என் மலர்tooltip icon

    வழிபாடு

    Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 செப்டம்பர் 2025: முருகன் கோவில்களில் அபிஷேகம்
    X

    Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 9 செப்டம்பர் 2025: முருகன் கோவில்களில் அபிஷேகம்

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-24 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவிதியை இரவு 8.54 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 9.07 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை, ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உழைப்பு

    ரிஷபம்-மகிழ்ச்சி

    மிதுனம்-சாந்தம்

    கடகம்-களிப்பு

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-தேர்ச்சி

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- கடமை

    மகரம்-முயற்சி

    கும்பம்-ஓய்வு

    மீனம்-பரிவு

    Next Story
    ×