் சாப்பாடு சாப்பிட்டாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். மாலை வீட்டில் இருந்தபடியே பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பெருமாளுக்கு அப்பம் செய்து நெய்வேத்தியம் செய்து வைத்து, வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

    பெருமாளுக்கு துளசி இலைகளை வாங்கி போட்டு விளக்கு ஏற்றி உங்களுடைய பிரச்சனைகள் தீர பிரார்த்தனை செய்தால் வேண்டிய வேண்டுதல் அப்படியே நடக்கும். உங்கள் வீட்டு பக்கத்தில் பெருமாள் கோவில் இருக்கிறதா. அங்கு செல்லுங்கள். பெருமாளுக்கு 12 வாழைப்பழம் வாங்கிக் கொள்ளுங்கள்.

    கொஞ்சமாக துளசி இலைகள், கொஞ்சமாக பச்சை கற்பூரம் வாங்கிக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தை பெருமாள் பாதத்தில் வைத்து எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லாம் ஒவ்வொரு பழத்தை தானம் செய்து விடுங்கள். உங்களுடைய தீராத நோய்நொடி தீர இந்த தானம் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

    துளசி இலைகளை பெருமாளுக்கு சாத்தி விடுவார்கள். பிரசாதமாக இரண்டு இலைகளை மட்டும் திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள். பச்சை கற்பூரத்தை பெருமாள் பாதத்தில் வைத்து மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

    அந்த பச்சை கற்பூரத்தை வீட்டிற்கு கொண்டு வந்து கொஞ்சம் பணம் வைக்கும் பெட்டியில், பூஜை அறையில், சமையலறையில் மசாலா டப்பாவுக்கு பக்கத்தில், ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு வையுங்கள்.

    இப்படி வீட்டில் எல்லா இடத்திலும் பெருமாள் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட பச்சைக் கற்பூரத்தை வைத்தால் வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகி வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை. இது எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா. நாளை (சனிக்கிழமை) கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா! என்ற நாமத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். கணக்கே கிடையாது.

    நாளை நேரம் கிடைக்கும்போது, ஓய்வு கிடைக்கும் போது, படுக்கும் போது, தூங்கும் போது, இந்த நாமத்தை சொல்லிவிட்டு பிறகு உங்களுடைய வேலையை பாருங்கள். அந்த வைகுண்டத்தில் பெருமாளின் பாதத்தில் இடம் கிடைக்க இந்த ஒரு வார்த்தை மட்டுமே போதும்.

    • சுமங்கலி பூஜையை நாம் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.
    • பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களை சக்தியின் வடிவமாக கருதி, அவர்களை மரியாதையுடன் வரவேற்க வேண்டும்

    'சுமங்கலி' என்றால் `மங்கலம் நிறைந்தவள்' என்று பொருள். திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும், திருமணமாகாத பெண்கள் திருமணத் தடை, தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும் நடத்தப்படும் பூஜையே, சுமங்கலி பூஜையாகும்.

    சுமங்கலி பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நடத்துவதால் இது சக்தி வழிபாடாக பார்க்கப்படுகிறது. இந்த சுமங்கலி பூஜையை ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் ராகு காலம் இல்லாத நேரத்தில் நடத்தலாம். அன்றைய தினம் யோகம், திதி போன்றவையும் நல்லதாக இருக்க வேண்டும். கரிநாளாக இருக்கக்கூடாது. ஆடி மாதம், நவராத்திரி நாட்கள் ஆகியவை இந்த பூஜை நடத்த விசேஷமாகும். அதிலும் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சுமங்கலி பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

    இந்த சுமங்கலி பூஜையை நாம் எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். சுமங்கலி பூஜை செய்பவர், தமது வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாசலில் தோரணங்கள் கட்டி, மாக்கோலம் இட்டு வீட்டை அழகுப்படுத்த வேண்டும். பூஜை செய்பவர்கள், தங்களால் எத்தனை சுமங்கலி பெண்களை அழைக்க முடியுமோ அத்தனை பேரையும் அழைக்கலாம். முக்கியமாக வயதான பெரியவர்களை அழைப்பது அவசியம். ஏனென்றால் அவர்களது ஆசீர்வாதம் நமக்கு மிகுந்த பலனை தரும்.

    பூஜையில் கலந்துகொள்ளும் பெண்களை சக்தியின் வடிவமாக கருதி, அவர்களை மரியாதையுடன் வரவேற்க வேண்டும். பூஜை நடத்துபவர் முதலில், சுமங்கலி பெண்களை நாற்காலியில் உட்கார வைத்து அவர்களது பாதங்களை தாம்பூலத் தட்டில் வைத்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு பாதத்துக்கு குங்குமம், சந்தனம் வைத்து மலர் தூவி வழிபட வேண்டும்.

    அதன்பிறகு அவர்களின் கை, கால், முகங்களில் சந்தனம், குங்குமம் பூசி, தலையில் சூடிக்கொள்ள பூ கொடுக்க வேண்டும். மேலும் தங்கள் வசதிகேற்ப, தாம்பூலத் தட்டில் மஞ்சள், குங்குமம், மருதாணி, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், புடவை, வளையல் போன்றவற்றை வைத்து கொடுக்கலாம். தொடர்ந்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து, தீபாராதனை காட்டி சுமங்கலி பெண்களுக்கும் காட்ட வேண்டும். பின்பு, அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். பூஜையின் முடிவில், சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் கொடுத்து, மகிழ்ச்சியோடு அவர்களை வழி அனுப்பி வைக்க வேண்டும்.

    இந்த சுமங்கலி பூஜையை கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து செய்வதே சிறப்பானதாகும். குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு, நம்பிக்கையுடனும், பய பக்தியுடனும் செய்ய வேண்டும். சுமங்கலி பூஜை செய்வதால் இல்லத்தில் செல்வம் பெருகும். துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும். தோஷங்கள் விலகும், குலவிருத்தி உண்டாகும்.

    இந்த பூஜையை மிகவும் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றில்லை. நமது வசதிகேற்ப எளிமையாக நடத்தலாம். மிகுந்த இறைபக்தியோடு நடத்தினாலே போதுமானது.

    • ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.
    • 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தேவஅருள்வாக்கில் கூறப்பட்டதன் அடிப்படையில் மாளிகப்புரத்தம்மன் கோவிலில் புதிய நவக்கிரக கோவில் கட்டப்பட்டது. அதன் பிரதிஷ்டை நாளை மறுநாள் நடக்கிறது.

    இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். கோவிலில் நாளை சுத்தி கலச பூஜை வழிபாடுகள் நடைபெறும். நாளை மறுநாள் காலை 11 மணிக்கு நவக்கிரக கோவில் பிரதிஷ்டை நடக்கிறது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு வழக்கமான பூஜைகளுக்கு பின் நடை அடைக்கப்படும்.

    தொடர்ந்து ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    இந்தநாட்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    • சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆனி-27 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பிரதமை பின்னிரவு 3.15 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம் : பூராடம் காலை 7.19 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை

    சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருவீதியுலா, திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனத்திலும், தாயார் பூம்பல்லக்கிலும் பவனி வரும் காட்சி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம். லால்குடி ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

    பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் படைவீடு, ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு இருக்கன்குடி, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் அபிஷேகம். தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-பண்பு

    மிதுனம்-பரிசு

    கடகம்-தேர்ச்சி

    சிம்மம்-பெருமை

    கன்னி-லாபம்

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- சுகம்

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-உழைப்பு

    மீனம்-தாமதம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சச்சரவு நீங்கி சமாதானக் கொடி பறக்கும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    ரிஷபம்

    தகராறுகள் தானாக வந்து சேரும் நாள். தன விரயம் உண்டு. விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. உறவினர் பகை உருவாகும். ஊர் மாற்ற சிந்தனை மேலோங்கும்.

    மிதுனம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். வாகன பழுதுகளால் வாட்டம் ஏற்படும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.

    கடகம்

    வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். வீடு மாற்ற சிந்தனைகள் மேலோங்கும்.

    சிம்மம்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    கன்னி

    வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வருமானம் திருப்தி தரும்.

    துலாம்

    பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். கூட்டாளிகள் கூடுதல் லாபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

    விருச்சிகம்

    பாராட்டும் புகழும் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பயணங்களால் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    தனுசு

    புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். சுப விரயம் உண்டு. குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும்.

    மகரம்

    தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களுக்காக செலவிடுவீர்கள்.

    கும்பம்

    யோகமான நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தை வழியில் ஆதரவு உண்டு.

    மீனம்

    சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். தூரத்து உறவினர்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பர். வரன்கள் வாயில் தேடி வரும்.

    • ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர் தான் தோமா.
    • சந்தேகம் குடும்பங்களை அளிக்கும் நெருப்பு.

    நம் மனித வாழ்வு விசுவாசம் என்னும் அடித்தளத்தில் தான் கட்டப்பட்டு வருகிறது. விசுவாசம் நிறைந்த வாழ்வில் அன்பும், நற்பண்புகளும், நல்ல புரிதல்களும் நிறைந்திருக்கிறது.

    ஆனால், பல நேரங்களில் நம் வாழ்வில் அவிசுவாசம் மேலோங்கி காணப்படுகிறது. கற்றவர், கல்லாதவர், ஏழை, பணக்காரன் என்று எவ்வித வேறுபாடுமின்றி அனைவரிடமும் இந்த அவிசுவாசம் காணப்படுகிறது. திருமறையில் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தோமா ஆவார்.

    ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர் தான் தோமா. பிலிப்புவின் மூலமாக ஆண்டவர் இயேசுவுக்கு அறிமுகமானவர். தோமா என்கிற அரமேய சொல்லின் பொருள் `இரட்டையர்' என்பதாகும். திதிம் என்ற மறுபெயரும் இவருக்கு உண்டு. இவர் இயேசு கிறிஸ்துவின் தீவிர விசுவாசியாகவே இருந்து வந்தார்.

    இயேசு கிறிஸ்துவின் சிநேகிதனாகிய லாசர், பெத்தானியாவில் வியாதியாயிருக்கிறதைக் கேள்விப்பட்ட பின்பும் தாம் தங்கியிருந்த இடத்திலே இரண்டு நாள் தங்கினார். பின்னர் அவர் தம் சீடர்களிடத்தில், 'நாம் மறுபடியும் யூதேயாவுக்கு போவோம் வாருங்கள்' என்றார். அதற்கு சீடர்கள், 'ரபீ இப்பொழுது தான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்கு போகலாமா' என்றார்கள்.

    அப்பொழுது திதிம் எனப்பட்ட தோமா மற்ற சீடர்களை நோக்கி, 'அவரோடே கூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்' என்றார் (யோவான் 11:16).

    தோமா ஆண்டவருக்காக மரிக்கவும் துணிவதை இங்கே காணலாம். ஆண்டவர் நித்திய வாழ்வை குறித்து பேசுகின்ற பொழுது, 'நான் போகிற இடத்தை அடைந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்' என்றவுடன், தோமா அவரை நோக்கி 'ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம்' என்றார் (யோவான் 14:5).

    இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் ஆண்டவரோடு இணைந்து வாழ வேண்டுமென்ற மாபெரும் விருப்பத்தைக் காண முடிகின்றது.

    ஆண்டவர் இயேசுவின் மீது பக்தி வைராக்கியம் கொண்டிருந்த தோமா, கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிற்பாடு சந்தேகத் தோமாவாக மறு உருவெடுக்கிறார். ஆண்டவர் இயேசு, தான் உயிர்த்தெழுந்த பிற்பாடு சீடர்களுக்கு தரி சனமானார். ஆண்டவர் அவர்களுக்கு சமாதான வாழ்த்துதல் சொல்லியதோடு, தம் கைகளையும், தன் விலாவையும் அவர்களுக்கு காண்பித்தார். சீடர்கள் கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள் (யோவான் 20:19).

    ஆனால் ஆண்டவர் தரிசனமான இரண்டு முறையும் தோமா அவர்களுடன் இருக்கவில்லை. சீடர்கள் 'கர்த்தரைக் கண்டோம்' என்று நம்பிக்கையுடன் தோமாவிடம் கூறினார்கள். ஆனால், தோமாவோ 'அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்த காயத்தில் என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே இட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன்' என்றார் (யோவான் 20:25).

    மூன்றாம் முறையாக தரிசனமானபோது தோமா அவர் களோடு இருந்தார். இயேசு தோமாவை நோக்கி, 'நீ உன் விரலை இங்கே நீட்டி என் கைகளை பார், உன் கையை நீட்டி என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு' என்றார் (யோவான் 20:27).

    தோமா, 'என் ஆண்டவரே, என் தேவனே' என்று அறிக்கை செய்கின்றதை காணலாம். அப்பொழுது ஆண்டவர் 'தோமாவே, நீ என்னை கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்' என்றார் (யோவான் 20:29).

    நம்பிக்கையின்மை தோமாவின் நிலைப்பாடு மட்டுமல்ல; பல சீடர்களும் அன்று அப்படித்தான் இருந்தனர். நம்பிக்கையின்மை விஷயத்தில் ஒட்டுமொத்த சீடர்களின் பிரதிநிதியாகவே தோமா இங்கு தென்படுகிறார்.

    'மரியாள் சொன்ன உயிர்ப்பின் செய்தியை சீடர்கள் நம்பவில்லை' (மாற்கு 16:11).

    'ஆண்டவர் மறுரூபமாய் தரிசனமானதை கண்டவர்கள் சொல்லியதை சீடர்கள் நம்பவில்லை' (மாற்கு 16:13).

    'உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற் போனதினிமித்தம் அவர்களுடைய விசுவாசத்தைக் குறித்தும், இருதய கடினத்தைக் குறித்தும் அவர் கடிந்து கொண்டார்' (மாற்கு 16:14).

    'விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது' (எபிரேயர் 11:1).

    தோமாவின் பக்தி வைராக்கியம், மிகுந்த வாஞ்சை, அதீத பாசம் அனைத்தையும் கெடுத்து, 'சந்தேகத் தோமா' என்ற அவப்பெயரை அவருக்கு கொடுத்து விட்டது. காரணம், யூதர்கள் மீது இருந்த பயம், அன்றைக்கு நிலவிய சூழல், எதிராளிகளின் வலிமை, அவர்களுக்கிருந்த செல்வாக்கு போன்றவை ஆகும்.

    கடவுளை முழுமையாக விசுவாசிப்போம். சந்தேகத்தை வேரறுப்போம். சந்தேகம் குடும்பங்களை அளிக்கும் நெருப்பு. நம் வாழ்வின் சூழல்கள், பிரச்சினைகள், நெருக்கடிகள், வியாதியின் வேதனைகள் நம்மை சந்தேகத்திற்கு வழிநடத்தக் கூடும்.

    ஆனால், நாம் முழுமையாக விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும். காணாமலே விசுவாசிக்கின்ற பாக்கியவான்களாக இருப்போம். விசுவாசத்தினால் நற்சாட்சி பெறுவோம். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மை தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும் (எபிரேயர் 11:6).

    • பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி இன்று காலை கோலாகாலமாக தொடங்கியது.
    • மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாங்கனித்திருவிழா கடந்த 8-ந்தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

    மாங்கனித்திருவிழாவின் 2-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், நாஜிம் எம்.எல்.ஏ., புதுச்சேரி டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி சவுஜன்யா, தி.மு.க. விவசாய பிரிவு அமைப்பாளர் பிரபு என்கிற பிரித்திவிராஜ், ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி இன்று காலை கோலாகாலமாக தொடங்கியது. காலை 9 மணிக்கு மேல் கைலாசநாதர் கோவில் எதிரில், பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார். அது சமயம் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொறுத்து வீட்டு வாசல், மாடி மற்றும் சாலையில் இரு புறங்களிலிருந்து மாங்கனிகளை பக்தர்கள் மீது வீசி எறிந்தனர்.

    அந்த மாங்கனிகளை திரளான பக்தர்கள் உற்சாகத்துடன் பிடித்து சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஏராளமான பெண்களும் விழாவில் கலந்து கொண்டு மாங்கனிகளை பிடித்து சென்றனர். தொடர்ந்து, பவளக்கால் சப்பரம் காரைக்கால் பெருமாள் வீதி, பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதா கோவில் வீதி, லெமேர் வீதி வழியாக சென்று மீண்டும் பாரதியார் வீதி வழியாக இரவு காரைக்கால் அம்மையார் கோவிலை சென்றடைவார்.

    விழாவில் வீதியெங்கும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனி, பட்டு வஸ்திரங்களோடு பிச்சாண்டவருக்கு படைத்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து சென்று, அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை அதிகாலை 5 மணிக்கு அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன் மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • குலதெய்வ குற்றம் நீங்க பெரிய பெரிய கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
    • தொடர்ந்து 3 பவுர்ணமி தினத்தில் உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டாலே போதும்.

    குல தெய்வ வழிபாடு எப்போதும் சிறந்தது. அதிலும் பவுர்ணமி தினத்தன்று குல தெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றியமையாதது. பவுர்ணமி வழிபாடு குடும்பத்தில் உள்ள தீய சக்திகளை நீக்கி, நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் என்றும் பவுர்ணமியில் வழிபட்டால் வம்சம் தழைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

    பவுர்ணமி நாளில் குல தெய்வத்தை வழிபடுவதால் உங்கள் தோஷங்கள் அனைத்தும் விலகும். தம்பதியினர் ஒற்றுமையாக வாழ்வர். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி வாழ்வும் சிறப்பாக இருக்கும். ஒருவருடைய வீட்டில் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்துவிட்டால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்காது. அந்த வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களுக்கும் குலதெய்வம் காவலாக இருந்து அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அருளும் என்றும் கூறப்படுகிறது.

    ஒவ்வொறு பவுர்ணமிக்கும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றில்லை. நீங்கள் உங்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலமிட்டு, குல தெய்வத்தின் படத்திற்கு மலர் அலங்காரம் செய்து, நெய் தீப விளக்கேற்றி குடும்ப சகிதமாக குல தெய்வத்தை மனதார வழிபடலாம். தீபமேற்றியவுடன் குல தெய்வத்தின் பெயரை 108 முறை பயபக்தியுடன் உச்சரிக்க வேண்டும். பின்னர் நைவேத்தியமாக வெண்பொங்கல் (அ) சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம். படைத்த நைவேத்தியத்தை அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழலாம். எளிய முறையில் இப்படி குல தெய்வ வழிபாடு செய்தாலே போதும் குல தெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைக்கும்.

    ஒவ்வொறு பவுர்ணமியிலும் மாலை நேரத்தில் சந்திர பகவான் தோன்றும் நேரத்தில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் வீடு மனை முதலான செல்வங்களை வாங்கும் பாக்கியம் கிடைக்கும்.



    உங்கள் முன்னோர்கள் குல தெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்தாமல் இருந்தால், அதனால் பல இன்னல்களை பிள்ளைகள் அனுபவிக்க நேரிடும். அத்தகைய குலதெய்வ குற்றம் நீங்க பெரிய பெரிய கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொடர்ந்து 3 பவுர்ணமி தினத்தில் உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டாலே போதும். ஏதேனும் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து செல்ல முடியவில்லை என்றால், விடுபட்ட பவுர்ணமி தினத்தை கணக்கில் கொள்ளாமல் மீண்டும் தொடர்ச்சியாக குல தெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டும்.

    சிலருக்கு குல தெய்வமே தெரியாமல் இருக்கும் அதனால் நேர்த்திகடன் செலுத்த முடியாமல் பல இன்னைல்களை சந்தித்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பவுர்ணமி தினத்தில் தீபமேற்றி, அந்த தீபத்தை குல தெய்வமாக வழிபட, குல தெய்வ அருள் கிடைக்கும். நேர்த்திக்கடன் செலுத்தாத குற்றம் நீங்கி அவர்களின் வாழ்வும் வளம் பெரும் என்பது நம்பிக்கை.

    ×